Advertisment

மதங்களைக் கடந்து வென்ற முருகன் மாநாடு! -பழனி கோலாகலம்!

ss

மிழக அரசின் இந்து அறநிலையத்துறை, ஆகஸ்ட் 24, 25 ஆம் தேதிகளில் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டைச் சிறப்பாக நடத் திக் காட்டியது. சில மாதங் களாகவே திட்டமிடப்பட்ட இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அசத்தலாக நடத்திக்காட்டினார்.

Advertisment

mm

அருணகிரிநாதர் ஏ.சி. அரங்கில் இரண்டாம் நாள் துவக்க விழாவில் அமைச்சர் களான சக்கரபாணியும், சேகர் பாபுவும் முன்னிலை வகிக்க, மாநாட்டு மலரை உயர்நீதி மன்ற நீதியரசர் சுரேஷ்குமார் வெளியிட, கோவை கௌமார மடம் குமரகுருபரர் சுவாமிகள் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய நீதியரசர் சுரேஷ்குமார், “"இன்றைக்கு இந்த மாநாட்டை நடத்தியுள்ள அரசும், அறநிலையத்துறையும் பாராட்டுக்குரியது. இந்த மாநாட்டை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்று சொல்வதற்குப் பதிலாக உலக முத்தமிழ் முருகன் ஆற்றுப்படை மாநாடு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்''” என்று கூறி கரவோசையைப் பெற்றார்.

Advertisment

அதன்பின் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “"இந்தியாவி லேயே அதிக கோவில்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. நாங்கள் எப்பொழுது அமைச்சரை (சேகர்பாபு) தொடர்புகொண்டாலும் கோவில் குடமுழுக்கு போன்ற பணிகளில் இருக்கிறேன் என்பார். இந்த மாநாட்டை திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தியதற்கு மாவட்ட மக்கள் சார்பில் முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்''’என்றார். தொடர்ந்து பேசிய தொகுதி

மிழக அரசின் இந்து அறநிலையத்துறை, ஆகஸ்ட் 24, 25 ஆம் தேதிகளில் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாட்டைச் சிறப்பாக நடத் திக் காட்டியது. சில மாதங் களாகவே திட்டமிடப்பட்ட இந்த மாநாட்டை முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலில், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அசத்தலாக நடத்திக்காட்டினார்.

Advertisment

mm

அருணகிரிநாதர் ஏ.சி. அரங்கில் இரண்டாம் நாள் துவக்க விழாவில் அமைச்சர் களான சக்கரபாணியும், சேகர் பாபுவும் முன்னிலை வகிக்க, மாநாட்டு மலரை உயர்நீதி மன்ற நீதியரசர் சுரேஷ்குமார் வெளியிட, கோவை கௌமார மடம் குமரகுருபரர் சுவாமிகள் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய நீதியரசர் சுரேஷ்குமார், “"இன்றைக்கு இந்த மாநாட்டை நடத்தியுள்ள அரசும், அறநிலையத்துறையும் பாராட்டுக்குரியது. இந்த மாநாட்டை அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு என்று சொல்வதற்குப் பதிலாக உலக முத்தமிழ் முருகன் ஆற்றுப்படை மாநாடு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்''” என்று கூறி கரவோசையைப் பெற்றார்.

Advertisment

அதன்பின் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “"இந்தியாவி லேயே அதிக கோவில்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு. நாங்கள் எப்பொழுது அமைச்சரை (சேகர்பாபு) தொடர்புகொண்டாலும் கோவில் குடமுழுக்கு போன்ற பணிகளில் இருக்கிறேன் என்பார். இந்த மாநாட்டை திண்டுக்கல் மாவட்டத்தில் நடத்தியதற்கு மாவட்ட மக்கள் சார்பில் முதல்வருக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்''’என்றார். தொடர்ந்து பேசிய தொகுதி எம்.எல்.ஏ. வான செந்தில்குமார், பழனி முருகனுக்கு அமைச்சர் கொண்டுவந்த பல திட்டங்களை எடுத்துக்கூறி அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

