"ஹலோ தலைவரே, தமிழக அமைச்சர் ஒருவரைப் பற்றி வந்திருக்கும் தகவல் ஆட்சி மேலிடத்தை அதிரவைத்திருக்கிறது.''”

"என்னப்பா, உள்நாட்டுப் போரா?''”

dd

"ஆமாங்க தலைவரே, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்கிற வழக்கு உச்சநீதிமன்றத் தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஜாமீன் கொடுத்த உடனேயே அவருக்கு அமைச்சர் பதவி தருவதா? என்றெல்லாம் நீதிமன்றம் அதிரடிக் கேள்விகளை எழுப்பி, பெரும் பரபரப்பை ஏற் படுத்தி வருகிறது. இதன் விசாரணை மீண்டும் 13 ஆம் தேதி வர இருக்கிற நிலையில், இந்த வழக்கின் பின்னணி பற்றி, விதவிதமாகத் தகவல்கள் கசிந்து, இப்போது தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. அந்த வழக்கைப் போட்ட நபர் வடநாட்டைச் சேர்ந்தவராம். வழக்குக்கு அவரை ஏற்பாடு செய்தது அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் இல்லையாம். செந்தில்பாலாஜிக்கு தரப்படும் முக்கியத்துவத்தைப் பார்த்த ஒரு தி.மு.க. அமைச்சரே, அவருக்கு எதிராக இப்படியொரு வழக்கைப் போடச் செய்திருக்கிறார் என்கிற தகவல்தான் இப்போது ஆட்சி மேலிடத்தைத் திகைக்க வைத்திருக்கிறது என்கிறார்கள்.''”

"சரிப்பா, அர்ஜுன் ரெட்டி விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் ரொம்பவும் தயக்கம் காட்டுகிறாரே?''”

Advertisment

"விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் அர்ஜுன் ரெட்டி, அண்மையில் த.வெ.க. தலைவரான நடிகர் விஜய்யை அழைத்து, அம்பேத்கர் பற்றிய தனது நூல் வெளியீட்டு விழாவை தடபுடலாக நடத்தினார். அதில் த.வெ.க தலைவரான நடிகர் விஜய்யுடன் சேர்ந்து, சிறுத்தைகள் இடம்பெற்றிருக்கும் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக முழக்கமிட்டு அதிர்ச்சி குண்டுகளை வீசினார். இது தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையிலும்... திருமா வளவனோ, "இதுகுறித்து எங்கள் கட்சியின் முன்னணித் தோழர்கள் பலரும் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். எனவே அதுகுறித்து நிர்வாகிகள் கூடி, ஆதவ் மீதான நடவடிக்கை பற்றி முடிவெடுப்போம்' என்று தெரிவித்திருக்கிறார். அர்ஜுன் ரெட்டி விவகாரத்தில் திருமா காட்டும் இந்த நிதானத்தின் பின்னணியில், அவர் கட்சித் தரப்பிற்கு அர்ஜுன் ரெட்டி காட்டி வரும் அதிக தாராளம் இருக்கிறது என்கிற பேச்சு சிறுத்தைகள் கட்சியினரிடமே இருக்கிறது.''”

"அவர் பலமான பசைப்பார்ட்டி ஆச்சே?''“

"ஆமாங்க தலைவரே, அர்ஜுன் ரெட்டி மீது நடவடிக்கை என்று திருமா சொன்ன நிமிடமே, அவரால் பராமரிக்கப்பட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஐ.டி.விங், தன் செயல்களை நிறுத்திக்கொண்டு சைலண்ட் ஆகிவிட்டது. அதேபோல் கட்சியின் தொலைக்காட்சிக்கு மாதம்தோறும் அர்ஜுன் ரெட்டி நிதி வழங்கியதும் இப்போது கேள்விக்குறி ஆகியிருக்கிறதாம். இது தவிர கட்சியின் பல மாவட்ட பொறுப்பாளர்கள் அர்ஜுன் ரெட்டியின் கைகளில் இருப்பதாக ரெட்டியே கூறிக்கொள்கிறாராம். எனவே அவர் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால் அவர் கட்சியை உடைக்க முயலுவார் என்றும், நடவடிக்கை எடுக்காவிட்டால், ஆதவ் மீதான அதிருப்தியில் இருக்கும் சிறுத்தை நிர்வாகிகளால், கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்படலாம் என்றும் இருவித நெருக்கடி இப்போது திருமாவைச் சூழ்ந்திருக்கிற தாம். இந்த நிலையில், தனி ஆவர்த்தனத்துக்குத் தயாராகிவரும் அர்ஜுன் ரெட்டி, தனக்கென ஒரு தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை ஆகியவற்றை வாங்கும் முயற்சியில் இருக்கிறாராம். அவர் வாங்க இருக்கும் பத்திரிகை, விரைவில் அவர் கைக்கு வந்துவிடும் என்கிறார்கள், அந்த பத்திரிகையைச் சேர்ந்தவர்களே.''”

Advertisment

"நாடாளுமன்றக் கூட்டத்தில் காங்கிரஸுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் காய் நகர்த்தப்பட்டிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டி ருக்கிற நிலையில், அதானி விவகாரம் உள்பட, எதிர்க்கட்சிகள் எழுப்பும் குற்றச்சாட்டுகளை விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகின்றன. இதனால், கடந்த சில நாட்களாக அவை தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி ராஜ்யசபா சபாநாயகர் ஜெக்தீப்தன்கர், ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வியின் இருக்கை எண் 222-ல் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டு இருப்பதாகவும், அந்தப் பணத்துக்கு யாராவது உரிமை கோருவார்கள் என தான் எதிர்பார்த்ததாகவும், யாரும் வராததால் அது குறித்த விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக வும் அவர் தெரிவித்திருக்கிறார். இது, காங்கிரஸ் தரப்பை மட்டுமல்லாது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.''”

ff

"ஆமாம்பா, அதற்கு சம்பந்தப்பட்ட எம்.பி அபிஷேக் சிங்வி பதில் கொடுத்திருக்கிறாரே?''’

"ஆமாங்க தலைவரே, தங்கள் மீதான குற்றச்சாட்டை, திசை திருப்ப பா.ஜ.க. இப்படி ஒரு குண்டை வீசுகிறது என்று எதிர்க்கட்சித் தரப்பினர் குரல்கொடுத்தனர். சம்பந்தப்பட்ட காங்கிரஸின் மூத்த உறுப்பினரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியோ, "அன்றைய தினம் சபைக்குள் நுழையும் போது என்னிடம் இருந்தது வெறும் 500 ரூபாய்தான். சபைக்குள் 12:57-மணிக்கு நுழைந்தேன். சபை நடவடிக்கை 1 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் சபையில் நான் இருந்தது வெறும் 3 நிமிடங்கள் தான். அதன்பிறகு கேன்டீனில் 30 நிமிடம் இருந் தேன். பிறகு புறப்பட்டுவிட்டேன். யாருடைய இருக்கையிலும் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் வைத்து விட்டு இப் படிப்பட்ட குற்றச்சாட்டுகளைக் கூற முடியும். இனி, அவரவர் இருக்கையை பூட்டு போட்டு சாவியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு செல்வதற்கு ஏற்ப, இருக்கையை அமையுங்கள்' என்று பதிலடி கொடுத்த தோடு, "இதுகுறித்து முழு மையாக விசாரணை நடத்தவேண்டும். பாதுகாப்பு சோதனைகள் பற்றியும்கூட விசாரணை வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். பா.ஜ.க. அரசு இப்படி தங்கள் எம்.பி.க்கு பொறி வைத்திருப் பது குறித்து காங் கிரஸ் தீவிரமாக ஆராய்ந்துவரு கிறது.''”

"எடப்பாடிக்கு புதிதாக சிக்கல்கள் வரும்போல் தெரிகிறதே?''”

