"ஹலோ தலைவரே, தேர்தலில் தமிழக வெற்றியைக் குறிவைத்திருக்கும் மோடி, ஒருவித ஆர்வத் தோடு தமிழகம் வருகிறார்.''”
"ஆமாம்பா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இமயமலையில் உள்ள கேதார்நாத் பனிக்குகையில் தியானத்தில் மூழ்கி வடநாட்டவரை ஈர்க்க முயன்ற பிரதமர் மோடி, இந்த முறை தமிழகத்தில் ஆன்மீக யாத்திரை நடத்தி தென்னக மக்களை கவர முயற்சிக்கிறாரேப்பா?''”
"உண்மைதாங்க தலைவரே, 19ஆம் தேதி மாலை தமிழகம் வரும் மோடி, நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் கேலோ இந்தியா விளை யாட்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறார். அன்று இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார். பின்னர் அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் மோடி, கடலிலும் புனிதக் கிணற்றிலும் நீராடுகிறாராம். அங்கு ராமநாதரை மனமுருக வழிபடும் அவர், அங்கேயே அமர்ந்து 2 மணி நேரத்துக்கு ராமாயணத்தைப் படிக்க இருக்கிறாராம். அன்று இரவு அங்குள்ள ராமகிருஷ்ணா மடத்தில் தங்கும் அவர், மறுநாள் அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள 23 புனிதத் தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு, அதே பக்தி மணம் கமழக் கமழ அவர் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்குச் செல்கிறாராம். மோடியின் இந்த ஆன்மீகப் பயணம், தமிழக இந்துக்களின் மனதைப் பெரிதும் உருக வைக்கும் என்று நம்புகிறது பா.ஜ.க.''”
"அவருக்கு முன்பாகவே கவர்னர் ஆர்.என்.ரவி ஸ்ரீரங்கம் போயிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, 17ஆம் தேதியே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழக ஆளுநர் கவர்னர் ரவி தனது மனைவியுடன் சென்றார். அவருக்கு கோயில் சார்பாக பூரண கும்ப மரியாதை எல்லாம் கொடுத்தார்கள். அங்கு தாயார் சன்னதி முன்பு, "ஸ்வட்ச் தீர்த்' எனப்படும் புனித தூய்மைப் பணியில் ஈடுபட்ட கவர்னர், தண்ணீரால்
"ஹலோ தலைவரே, தேர்தலில் தமிழக வெற்றியைக் குறிவைத்திருக்கும் மோடி, ஒருவித ஆர்வத் தோடு தமிழகம் வருகிறார்.''”
"ஆமாம்பா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இமயமலையில் உள்ள கேதார்நாத் பனிக்குகையில் தியானத்தில் மூழ்கி வடநாட்டவரை ஈர்க்க முயன்ற பிரதமர் மோடி, இந்த முறை தமிழகத்தில் ஆன்மீக யாத்திரை நடத்தி தென்னக மக்களை கவர முயற்சிக்கிறாரேப்பா?''”
"உண்மைதாங்க தலைவரே, 19ஆம் தேதி மாலை தமிழகம் வரும் மோடி, நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் கேலோ இந்தியா விளை யாட்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்கிறார். அன்று இரவு கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார். பின்னர் அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் மோடி, கடலிலும் புனிதக் கிணற்றிலும் நீராடுகிறாராம். அங்கு ராமநாதரை மனமுருக வழிபடும் அவர், அங்கேயே அமர்ந்து 2 மணி நேரத்துக்கு ராமாயணத்தைப் படிக்க இருக்கிறாராம். அன்று இரவு அங்குள்ள ராமகிருஷ்ணா மடத்தில் தங்கும் அவர், மறுநாள் அதிகாலை ராமேஸ்வரத்தில் உள்ள 23 புனிதத் தீர்த்தங்களிலும் நீராடிவிட்டு, அதே பக்தி மணம் கமழக் கமழ அவர் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்குச் செல்கிறாராம். மோடியின் இந்த ஆன்மீகப் பயணம், தமிழக இந்துக்களின் மனதைப் பெரிதும் உருக வைக்கும் என்று நம்புகிறது பா.ஜ.க.''”
"அவருக்கு முன்பாகவே கவர்னர் ஆர்.என்.ரவி ஸ்ரீரங்கம் போயிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, 17ஆம் தேதியே ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழக ஆளுநர் கவர்னர் ரவி தனது மனைவியுடன் சென்றார். அவருக்கு கோயில் சார்பாக பூரண கும்ப மரியாதை எல்லாம் கொடுத்தார்கள். அங்கு தாயார் சன்னதி முன்பு, "ஸ்வட்ச் தீர்த்' எனப்படும் புனித தூய்மைப் பணியில் ஈடுபட்ட கவர்னர், தண்ணீரால் கோயில் பகுதியைத் தன் கைப்படக் கழுவினார். அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கவர்னர் ரவி, "அயோத்தியில் ராமர்கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இது ஒட்டு மொத்த இந்திய மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதற்கு காரணம், ராமர் இந்தியர்கள் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல, பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு'’ என்று உபதேசம் செய்தார். அங்கிருந்த பக்தர்களோ, "பிரதமர் வருகைக்காக கோயில் சன்னதியை கவர்னரே வந்து கழுவி விட்டிருக்கிறார்'’என்றபடி புன்னகைத்தனர்.''”
