செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டில் நடந்த ரெய்டுகள் பற்றிப் பேசும் தி.மு.க.வினர் இதுபோல ரெய்டுகள் வரும் என எங்களுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே தெரியும். தேர்தலின் நெருக்கத்தில் செந்தில் பாலாஜியை கைது செய்வார்கள். அவரை டெல்லியில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி அமைச்சரான சத்யேந்திர ஜெயின் பாணியில் உள்ளே வைத்துவிட்டுத் தான் தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலை பா.ஜ.க. சந்திக்கும் என எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். அப்படி ஒரு நிலை வந்தால் என்ன செய் வது என்பதைப் பற்றி கடந்த ஒரு வருட மாகவே நாங்கள் அனைத்துவிதமான தயா ரிப்புகளுடன் இருக்கிறோம் என்கிறார்கள். செந்தில்பாலாஜி மேல் அவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக லஞ்சம் வாங்கினார் என்கிற வழக்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு தலின்படி விசாரணையில் இருக்கின்றது.
அடுத்து வருமானவரித்துறையை களமிறக்கியிருக்கிறார்கள். வருமானவரித் துறைக்கு கைது செய்யும் அதிகாரம் இல்லை. அமலாக்கத் துறைக்குத்தான் கைது செய்யும் அதிகாரம் இருக்கிறது. இவர்கள்தான் மேற்கு வங்கத்திலும் டெல்லியிலும் அமைச்சர்களை கைது செய்திருக்கிறார்கள். செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண் டும் என அண்ணாமலையும், எடப்பாடி யும் மாறி, மாறி கவர்னரிடம் மனு கொடுத்ததன் பின்னணியில் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைதான் ஒளிந்திருந்தது.
செந்தில் பாலாஜி மீது ஏகப்பட்ட அவதூறுகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக அள்ளித்தெளித்து அவரை பதவி நீக்கம் செய்ய ஒரு பெரிய முயற்சி நடந்தது. ஆனால், தி.மு.க. அந்த அவதூறுகளை கண்டுகொள்ளவில்லை. அதைத் தனது இடது கையால் புறந்தள்ளி விட்டது. அதைத் தொடர்ந்துதான் வருமான வரித்துறை நாற்பதுக்கும் மேற் பட்ட இடங்களில் பாய்ந்தது. அந்த ரெய்டுகளில் வருமான வரித் துறையினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த தகவல் ஜப்பானில் இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்ததும் அவர் நேரடி யாக செந்தில் பாலாஜியிடம் பேசினார்.
"வருமானவரித் துறை யினரிடம் எதிர்ப்பு காட்ட வேண்டாம்'' என முதல்வர் ஸ்டாலின் சொன்னதோடு ஆர்.எஸ். பாரதியையும், டி.கே.எஸ். இளங்கோவனை யும் அழைத்து "அறிவாலயத்தில் இருந்து மீடியாக்களை சந்தித்து செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக செயல்படுங்கள்''’என உத்தர விட்டார். செந்தில் பாலாஜியும் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அதன் பிறகு கரூரிலும், கோவையிலும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனால் கடுப் படைந்த தமிழக வருமான வரித்துறை இயக்குனர் சிவசங்கரன் நேரடியாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். "எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் சும்மா விட மாட்டோம்''’என பேட்டி யளித்தார். தாக்குதல் நடந்த இடங்களுக்கு நேரடியாக சென்ற சிவசங்கரன் அதில் ஒரு வேகத்தைக் காட்டினார்.
செந்தில் பாலாஜியின் இடங்களுக்கு சென்ற வருமான வரித் துறையினர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் கேட் திறக்கவில்லை என்றதும் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்றிருக் கிறார்கள். இது கேரளாவில் பின்பற்றப்படும் நடைமுறை. லோக்கல் போலீசாருக்கு சொல் லாமல் அவர்கள் எகிறிக்குதித்து உள்ளே வந்ததை வீடியோ படமாக எடுத்து செந்தில் பாலாஜி தரப்பு வெளியிட்டது. சமூக வலைத் தளங்களில் "செந்தில் பாலாஜி தி.மு.க.விற்கு துரோகம் செய்யத் தயாராகி விட்டார். அவர் தி.மு.க.வை உடைத்து பா.ஜ.க.வில் சங்கமம் ஆவார்'’என்கிற பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. வருமான வரித்துறையால் கைதுசெய்ய முடியாது என்பதால், "செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக சம்பாதித்த பணம் வெளிநாடுகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளதா?' என்கிற ஆய்வுக்கு கைது செய்யும் அதிகாரம் இருக்கும் அமலாக்கத்துறை களமிறக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை ஏற்கெனவே ‘கல்லல் குரூப் ஆப் கம்பெனீஸ்’ என்கிற கம்பெனியின் கணக்கு களை ஆராய்ந்து வரு கிறது. இந்த கல்லல் குரூப் ஆப் கம்பெனீஸ் லண்டனில் ‘கிரீன் லே அன்ட் கோ’ என்கிற வெளிநாட்டு மது பானம் தயாரிக்கும் கம்பெனியை விலைக்கு வாங்கியுள்ளது. அதே பேரில் எடப்பாடி ஆட்சிக் காலத்திலிருந்தே இந்தியா முழுவதும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. சாராயம், ரியல் எஸ்டேட், சினிமா என இயங்கும் இந்த கம்பெனியில் முக்கிய மானவர் சரவணன் பழனியப்பன். இவர்கள் சினிமா படம் தயாரித்தார்கள். மருத்துவமனைகளை நடத்துகிறார்கள். தென் ஆப்பிரிக்கா, உகாண்டா போன்ற நாடுகளில் விவசாயம் செய்கிறார்கள். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பி.எஸ்.சுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள்.
