வருகின்ற பாராளு மன்றத் தேர்தல், தமிழக அரசியல் கட்சிகளை வேகமாக செயல்பட வைத்துள்ளது. அனைத்துக் கட்சி அலுவலகங்களிலும் அதிக பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதில் தி.மு.க. கூட்டணியில் வேகம் மிக அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள். முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் PEN என்கிற அமைப்பை நடத்துகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் அமைப்புடன் இணைந்து செயல்பட்ட தி.மு.க., இந்தமுறை ஐபேக் டீமில் இருந்தவர்களைக் கொண்டு சபரீசன் தனியாக உருவாக்கிய PEN அமைப்பையே நம்பியிருக்கிறது.
PEN அமைப்புதான் முன்பு கலைஞர் தனது அனுபவத்தால் உருவாக்கிய தேர்தல் வியூகங்கள், பொதுமக்கள் கருத்து ஆகியவற்றை தி.மு.க.விற்கு அளிக்கிறது. இந்த அமைப்பு நானூறு பேரை தமிழகம் முழுவதும் களமிறக்கியுள்ளது. இவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியாக கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறார்கள். இதில் ஒரு குழு எடுக்கும் கருத்துக் கணிப்பு இன்னொரு குழுவுக்குத் தெரியாது. பொதுமக்கள் கருத்து, கட்சிக்காரர்களின் கருத்து, கூட்டணிக் கட்சியினர் கருத்து, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் கருத்து... இது தவிர, போலீஸ் உளவுத்துறையின் கருத்து என ஐந்து விதமாக ஐந்து வெவ்வேறு கருத்துக்கள் திரட்டப்படுகின்றன. இந்த ஐந்து வெவ்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.
பொதுமக்கள் கருத்துக்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்க ளுக்கு வழங்கப்பட்ட 6000 ரூபாய் நிவாரண நிதி, ஆட்சி மீது மழை வெள்ளத்தின்போது
வருகின்ற பாராளு மன்றத் தேர்தல், தமிழக அரசியல் கட்சிகளை வேகமாக செயல்பட வைத்துள்ளது. அனைத்துக் கட்சி அலுவலகங்களிலும் அதிக பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதில் தி.மு.க. கூட்டணியில் வேகம் மிக அதிகமாக இருக்கிறது என்கிறார்கள் உடன்பிறப்புகள். முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் PEN என்கிற அமைப்பை நடத்துகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் அமைப்புடன் இணைந்து செயல்பட்ட தி.மு.க., இந்தமுறை ஐபேக் டீமில் இருந்தவர்களைக் கொண்டு சபரீசன் தனியாக உருவாக்கிய PEN அமைப்பையே நம்பியிருக்கிறது.
PEN அமைப்புதான் முன்பு கலைஞர் தனது அனுபவத்தால் உருவாக்கிய தேர்தல் வியூகங்கள், பொதுமக்கள் கருத்து ஆகியவற்றை தி.மு.க.விற்கு அளிக்கிறது. இந்த அமைப்பு நானூறு பேரை தமிழகம் முழுவதும் களமிறக்கியுள்ளது. இவர்கள் பல குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதியாக கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறார்கள். இதில் ஒரு குழு எடுக்கும் கருத்துக் கணிப்பு இன்னொரு குழுவுக்குத் தெரியாது. பொதுமக்கள் கருத்து, கட்சிக்காரர்களின் கருத்து, கூட்டணிக் கட்சியினர் கருத்து, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் கருத்து... இது தவிர, போலீஸ் உளவுத்துறையின் கருத்து என ஐந்து விதமாக ஐந்து வெவ்வேறு கருத்துக்கள் திரட்டப்படுகின்றன. இந்த ஐந்து வெவ்வேறு கருத்துக்கணிப்பு முடிவுகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.
பொதுமக்கள் கருத்துக்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்க ளுக்கு வழங்கப்பட்ட 6000 ரூபாய் நிவாரண நிதி, ஆட்சி மீது மழை வெள்ளத்தின்போது பொங்கி எழுந்த அதிருப்தி அலையை கட்டுப்படுத்தி யிருக்கிறது எனக் கண்டுபிடித்திருக் கிறார்கள். தி.மு.க.வினர் மத்தியில் எடுக் கப்பட்ட கருத்துக்கணிப்பில், "அமைச்சர் கள் கட்சிக்காரர்களை மதிப்பதில்லை' என்ற குரல் பலமாக எதிரொலித்துள்ளது. கூட்டணிக் கட்சியினர் பல விவகாரங் களில் ஆளும் கட்சியினர் சரியாகச் செயல்படவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள னர். இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு எம்.பி.யும் தொகுதிக்கு என்ன செய்திருக்கிறார் கள் என எடுக்கப்பட்ட கணக்கில்தான் ஏகப்பட்ட வில்லங்கங்கள்.