"பிரதமரின் இந்தப் பயணத்தின்போது எப்படியும் அவரை சந்தித்துவிடவேண்டும் என்று ஓ.பி.எஸ். முட்டி மோதிக்கொண்டிருக்கிறாரே?''
"ஏற்கனவே கடந்தமுறை திருச்சிக்கு வந்த பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்தித் துப் பேச ஓ.பி.எஸ். அனுமதி கேட்டார். மோடியோ, முறைப்படி அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக்கொண்டு, டெல்லியில் வந்து என்னைப் பாருங்கள் என்று சொல்லிவிட்டார். இதைப்பற்றி ஏற்கனவே நாம் பேசியிருக்கிறோம். இதன்படி அவர் பிரதமர் அலுவலகத்தைத் தொடர்புகொண்ட போது, எந்த பதிலும் இல்லையாம். அதனால்தான் விளையாட் டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க 19ஆம் தேதி சென்னை வருகிற மோடியை, இந்த முறை யாவது சந்திக்க வாய்ப்பு கொடுங்கள் என்று அவர் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார். அவரைப் போலவே டி.டி.வி.தினகரனும் மோடி யை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார். பா.ஜ.க. வலிமையான கூட்டணியை உருவாக்கப் போவதாகச் சொல்வதால், மோடி தன்னை அழைப்பார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். இதற்கிடையே, 19ஆம் தேதி சென் னையில் மோடி நேரம் ஒதுக்காவிட் டால், அவரை வரவேற்கக்கூட நீங்கள் போகவேண்டாம் என்று அவருடன் இருக்கும் சீனியர்கள் அவரை உசுப்பேத்தி வருகின்றனர்.''”
"பா.ஜ.க. அண்ணாமலை தி.மு.க.வுக்கு எதிராக பிலிம் காட்டி வருகிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, பெட்டியில் தூங்கும் பழைய திரைப்படங்களை ரிலீஸ் செய்வது போல், பழைய 2ஜி தொடர்பான ஆடியோக்களை ரிலீஸ் செய்து, பரபரப்பூட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அண்ணாமலை. முன்பு உளவுத் துறை அதிகாரியாக இருந்த ஜாபர்சேட்டோடு முன்னாள் ஒன்றிய அமைச்சர்களான டி.ஆர்.பாலு, அ.ராசா ஆகியோர் பேசிய உரையாடல்களைத் தான் தேடிப்பிடித்து அதன் மிச்ச சொச்ச பகுதி களை அவர் வெளியிட்டு வருகிறார். இந்த ஆடி யோக்களை 14 வருடங்களுக்கு முன்பே ஒரு இணைய தளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத் தியது. எனினும் அவை அந்த நாட்களிலேயே நமத்துப் போய்விட்டன. எனவே, தி.மு.க. தரப்பு இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதேபோல் அ.தி.மு.க. தரப்பின் ஆடியோ ரகசியங்களையும் வெளியிடலாமா? என்று பா.ஜ.க. தலைமையிடம் அண்ணாமலை கேட்க, டெல்லி தலைமையோ, இப்போது வேண்டாம். எடப்பாடியை நம் பக்கம் இழுக்கும் முயற்சிகள் நடக்கிறது. அதைக் கெடுத்துவிடாதே என்று சொல்லிவிட்டார்களாம்.''”
"அதேபோல், அமைச்சர் சேகர்பாபுவை சிக்க லில் சிக்க வைக்கும் முயற்சி ஒன்று நடக்கிறதாமே?''
"நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தி.மு.க.வையும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்களையும் டேமேஜ் செய்து, மக்கள் செல்வாக்கை தங்கள் பக்கம் திருப்ப டெல்லி திட்ட மிடுகிறது. அதற்காக தனது புலனாய்வு அமைப்பு களைக் களமிறக்கி இருக்கிறது. அந்த வகையில் அவர்களின் பார்வை இப்போது தி.மு.க. அமைச்சர் சேகர்பாபுவின் பக்கமும் திரும்பியிருக்கிறதாம். காரணம், அவர் தி.மு.க.வுக்காக சளைக்காமல் களப்பணி செய்கிறவர். கட்சி மேலிடத்திலும் ஏகத்துக்கும் நன்மதிப்பைப் பெற்றிருக்கிறார். எனவே, அவரை சிக்கலில் சிக்க வைக்க நினைக் கிறது டெல்லி. தற்போது சேகர்பாபு, தன் மகனை வடசென்னையில் நிற்கவைக்க நினைக்கிறார். மேலும், இந்த நேரத்தில் அவரை தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கவைக்க முயல்கிறார்கள்.''”
"என்னப்பா சொல்றே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னை சௌகார் பேட்டைதான் தங்கத்திற்கான வர்த்தக மையமாக இயங்குகிறது. இங்கே பல நாடுகளில் இருந்தும் இல்லீகலாக குருவிகள் மூலமும் தங்கம் கொண்டு வரப்படுகிறது.இந்த விவகாரங்கள் குறித்து நம் நக்கீரனிலேயே ஒரு பரபரப்பான கட்டுரை வெளி யாகியிருக்கிறது. தற்போது இந்தத் தங்கக் கடத்தல் விவகாரத்தை மத்திய புலனாய்வுத்துறை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. மறைந்த அ.தி. மு.க. அவைத்தலைவர் மது சூதனின் மைத்துனரான ஜெயப்பிரகாஷ், தங்கராஜ் என்கிற கஸ்டம்ஸ் தலைமை அதிகாரி, ஆசாத் என்கிற தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட பலரும் இந்த தங்க பிஸினசில் ஈடுபட்டி ருப்பதாகக் கருதும் ஒன்றிய புலனாய்வுத்துறை, இவர்களோடு அமைச்சர் சேகர்பாபுவையும் சிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிற தாம்.''”
"கார்த்தி சிதம்பரத்தின் மீது காங்கிரஸ் மேலிடத்திற்குப் போன புகார்கள் புஸ்வாணம் ஆகிவிட்டதே?''”
"ஆமாங்க தலைவரே, மோடிக்கு இணையானவர்கள் யாரும் இல்லை என கார்த்தி சிதம்பரம் ஒரு பேட்டியில் சொன்னதாக எழுந்த சர்ச்சை, கட்சியினரால் பூதா கரமாக்கப்பட்டது. இதனால், அவர்மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது. இந்த நிலையில் ராகுலை சந்தித்த கார்த்தியின் தந்தையான ப.சிதம்பரம், ’"கார்த்தி தவறாக எதுவும் சொல்லவில்லை. பிரச்சார பலத்திலும் கரன்சியை இறைக்கும் விசயத்திலும் மோடிக்கு இணையானவர்கள் யாரும் இல்லை. அதே நேரம் பா.ஜ.க.வையும் மோடியையும் காங்கிரஸால் மட்டும்தான் வீழ்த்த முடியும் என்றுதான் சொல்லியிருக்கிறார்' என்று விளக்கம் தர, இதைக்கேட்ட ராகுல்’"நோ பிராப்ளம்'’ என்று சொல்லிவிட்டாராம். இதேபோல் தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளர் அஜோய்குமாரை சந்தித்த கார்த்தி சிதம்பரம், தனது பேட்டி குறித்து விளக்கமாகப் பேச, "உங்கள் மீதான பிரச்சனையை ராகுல்ஜி ஓரங்கட்டச் சொல்லிவிட்டார். அதனால், கவலை வேண்டாம்' என்று அவரும் சொல்லிவிட்டார். இதனால் கார்த்தி மீது புகார்களை அனுப்பியவர் கள்தான் பொருமிக் கொண்டு இருக்கிறார்கள்.''”
"பொங்கல் அன்று அமைச்சர்கள் பலரும் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார்களே?''”
"தை 1ஆம் தேதியை தமிழர் திருநாளாகவும், பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடுவது போல், அதை தமிழ்ப் புத்தாண்டாகவும் முதல்வ ராக இருந்த கலைஞர் அறிவித்ததால், அதை தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இந்த முறை பொங்கல் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தினைத் தெரிவிக்கவில்லை என்கிறார்கள் பலரும். அதேபோல, பொங்கல் அன்று அவரை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிர மணியன், கே.கே.கே.எஸ்.எஸ்.ஆர், சேகர்பாபு, முத்துசாமி, ரகுபதி, பி.டி.ஆர்., அனிதாராதா கிருஷ்ணன், கணேசன் உள்ளிட்ட ஒரு பாதி அமைச்சர்கள் மட்டுமே சந்தித்து வாழ்த்து பெற்றனர்.''”
"ம்''”
"என் காதுக்கு வந்த ஒரு தகவலை நான் பகிர்ந்துக்கறேன். தமிழக காங்கிரஸ் கட்சியின் சீனியர் தலைவர், தனக்கு கட்சியில் தரப்படும் முக்கியத்துவம் குறைந்து வருவதாக ஆதங்கத்தில் இருக்கிறாராம். அதனால் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த முறை அவருக்கு சீட் தரப்படாவிட்டால், அ.தி.மு.க. அல்லது பா.ஜ.க.வில் இணைந்துவிடலாம் என்று கருதுகிறாராம்.''