ராங்கால் மோடி கையில் எடுக்கும் டேஞ்சரஸ் ஆயுதம்! ஸ்டாலினிடம் சபரீசன் தந்த ரிப்போர்ட்! ஜெயிச்சதும் பிரியாணி! கலக்கிய உதயநிதி!!

rr

"ஹலோ தலைவரே, மத ரீதியிலாக வைக்கப்படும் டேஞ்சரஸ் பிரச்சாரங்களைக் கூட தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது.''”

"ஆமாம்பா, பிரதமர் மோடி மீதே இப்படி ஒரு புகார் வைக்கப் பட்டிருக்கிறதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, பிரதமர் மோடியும் கொஞ்சம் கூட தயக்கமில்லா மல், மத ரீதியிலான பிரச்சார ஆயுதத் தைக் கையில் எடுத்து வருகிறார். குறிப்பாக காங்கிரசின் தேர்தல் அறிக்கை பற்றி விமர்சிக்கும் போதும், அவர் தேவையில்லாமல் இஸ்லாமியத் தரப்பை உரசினார். இது குறித்து காங் கிரஸ் கட்சியே தேர்தல் ஆணையத் திடம் புகார் கொடுத்திருக்கிறது. இதேபோல் அவர் குஜராத் முதல்வராக இருந்தபோதும், மதக்கலவரத்துக்கு எண்ணெய் ஊற்றும் விதமாகப் பேசியதாக, பலரும் குற்றம்சாட்டினர். இதனால் மோடியை அப்போதே கலைஞர் தொடங்கி பா.ஜ.க.வின் சீனியர் தலைவரான வாஜ்பாய் வரை பலரும் கண்டித்தனர். இப்போதும் அதே பாணியிலான பேச்சையே அவர் கையில் எடுத்திருப்பதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. இதேபோல் ஹைதரா பாத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.வான மாதவிலதா, தன் கையையே வில்லாக வளைப்பதுபோல் சைகையைக் காட்டி, மசூதிகளைக் குறிவைப்போம் என்று தற்போது பகிரங்கமாகவே பிரச்சாரம் செய்தார். இதைப் பலரும் கண்டித்த நிலையிலும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ள வில்லை.''”

"இங்கே வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகள் பல தரப்பிலும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் எத்தனை சத வாக்குகள் பதிவாச்சுங்கிற கணக்கைச் சொல்வ திலேயே தேர்தல் ஆணையத்தின் திணறலைப் பார்க்கமுடிந்தது.''

"இந்த எண்ணிக்கை மூன்று முறை திருத்தப் பட்டு கடைசியில் 69.72 சதவீத வாக்குப்பதிவு நடந்திருப்பதாக அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதற்கு முன் இப்படிப்பட்ட குழப்பங் கள் நேர்ந்ததே இல்லைன்னு சொல்றாங்க. அதே போல் தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஐ.ஏ.எஸ்.சை தேர்தல் நேரத்தில் அரசியல் பிரபலங்களால் கூட தொடர்புகொள்ள முடியவில் லை. அவர் எவருடைய போனையும் எடுக்கவே இல்லையாம். இதனாலேயே வாக்குச் சாவடிகளில் ஏ

"ஹலோ தலைவரே, மத ரீதியிலாக வைக்கப்படும் டேஞ்சரஸ் பிரச்சாரங்களைக் கூட தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்திருக்கிறது.''”

"ஆமாம்பா, பிரதமர் மோடி மீதே இப்படி ஒரு புகார் வைக்கப் பட்டிருக்கிறதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, பிரதமர் மோடியும் கொஞ்சம் கூட தயக்கமில்லா மல், மத ரீதியிலான பிரச்சார ஆயுதத் தைக் கையில் எடுத்து வருகிறார். குறிப்பாக காங்கிரசின் தேர்தல் அறிக்கை பற்றி விமர்சிக்கும் போதும், அவர் தேவையில்லாமல் இஸ்லாமியத் தரப்பை உரசினார். இது குறித்து காங் கிரஸ் கட்சியே தேர்தல் ஆணையத் திடம் புகார் கொடுத்திருக்கிறது. இதேபோல் அவர் குஜராத் முதல்வராக இருந்தபோதும், மதக்கலவரத்துக்கு எண்ணெய் ஊற்றும் விதமாகப் பேசியதாக, பலரும் குற்றம்சாட்டினர். இதனால் மோடியை அப்போதே கலைஞர் தொடங்கி பா.ஜ.க.வின் சீனியர் தலைவரான வாஜ்பாய் வரை பலரும் கண்டித்தனர். இப்போதும் அதே பாணியிலான பேச்சையே அவர் கையில் எடுத்திருப்பதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. இதேபோல் ஹைதரா பாத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.வான மாதவிலதா, தன் கையையே வில்லாக வளைப்பதுபோல் சைகையைக் காட்டி, மசூதிகளைக் குறிவைப்போம் என்று தற்போது பகிரங்கமாகவே பிரச்சாரம் செய்தார். இதைப் பலரும் கண்டித்த நிலையிலும், தேர்தல் ஆணையம் கண்டுகொள்ள வில்லை.''”

