ஆண்டு முழுவதும் ஆட்டிப் படைத்த கொரோனாவிலிருந்து புத்தாண்டான 2021-ல் விடுதலை கிடைக்கும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பு. உள்ளூர்வாசிகள் பட்ட துயரம் சொல்லி மாளாது. ஆனால், 2020ல் கொரோனா என்றால் 2021ல் உருமாற்றம் அடைந்த கொரோனா மீண்டும் லாக்டவுன் என வாசலில் நின்று மிரட்டுகிறது.
உருமாற்றம் அடைந்த கொரோனாவை எதிர்கொள்வது எப்படி? என்ற கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்தோம்…
""வைரஸின் உருமாற்றம் என்பது வழக்கமாக நிகழக்கூடிய ஒன்றுதான். அதன் இயல்பில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த கொரோனா திடீரென்று தற்போது வந்துவிடவில்லை. மூன்று மாதங்களுக்கு முன், செப்டம்பர் மாதத்திலேயே கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்திருப்பது இங்கிலாந்து தலைநகரம் பிரிட்டனில் கண்டுபிடிக்கப் பட்டது. இதற்கு, வி.யு.ஐ. 202012/01 என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்த, உருமாற்றம் அடைந்த கொரோனா-20 யானது கொரோனா-19 ஐவிட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக அதிகமாக பரவும்; தொற்றும் தன்மை அதிகம் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதாவது, பரவும் தன்மை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக கண்டறிந்திருக் கிறார்கள். கொரோனா-19 வயதானவர்களிடமும் இதயநோயாளிகளிடமும் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியது. உருமாற்றம் அடைந்த கொரோனா-20 இளம் வயதினரையும் குழந்தை களையும்தான் அதிகம் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குழப்பமான மனநிலை, தொடர் நெஞ்சுவலி, அதிக சோர்வு, அரிப்பு, ஒவ்வாமை, தூக்க கலக்கமாக இருப்பதெல்லாம் புதிய அறிகுறிகள். அதேநேரத்தில், நோயின் தீவிரத் தன்மையும் இறப்பு விகிதத்தையும் அதிகரிக்க வில்லை; மாற்றமும் இல்லை என் பது தற்போது வரை ஆராய்ச்சி யில் கிடைக்கும் ஆறுதலான தகவல்.
உருமாறிய வைரஸின் மேல் பகுதியில் இருக்கக்கூடிய கொக்கி புரதத்தில்தான் 15 இடங்களில் உரும
ஆண்டு முழுவதும் ஆட்டிப் படைத்த கொரோனாவிலிருந்து புத்தாண்டான 2021-ல் விடுதலை கிடைக்கும் என்பதே உலக மக்களின் எதிர்பார்ப்பு. உள்ளூர்வாசிகள் பட்ட துயரம் சொல்லி மாளாது. ஆனால், 2020ல் கொரோனா என்றால் 2021ல் உருமாற்றம் அடைந்த கொரோனா மீண்டும் லாக்டவுன் என வாசலில் நின்று மிரட்டுகிறது.
உருமாற்றம் அடைந்த கொரோனாவை எதிர்கொள்வது எப்படி? என்ற கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்தோம்…
""வைரஸின் உருமாற்றம் என்பது வழக்கமாக நிகழக்கூடிய ஒன்றுதான். அதன் இயல்பில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்த கொரோனா திடீரென்று தற்போது வந்துவிடவில்லை. மூன்று மாதங்களுக்கு முன், செப்டம்பர் மாதத்திலேயே கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்திருப்பது இங்கிலாந்து தலைநகரம் பிரிட்டனில் கண்டுபிடிக்கப் பட்டது. இதற்கு, வி.யு.ஐ. 202012/01 என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்த, உருமாற்றம் அடைந்த கொரோனா-20 யானது கொரோனா-19 ஐவிட ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மிக அதிகமாக பரவும்; தொற்றும் தன்மை அதிகம் என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அதாவது, பரவும் தன்மை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக கண்டறிந்திருக் கிறார்கள். கொரோனா-19 வயதானவர்களிடமும் இதயநோயாளிகளிடமும் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தியது. உருமாற்றம் அடைந்த கொரோனா-20 இளம் வயதினரையும் குழந்தை களையும்தான் அதிகம் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குழப்பமான மனநிலை, தொடர் நெஞ்சுவலி, அதிக சோர்வு, அரிப்பு, ஒவ்வாமை, தூக்க கலக்கமாக இருப்பதெல்லாம் புதிய அறிகுறிகள். அதேநேரத்தில், நோயின் தீவிரத் தன்மையும் இறப்பு விகிதத்தையும் அதிகரிக்க வில்லை; மாற்றமும் இல்லை என் பது தற்போது வரை ஆராய்ச்சி யில் கிடைக்கும் ஆறுதலான தகவல்.
