நக்கீரன் மீதான கொலைவெறித் தாக்குதல்! குவியும் கண்டனக்குரல்கள்!

ss

"நக்கீரன்' பத்திரிகையின் முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை சக்தி பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருள் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

வைகோ (ம.தி.மு.க.)

vaikoகள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். மாணவி யின் மரணத்தில் புதைந்து உள்ள மர்மங்களை வெளிக்கொணர்வது பத்திரிக்கை, ஊடகங்களின் கடமை என்பதால் நக்கீரன் இதழும், ஊடகமும் இதில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்தனர். தனியார் பள்ளி மாணவி இறப்பின் பின்னணி குறித்து நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் ஆய்வு செய்து பல தகவல்களை மக்கள்முன் வைத்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி சென்று மேலும் புலனாய்வில் ஈடுபட்ட நக்கீரன் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீது ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். அவர்கள் சென்ற மகிழுந்தை 15 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று தலைவாசல் அருகே தடுத்து நிறுத்தி கொடூரத் தாக்குதல் நடத்தியது, பள்ளி நிர்வாகம் ஏவிவிட்ட வன்முறைக் கும்பல் எனத் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். ஜனநாயக நாட்டில் பத்திரிகை, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடு வதையும், செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்து கின்றேன்.

சீமான் (நாம் தமிழர் கட்சி)

seeman

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாசு, ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். நாடறிந்த ஊடகமான நக்கீரன் பத்திரிகையாளர்களையே தாக்கி, அடக்குமுறைகளைப் பாய்ச்சி, அழுத்தங் களும், நெருக்கடிகளும் கொடுக்கப்படுகிறது என்றால், மாணவி மரணத்தில் என்னவெல்லாம் நிகழச் சாத்தியப்பட்டிருக்கும் என்

"நக்கீரன்' பத்திரிகையின் முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமார் ஆகியோரை சக்தி பள்ளி தாளாளர் ரவிக்குமாரின் சகோதரர் அருள் சுபாஷ் உட்பட 10 பேர் வழிமறித்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இதில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

வைகோ (ம.தி.மு.க.)

vaikoகள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். மாணவி யின் மரணத்தில் புதைந்து உள்ள மர்மங்களை வெளிக்கொணர்வது பத்திரிக்கை, ஊடகங்களின் கடமை என்பதால் நக்கீரன் இதழும், ஊடகமும் இதில் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்தனர். தனியார் பள்ளி மாணவி இறப்பின் பின்னணி குறித்து நக்கீரன் இதழின் மூத்த செய்தியாளர் பிரகாஷ் ஆய்வு செய்து பல தகவல்களை மக்கள்முன் வைத்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி சென்று மேலும் புலனாய்வில் ஈடுபட்ட நக்கீரன் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீது ஒரு கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். அவர்கள் சென்ற மகிழுந்தை 15 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று தலைவாசல் அருகே தடுத்து நிறுத்தி கொடூரத் தாக்குதல் நடத்தியது, பள்ளி நிர்வாகம் ஏவிவிட்ட வன்முறைக் கும்பல் எனத் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்து இருக்கின்றனர். ஜனநாயக நாட்டில் பத்திரிகை, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடு வதையும், செய்தியாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதையும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்து கின்றேன்.

சீமான் (நாம் தமிழர் கட்சி)

seeman

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாசு, ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். நாடறிந்த ஊடகமான நக்கீரன் பத்திரிகையாளர்களையே தாக்கி, அடக்குமுறைகளைப் பாய்ச்சி, அழுத்தங் களும், நெருக்கடிகளும் கொடுக்கப்படுகிறது என்றால், மாணவி மரணத்தில் என்னவெல்லாம் நிகழச் சாத்தியப்பட்டிருக்கும் என்பதை மக்களும், நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும், நீதியரசர் களும் உணர்ந்துகொள்ள வேண்டும். இனி மேலாவது, தற்கொலை எனும் கோணத்திலேயே வழக்கின் விசாரணையைக் கொண்டு செல்லாது, நேர்மையான விசாரணையை நடத்தி, தொடர் புடைய குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டு மெனவும், பத்திரிகையாளர்களைத் தாக்கியவர் களை கடும் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

