"ஹலோ தலைவரே, தமி ழகத்தின் அதிகாரத்தை யும் உரிமைகளையும் டெல்லி ஒடுக்க முயல் வதாக பரவலாகப் புகார் எழுந்திருக்கிறது.''”
"ஆமாம்பா, நம் தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களுக்கே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி மிரட்டுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, மணல் குவாரி விவகாரங்கள் குறித்து விசாரிக்க, தமிழகத்தைச் சேர்ந்த 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி அதிரவைத்திருக்கிறது. இதன்மூலம், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கவனிக்கும் முதல்வருக்கும் தலைமைச் செயலாளருக்கும், நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகனுக் கும் நெருக்கடியை ஏற்படுத்த அமலாக்கத்துறை முயல்கிறது என்கிற குற்றச்சாட்டு அரசுத்துறை யில் எழுந்திருக்கிறது. இந்த சம்மனை எதிர்த்து, கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை விவகாரங் களை விசாரிக்கும் உரிமை அமலாக்கத்துறைக்கு இல்லை என்றும் இது அதிகார துஷ்பிரயோகம் என்றும் தமிழக அரசின் சார்பில், பொதுத் துறை செயலாளர், நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்திருக்கிறது. தமிழக அரசின் இந்த ’திருப்பியடிக்கும் மூவ்’ டெல்லியையும் அமலாக்கத்துறையையும் திகைக்க வைத்திருக்கிறது.''”
"இந்த வழக்கில் மாநில அரசுக்கு உரிய நீதி கிடைக்குமா?''”
"இந்த வழக்கு அமலாக்கத்துறையின் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணைகளைக் கேள்விக்குறியாக்கும் என்பதால், அமலாக்கத்துறையின் கைகளுக்கு நீதித்துறை கட்டுப்போடுமா என்பது சந்தேகம் என்று சட்டத்துறையில் இருக்கும் பலரும் கருதுகின்றனர். அதேபோல், இந்த வழக்கு தோல்வியைச் சந்தித்தால், அமலாக்கத்துறையின் தாக்குதலின் வேகம் அதிகரிக்கலாம் என்கிற அச்சம் அரசுத்துறை அதிகாரிகளுக்கு வந்திருக்கிறது.''
"ஆனாலும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசு களை, டெல்லி தன் புலனாய்வு அமைப்புகளை யும் கவர்னர்களையும் வைத்து மிரட்டிவரும் விவகாரம், பெரும் பேசுபொருளாகும் என் றும், இது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தமிழக அரசு கருதுகிற தாம். இப்படி தமிழக அரசைக் குறிவைத்து மோடி அரசு மிரட்டத் தொடங்கி இருப்பதை, அகில இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் கூர்ந்து கவனிக்கத் தொடங்கி இருக்கின்றன.''”
"புதுவை கவர்னர் தமிழிசையும், அம்மாநில அரசுக்கு கடிவாளம் போடுவதாகப் புகார் எழுந்திருக்கிறதே?''”
"புதுவையில் நடக்கும் எந்த அரசு விழாவாக இருந்தாலும், இனி அதற்கு மாநிலத்தின் முதல்வர் வாயிலாக தன்னிடம் அனுமதி பெறவேண்டும் என்று, அம்மாநில கவர்னரான தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு அதிரடி உத்தரவைத் தற்போது பிறப்பித்திருக் கிறார். இது மாநிலத்தின் செயல்பாட்டுக்கு கடிவாளம் போடுவது போல் அமைந்திருக்கிறது என்கிறார்கள் பலரும். கவர்னரின் அதிகாரத் தைக் கேள்விக்குறியாக்கி நம் தமிழக அரசு உள்ளிட்ட சில மாநிலங்கள் உச்சநீதிமன்றத் தை நாடியிருக்கும் நிலையில், மாநில அரசு களின் மசோதா உள்ளிட்ட செயல்பாடுகளை நிறுத்தி வைக்கும் அதிகாரம் கவர்னர்களுக்கு இல்லை என்று, அந்த உச்சநீதிமன்றமே தலையில் அடித்தது போல் சொல்லியிருக்கிறது. அப்படி இருந்தும் தமிழிசை எந்த அடிப்படையில், என்ன கோணத்தில், இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறார் என்ற கேள்வி பலமாக எழுந்திருக்கிறது.''”
"தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் பரபரப்பா நடந்திருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, அறிவாலயத்தில் சில வேலைகள் நடந்து வருவதால் இந்தமுறை இந்தக் கூட்டத்தை 26ஆம் தேதி சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலான அக்கார்டு ஓட்டலில் நடத்தினார் கட்சித் தலைவரான ஸ்டாலின். பொதுவாக, மா.செ.க்கள் கூட் டத்திற்கு கட்சியில் இருக்கும் பிற அணிகளின் செயலாளர்கள் அழைக்கப்படுவதில்லை. இந்தமுறை முதன்முதலாக இளைஞரணி செயலாளர் உதயநிதி அழைக்கப்பட்டிருந்தார். காரணம், இந்த கூட்டமே டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் இளைஞரணி மாநில மாநாடு நடத்துவது பற்றி விவாதிப்பதற்காகவே கூட்டப்பட்டது. இளைஞரணி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்றும், 5 லட்சத்துக்கும் அதிகமான இளைஞரணியினர் திரள வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக் கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இளைஞரணி நிர்வாகிகளுக்கு பல இடங்களில் கட்சி மா.செ.க்களின் ஒத்துழைப்பு கிடைக்க வில்லை. அதனால்தான், இந்தக் கூட்டத்தை ஸ்டாலின் மூலம் உதயநிதி கூட்டினார்.''”
"இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவரான ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தல் குறித்த செய்தியை அதிகம் பகிர்ந்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, எடுத்த எடுப்பிலேயே ஸ்டாலின், ’"நாடாளுமன்ற தேர்தல் பணிகளை நாம் துவக்கிவிட்டோம். மண்டல வாரியாக பயிற்சி கூட்டங்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டங்கள்னு நடத்தி, தேர்தல் பணிகளை வேகமாக முன்னெடுத்து வருகிறோம். தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் அதை சந்திக்க நீங்கள் தயாராக இருக்க வேண்டும். இந்தமுறை தொகுதியில் மக்களிடம் நல்ல பெயர் எடுத்திருப்பவர்களுக்கே தேர் தலில் வாய்ப்பு தரப்படும். நாம் கை காட்டுபவர்தான் அடுத்து இங்கே பிரதமராக வரவேண்டும். அதற்கு 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்னு குறிப்பிட்டதோடு, இந்த இளைஞரணி மாநாடு, சிறப்பாக நடத்தப்பட வேண்டும். தி.மு.க.வை நோக்கி இளைஞர் கள் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். இளைஞ ரணி மாநாடு சிறப்பாக நடக்க மா.செ.க்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்' என்கிற உத்தரவையும் பிறப்பித் தார். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை இதில் பேசிய உதயநிதி சுட்டிக்காட்டி னார். மாநாட்டிற்கான செல வினங்களை மா.செ.க்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.''’v "கருங்காலி மாலை மோகம் அரசியல் தலைவர்களுக்கும் வந்திடுச்சே!''
"ஆமா தலைவரே, கடந்த ஞாயிற்றுக்கிழமை தி.நகரில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த அமைச் சர் கே.என்.நேரு, தான் அணிந் திருந்த வெள்ளிக் கருங்காலி மாலையைக் கழற்றி, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அணி வித்ததும், சுற்றியுள்ள பத்திரிகை நிருபர்கள் ஆச்சர்யமாகப் பார்க்க, 'என்னவோ ஏதோன்னு நினைச்சிடாதிங்க... மூவாயிரம் ரூபா தான் இந்த மாலை' என்று சிரித்தபடி கூறியவர், அமைச்சர் ஐ.பெரியசாமியிடம், "உங்களுக்குத் தான் அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுது. இந்த மாலைய போட்டுக்கிட்டா நோய் எதுவும் வராதாம். மாலைய போட்டுக்குங்க' என்றார். கருங்காலி மாலைய சினிமா பிரபலங்களும், அவங்களோட ரசிகர்களும் தான் ஆர்வமா வாங்கி அணிந்து வர்றாங்க... இப்போ அந்த ஆர்வம் அரசியல் தலைவர்களுக்கும் வந்துடுச்சே என சுற்றியுள்ள அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். சமூக வலைத்தளங் களிலும் இந்த செய்தி வைரலாகிடுச்சு தலைவரே!''
"சரிப்பா, மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு நெல்லையில் அவர்கள் கட்சியினரே பலமாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களே?''”
