கூடங்குளத்தில் அமைக் கப்பட்டுவரும் நான்கு அணு உலைகளுக்கான பணிகளில், கூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர் களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில், 25 இளைஞர்களுக்கு, தொழில் மேம்பாட்டுத்திறன் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம், சபாநாயகர் அப்பாவு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் நெல்லை ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர், "கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இ
கூடங்குளத்தில் அமைக் கப்பட்டுவரும் நான்கு அணு உலைகளுக்கான பணிகளில், கூடங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த இளைஞர் களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில், 25 இளைஞர்களுக்கு, தொழில் மேம்பாட்டுத்திறன் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம், சபாநாயகர் அப்பாவு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் நெல்லை ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் தொடங்கியது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர், "கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பில், எழுத்துத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ இல்லாமல், தகுதியின் அடிப் படையில் பணி வழங்க கூடங்குளம் நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். பின்னர் பத்திரிகை யாளர்கள், "நெல்லை மாவட் டத்தில் கடந்த 50 நாட்களாக மூடப்பட்டுள்ள கல், மண் குவாரிகள் தொழிலாளர் நலன் கருதி எப்போது திறக்கப்படும்?'' என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆட்சியர், "குவாரி திறப் பதற்கான ஆய்வு கள் நடந்து கொண்டிருக்கின் றன'' என்று கூறினார். "ஆய்வு கள் எத்தனை நாளில் முடியும்?'' என்று அப்பாவு கேட்க, "இப் போது சொல்ல முடியாது. இதற்காக மற்றொரு பிரஸ்மீட் நடத்துவோம்'' என்று ஆட்சியர் கூறியிருக்கிறார்.
இதைக்கேட்டு, அங்கிருந்த எம்.பி. ஞானதிரவியம் ஆவேச மடைந்து, "சார், குவாரி மூடி 60 நாளாச்சு... 50,000 பேர் வேலை இல்லாம இருக்கான்...'' எனக் குரலெழுப்ப, "ஏங்க கம்முன்னு கிடங்க!" என அமைச்சர் எம்.பி.யைக் கட்டுப்படுத்திவிட்டு, "இதனை முதலமைச்சர் கவனத் திற்கு கொண்டு செல்வோம். சீக்கிரம் வேலை வாய்ப்பு வழங்கு வோம்'' என்று பத்திரிகை யாளர்களிடம் கூறியிருக்கிறார். மீண்டும் இடைமறித்த எம்.பி., கலெக்டரை நோக்கி, "ஏதோ இன்சிடென்ட்டை மனசுல வச்சுக்கிட்டு தான் கலெக்டர் இப்படி பண்றாரு...'' என்று கடுமையாகக் குற்றஞ்சாட்ட, அமைச்சர் மீண்டும் இடை மறித்து, "என்னண்ணே இப்படி பண்றீங்க.. இது என்ன உங்க வூடா? கம்முனு கிடங்க!" என்று எம்.பி.யை அடக்கியிருக்கிறார். கலெக்டருக்கும் எம்.பி.க்குமான இந்த விவாதம், சூட்டைக் கிளப்பியிருக்கிறது.
இதற்கான காரணம் என்னவென்று விசாரிக்கையில், கடந்த மே 14-ல்,நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ளே அடைமிதிப் பான்குளத்தில் நடந்த கோரமான கல் குவாரி விபத்தையடுத்து, நெல்லை மாவட்டத்திலுள்ள 55 குவாரிகளையும் உடனே மூட உத்தரவிட்டார் ஆட்சியர் விஷ்ணு. பின்னர், 55 குவாரி களையும் ஆய்வு செய்ததில், ஒரு குவாரி தவிர 54 குவாரிகளும் முறைகேடாகச் செயல்பட்டது தெரியவர, அதுகுறித்த அறிக்கை யை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைத்தார் ஆட்சியர். இந்த குவாரிகளில் பெரும் பாலானவை அரசியல் புள்ளி களின் பினாமிகள் பெயர் களில் இயங்கிவந்ததால் குவாரிகளைத் திறப்பதில் அவர்கள் ஆர்வமாக இருப்ப தாகக் கூறப்படுகிறது.