உருமாறிய வைரஸின் மேல் பகுதியில் இருக்கக்கூடிய கொக்கி புரதத்தில்தான் 15 இடங்களில் உருமாற்றம் அடைந்திருப்பதை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது சிறிய மாற்றம்தான் என்பதால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கக்கூடிய தடுப்பூசிகளே இதற்கும் பயன்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும், இதுதொடர்பான ஆய்வுகளை செய்யவேண்டும்.''
மேற்கண்ட, தகவல்களை சுட்டிக்காட்டி பேசும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாந்தி, “""உருமாற்றம் என்பது பிரிட்டன் மற்றும் சில நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் உருமாறியிருக்கிறதா என்பது கண்டறியப் படவே இல்லை. ஏற்கனவே, கொரோனாவில் செய்த தவறுகளை மத்திய அரசும் தமிழக அரசும் செய்யக்கூடாது. காரணம், முதல் முதலில் கொரோனா பரவியபோது சீனாவின் ஊஹான் பகுதியிலிருந்து வந்த விமானத்தை மட்டுமே நிறுத்தினார்கள். மற்ற பகுதியிலிருந்து வந்த விமானங்களை விட்டுவிட்டார்கள். இதனால், என்ன ஆனது? சைனாவிலிருந்து வந்தவர்கள் ஸ்பெயினுக்கு சென்று இத்தாலியிருந்து விமானம் மூலம் இந்தியா வந்துவிட்டார்கள். இப்படி, வந்ததால்தான் கேரளாவில் கொரோனா தொற்று பரவியது. தற்போதுகூட, பிரிட்டனிலிருந்து ஒரு பெண் துபாய் சென்று அங்கிருந்து சென்னை வந்துவிட்டார். இதுபோல யார் வேண்டு மானாலும் எந்த நாட்டிலிருந்தும் மாற்றுவழியில் வருவார்கள். அதனால், சர்வதேச விமான நிலையங்களில் அதிக கண்காணிப்பு செய்து, விவரங்களை முழுமையாக சேர்த்து வைக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்றுக்கு வெறும் காய்ச்சல் பரிசோதனை மட்டுமே செய்துவிட்டு ஸ்கிரீனிங் செய்துவிட்டேன் என்று சொல்வது ஏற்றுகொள்ளத் தக்க தல்ல. ஏனென்றால், காய்ச்சல் என்பது கொரோனாவின் பல அறிகுறிகளில் ஒன்று அவ்வளவுதான். அதனால், அனை வருக்குமான பரிசோதனைகளை செய்யவேண்டும். அப் போதுதான், உருமாறிய கொரோனா தொற்றை பரவாமல் தடுக்கமுடியும். அதிலும், அதிகநேரம் எடுத்துக்கொள்ளக்கூடிய வழக்கமான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையை செய்யாமல் விரைவாக கண்டுபிடிக்கும் விலையும் குறைவான ஃபெலுடா (Feluda Covid#19 test, https://health.economictimes.indiatimes.com/tag/covid#19+test),, கோவரேக் போன்ற புதிய பரிசோதனைகளை மத்திய மாநில அரசுகள் செய்யவேண்டும். ஒருமணிநேரத்தில், செய்து முடித்துவிடக்கூடிய பரிசோதனை என்பதால் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்து உருமாறிய கொரோனா தொற்றியுள்ளதா என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
இவற்றைச் செய்யாமல் பயணிகளின் விவரங்கள், காய்ச்சல் பரிசோதனையை மட்டுமே வைத்துக்கொண்டு வீட்டுக்கு அனுப்பிவைத்தால் அதிகவேகமாக பரவ ஆரம்பிக்கலாம். சர்வதேச விமான நிலையங்களை பலநாட்களாக மூடி வைப்பதும் சாத்தியமில்லாதபோது அனைவருக்கு மான கொரோனா பரிசோதனையை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இந்தியாவிலேயே உற்பத்தி செய்த ஃபெலுடா போன்ற நவீன ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை களுக்கு ஐ.சி.எம்.ஆரும் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்) மத்திய அரசாங்கமும் அனுமதி வழங்கிய பிறகும்கூட இது குறித்து பலரும் கோரிக்கையாக வைத்தபிறகும் கூட சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரும், செயலர் இராதா கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.ஸும் இது குறித்து கண்டுகொள்ளாம லேயே இருக்கிறார்கள். அப்படியென்றால், ரிசல்ட் வர தாமதமாகும் ஆர்.டி. பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளை அதிக விலை கொடுத்து வாங்கி ஏன் பரிசோதனை செய்து அதற்குள் கொரோ னா பரவுவதற்கு காரணமாக இருக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது'' என்று குற்றஞ்சாட்டுகிறவர், உருமாறிய கொரோனாவை கண்டுபிடிப்பதில் மத்திய மாநில அரசு எந்தளவுக்கு அலட்சியமாக செயல்படுகின்றன என்பது குறித்தும் அதிர்ச்சி யூட்டுகிறார்.