"காங்கிரஸ் அழகிரிக்கு தென்மாவட்ட கட்சித் தொண்டர்களிடம் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி, திசையன் விளையில் நடந்த பூத் கமிட்டி பயிற்சிக் கூட் டத்திற்காக அவர் நெல்லைக்குச் சென்றார். அவருடன் கட்சி எம்.பி.க்களான மாணிக் தாக்கூர், ஜெயக்குமார் ஆகியோரும் சென்றிருந்தனர். அழகிரிக்கும் நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோ கரனுக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால், அவர் கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. இத னால் கொந்தளித்துபோன ரூபியின் மகளிரணி ஆதர வாளர்கள் கறுப்பு சேலையில் திரண்டுவந்து, மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகை யிட்டு, அழகிரிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது கட்சிப்பிரமுகரான அன்புரோஸ், அழகிரி வந்தால் அவர் மீது வெடிகுண்டு வீசுவோம் என்று கொந்தளிக்க, அவரை அப்படியே அள்ளிக்கொண்டு போய் கைது செய்தது போலீஸ். இதனால் மாவட்ட காங்கிரஸ் அலுவலக விசிட்டை கேன்சல் செய்துவிட்டு திசையன்விளைக்குச் சென்று விட்டார் கே.எஸ்.அழகிரி.''”
"இதேபோல் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்த சங்கர பாண்டியன், மாவட்ட தி.மு.க.வினர் மூலம் பல் வேறு வகையிலும் லாபம் பார்த்து வருகிறாராம். இந்த நிலையில், அண்மையில் சத்தியமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், தி.மு.க. விடம் 15 சீட்டுகளை நாம் கேட்க வேண்டும். அதேபோல் தி.மு.க.வை மட்டுமே நம்பியிருக்கா மல், அ.தி.மு.க.வோடு கூட்டணி வைப்பது குறித் தும் நாம் பரிசீலிக்க வேண்டும் என்று, தி.மு.க. வுக்கு எதிராகவே பேசினாராம். இதையறிந்த தி.மு.க. தரப்பு, எங்களை வைத்து சம்பாதிக்கும் உனக்கு எங்கள் உறவு மட்டும் கசக்குதா? என்று கொதிக்கிறது. மேலும், சங்கர பாண்டியனுக்கு எதிராக உள்ள பல கிரிமினல் ரெக்கார்டுகளையும் அவர்கள் தோண்டிக்கொண்டு இருக்கிறார்களாம்.''
"தமிழக பா.ஜ. தலைவர் அண்ணா மலைக்கும் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் ஆவின் விவ காரம் தொடர்பா முட்டிக்கிடுச்சே… கவனீச்சிங்களா?''
"ஆமாங்க தலைவரே, மொட்டைக்கட் டையா ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட் விற்பனையில் ரூ.10 முதல் ரூ.12வரை கொள்ளை யடிக்கப்படுவதாகவும் தனியார் பால் கம்பெனி களுக்கும் ஆவினுக்கும் மறைமுகத் தொடர்பு இருப்பதாவும் குறிப்பிட்ட அண்ணாமலை, மனோ தங்கராஜ் தமிழக அரசியலில் இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடுன்னு தன்னோட வாய்நீளத்தைக் காட்டியிருந்தார். முதலில் சில வடநாட்டுக் கைக்கூலிகள் ஆவின் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிவருகிறார்கள்னு பொதுவாத்தான் அமைச்சர் பேசியிருந் தார். அதுக்குப் பதிலடியா அண்ணாமலை, ஆவின் நிறுவனத்துக்கு எதிராக நான் செயல் படுவதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், 48 மணி நேரத்துக்குள் அதை நிரூபிக்க முடியாவிட்டால் மன்னிப்புக் கேட்டு பதவி விலகுவாரான்னு கொந்தளிச்சிருந்தார். விடாம அமைச்சரும், ரபேல் வாட்ச் கட்டிய ஆடு மேய்ப்பவரின் கதையைத்தான் கூறியிருந்தேன். அண்ணா மலைதான் அவசரப்பட்டு தான்தான் அந்த வடநாட்டுக் கைக்கூலின்னு காட்டிக்கிட்டார். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா? மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் பரம்பரை இல்லை. பெரியாரின் பேரன்கள்”என சூடா பதிலடி கொடுத்திருக்கார்.''
"காவல்துறையில் சலசலப்பு தெரிகிறதே?''”
"காவல்துறையில் இருக்கும் பொருளா தாரக் குற்றப்பிரிவு போலீசார். அண்மைக்கால மாக ’ஈஸி புரோ’என்கிற ஒரு கணினி ஆப்பை பயன்படுத்துகிறார்கள். இது குஜராத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டிருக் கிறது. இதன்மூலம், அந்தக் குற்றப்பிரிவில் பணியாற்றும் ஒவ்வொருவரும் எங்கே இருக் கிறார்கள், அன்று பணியில் இருக்கிறார்களா? என்பதை துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியுமாம். ஆனால் இந்த ஆப்பினைப் பயன் படுத்தி, தங்களைத் தேடிவரும் போலீஸாரின் லொக்கேசன் உள்ளிட்ட தகவல்களை குற்றவாளி கள் கூடத் தெரிந்துகொள்ள முடியும் என்பதால், காவல்துறையில் உள்ள பல ரும் இதன் ஆபத்தை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார்கள். இது குறித்து தகவல் அறியும் உரிமையின் அடிப்படையில் சந்தேகம் எழுப்பப்பட்ட போது, அது குறித்துச் சொல்லமுடியாது என்று பதி லளித்து, இதன் பலவீனத்தை மறைமுகமாக ஒத்துக்கொண்டு இருக்கிறார்களாம் தொடர் புடைய அதிகாரிகள். இது இப்போது காவல்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.''”
"கள்ளக்குறிச்சி விவகாரம் மீண்டும் சூடு பிடிக்கும் போலிருக்கே?''”
"உண்மைதாங்க தலைவரே, கள்ளக் குறிச்சி விவகாரத்தில் தன் மகள் ஸ்ரீமதியின் மரணத்திற்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்னும் மனப் போராட்டத்திலேயே இருக்கிறார், அவரது அம்மாவான செல்வி. அவர் இப்போது, என் மகள் இறந்தவுட னேயே அவசர அவசரமாக அப்போ தைய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு ஆதரவாக பேட்டி அளித்தார். இப்படி அவர் தான் விசாரணையை முதன் முதலில் திசை திருப்பினார். இதனால்தான் அங்கே விரும்பத்தகாத கலவரம் ஏற் பட்டது. அதேபோல் சைலேந்திரபாபு வின் குருவான தேவாரமும் நேரில் அங்கே விசிட்டடித்து, பள்ளிக்கு ஆதரவாக இருந்தார் என்று குமுறிவரும் செல்வி, இப்போது, இந்த முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர தயாராகி வருகிறாராம்.''”
"நானும், கோட்டை வட்டாரத்தில் கசிந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந் துக்கறேன். தமிழ்நாடு வேர்ஹவுசிங் கார்ப்ப ரேசனின் நிர்வாக இயக்குநரான பழனிச்சாமி ஐ.ஏ.எஸ்., ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் அல்லது நெடுஞ்சாலை துறையின் கீழ் இயங் கும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட் டத்தின் திட்ட இயக்குநர் ஆகிய பதவிகளில் ஒன்றில் அமர ஆசைப்படுகிறாராம். இதற்காக மேலிடத்திற்கு நெருக்கமான மலேயத் தொழிலதிபர் ஒருவரை அணுகியிருக்கிறார். அந்தத் தொழிலதிபரோ, தி.மு.க. இளைஞரணி மாநாடு முடிந்ததும், டிரான்ஸ்பர் பட்டியல் வரப்போகிறது. அதில் உங்கள் பெயர் நிச்சயம் இருக்கும் என்று உறுதி கொடுத்திருக் கிறாராம்.''
__________
இறுதிச் சுற்று!
சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் தி.மு.க. அரசு சார்பில் அமைக்கப்பட்ட முன்னாள் பிரதமரும் சமூகநீதி காவலருமான வி.பி.சிங்கின் சிலையை திங்கள்கிழமை (27/11/2023) திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இவ்விழாவை தொடர்ந்து கலை வாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உ.பி.யின் முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் கலந்து கொண்டார். வி.பி. சிங்கின் மனைவி சீதா குமாரி, மகன்கள் அஜயா சிங் மற்றும் அபய்சிங் ஆகியோர் முன்னிலையில் விழா மிக சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "அரசியல் நாகரிகத்துக்கும் பண்பாட்டுக்கும் உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவர்" என்று வி.பி.சிங் பற்றி கலைஞர் சொன்னதை நினைவுபடுத்திவிட்டு, பிற் படுத்தப்பட்ட சமூகத்திற்காக மண்டல் கமிஷன் பரிந்துரைத்த 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல் படுத்தியது, தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்ப்பாயம் அமைத்தது உள்பட வி.பி.சிங் நிறைவேற்றிய பல்வேறு சாதனைகளை தெரிவித்து வி.பி.சிங்கை பெருமைப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
-இளையர்