திருமாவளவன் (வி.சி.க.)

thirumaநக்கீரன் முதன்மை செய்தி யாளர் மூத்த ஊடகவியலாளர் பிரகாஷ் மீது... அவர் வந்த வாகனத்தின்மீது மிக மோசமான தாக்குதல் நடந்திருக்கிறது. அதே போல கேமராமேன் அஜித் என்பவர் தாக்கப்பட்டு அவரது பல் உடைந்திருக் கிறது. இந்த நடவடிக்கைக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைத் தூண்டியவர் கள் உட்பட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தாக்குதல், ஊடகவியலாளர் களின் சுதந்திரத்தைப் பறிப்பதோடு மட்டுமல் லாமல் இது மோசமானதொரு முன்மாதிரியாக அமையும். ஊடகவியலாளர்கள் எது குறித்தும் எழுத முடியாது, பேச முடியாது என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய அநாகரிகமான போக்கு இது. தமிழக அரசு இதில் கடுமையான நடவடிக்கை எடுக்குமென நான் நம்புகிறேன். உடனடியாக அவர்களை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கே.பாலகிருஷ்ணன் (சி.பி.எம்.)

gg

கள்ளக்குறிச்சியில் செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் முதன்மைச் செய்தியாளர் பிரகாஷ் மற்றும் கேமிராமேன் அஜித் குமார் ஆகியோர் மீது சமூக விரோதக் கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதல் கனியாமூர் சக்தி மெட்ரிக்குலேசன் பள்ளி நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் நடந்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. எனவே, இதுகுறித்து தீர விசாரித்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் அடையாளங்கண்டு பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்து, வழக்கு தொடுத்திட வேண்டு மெனவும், தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர் களுக்கு உரிய சிகிச்சை வழங்கிட வேண்டுமெனவும், ஊடகத்துறையினர் சுதந்திரமாக செய்தி சேகரிப் பதற்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இரா.முத்தரசன் (சி.பி.ஐ.)

ff

புகழ்பெற்ற நக்கீரன் வார இதழ், புலனாய்வு செய்து எந்த செய்தியையும் ஆதாரமின்றி வெளியிடுவதில்லை. மிகுந்த சமூக அக்கறை பொறுப்புணர்வோடு அந்த இதழ் நடைபெறுகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த 19ஆம் தேதி நக்கீரன் பத்திரிகையாளர் பிரகாஷ் அவர்களும், கேமராமேன் அஜித் அவர்களும் நேரடியாகச் சென்று ஸ்ரீமதியின் பெற்றோர்களைச் சந்தித்து பேட்டியெடுத்திருக்கிறார்கள். பள்ளிக் கட்டடத்தையும் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். இது ஒன்றும் தவறல்ல. பள்ளி நிர்வாகம், பிரகாஷையும் அஜித்தையும் தாக்கவேண்டுமென்று அவர்கள் சென்ற வாகனத்தை வழிமறித்து வாகனத்தை அடித்து சேதப்படுத்தி, இருவர் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் இருவரும் மருத்துவமனையில் இருக்கிறார்கள். இந்த பள்ளி நிர்வாகத்திற்கு இப்படிப்பட்ட துணிச்சல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. தாக்குத லுக்குத் தூண்டிய பள்ளி நிர்வாகத்தின்மீதும், தாக்குதல் நடத்திய குண்டர்கள்மீதும், சட்டரீதி யான தக்க நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வற்புறுத்திக் கேட்டுக்கொள் கிறேன்.

திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்)

tt

நக்கீரன் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் அவர்கள் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அங்குள்ள மக்களையும், பள்ளிக்கூடத்தையும் சென்று செய்தி சேகரிப்பதற்காக சென்றபோது கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் வாகனமும் தாக்கப்பட்டதாக செய்தி அறிந்தோம். இதுபோல் பள்ளிக்கூடத்தின் ஏவலாளர்கள் செய்திருப்பது ஏற்கமுடியாத ஒன்று. மே 17 இயக்கம் இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. துணிச்சலாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் ஊடகத் தோழர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நக்கீரனுக்கு நாங்கள் துணைநிற்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