"இங்கே வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகள் பல தரப்பிலும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் எத்தனை சத வாக்குகள் பதிவாச்சுங்கிற கணக்கைச் சொல்வ திலேயே தேர்தல் ஆணையத்தின் திணறலைப் பார்க்கமுடிந்தது.''

"இந்த எண்ணிக்கை மூன்று முறை திருத்தப் பட்டு கடைசியில் 69.72 சதவீத வாக்குப்பதிவு நடந்திருப்பதாக அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதற்கு முன் இப்படிப்பட்ட குழப்பங் கள் நேர்ந்ததே இல்லைன்னு சொல்றாங்க. அதே போல் தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஐ.ஏ.எஸ்.சை தேர்தல் நேரத்தில் அரசியல் பிரபலங்களால் கூட தொடர்புகொள்ள முடியவில் லை. அவர் எவருடைய போனையும் எடுக்கவே இல்லையாம். இதனாலேயே வாக்குச் சாவடிகளில் ஏற்பட்ட பல்வேறு குழறுபடிகளைத் தீர்ப்பதில் அதிக காலதாமதம் ஏற்பட்டிருக்கு. கடந்த 20 ஆண்டுகளில் இப்படியொரு அதிகாரியை தேர்தல் ஆணையம் சந்திச்சதில்லைன்னு ஆணையத்தில் உள்ளவர்களே சொல்றாங்க.''”

"தேர்தல் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் வெளியிட்ட ஒரு உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக உள்துறைச் செயலாளரான அமுதா ஐ.ஏ.எஸ்., தேர்தல் நேரத்தில் தன் துறையில் உள்ளவர்களுக்கு ஒரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார். அதில், ’ஊழியர் கள் அனைவரும் வாக்களித்ததை நிரூபிக்க வேண் டும். வாக்களிக்காதவர்களின் விடுமுறை ரத்து செய்யப்படும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை, தலைமைச் செயலக பணியா ளர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவின் கவனத்திற்கு எடுத் துச்சென்றனர். இதைத் தொடர்ந்து, உள்துறைச் செயலாளரின் அந்த உத்தரவு, பிறப்பிக்கப்பட்ட 10 மணி நேரத்தில் திரும்பப் பெறப்பட்டிருக்கிறது. இதேபோல் 2011 தேர்தலின்போது கலைஞர் முதல்வராக இருந்தார். அப்போது தேர்தல் அதிகாரியாக இருந்த இதே அமுதா, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ’"மாற்றம்வேண்டும்; மாற்றத்தைக் கொண்டுவாருங்கள்'’ என்று தேர்தல் ஆணைய விளம்பரம் போல அச்சிட்டு ரிலீஸ் செய்தார். இதன் அர்த்தம் அனர்த்த மாக இருப்பதை அறிந்த கலைஞர், அவரைக் கண் டித்து, அதைத் திரும்பப் பெற வைத்தாராம். அதை அதிகாரிகள் பலரும் நினைவுகூர்கிறார்கள்.''”

"இம்முறை நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சாரத் தில் முதல்வர் ஸ்டாலினின் பரப்புரையைப் போலவே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பரப்புரையும் தி.மு.க.வுக்கு பெரிய ஆதரவை பெற்றுத் தந்திருக்குதே?''