மாநாட்டில் கலை நிகழ்ச்சி கள், நாட்டியம், கருத்தரங்கம், இசை நிகழ்ச்சி, கரகாட் டம், மயிலாட்டம் என தொடர்ந்து பல நிகழ்ச்சிகள் அருண கிரிநாதர் அரங்கில் நடந்து கொண்டிருந்ததைக் காண பெருந்திரளாக முருக பக்தர்களும், பொதுமக்களும் வந்தவாறிருந்தனர். மதிய இடைவேளையின்போது முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் நடைபெற்றது. இரண்டு நாள் மாநாட்டில் மூன்று வேளையும் காலை, மதியம், இரவு என டிபன் முதல் சாப்பாடு வரை பல வகைகளில் உணவு வகைகளை தயாரித்து பக்தர்களுக்கு இலவசமாக வழங்கினார்கள். கண்காட்சி அரங்கில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் நின்று சாமி சிலைகளுடன் புகைப்படம் எடுப்பதும், செல்பி எடுப்பதுமாக காணப்பட்டனர். பொதுமக்களுக்கு அறநிலையத்துறை சார்பில் பல பொருட்களுடன் பிரசாதப் பைகள் வழங்கப்பட்டன.

mu

"உலகில் யாரும் செய்யாத ஒரு நிகழ்வை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சீரோடும், சிறப்போடும் செய்திருக்கிறார். இதற்கு முந்தைய எந்த அரசும் இதுபோன்ற ஒன்றைச் செய்த தில்லை. இனிவரும் அரசும் செய்வார்களா தெரியவில்லை'' என்றார் தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்.

சுவிட்சர்லாந்து நாட்டி லிருந்து வந்திருந்த வேலுப் பிள்ளை கணேஷ்குமா ரிடம் கேட்டபோது, “"கடந்த 2014-ல் சுவிட்சர்லாந்தில் 2-வது அனைத்துலக முருகன் பக்தி மாநாடு எனது தலைமையில் நடைபெற்றது. முதல் மாநாடு இலங்கையில் நடைபெற்றது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அழைத்ததின் பேரில் சுவிட்சர்லாந்திலிருந்து 15 பேர் இந்த மாநாட்டிற்கு வந்திருக்கிறோம். இந்த மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழுக்கும் முருகனுக்கும் நடக்கக்கூடிய விழா. அதில் கண்டிப்பாக தமிழனாக ஒவ் வொருவரும் கலந்துகொள்ள வேண்டும். ஏற்பாடுகள் மிகவும் அருமையாக இருக்கிறது. இதுபோல் ஒரு மாநாடு இனிவரும் காலங்களில் நடக்குமா என ஐயப்பாடாக உள்ளது''’என்று கூறினார்.

m

இம்மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், “"இப்படி ஒரு மாநாடு எங்கள் நாட்டில் மட்டுமல்ல எந்தவொரு நாட்டிலும் நடந்ததில்லை. நானும் பார்த்ததில்லை. இந்த முயற்சியை முன்னெடுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் பாராட்டுகள்''’என்று கூறினார்.

மாநாட்டு பணியில் ஈடுபட்டிருந்த தேவஸ்தான அலுவலர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். “தமிழகத்திலுள்ள 38 மாவட்டங்களில் அறநிலையத்துறையில் இருக்கும் ஜே.சி., ஏ.சி., டி.சி., இ.ஒ. மற்றும் கோவிலில் பணிபுரியும் அலுவலர்கள், பழனியாண்டவர் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களும் இந்த மாநாட்டிற்காக அமைச்சரின் உத்தரவின் பேரில் வந்திருக்கிறோம். எங்களுக்கு நிகழ்ச்சிகளை ஒதுக்கி கண்காணிக்கவும், நீதியரசர்கள், வி.வி.ஐ.பி., வி.ஐ.பி.கள், வெளிநாட்டிலிருந்து வந்த பக்தர்கள், ஆதீனங்கள், ஆன்மீக பெரியோர்கள் ஆகியோரை அழைத்து வருவதிலிருந்து திரும்பி அனுப்புவது வரையிலான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வி.ஐ.பி. பாஸ் உட்பட சுமார் 9,600 பாஸ்கள் அடித்து வழங்கப்பட்டிருந்தன.

இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தும் எந்த ஒரு இடத்திலும் கூச்சல் குழப்பம் இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. மாநாட்டு அரங்கு முழுவதுமே ஏர்கண்டிசன் செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஒட்டுமொத்த மின்சாரத்தையும் ஜெனரேட்டர் மூலமே உருவாக்கினோம். அமைச்சர் சேகர்பாபு பம்பரமாகச் செயல்பட்டு மாநாட்டை வெற்றியடைய வைத்திருக்கிறார்''’என்றனர்.

மாநாட்டின் நிறைவு விழாவின்போது உயர்நீதிமன்ற நீதியரசர் வேல்முருகன் கலந்துகொண்டு சமயச் சொற்பொழி வாளர்கள், திருப்பணி மேற்கொண்ட ஆன்மீக இலக்கியப் படைப்பாளர்களை சிறப்பிக்கும் வகையில் 16 பேருக்கு தங்கக் காசுடன் விருதுகளை வழங்கினார். நீதியரசருடன் விழாவில் கலந்து கொண்டவர்களும், விருது பெற்ற வர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அறநிலையத்துறை சார்பில் 21 தீர்மானங்கள் மாநாட்டில் கொண்டு வரப்பட்டன.

d

கூட்டத்தை எண்ணி பழனி வர முடியாமல் போன பக்தர்கள், இந்த மாநாட்டு கண்காட்சியை தொடர்ந்து பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில் வருகிற 30-ஆம் தேதி வரை கண்காட்சி பொதுமக்கள் பார்க்கத் திறந்திருக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு உத்தர விட்டுள்ளார்.

மாநாட்டிற்கு வந்த லட்சக்கணக்கான முருக பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அறநிலையத்துறை மூலம் பிரசாத பைகள் வழங்கப்பட்டது. அந்த பிரசாத பையில் முருகனின் இராஜ அலங்கார படம், திருநீறு, குங்குமம், 200கிராம் பஞ்சாமிர்தம், கந்த சஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு உள்பட பத்து வகையான பொருட்கள் இருந்தன. அதை பக்தர்களும், பொது மக்களும் வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

cc

பழனி நகரத்தை பொறுத்தவரை இந்துக்களோடு முஸ்லீம்களும் இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கக்கூடிய முஸ்லீம்கள், இந்துக்கள் நடத்தும் விநாயகர் சதுர்த்தியில் கூட கலந்து கொள்வதும் வழக்கம். அதுபோல் பழனியில் நடக்கும் தைப்பூசம், பங்குனி உத்திர விழாவிலும் ஜாதி, மதம் பார்க்காமல் கலந்துகொள்வார்கள். அதுபோலதான் இந்த முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு பழனி பகுதியைச் சேர்ந்த பல முஸ்லீம் மக்கள் வந்து மாநாட்டிலுள்ள கண்காட்சியையும் விழா அரங்குடன் கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்து விட்டு சென்றனர். இப்படி இந்த மாநாட்டை மகளுடன் பார்க்க வந்த பழனியைச் சேர்ந்த சையது அபுதாகீரிடம் கேட்டபோது... "இப்படி ஒரு முருகன் மாநாடு பழனியில் இதுவரை நடந்ததில்லை. இதற்கு முந்தைய அரசுகளும் ஒரு விழா எடுத்து நடத்தியதில்லை. மாநாட்டை பார்க்க என்னைப்போல் பல முஸ்லீம்கள் வந்திருக்கிறோம். எங்களை அறநிலையத்துறையினர் நல்ல முறையில் வரவேற்றனர்'' என்று கூறினார்.

இரண்டு நாட்கள் மாநாட்டுக் கூட்டத்தால் குலுங்கிய பழனி நகர், மெல்ல இயல்புநிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.

-சக்தி

nkn310824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe