வேலூர் மாநகரச் செயலாளராக அறிவிக்கப்பட்ட வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மீதான கோபத்தை கட்சி நிர்வாகிகளும், கவுன்சிலர்களும் மாநகர மேயர் மீது காட்டுவதால் பதட்டத்தி லேயே உள்ளது வேலூர் மாநகராட்சி.
வேலூர் மாநகரத்தில் மாநகரச் செயலாளருக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் நடைபெற்றபோது, பகுதிச் செயலாளர்கள் ஐயப்பன், வன்னிய ராஜா, தங்கதுரை, பரமசிவம், முருகப் பெருமாள், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ந.அசோகன், பகுதிச் செயலாளரும் கவுன்சிலருமான சந்திரசேகர், கவுன்சிலர் சுதாகர் என 11 பேர் மனு செய்து கார்த்திகேயனுக்கு அதிர்ச்சி தந்தனர். கார்த்தி கேயனே மீண்டும் மாநகரச் செயலாளராக அறிவிக்கப்பட்டாலும், அதிருப்தி குறையாத சில கவுன்சிலர்கள், பகுதிச் செயலாளர்கள் மாநகர மேயருக்கு எதிராகியுள்ளார்கள்.
இதுகுறித்து மாநகர நிர்வாகிகளிடம் பேசியபோது, "கட்சியினர் யாரையும் மதிப்பதில்லை, பகுதிச் செயலாளர்களுடன் கட்சி விவகாரங்கள் குறித்து விவாதிப்பதில்லை. புதிய நீதிக் கட்சியிலிருந்து தி.மு.க.வுக்கு வந்து மாநகரச் செயலாளர், எம்.எல்.ஏ. என பதவிகள் வகித்தாலும் இன்னமும் சாதிக்கட்சி நிர்வாகி போலவே செயல்படுகிறார். கட்சியில் தன் சாதி ஆட் களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார். மேயர் தேர்வின்போது, முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த சுஜாதா, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த புஷ்பலதா இருவரில் யாருக்கு என்கிற பஞ்சாயத்து அறிவாலயத் தில் நடந்தபோது, அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த், மாவட்ட சேர்மன் பாபு மூவரும் வன்னியர். மேயர் பதவியும் வன்னியருக்கேவா? இது நியாயமா என சீனியாரிட்டியை ஒதுக்கிவிட்டு, சாதியை முன்னிறுத்தி னார் கார்த்தி.
மேயரான சுஜாதா, எம்.எல்.ஏ. சொல்வதை மட்டுமே செய்கிறார். மாநகராட்சியில் எந்த வேலை நடந்தாலும் எம்.எல்.ஏ. ஒப்புதல் இல்லாமல் நடப்பதில்லை. அலுவலகக் கோப்பில் மேயர் கையெழுத்துப் போடவேண்டும் என்றாலும் எம்.எல்.ஏ. சொன்னால்தான் போடு கிறார். டெண்டர்களை எம்.எல்.ஏ. ஆதரவாளர் களே எடுக்கின்றனர். மண்டல தலைவர்கள், கவுன் சிலர்கள் கோரிக்கையுடன் மேயரைச் சந்தித்தால் எம்.எல்.ஏ.வைப் போய் பார்க்கச் சொல்வதால் அவர்கள் அதிருப்தியாகிவிட்டார்கள். காட்பாடி தொகுதிக்குள் வரும் முதல் மண்டலத்தில் துணை மேயர் சுனில்குமார் உட்பட சில கவுன்சிலர்கள் வார்டுகளில் செய்த வேலைக்கான பில்களை மேயர் க்ளீயர் செய்ய மறுத்துவிட்டார். இதில் துரைமுருகன் தலையிட்டபின்பே அவ்விவகாரம் முடிந்தது. அதேபோல் மா.செ. நந்தகுமார் ஆதரவாளர்களும் ஒதுக்கப்பட்டனர்.
மாநகரச் செயலாளராக இருப்பதால்தானே மேயரை கையில் வைத்துக்கொண்டு இப்படி செய் கிறார் என அமைச்சர் துரைமுருகன் ஆதரவாளர் களான பகுதிச் செயலாளர் வன்னிய ராஜா, பரம சிவம், முருகப்பெருமாள், அசோகன், மா.செ. நந்த குமார் ஆதரவாளர்கள் ஐயப்பன், தங்கதுரை போன்றோர் மாநகரச் செயலாளர் பதவிக்கு மனு செய்தனர். பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கார்த்திக்கு சாதகமாக நின்றார். இதனால் மா.செ. நந்தகுமார் எம்.எல்.ஏ. முயற்சியில் பொதுச் செயலாளர் துரைமுருகன் வீட்டில் பஞ்சாயத்து கூடியது. "வேலூர் தொகுதி எம்.எல்.ஏ. முதலியார், வேலூர் மேயர் முதலியார், வேலூர் மாநகரச் செயலாளரும் முதலியாராகத்தான் இருக்க வேண்டுமா? ஏன் பிற சாதியினருக்கு வாய்ப்பு தரக் கூடாதா?' என வன்னியர், நாயுடு, யாதவ பிரமுகர் கள் கேள்வி எழுப்பினர். அவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கார்த்தி மாநகரச் செயலாளராக்கப்பட்டார். ஆகஸ்ட் மாத மாநக ராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தபோது, எம்.எல்.ஏ. மீதான கடுப்பை மேயரிடம் கேள்விகளாகக் கேட்டு டார்ச்சர் செய்தனர் சில கவுன்சிலர்கள். "என்னை ஏன் கேள்வி கேட்கறிங்க, முதல் மண்டலம் (காட்பாடி) கவுன்சிலர்கள் எல்லா நிதியும் வாங்கிடறதால, உங்க வார்டுகளுக்கு நிதி ஒதுக்க முடியல' என்றார் மேயர். இதில் கடுப்பான துணை மேயர் சுனில் முதல் மண் டல தலைவர் புஷ்பலதா உட்பட சில கவுன்சிலர்கள் மேயருக்கு எதிராக குற்றச் சாட்டுகளை வீசியதால் கூட் டத்தில் அனல்பறந்தது.
இதுபற்றி மாநகரச் செயலாளர் கார்த்தி ஆதரவு கவுன்சிலர்கள் மற்றும் மேயர் சுஜாதா தரப்பினரிடம் பேசிய போது, “"கவுன்சிலர்களிடம் மேயர் நேரடியாக எதையும் கேட்கக்கூடாது. எந்த வார்டுக்கு என்ன வேலை, எவ்வளவு நிதி ஒதுக்கவேண்டும் என்பதை மண்டலத் தலைவர்கள் கூறுவதைத்தான் செய்ய வேண்டும் எனச் சொல்லியுள்ளதால் அதன்படியே மேயர் நடக்கிறார். அதிலும் காட்பாடி தொகுதி வரும் முதல் மண்டல விவகாரம் எதிலும் மேயர் தலையிடுவதில்லை. மண்டலத் தலைவர் புஷ்பலதா கணவர் வன்னிய ராஜா, துணைமேயர் சுனில் சொல் வதை மட்டுமே கேட்கிறார். முதல் மண்டலத்தில் செய்யப்பட்ட வேலைகளுக்கு சுமார் 8 கோடி ரூபாய் பில் செட்டில் செய்யப்பட்டது. இது, மற்ற மண்டலத்துக்கு ஒதுக்கியதைவிட 2 மடங்கு அதிகம். ஏன் எங்கள் வார்டுக்கு நிதி குறைவாக ஒதுக்கினீர்கள்? என மற்ற மண்டல கவுன்சிலர்கள் கேட்டதாலே மேயர் பதில் சொன்னார். உண்மை யைச் சொன்னதற்கு மேயர் மீது கோபத்தைக் காட்டுகிறார்கள். மேயருக்கான அனுபவம் இல்லாத தால் சில விவகாரங்கள் புரியவில்லை. அதனால் முன்னாள் மேயரான எம்.எல்.ஏ.விடம் சில ஆலோ சனைகள் கேட்கிறாரே தவிர அவர் சொல்வதை மட்டுமே செய்கிறார் என்பது தவறானது'' என்கிறார்கள்.