rr

"ஆமாங்க தலைவரே, இந்த தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம், 26 நாட்கள், ஏறத்தாழ 10 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்குமேல் பயணித்து பரப்புரை செய்துள்ளார் உதயநிதி. அதிலும் ஒரேநாளில் 6 முதல் 10 இடங்கள் வரை அசராமல் பேசி வாக்கு சேகரித்திருக்கிறார். மொத்தம் 128 இடங்களில் மீட்டிங் நடத்தியுள்ளார். அதில் லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய உதயநிதியின் கூட்டங் களில் 60 சதவிகிதத்துக்கு மேல் பெண்கள் உற்சா கத்துடன் கலந்துகொண்டு ஆச்சரியப்படுத்தினர். உதயநிதி பிரச்சாரத்திற்குச் சென்ற இடமெல்லாம், மதுரை எய்ம்ஸ் குறித்து மக்களே கேள்வி எழுப்பியதால், ஒற்றைச் செங்கலை கையில் எடுத்து, "எய்ம்ஸ் கட்டித்தராத பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பீர் களா?' என்று கேள்வியெழுப்ப... "பா.ஜ.க.வுக்கு வாக்கு இல்லை' என மக்கள் பதிலளித்தார்கள். இது ஒரு புது யுக்தியாகப் பார்க்கப்பட்டது. "சென்னை யிலும், தூத்துக்குடியிலும் கடுமையான வெள்ளம் வந்தபோது ஒரு பைசாவாவது உதவி செய்தார்களா?' எனக் கேட்க, "இல்லை' என மக்கள் சொன்னார்கள். "தவழ்ந்து தவழ்ந்து போய், சசிகலா காலைப் பிடித்து முதலமைச்சராகி, அவர் காலையே வாரி விட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவர் சசிகலாவிற்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர்' எனக் கூறி, எடப்பாடி தவழ்ந்துசென்ற புகைப்படத்தைக் காட்டி பரப்புரை செய்தது மக்களை வெகுவாக ஈர்த்தது. தமிழ்நாட்டிலிருந்து வரியாகப் பெறும் ஒரு ரூபாய் மதிப்பில் 29 பைசாவை மட்டுமே திரும்பக்கொடுத்த மோடியை, "29 பைசா மோடி' என அழைக்கவைத்தார். மேலும், கோவையில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தின்போது, கூடியிருந்த கூட்டம் "ஆடு, ஆடு' எனக் குரலெழுப்ப, "ஜெயிச்சதும் பிரியாணிதான்!'' என பஞ்ச்சாக உதயநிதி சொன்னதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது.''

"தமிழகத் தேர்தல் குறித்து சபரீசனின் "பென்' அமைப்பு, முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு அறிக்கையைக் கொடுத்திருக்கிறதே?''”

’"ஆமாங்க தலைவரே, இந்தமுறை தி.மு.க. தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு அதிக பவரைக் கொடுத்து, அவர்கள் மூலம் தேர்தல் பணிகளை மேற்கொண்டது தி.மு.க. தேர்தலுக்கான செலவுத் தொகையும் இந்த மாவட்டப் பொறுப்பாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. தொகுதிகளின் அன்றாட நிலவரங்கள் குறித்து, முதல்வரின் மருமகன் சபரீசன் நடத்தும் பென் அமைப்பு, அறிக்கை கொடுக்குமாம். அது உரிய தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு முதல்வர் வழியாகவே அனுப்பப்படுமாம். இதைவைத்து தொகுதிப் பொறுப்பாளர்கள் கொடுக்கும் பதிலறிக்கை, முதல்வர் வழியாகவே பென் அமைப் புக்குச் செல்லுமாம். இதன் அடிப்படையிலேயே தொகுதிகளின் சின்னச் சின்ன பிரச்சினைகளையும் சரிசெய்திருக்கிறது தி.மு.க. இப்படி ஒரு ஒர்க் பேட்டர்னுடன்தான் இந்தமுறை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது தி.மு.க.'' ”

"தேர்தல் ரிசல்ட் குறித்தும் ஒரு ஃபைனல் ரிப்போர்ட்டை இந்த பென் அமைப்பு முதல்வரிடம் கொடுத்திருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, இப்படி இந்தத் தேர்தலில் தி.மு.க.வுக்காக களப்பணி செய்த இந்த பென் அமைப்பு, தேர்தல் முடிந்த நிலையில், ஒரு ஃபைனல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறது. அதில் கோவை பா.ஜ.க. வேட்பாளர் மூன்றாம் இடத்துக்கு வருவார் என்று சொல்லியிருப்பதோடு, தமிழகத்தைப் பொறுத்த வரை வேலூரைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதி களிலும் தி.மு.க.வுக்கு மிக சாதகமான நிலையே இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறதாம். அங்கே அமைச்சர் துரைமுருகனின் மகனான வேட்பாளர் கதிர்ஆனந்த்துக்கு எதிராக, தி.மு.க.வினரே களத்தில் இருந்தார்கள் என்று அந்த அறிக்கை உணர்த்திய தாம். இந்த அறிக்கையைப் படித்த ஸ்டாலின், வேலூரில் என்னவெல்லாம் நடந்தது என்பது குறித்து, மற் றொரு விரிவான அறிக் கையைத் தருமாறு அதே பென் அமைப் பிடம் கேட்டிருக்கிறா ராம்.''”

"மாநில உளவுத்துறையும் தேர்தல் நிலவரம் குறித்த ஒரு ரிப்போர்ட்டை முதல்வரிடம் கொடுத்திருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலை வரே, இந்தத் தேர்தலில் தி.மு,.க. கூட்டணி 35 தொகுதி களுக்கு மேல் வெல்லும் என்று மாநில உளவுத்துறை யும் ஒரு ரிப்போர்ட்டை முதல்வரிடம் கொடுத்திருக் கிறது. அதில். தி.மு.க. கூட் டணிக்கு பிரச்சினைக்குரிய தொகுதிகள் அல்லது கடும் போட்டியைச் சந்திக்கக் கூடிய தொகுதிகள் என்று அவர்கள் குறிப்பிட்டிருப் பது கள்ளக்குறிச்சி, திருப்பூர், ஈரோடு, வேலூர் மற்றும் தர்மபுரி ஆகிய தொகுதிகள் தானாம். ஆனாலும் ஸ்டாலினைப் பொறுத்தவரை 40-லும் வெற்றி என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம். மேலும் தமிழகத்தில், பா.ஜ.க.விற்கு எங்கெங்கே டெபாசிட் போகும் என்றும் விசாரிக்கிறாராம். அப்போது, குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பா.ஜ.க. டெபாசிட்கூட வாங்க முடியாது என்று அவருக்குச் சொல்லப்பட்டிருக்கிறது.''”

rr

"தமிழக பா.ஜ.க.வின் அந்த நிர்வாகி, இப்போது கேரளாவிலும் கைவரிசையைக் காட்டுகிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வில் மாநிலப் பொறுப்பில் இருக்கும் அந்த நபர், கோவையில் தனக்கு தோல்விதான் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்டாராம். அதனால்தான் அவர், தனக்கு விழ வேண்டிய பா.ஜ.க. வாக்குகளை தி.மு.க.வினர் நீக்கிவிட்டதாகப் புலம்பினார். இதையறிந்த பா.ஜ.க.வின் தேசியத் தலைவர்கள், தேர்தல் ஆணையம் நம் வசத்தில்தானே இருக்கிறது? அப்படி இருந்தும் தொகுதி வாக்காளர்கள் பட்டியலைக் கூட சரிபார்க்க வில்லையா? என கேள்வி எழுப்பினார்களாம். இந்த நிலையில் கர்நாடகாவுக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்ய அவர் தயாரான போது, இங்கே வந்து நீங்கள் கிழித்ததெல்லாம் போதும் என்று அங்குள்ள பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் அவரைத் தடுத்துவிட்டார்களாம். இதைத் தொடர்ந்து தற்போது கேரளாவில் தங்கியிருக்கும் தன் அரசியல் குரு பி.எல்.சந்தோஷை தொற்றிக்கொண்டு திருவனந்தபுரம், பாலக்காடு, கொல்லம் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் பிரச்சாரம் செய்யப் போவதாகக் கிளம்பியிருக்கிறார் அந்த நபர். இதைத் தொடர்ந்து அவரது ரைட் ஹேண்ட் நபரான அமர்பிரசாத் ரெட்டி, அவருக்கு முன்னதாகவே சென்று, அந்தப் பகுதியில் உள்ள தொழிலதிபர்களிடம் தேர்தல் நிதி என்று வசூல் மேளாவை நடத்தினாராம்.''’

"நானும் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துக்கறேன். ’தேர்தலில் மணல் மாஃபியாக் கள் ராஜ்ஜியம்’ என்ற தலைப்பில் நம் நக்கீரனில் தனி ஸ்டோரி வெளியானது. அதில், மணல் மாஃபியாக்களில் ஒருவரான கரிகாலன், எடப்பாடியையும் மாஜி அ.தி.மு.க. மந்திரி புதுக்கோட்டை விஜயபாஸ்கரையும் ஏமாற்றிய தகவல் பதிவாகி இருந்தது. இதைப் பார்த்த மற்றொரு அ.தி.மு.க. மாஜி மந்திரியான சி.வி.சண்முகம், ’கனிம வளத்துறைக்கு நான் அமைச்சராக இருந்தபோது இப்படித்தான் தேன்ஒழுகப் பேசி என்னை கரிகாலன் ஏமாற்றினார். அவர் ஒரு மோசடி நபர். ஏற்கனவே இவரைப் பற்றி, தி.மு.க. அமைச்சர் துரைமுருகனிடம் எச்சரிக்கை செய்தேன். ஆனாலும் அவர் கரிகாலனைத்தான் நம்பிக்கொண்டு இருக்கிறார்’என்று பலரிடமும் சொல்லி வருகிறாராம்.''’

nkn240424
இதையும் படியுங்கள்
Subscribe