வேலூர் எம்.பி.யான துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் பொதுமக்கள், கட்சிக் காரர்கள், கூட்டணிக் கட்சியினர், பத்திரிகை யாளர்கள், போலீஸ் ரிப்போர்ட் என அனைத்திலும் ‘பெயில் மார்க்’ பெற்றிருக்கிறார். அவரை மீண்டும் வேட்பாளர் ஆக்கினால் தி.மு.க.வினரே அவரைத் தோற்கடித்துவிடு வார்கள் என வந்த ரிப்போர்ட்டைப் பார்த்து தி.மு.க. தலைமை அதிர்ந்து போயிருக்கிறது. கடலூர் எம்.பி. மீதும் அதேபோல் மோசமான ரிப்போர்ட்டே வந்துள்ளது.
மக்கள் மத்தியில் நற்பெயருடன் நிறைய பாசிட்டிவ்வான கருத்துகளைப் பெற்ற எம்.பி. தூத்துக்குடி வெள்ளத்தில் திறம்படப் பணியாற்றிய கவிஞர் கனிமொழி மட்டுமே.
காங்கிரஸ் எம்.பி.க்களான சிவகங்கை கார்த்தி சிதம்பரம் மிக அதிகமான நெகடிவ் மார்க்குகளை பெறுகிறார். பொதுமக்கள் மத்தி யில் மிகக் கடுமையான எதிர்ப்பை சந்திக்கிறார். தேர்தலில் மட்டும் அவர் நிற்கட்டும்: நிச்சய மாக அவரைத் தோற்கடிப்போம் என சபதம் பூண்டிருக்கும் மக்கள் குழுக் களை, சிவகங்கை முழுவதும் பார்க்க முடிகிறது. கிருஷ்ணகிரி செல்லக் குமாரும் கார்த்திக் சிதம் பரத்தைப் போலவே வெகு ஜன மக்கள் விரோதத்தை மிக அதிகமாக சம்பாதித் திருக்கிறார். அவருக்கும், அந்தத் தொகுதிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப்போல அவர் நடந்துகொள்வது தி.மு.க. கூட்டணியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் ஒரு பெரிய அளவு அதிருப்தியை திருநாவுக்கரசரும் திருச்சியில் ஏற்படுத்தியிருக்கிறார். ஸ்ரீபெரும் புதூரில் டி.ஆர்.பாலு மழை வெள்ள சேதார நடவடிக்கைகளில் கடுமையான அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார். திருநெல்வேலி ஞான திரவியத்திற்கு எதிராகவும் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் மிகக் கடுமையான அதிருப்தி தொகுதி முழுக்க நிலவுகிறது.
கோவை மண்டலத்தில் அ.தி.மு.க.வின் கடுமையான போட்டியை சந்திக்க இருக்கும் தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகளும் சரியாக இல்லை. எனவே, தமிழகத்தில் உள்ள 39 எம்.பி.க் களில் 20 எம்.பி.க்களை மறுபடியும் தேர்தலில் நிற்க வைக்கக்கூடாது என டஊச அமைப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரைத்திருக் கிறது. ஸ்டாலின் ஏற்கெனவே கூட்டணிக் கட்சி யினரிடம் “"இந்தமுறை தொகுதிகளின் எண் ணிக்கை மாறாது. ஆனால், தொகுதிகளும் ஆட் களும் மாற்றப்பட வேண்டும்'” என அறிவுறுத்தி யிருக்கிறார். இது தி.மு.க. கூட்டணியில் ஒரு பெரிய விவாதத்தையே உருவாக்கியுள்ளது.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியே வந்து விட்டது. அதனால் தாராளமாக எம்.பி. சீட்டுகளை தர முன்வந்திருக்கிறது. ஆனால் சசிகலா, ஓ.பி.எஸ், தினகரன், தீபா என சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.வோடு கூட்டணிக் கட்சியினர் சேர பெரிதாக முன்வரவில்லை. கடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. பெற்ற வெற்றி சின்னஞ்சிறு கட்சிகளைக் கூட பா.ஜ.க. வசம் கொண்டு சேர்த்துள் ளது. பிரதமரின் திருச்சி வருகையின் போது பா.ம.க. தவிர முன்னர் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் இருந்த சிறு சிறு கட்சிகளுக்கு பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்து, எடப்பாடியை கலவர மூடுக்குக் கொண்டு வந்துவிட்டார் அண்ணா மலை.