செந்தில் பாலாஜி ரெய்டு நடவடிக்கைகளின்போது அமலாக்கத் துறை கல்லல் குரூப் ஆப் கம்பெனீஸ் பற்றி ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதில் “சினிமாவாக தயாரித்த கல்லல் குரூப் ஆப் கம்பெனீஸ் படங்கள் வெற்றி பெறவில்லை. கவுதம் கார்த்திக்கை வைத்து கல்லல் குரூப் ஆப் கம்பெனீஸ் தயாரித்து வெளியிட்ட படம் படுதோல்வி அடைந்தது. அதனால் லண்டனைச் சேர்ந்த சுபாஷ்கரனின் ‘லைகா’ நிறுவனத்தோடு இணைந்து படத் தயாரிப்பில் இறங்கினார்கள் கல்லல் குரூப் ஆப் கம்பெனீஸ். அதற்காக 360 கோடி ரூபாய் பணம் ‘லைகாவிற்கு கொடுக்கப்பட்டது. அந்தப் பணத்தை வைத்துதான் லைகா, பொன்னியின் செல்வன்’ உட்பட பிரம்மாண்டமான படங்களை தயாரித்தது. கமலஹாசன் லைகா உதவியுடன் நாலு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்”எனக் கூறப்பட்டுள்ளது.
"அவர்கள் கொடுத்த பணத்தை நாங்கள் திருப்பித் தந்து விட்டோம்'’என்கிறது ‘லைகா’ தரப்பு. 2019-ஆம் ஆண்டிலிருந்து நடக்கும் இந்த தகராறில் இருமுறை காவல்துறை தலையிட்டுள்ளது. ‘கல்லல்’ சரவணன் பழனியப்பனை பெங்களூருவில் இருந்து அழைத்து வந்து காவல்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் கடுமை காட்டப்படவே, என்ன நடக்கிறது என அமலாக்கத்துறையும் சரவணனை விசாரணைக்கு அழைத்தது. அமலாக்கத்துறையிடம் அனைத்தையும் ஒப்பித்தார் சரவணன். அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை ‘லைகா’ நிறுவனத்தின் மீது பாய்ந்தது. அமலாக்கத்துறையின் நட வடிக்கைகள் ஓ.பி.எஸ். மகன் இரவீந்திரநாத் மீதும் பாய்ந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் கல்லல் குரூப் ஆப் கம்பெனீஸ். லைகா தயாரித்த பொன்னியின் செல்வன்-2 படத்தை ‘ரெட் ஜெயண்ட் மூவீஸ்’ வெளி யிட்டது. இதில் முறைகேடு ஏதாவது சிக்குமா என அமலாக்கத்துறை ஆராய்ந்து வருகிறது. அத்துடன் செந்தில் பாலாஜிக்கும் கல்லல் குரூப்பின் மதுபான விற்பனைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி அமலாக்கத்துறை ஆராய்ந்து வருகிறது. இதற்கென என ஒரு பெரிய டீமையே மத்திய அரசு களத்தில் இறக்கி விசாரணை செய்து கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, எம்.ஜி.எம். நிறுவனம் நானூறு கோடி ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்து அமலாக்கத்துறையிடம் சிக்கியது. அந்த வழக்கை சமரசம் பேசி தமிழகத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் முடித்து வைத்தார். அதையும் மீண்டும் நோண்டத் தொடங்கியுள்ளது அமலாக்கத்துறை. “கல்வித்துறையில் மத்திய அரசின் திட்டமான ‘சர்வ சிக்சா அபியான்’ என்கிற திட்டத்தில் நானூத்திப் பத்து கோடி ரூபாய் எவ்வித டெண்டரும் இல்லாமல் ஒரு அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த விவகாரமும் தற்பொழுது விசாரிக்கப் படுகிறது” என்கிறது அமலாக்கத்துறை வட்டாரங்கள்.
“செந்தில் பாலாஜி மட்டுமல்ல. தி.மு.க.வின் சீனியர் அமைச்சர்கள் ஏழு பேரை மத்திய அரசு குறி வைத்திருக் கிறது”என நக்கீரன் முன்பே எழுதியது.
“இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள தி.மு.க. தயாராகவே இருக்கிறது. மத்திய அரசின் இந்தத் தாக்குதல், அதை தி.மு.க. எதிர்கொள்ளும் விதம் இவைகளே இனி முக்கியச் செய்தியாக இருக்கும் என்கிறார் கள் சமூக ஆர்வலர்கள்.
_________
இறுதிச் சுற்று!
அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் தலைநகரான டோக்கி யோவில் 29-5-23 திங்கள்கிழமை அன்று ஜப்பான் நாட்டின் "வெளிநாடு வர்த்தக அமைப்'பின் தலைவர்களை சந்தித்து உரையாடினார். அந்த சந்திப்பில், புதிய தொழில் தொடங்க தமிழ்நாடு எந்த வகையிலெல்லாம் உகந்த மாநிலமாக திகழ்கிறது என்பதையும், தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை செய்ய ஜப்பான் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்பதையும் விரிவாக எடுத்துரைத்தார் ஸ்டாலின். அதனை ஏற்றுக்கொண்ட வெளிநாடு வர்த்தக அமைப்பின் தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, ஜப்பான் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அளித்து வரும் முக்கியத்துவத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி கூறியதுடன் உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிபெற வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். ஜப்பான் நாட்டு நிறுவனங்களுடன் சில ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
-இளையர்