ff

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பொதுக் குழுவையும் கலந்தாய்வுக் கூட்டங்களையும், எந்தவித கலாட்டாவும் இல்லாமல் நடத்திவிட வேண்டும் என்று பெரும் முயற்சிகளை மேற் கொண்டிருக்கும் எடப்பாடியை, ஒரு பெரும் சிக்கல் சூழ்ந்து வருகிறது. அவருக்கு நெருக்கமான அவரது கொங்கு சமூகத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் மலேசியாவில் தொழிலதிபராக இருக்கிறார். குறிப்பாக அங்கே உள்ள லங்கா தீவில் ஒரு ஓட்டலைக் கட்டி வரும் அவர், ஆஸ்திரேலியாவில் வைன்யார்ட் ஒன்றையும் வைத்துள்ளாராம். இந்த தொழில்களில் அந்த தொழிலதிபர் மூலம் எடப்பாடி பெரிய அளவில் முதலீடுகள் செய்திருப்பதாக அமலாக்கத்துறைக்கு ஒரு பரபர புகார் போயிருக்கிறது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் நிலத்தை அந்த தொழிலதிபர் வாங்க முயற்சிக்க, அதில், சென்னை யை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனம் தலையீடு செய்ய, இரு தரப்புக்குமான பஞ்சாயத்து ஒன்றும் நடந்துவரு கிறது. இது குறித்தும் அமலாக்கத் துறைக்கு தகவல் போயுள்ளது. விரைவில் எடப்பாடிக்கு எதிரான இந்த முதலீட்டுப் புகார்கள் வெடிக்கலாம் என்கிறார்கள் விபரமறிந்த வட்டாரத்தினர்.''”

"தி.மு.க. அரசால் தூய்மைப்பணியாளர் களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம் திசைமாறிச் செல்வதாகச் சொல்கிறார்களே?''”

"சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில், தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ், 100 நவீன கழிவு நீரகற்றும் வாகனங்களை 100 பயனாளிகளுக்கு அண்மையில் வழங்கினர். இந்த ஒரு வாகனத்தின் விலை 65 லட்சம் ரூபாயாம். இதில், 20 லட்சம் ரூபாய் மானியமாக அரசு வழங்குகிறது. மேலும், இதற்கான தொகையை குறைந்த வட்டியில் வங்கியிலிருந்து கடன் பெறவும் அரசு உதவி செய்கிறது. ஆனால் இதன் பலனில் ஒரு பகுதியை ஒரு நிறுவனம் அடையப்போகிறது என்று வருத்தத்தோடு சொல்கிறார்கள் சம்பந்தப்பட்ட வாரிய அதிகாரிகள்.''

"இந்த விவகாரத்தில் நடப்பது என்னவென்றால், கழிவு நீரகற்றும் வாகனங்களைப் பெற்றுள்ள பயனாளிகள், இந்த வாகனங்களை, ’ஜென்க்ரீன் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் மேனேஜ் மெண்ட் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத் துக்கு அவற்றை வாடகைக்கு கொடுப்பார்கள். அந்த வாகனங்களை அந்த நிறுவனத்திடமிருந்து சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம், வாடகைக்கு எடுக்கப்போகிறதாம். இதன் மூலம் மெட்ரோ நிர்வாகம் தரும் வாடகையில் சொற்ப தொகையை மட்டும் சம்பந்தப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்து விட்டு, மீதத்தை அந்த ஜென்கிரீன் நிறுவனம் இடைத்தரகு மூலம் எடுத்துக்கொள்ளுமாம்.''”

"அந்த ஜென்கிரீன் நிறுவனம் யாருடை யது?''”

"இந்த ஜென்கிரீன் நிறுவனம் ரவிக்குமார் என்பவருக்கு சொந்தமானது. இவர், தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர்களில் ஒருவராக இருக்கும் ஸ்ரீவல்லபிரசாத்துக்கு நெருக்கமான உறவினர். மேலும் இந்த நிறுவனத்தில் முதன்மை இயக்குநராக இருப்பவர் பெயர் வீரமணி ராதாகிருஷ்ணன். இவர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையின் உடன்பிறந்த சகோதரரின் மூன்றாவது மகன். சென்னை தி.நகர் சின்னையா தெரு, நெம்பர் 16 என்ற முகவரியில்தான் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. அங்குதான் தனது ரியல் எஸ்டேட் அலுவலகத்தை வெகுகாலமாக நடத்தி வந்தார் செல்வப்பெருந்தகை. ஆக, செல்வப்பெருந்தகையின் சகோதரர் மகனுக்காகவும், காங்கிரசின் மேலிட பொறுப்பாளரின் உறவினர் ரவிக்குமாருக்காகவும் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறார்களாம். இதுகுறித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான சசிகாந்த் செந்திலின் ஆதரவாளர்கள் கட்சியின் தேசியத் தலைமையிடம் புகாராகக் கொண்டு போயிருக்கிறார்களாம். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக சசிகாந்த் செந்திலை அமர்த்தவேண்டும் என்று ஒரு முயற்சி நடந்துவரும் நேரத்தில், இந்த விவகாரம் சத்தியமூர்த்தி பவன் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''”

"கோவை ஏர்போர்ட்டில் நடந்த மற்றொரு கலாட்டா காங்கிரஸுக்குள் பரபரப்பை ஏற்படுத்துகிறதே?''”