டி.டி.வி.தினகரன் (அ.ம.மு.க.)

ttbபத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் தாக்கப்பட்டிருப்பது கண்டனத் திற்குரியது. இதற்கு காரண மானவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. ஆட்சியில் ஊடகத்துறையினர் தொடர்ந்து மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடிப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல

ddபேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. (ம.ம.க)

நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபரும், மூத்த ஊடக வியலாளருமான பிரகாஷ் மற்றும் நக்கீரன் புகைப்பட நிருபர் அஜித்குமார் ஆகியோர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாகச் செய்தி சேகரித்துவிட்டுத் திரும்பும்போது சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மக்கள் நீதி மய்யம்

ddமக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், 'கள்ளக்குறிச்சி மாவட் டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் வார இதழ் செய்தியாளர் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதலை மக்கள் நீதி மய்யம் கடுமையாக கண்டிக்கிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற் கொள்வதுடன், பாதிக்கப்பட்ட செய்தியாளர் களுக்கு உயர் சிசிக்சை அளிக்க வேண்டும். மக்களுக்கு செய்திகளைத் தரும் பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதிசெய்வதுடன் அவர் களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அவசியம்' என்று கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி)

bb

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில், செய்தி சேகரிக்க சென்ற நக்கீரன் இதழின் மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் மீது பள்ளி நிர்வாகத்தினர் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உண்மை சுடும் என்பது பெரியோர் வாக்கு. தொடர்ந்து எழுதி வந்த உண்மைகளால் அச்சமடைந்த பள்ளி நிர்வாகம், இப்படியான தாக்குதலை நடத்தி யுள்ளது. மாணவர்களுக்கு கல்வியை போதிக்க வேண்டிய பள்ளி நிர்வாகம், அதற்கு பதிலாக மாணவர்களையும், பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் மிரட்டி வருவது ஏற்புடையதல்ல. இந்த தாக்குதலை நடத்தக் காரணமான பள்ளி நிர்வாகத்தை, நீதியின் முன் நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசு உறுதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள் கிறது.

நெல்லை முபாரக் (எஸ்.டி.பி.ஐ.)

bb

நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் மீது சமூக விரோதக் கும்பல் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலில் தொடர்புடைய அனைத்துக் குற்ற வாளிகளையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. நக்கீரன் பத்திரிகையாளர் பிரகாஷ், புகைப்பட கலைஞர் அஜீத் மீதான தாக்குதலை வன்மையாக கண்டித்து, ம.ஜ.க. பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான மு.தமிமுன் அன்சாரி, தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளர் வ. கௌதமன், சோசலிச தொழிலாளர் மையம் கட்சித் தலைவர் க.விநாயகம், அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் தலைவர் விழுப்புரம் ஏ.பி.ஆசைதம்பி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். திரைப்பட இயக்குநர் சீனுராமசாமி தனது ட்விட்டர் பதிவில், "என் வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன். மூத்த செய்தியாளர் அண்ணன் பிரகாஷ் அவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன். அவர் விரைந்து நலம்பெற விரும்புகிறேன்'’எனக் குறிப்பிட்டுள்ளார்.

ff

சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ், கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின்தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல், கார் மீதும், பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தி யுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூகவிரோதக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது

இந்தத் தாக்குதலைக் கண்டித்து, மதுரையில் அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பாக மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பாக, மதுரை பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கதிரவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், முக்கிய குற்றவாளியான அருள் சுபாஷை கைது செய்யும்படியும், பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு தரும்படியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தத் தாக்குதலைக் கண்டித்து, விருதுநகர் மாவட்ட பத்திரிகை யாளர்கள் நல சங்கத்தின் சார்பில், விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். விருதுநகர் மாவட்டம் -காரியாபட்டி பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் சார்பிலும், காரியாபட்டி வட்டாட்சி அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருச்சுழி தொகுதி பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர். மேலும், திண்டுக்கல் பிரஸ் கிளப், புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர் சங்கம், நாகர்கோவில் பிரஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

தொகுப்பு: தெ.சு.கவுதமன்

nkn240922
இதையும் படியுங்கள்
Subscribe