புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவிலில் கடந்த வாரத்தில் பக்தர்களுக்கு தரப்பட்ட விபூதி, குங்குமம் பிரசாத பாக்கெட்டின் முன்புறம் அண்ணாமலையார் படமும், பின்புறம் அன்னை தெரசா படமும், அதனை ஸ்பான்ஸர் வழங்கிய தனியார் கார்மெண்ட்ஸ் பெயரும் போடப்பட்டிருந்தது. தரிசனத்துக்கு வந்த பக்தர் ஒருவர், "இந்து கோவிலில் பக்தர் களுக்கு தரப்பட்ட பிரசாத பாக்கெட்டில் கிறித்துவரான அன்னை தெரசாவின் படம் எப்படி போடலாம்? இது எங்கள் மனதைப் புண்படுத்து கிறது'' என இந்து முன்னணியிடம் முறை யிட்டுள்ளார்.

ff

மே 1-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் அருண்குமார் தலை மையில் 10 பேர் அண்ணாமலையார் கோவில் இணை ஆணையர் அலுவல கத்தில் நுழைந்து, அன்னை தெரசா படம்போட்ட பிர சாத பாக்கெட் தந்த வர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் நடத்தி னர். ரமேஷ் குருக்கள், மணியக்காரர் செந்தில் சமாதானம் செய்தும் போராட் டத்தைக் கைவிட வில்லை. பிரசாத பாக்கெட் தந்த அர்ச்சகர்களான சோமநாத குருக்கள், முத்துக்குமாரசாமி குருக்களை 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் இணை ஆணையர் குமரேசன். அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வார்கள் என எதிர்பார்த்த இந்து முன்னணியினருக்கு குருக்களை சஸ்பெண்ட் செய்தது அதிர்ச்சியாகிவிட்டது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கோவில் ஊழியர் ஒருவர், "அண்ணாமலையார் கோவிலில் 142 சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள சில முக்கிய குருக்கள் ஒவ்வொருவரும் சில கம்பெனிகளை கையில் வைத்துள்ளார்கள். அவர்களிடமிருந்து குங்குமம், விபூதி பாக்கெட்களை நன்கொடையாக வாங்குகிறார்கள், இவை கோவிலின் நிர்வாகக் கணக்கில் வருவதில்லை. வீட்டிலிருந்து வரும் போதே குருக்களே பிரசாத பாக்கெட்டு களைக் கொண்டு வருவார்கள் ஆரா தனை தட்டில் தட்சணை போடும் பக்தர்களுக்கு மட்டும் பிரசாத பாக்கெட்டைத் தருவார்கள். அப் படி தரப்பட்ட பாக்கெட்டில்தான் அன்னை தெரசா படம் இருந்து பிரச்சனையானது''’என்றார்.

Advertisment

ff

"கோவில் பெயரைச் சொல்லி நன்கொடை வாங்கியவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது?' ஏன் என விசாரித்தபோது, "சுவாமிக்கு தினசரி 6 முறை அபிஷேகம் நடக்கும். பக்தர்கள் அபிஷேகத்தில் கலந்துகொள்ள 2500 ரூபாய் கோவிலுக்கு கட்டணம் செலுத்தவேண்டும், ஆனால் 10 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள் அதிகாரிகள். ஒவ்வொரு பூஜையிலும் 5 குடும்பங்களை அனுமதிப் பார்கள். ஆனால் ஒன்று அல்லது இரண்டு பூஜை மட்டுமே புக்கானதாக கணக்கு எழுதுவார்கள். மீதி 3 அல்லது 4 பேரின் பணம் கணக்கிலேயே வராது. இதெல்லாம் குருக்களுக்கு தெரியும், கண்டுகொள்ளமாட்டார்கள். அதற்கு காரணம், குருக்கள் பலரும் பணக்கார பக்தர்களை கைவசம் வைத்துள்ளார்கள். அவர்கள் கோவிலுக்கு வரும்போது பூஜைகளில் கலந்துகொள்வதை, வி.ஐ.பி.க்கான மரியாதை செய்வது, தீபத்துக்கு சிறப்பு பாஸ் தருவது, பௌர்ணமியன்று கோவிலுக்குள் ஸ்பெஷல் வழியில் அழைத்து வருவதை நிர்வாகம் தடுக்கக்கூடாது.

அதேபோல் அண்ணாமலையார் கோவில் பெயரை வைத்து சில குருக்கள் 1008 விளக்கு பூஜை, குத்துவிளக்கு பூஜை, கலச பூஜை கோவிலுக்குள் நடப்பதாகக்கூறி ஆயிரக்கணக் கில் நன்கொடை வாங்குகிறார்கள். பெரிய ஜவுளிக்கடைகள், தங்க நகைக்கடை நிறுவனங்கள், அண்ணாமலையாருக்குத்தானே என ஸ்பான்ஸர் செய்கிறார்கள். இதில் பல பூஜைகள் கோவிலுக்கு சம்பந்தமில்லாதது. ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு பக்தர்கள் பணத்தை அள்ளித் தருகிறார்கள். இந்த மோசடிகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை'' என்கிறார் கள்.

கோவில் உள்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர் மீது பல புகார்கள். அவர் தன்னை அண்ணாமலையார் கோவிலிலிருந்து இடமாற்றம் செய்யக்கூடாது என ஆளும்கட்சி நகர பிரமுகர் ஒருவருக்கு 10 லட்ச ரூபாய் தந்துள்ளார் என்றால் சில அதிகாரிகளின் மேற்படி வருமானத்தை யோசித்துப் பாருங்கள் என்கிறார்கள்.

Advertisment

dd

கோவிலை திருப்பதிபோல் மாற்றப் போவதாகக் கூறுகின்றனர். கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கடந்த மாதம் உண்டியல் வருமானம் 2 கோடி. கோவிலில் இலவச தரிசனம், கட்டண தரிசனம் உள்ளது. திருப்பதிபோல் ஆன்லைன் வழியாக மட்டுமே கட்டண தரிசனம் கொண்டுவர வேண்டும், பூஜைகளில் கலந்துகொள்ள ஆன்லைன் வழியாக மட்டும் புக் செய்யவேண்டும், வரிசையைத் தவிர வேறு எந்த வழியிலும் யாரும் தரிசனத்துக்கு உள்நுழைய முடியாதபடி செக்யூரிட்டி சிஸ்டத்தை உருவாக்கவேண்டும். வி.ஐ.பி. வருகை, சிபாரிசு கடிதம் கொண்டுவருபவர்கள் அதற்கான கட்ட ணத்தை செலுத்தி நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டும் என்பதை அண்ணாமலையார் கோவிலில் செயல்படுத்தினால் கோவிலுக்கு இன்னும் கூடுதலாக வருமானம் வரும். இடைத்தரகர்கள், ஊழியர்கள், அர்ச்சகர்களின் அட்டகாசம் தடுக்கப்படும். கோவிலை வைத்து பக்தர்களிடம் மோசடி செய்வதைத் தடுக்கமுடியும்.

இதுகுறித்து கோவில் இணைஆணையர் (பொறுப்பு) குமரேசன் கருத்தறிய தொடர்பு கொண்டபோது நமது லைனை எடுக்கவில்லை. குற்றச்சாட்டுகளை எஸ்.எம்.எஸ். அனுப்பியும் பதிலளிக்க வில்லை. இந்து சமய அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு இதில் கவனம் செலுத்தவேண்டும் என்கிறார் கள் அண்ணாமலையார் பக்தர்கள்.