"ஹலோ தலைவரே, பிரதமர் மோடி, தமிழகத்துஙககு பிளைட் ஏறும் முன், தமிழகத்தின் மிகப்பெரிய ஒரு கோரிக்கையை ஓ.கே. பண்ணியிருக்கார்.''”
"ஆமாம்பா. டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கம் தோண்டும் முடிவை எதிர்த்து, தமிழக அரசும் விவசாயிகளும் கொடி பிடித்துப் போராட ஆரம்பிச்சதால், நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்து, தமிழக மக்களின் கோபத்தை மோடி தணிச்சிருக்காரே!''’
"ஆமாங்க தலைவரே, இந்த வாபஸ் அறி விப்பு, முதல்வர் ஸ்டாலினுக்கு பெரும் மகிழ்வையும் மன நிறைவையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான், 8ஆம் தேதி சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நவீன முறையில் கட்டப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைப்பது உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்ட போது, அவருடைய எல்லா நிகழ்ச்சியிலும் முதல் வர் ஸ்டாலினும் உற்சாகத்தோடு கலந்துக்கிட்டார். பிரதமரை வரவேற்பது அல்லது வழியனுப்பி வைப்பதுங்கிற சம்பிரதாய நிகழ்ச்சிகளைத் தாண்டி, இந்தமுறை ஸ்டாலின், பிரதமரின் நிகழ்ச்சிகளில் கலந்துக்கிட்டதிலேயே அவருடைய மகிழ்ச்சி வெளிப்பட்டுச்சுன்னு பா.ஜ.க. தரப்பே சொல்லுச்சு. அதேபோல் சென்னை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மோடி கிளம்பியபோது, அவருடன் தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் பேசியிருக்கார்.''”
"அப்ப மோடியிடம் ஸ்டாலின் என்ன சொன்னாராம்?''”
"பிரதமர் மோடியிடம் பேசிய ஸ்டாலின் தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, தொழில்துறை, எரிசக்தித்துறை, இளைஞர் நலன் விளையாட்டுத் துறை, போக்கு வரத்துத்துறை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம்ன்னு பல துறைகளுக்கான கோரிக்கைகளை வச்சிருக்கார். அதோடு, கால்நடைப் பரா மரிப்பு, மீன்வளம், பால் வளம், இலங்கை தமிழர் கள் விவகாரம் உள் ளிட்ட துறைகள் சார்ந்த கோரிக்கை களையும் மோடியிடம் கொடுத்துவிட்டு, அதன் சாராம்சத்தை விவரித்திருக்கிறார் ஸ்டாலின். மேடை யில் பேசியபோதும் இவற்றை மோடியிடம் வலியுறுத்திய அவர், தனிப்பட்ட முறையிலும் இதையே சொன்னதால், "நீங்கள் வைத்துள்ள கோரிக்கை அனைத்தையும் கவனிப்பேன். டோண்ட் வொர்ரி'ன்னு உற்சாகமாகவே சொன்னாராம் மோடி.''”
"அப்புறம் என்ன? அதையெல்லாம் நிறைவேத்தினால் சரிதான்.''”
"அதோடு நிற்காமல், ஸ்டாலினிடம் மோடி, "என் சென்னை நிகழ்ச்சிகள் அனைத்திலும் நீங்கள் என்னுடன் இருந்தது மகிழ்ச்சியைத் தருகிறது'ன்னு மகிழ்ச்சிப் பெருக்கோடு சொல்லியிருக்கிறார். இந்த சந்திப்பின்போது பல்வேறு கோரிக்கைகளை மோடி யிடன் முன்வைத்த ஸ்டாலின், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்துள்ள நிலையில் விரைவில் நீட் தேர்வினை மாணவர்கள் எதிர்கொள்ளவிருக் கும் சூழலில், இந்த ஆண்டாவது நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்குமா? என்ற கேள்வியுடன் மாண வர்கள் தவித்துவரும் நிலையில், நீட் தேர்வு விலக்கு குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டா லின் அழுத்தமாகப் பேசியிருக்க வேண்டும் என்றும், அதுகுறித்து சம்பிரதாயத்துக்குக் கூட மோடியிடம், ஸ்டாலின் கோரிக்கை வைக்காதது ஏமாற்றம்தான் என்றும் கல்வியாளர்களிடமும் மாணவ அமைப்புகளிடமும் அதிருப்தியும் கிளம்பியிருக்கு.''”
"எடப்பாடிக்கு ஒதுக்கியிருந்த நேரத்தை, கடைசி நேரத்தில் பிரதமர் மோடி ரத்து செய்துவிட்டாரே?''”
"ஆமாங்க தலைவரே, மோடியின் சென்னை பயணத்தில் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இருவரும் முயற்சித்தனர். அதற்கான அப்பாயின்ட்மெண்ட்டும் கேட்கப்பட் டது. இதைத் தொடர்ந்து சென்னை விமானநிலை யத்தில் சந்திக்க, எடப்பாடிக்கு மட்டும் முதலில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த சந்திப்பின் போது, தனது பொதுச்செயலாளர் பதவியை, தேர் தல் ஆணையம் அங்கீகரிக்க மோடிதான் உதவ வேண்டும் என்றும், கர்நாடக தேர்தலில் அ.தி. மு.க.வுக்கு குறைந்தபட்சம் 3 இடங்களையாவது ஒதுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைக்கத் திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. அதேசமயம், ஓ.பி.எஸ்., சசிகலா, தினகரன் குறித்த விசயங்கள் உள்பட, தான் பேச விரும்புவதையெல்லாம் ஒரு கடிதமாக கொடுக்கவும் அவர் தயாராகியிருந்தார். அதேபோல், ஓ.பி.எஸ்.ஸும் ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் அப்பாயின்ட்மெண்ட்டை எப்படியோ வாங்கிவிட்டார். ஆனாலும் கடைசி நேரத்தில் இருவரின் சந்திப்பையும் ரத்து செய்துவிட்டார் மோடி. இது இரு தரப்பையுமே அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.''””
"ஏன் இவர்களின் அப்பாயின்மெண்ட் ரத்து செய்யப்பட்டதாம்?''”
"ஏர்போர்ட் வந்து காத்திருந்த எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ், இந்த இருவரிடமும் வணக்கம் சொல்லிவிட்டு மோடி பிளைட் ஏறிவிட்டதால், இருவருக்கும் ஏக ஏமாற்றம் ஆகிவிட்டது. கடைசி நேரத்தில் எடப்பாடியை சந்திக்க மோடி மறுத்தது ஏன்? என்கிற கேள்வி எடப்பாடித் தரப்பில் பல ரிடமும் வியாபித்திருக்கிறது. விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு வந்த எடப்பாடி, தம்பிதுரையை தொடர்புகொண்டு பேசி, எதுக்காக இப்படின்னு விசாரிக்கச் சொல்லி இருக்கிறார். டெல்லியைத் தொடர்புகொண்டு விசாரித்த தம்பிதுரை, "மோடி- ஸ்டாலின் சந்திப்பு முடிந்ததும் மோடியிடம் பேசியிருக்கிறார் அமித்ஷா. அவர்தான் உங்கள் சந்திப்பை கேன்சல் செய்யச் சொல்லி மோடியிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், காரணம் மட்டும் என்னன்னு தெரியவில்லை. அமித்ஷா சொல்லித் தான், உங்களுக்கான அப்பாயின்ட்மெண்ட் ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்று எடப்பாடிக்கு தெரியப்படுத்தினாராம். எடப்பாடியின் சந்திப்பைத் தள்ளிவைத்ததால், ஓ.பி.எஸ்.ஸின் சந்திப்பையும் கைவிட்டுவிட்டாராம் மோடி.''”
"மோடியை வரவேற்க போதுமான கூட்டம் இல்லையே?''”
"பிரதமர் மோடியின் சென்னை வருகையில் அவரை வரவேற்பதிலும், பல்லாவரத்தில் நடக்கும் பல்வேறு திட்ட தொடக்க விழாவில், பெரும் கூட் டத்தைக் காட்டவும் தமிழக பா.ஜ.க. திட்டமிட் டது. அதேபோல் விவேகானந்தர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சி, சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த நிகழ்ச்சி, இந்த இரண்டிலும் கலந்து கொள்ள, அவர் தரை மார்க்கமாகவே சென் றார். அப்போது வழிநெடுகிலும் அவருக்கு பிர மாண்டமாக வரவேற்பு கொடுக்கும் வகையில், பிரமாண்டமாக கட்சியினரைத் திரட்டி வரவேண் டும் என்று, கட்சியின் நிர்வாகிகளுக்கு பா.ஜ.க.வின் அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் உத்தர விட்டிருந்தார். இதற்கான பொறுப்பு, கட்சியின் சென்னை பெருங்கோட்டப் பொறுப்பாளர் கரு.நாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த சென்னை கோட்டத்தில் பா.ஜ.க.வின் 7 மாவட்டங்கள் அடங்குகிறது. இந்த 7 மாவட்டங் களிலிருந்தும் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 5,000 பேர் என 35 ஆயிரம் பேரையாவது திரட்டி வரவேண்டும் என கரு.நாகராஜனிடம் வலியுறுத்தப் பட்டிருந்தது. ஆனால், என்ன காரணத்தாலோ, அவ ராலும் கூட்டத்தைத் திரட்ட முடியவில்லையாம்.''’