""பிரிட்டனிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் உருமாற்றம் அடைந்து வரக்கூடிய கொரோனா விலிருந்து பாதுகாப்பது ஒரு பக்கம். இந்தியாவி லேயே இருக்கக்கூடிய கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதை கண்டறியவேண்டும். அதற்கான, மாதிரிகளை மஹாராஷ்டிர மாநிலம் புனேவிலுள்ள என்.ஐ.வி. (National Institute Of Virology)எனப்படும் தேசிய வைராலஜி ஆராய்ச்சி மையத்துக்கு சென்னையிலிருந்தும் அனுப்பி யிருக்கிறோம். இதேபோல், இந்தியாவில் பல பகுதிகளிலிருந்து புனேவுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. உருமாறியிருக்கிறதா என்ற ஆய்வு முடிவுகள் மிகவும் காலதாமதம் ஆகிக்கொண்டிருக்கிறது.
கொரோனாவுக்கு மட்டுமல்ல டெங்கு, ஹெச்-1, என் -1 என பல வைரஸ் நோய்கள் பரவும்போது அது உருமாறியிருக்கிறதா என்பதை கண்டறிந்தால்தான் அதற்கேற்றாற் போல் சிகிச்சை அளிப்பது தடுப்பூசி தயாரிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடமுடியும். அதனால், புனேவில் இருப்பதுபோல் சிறந்த வைரஸுக்கான என்.ஐ.வி பரிசோதனை மையங்கள் இந்தியா முழுக்க கொண்டுவரப்படவேண்டும். மிகமுக்கியமாக, தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கான கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துக்கொண்டிருக்கிறது.
கேரள மாநிலத்தில் அவர்களாகவே ஒரு மையத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதேபோல், தமிழக அரசும் வைராலஜி ஆய்வகத்தை உருவாக்கவேண்டும். வைரஸ் உருமாறியிருக்கிறதா என்பதற்கான வைரஸ் சீக்வென்ஸ் (virus sequence) பரிசோதனை எண்ணிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். காரணம், மற்றநாடுகளில் 50,000 மாதிரிகளை பரிசோதனை செய்கிறார்கள் என்றால் இங்கு 4,500 மாதிரிகள் என்கிற அளவில்தான் பரிசோதிக்கிறார்கள். குறிப்பாக, கேரளா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா மிக அதிகமாக பரவுவதற்கு என்ன காரணம் என்பதையும் கண்டுபிடிக்கவேண்டும். அதற்கான, ஆய்வையே செய்யவில்லை. அதற்குள், கொரோனா உருமாற்றமே அடைந்துவிட்டது.
மத்திய அரசு வேண்டுமென்றே கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. மருத்துவ ஆராய்ச்சிக்கான நிதியை பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததும் 25 சதவீதம் குறைத்துவிட்டார்கள். மற்ற நாடுகளில் சுகாதாரத்துக்கான ஜி.டி.பி 9 லிருந்து 11 வரை இருக்கும்போது இந்தியாவில் மட்டும் 1.2 சதவீதம் என்கிற அடிப்படையில்தான் உள்ளது. அதிக, நிதியை ஒதுக்கும் நாடுகளே கொரோனா போன்ற நோய்களுக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றன. அப்படியென்றால், இந்தியாவின் நிலை?'' என்று கேள்வி எழுப்புகிறார்.
இதுகுறித்து, மருத்துவர் கருணாநிதி நம்மிடம், “""தற்போது பிரிட்டனில் கிறிஸ்துமஸ் பண்டிகையே நடக்காத அளவுக்கு பொது முடக்கத்தால் முடங்கிவிட்டது. அதனால், மீண்டும் பொதுமுடக்கம் வராது என்று அலட்சியமாக இல்லாமல், எப்போதும்போல பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் அரசாங்கமும் பொதுமக்களும் இருக்கவேண்டும். தடுப்பூசியை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. காரணம், வழக்கமாக ஒரு தடுப்பூசி வந்தால் குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். ஆனால், கொரோனா தடுப்பூசி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவருக்கும் கொடுக்கவேண்டிய கட்டாயம். அதுமட்டுமல்ல, மேலைநாடுகள், வளரும் நாடுகளில் மட்டும் தடுப்பூசி போட்டால் போதாது. பின்தங்கிய நாடுகளிலும் போடவேண்டும். இல்லையென்றால், அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவும். இது, மிகப்பெரிய சவால்''’என்கிறார் அவர்.
கொரோனாவையே சமாளிக்க முடியவில்லை. இன்னும் கொரோனாவைப் போலவே புதிய, புதிய நோய்கள் வரலாம். அதற்கெல்லாம், பொது சுகாதாரத்துறையை வலுப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அடிமையாகாமல் நிதியைப் பெற்று மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமிழக சுகாதாரத்துறைக்கும் உள்ளது. கொரோனாவை வைத்து ஊழல் செய்யாமல் உயிரைக் காப்பாற்றவேண்டும்.
-மனோசௌந்தர்