"சில வாரங்களுக்கு முன் கோவை ஏர்போர்ட்டில் மகிளா காங்கிரஸார் உட்பட கட்சியினரை மிரட்டியதாகவும் தாக்கியதாகவும், காங்கிரஸ் பிரமுகரான மயூரா ஜெயக்குமார் மீது, அக்கட்சியின் தேசியத் தலைமைவரை புகார் போனது. காவல்துறையிலும் இது தொடர்பாகப் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்தெல்லாம் நாம் ஏற்கனவே பேசி இருக்கிறோம். இவ்வளவு நடந்தும், காங்கிரஸ் கட்சியின் தலைமை, மயூரா மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இது தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கோவை காங்கிரஸில் உள்ள மாநகராட்சி கவுன்சிலர்கள் 9 பேரில் 7 பேர், கட்சி மாறுவது குறித்த ஆலோ சனையில் இருக்கிறார்களாம். இதையறிந்த, பா.ஜ.க. மாநில நிர்வாகியும், அ.தி.மு.க. மாஜி மந்திரியான வேலுமணியும் அவர்களைத் தங்கள் தங்கள் கட்சிக்கு இழுக்க முயல்கிறார்களாம்.''”

"ஊழல் புகாரில் சிக்கிய அதிகாரி மீது தாமதமாக நட வடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதே?''’

"லஞ்ச விவகாரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்ட ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் மீது வழக்கு பதிவான நிலையில்... அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்தது நகராட்சி நிர்வாகத்துறை. அடுத்த 3ஆவது வாரம், அவரை நெல்லை மாநகராட்சியின் துணை கமிஷனராக டிரான்ஸ்ஃபர் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட, அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த இடமாற்ற உத்தரவின்படி நெல்லை மாநகராட்சியில் பணியில் சேர ஜஹாங்கீர் சென்றபோது, அவரை அங்கிருந்த கமிஷனர் பதவி ஏற்க அனுமதிக்கவில்லை. மாறாக, துறையின் மேலிடத்தில் இருந்து ஒப்புதல் வாங்கிவாருங்கள் என தெரிவித்துவிட்டார். இதையடுத்து, ஒப்புதல் பெற ஜஹாங்கீர் முயற்சித்தபோது அவருக்கு ஒப்புதல் கிடைக்க வில்லை. அதேசமயம் அவரது டிரான்ஸ்ஃபர் ஆர்டரை ரத்து செய்யுமாறும், அவரை சஸ்பெண்ட் செய்யுமாறும் நகராட்சி நிர்வாகத் துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். உத்தரவிட, அதற்கான ஆர்டரை பிறப்பித்திருக்கிறார் துறையின் இயக்குநர் சிவராசு ஐ.ஏ.எஸ்.''”

"நானும் என் கவனத்துக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவி, நான்கு பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், இருவரை சென்னை போலீஸ் மடக்கியிருக்கிறது. தமிழக சட்டமன்றம் கூடவிருந்த நேரத்தில், குபீரெனக் கொதித்தெழுந்த அந்த பா.ஜ.க. நிர்வாகி, இதுகுறித்து முதல்வர் ஏன் கருத்து எதையும் வெளியிடவில்லை என்று கேள்வி யெழுப்பி, கடும் விமர்சனத்தை வைத்திருக் கிறார். இந்த விவகாரத்தில் அதிரடி நட வடிக்கைகளை மேற்கொண்டுவரும் காவல் துறையோ, சம்பந்தப்பட்ட மாணவியுடன் நட்பில் இருக்கும் அனைவரையும் தீவிரமாக விசாரித்துவருகிறது.''