"கூட்டம் குறைந்தது குறித்து பிரதமர் அலுவலகமும் விசாரிச்சிருக்கே?'' ”
"ஆமாங்க தலைவரே, பிரதமர் நிகழ்ச்சிக்கு 6 ஆயிரம் பேர் வரைதான் வந்ததாக மாநில உளவுத்துறையும் 7 ஆயிரம் பேர் மட்டுமே வந்தார் கள் என்று ஒன்றிய உளவுத்துறையும் தலைமைக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. அதேபோல, பல்லாவரத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆட்களை திரட்டிவரும் பொறுப்பு விழுப்புரம் கோட்டப் பொறுப்பாளர் வினோஜ் செல்வத்திடம் கொடுத்திருந்தார் கேசவ விநாயகம். விழுப்புரம் கோட்டத்தில் 10 மாவட்டங்கள் இருக்கிறது. மாவட்டத்துக்கு 10,000 பேர் என 1 லட்சம் தொண்டர்களைத் திரட்டிக் காட்டுகிறேன் எனச் சொல்லியிருந்தார் வினோஜ். ஆனால், மோடி கலந்துகொண்ட பல்லாவரம் கூட்டத்தில் 10,000 பேர்கூட கூட்டப்படவில்லையாம். அதிலும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசி முடித்ததும், அவர்களில் ஒரு பகுதியினர் கூட்டத்திலிருந்து கிளம்பிவிட்டார்களாம். மோடி கலந்துகொண்ட முக்கியமான 2 அரசு நிகழ்வுகளிலும் சொன்னபடி கூட்டத்தைக் கூட்டிக் காட்டாமல் கோட்டப் பொறுப்பாளர்கள் இருவரும், கோட்டை விட்டு விட்டனர் என்கிற குற்றச்சாட்டும் கமலாலயத்தில் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.''”
"ஓ.பி.எஸ்.ஸின் மாநாட்டு முயற்சி எப்படி இருக்கிறது?''”
"திருச்சி என்றாலே திருப்பு முனையாக அமையும் என்கிற சென்டிமெண்ட் எல்லா கட்சிகளுக்குமே இருக்கிறது. குறிப்பாக 2011-ல் ஜெயலலிதா திருச்சி ஜிகார் னர் மைதானத்தில் போட்ட பிரம்மாண்ட பொதுக்கூட்டத் துக்குப் பிறகு, அ.தி.மு.க. தொடர்ந்து 10ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அந்த சென்டி மெண்ட் அடிப்படையில் தான் திருச்சியில் அதே இடத்தில் ஒரு மாநாட்டை இந்த மாதம் 24 அல்லது அடுத்தமாதம் 2ஆம் தேதி யில் நடத்த ஓபி.எஸ். திட்டமிட்டி ருக்கிறார். அரசியலில் தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் அவர், தன் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் இதன்மூலம் உற்சாகப்படுத்த நினைக்கிறார். அதனால் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேரில் இருந்து 5 லட்சம் பேர்வரை அவர், திருச்சியில் திரட்டத் தீர்மானித்திருக்கிறார். இந்த மாநாட்டை, எடப்பாடியை வீழ்த்துவது என்ற ஒன்றைக் குறிக்கோளுடன் நடத்தவும், இதில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை மேடை ஏற்றவும் அவர் வியூகம் வகுத்துவருகிறாராம். ஆனால், சசி தரப்பு ஓ.பி.எஸ்.ஸை நம்புமா என் பதை, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தற்போது எடப்பாடி ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு இருப்பது போல், மகா குழப்பத்தில் இருக்கிறாராம். நீதிமன்ற முடிவுகள் சாதகமாக வந்த நிலையில், பா.ஜ.க.வின் தயவோடு, இரட்டை இலைச் சின்னத்தை சொந்தமாக்கிக் கொள்ளவேண்டும் என்ற தவிப்பு இப்போது அவரிடம் மேலோங்கி இருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க., அதற்குப் பிடிகொடுக்காமல் நடந்து கொள்கிறதாம். இந்த நேரத்தில், அவருக்கு நெருக்கமானவர்களான மாஜி மந்திரிகள் தங்கமணியும், வேலுமணியும் தனித்தனி ரூட்டுகளில் பா.ஜ.க.வுடன் கள்ள உறவுகொண்டு பேசி வருகிறார்களாம். அதேபோல் மற்றொரு மாஜி மந்திரியான சி.வி. சண்முகம், சசிகலா தரப்புடன் நெருக்கம் பாராட்டி வருகிறார். இதெல்லாம் தெரிந்தாலும் கூட இவர்களில் யாரையும் கண்டிக்கும் தைரியம் எடப்பாடிக்கு இல்லையாம். கொஞ்ச நாள் கட்சியை சேதாரமில்லாமல் உருட்டிக்கொண்டு போய்விட்டால், தேர்தல் நேரத்தில் ஸ்ட்ராங் ஆகிவிடலாம் என்பதுதான் அவரது எண்ணமாம்.''’