அதனால் இந்தமுறை அ.தி.மு.க.வில் தலைவர்களின் வாரிசுகளுக்கு டிக்கெட் கொடுக்க எடப்பாடி முடிவு செய்துள்ளார். டி.ஜெயக்குமார் மகன் ஜெயவர்த்தன், வளர்மதியின் மகன் ஜெயக்குமார், ராஜன் செல்லப்பா, கே.பி.முனுசாமி போன்ற இரண்டாம் கட்டத் தலைவர் களின் வாரிசுகள் எம்.பி.க்களாக களம் இறங்குகிறார்கள். ஒவ்வொருவரும் கட்சி நிதியாக 20 கோடி தர வேண்டும் என எடப்பாடி கண்டிஷன் விதித்துள்ளார்.
பா.ஜ.க.வில் அண்ணாமலையோ "கடந்த இரண்டு வருடமாகவே பலரிடமும் ‘உங்களை எம்.பி. ஆக்குகிறேன்’ எனக் கூறி பெருந்தொகை வாங்கிவருகிறார். பிரபல பில்டரான பாஷ்யம், லைப் லைன் ஆஸ்பிட்டல் ராஜ் குமார், திருச்சியில் ஹூண்டாய் கம்பெனி டீலர், மணல் மாபியாக்கள் என பலரிடம் வசூல் செய்துவருகிறார் அண்ணாமலை. கிருஷ்ணகிரிக்கு அமர்பிரசாத் ரெட்டி, திருச்சிக்கு சூர்யாசிவா, தென் சென்னைக்கு தொழிலதிபர் சாம்பு, கோவைக்கு வானதி சீனிவாசன் இதுதவிர வேலூருக்கு ஏ.சி.சண்முகம் என நாற்பது தொகுதிகளுக் கும் லிஸ்ட் தயார் செய்து வசூல்வேட்டை நடத்திவரு கிறார் அண்ணாமலை. தி.மு.க.வின் கூட்டணிக் கட்சி களும் இந்த முறை தங்களுக்கு எந்தத் தொகுதி கிடைக் கும், யார் வேட்பாளர் என தி.மு.க. தலைமையிடம் பேசி வருகிறார்கள். இதற்கிடையே ஒன்றிய அரசு இன்கம் டாக்ஸ், அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகளை தி.மு.க. கூட்டணி வேட்பாளராக யார் வருவார்கள் எனக் கணித்து, அவர்கள் மீது ரெய்டு நடத்தத் தயாராகி வருகிறது.
மொத்தத்தில் தமிழக எம்.பி. தேர்தல் களம் பரபரப்பான கிளைமாக்ஸை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.
________
இறுதிச்சுற்று!
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை யான ஒய்.எஸ்.ஷர்மிளா, ஒய்.எஸ். ஆர்.தெலங்கானா என்ற கட்சியைத் தொடங்கி நடத்திவந்தார். இதை யடுத்து, கடந்த தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் அவர் வெளியிட்ட அறிவிப்பில், தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி யிடப் போவதில்லை என்றும், தேர்த லில் வாக்குகள் பிளவுபடுவதைத் தடுக்க காங்கிரஸுக்கு தனது ஆதரவை வழங்க முடிவு செய்துள்ள தாகவும் தெரிவித்தார். இந்த அறி விப்பின்மூலம், விரைவில் காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக் கப் போகிறார் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், ஒய்.எஸ்.ஷர்மிளா 4ந் தேதி வியாழனன்று காலையில் டெல்லிக்கு சென்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எம்.பி. ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். அவரது கட்சியையும் காங்கிரஸுடன் இணைத்துக்கொண் டார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த இணைப்பு காங்கிரஸுக்கு புத்துணர்வூட்டுமென்று அரசியல் பார்வையாளர்கள் கருது கின்றனர்.
-ஆதவன்