நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு மாநிலத்திலு முள்ள இளைஞர்களை ஈர்க்கும் வகையில், மத்திய அரசுப் பணி களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மெகா திட்டத்தைத் துவக்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 255 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், தமிழக அரசில் உள்ள வேலை வாய்ப்புகளை நிரப்பும் செயல் திட்டத் தினை தி.மு.க. அரசு முன்னெடுக்க வேண்டும் என்கிற குரல்கள் அதிகரித்திருப்பது குறித்து, நம்மிடம் பேசிய தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், "ஒவ்வொரு மாநிலத்திலும் வேலையில்லா பிரச்சனைதான் முதன்மையானதாக இருப்பதும், அதனால் மாநில அரசாங்கத்தின் மீது இளைஞர்கள் அதிருப்தியாக இருப் பதும் கண்டறிந்து, அதற்கு தீர்வு காணும் வகையில் போடப்பட் டதுதான் மத்திய அரசுப் பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கும் திட்டம்.
நாடாளுமன்றத் தேர்தலில் இந
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு மாநிலத்திலு முள்ள இளைஞர்களை ஈர்க்கும் வகையில், மத்திய அரசுப் பணி களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் மெகா திட்டத்தைத் துவக்கி வைத்திருக்கிறார் பிரதமர் மோடி. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 255 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறார்.
இந்த நிலையில், தமிழக அரசில் உள்ள வேலை வாய்ப்புகளை நிரப்பும் செயல் திட்டத் தினை தி.மு.க. அரசு முன்னெடுக்க வேண்டும் என்கிற குரல்கள் அதிகரித்திருப்பது குறித்து, நம்மிடம் பேசிய தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், "ஒவ்வொரு மாநிலத்திலும் வேலையில்லா பிரச்சனைதான் முதன்மையானதாக இருப்பதும், அதனால் மாநில அரசாங்கத்தின் மீது இளைஞர்கள் அதிருப்தியாக இருப் பதும் கண்டறிந்து, அதற்கு தீர்வு காணும் வகையில் போடப்பட் டதுதான் மத்திய அரசுப் பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கும் திட்டம்.
நாடாளுமன்றத் தேர்தலில் இந்தமுறை தென்னிந்தியாவை குறிப்பாக தமிழகத்தை அதிகமாகவே குறி வைக்கிறார் மோடி. இது தொடர்பான சமீபத்திய சர்வேயில், தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணி யிடங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், அதனை பூர்த்தி செய்ய தமிழக அரசு (தி.மு.க.) முன்வராததும் தமிழக இளைஞர்களிடம் வெறுப் புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அந்த ரிப் போர்ட் சொல்லியுள்ளது. அதனை வைத்து தமிழக இளைஞர் களை ஈர்க்க வெவ்வேறு வகையான 4 திட்டங்களை போட்டு வைத்திருக்கிறது மோடி அரசு. அதில் முதல் திட்டம்தான் அரசு பணிகளில் வேலை வாய்ப்பு” என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.
இது குறித்து தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் சுமார் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப் பணியிடங்களை உடனுக்குடன் பூர்த்தி செய் வோம்; ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக 3 லட்சம் பணியிடங் கள் நிரப்பப்படும்; புதிதாக 2 லட்சம் பணியிடங்களை உருவாக்கு வோம்; சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களை அரசு பணியாளர்களாக பணியமர்த்துவோம் என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதி தந்திருக்கிறது தி.மு.க.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட 18 மாதங்கள் முடிந்துவிட்டன. இந்த 18 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் வருவாய்த்துறையில் 2,748, கூட்டுறவுத் துறையில் 6,300, உணவுத்துறையில் 5,000 பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் நேரடித் தேர்வில் பணி நியமனம் செய்ய உத்தேசிக்கப்பட்டு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதே அணுகுமுறையை அனைத்து துறைகளிலும் முன்னெடுக்க வேண்டும். போக்குவரத்துத்துறை யில் கண்டக்டர், ட்ரைவர் வேலைக்கான 10,000-த்திற்கும் அதிக மான காலிப் பணியிடங்களை நிரப்ப ஆர்வம் காட்டவில்லை. இத னால் ஏற்பட்ட டிரைவர், கண்டக்டர்கள் பற்றாக்குறையால் கணிச மான எண்ணிக்கையில் பேருந்துகள் குறைக்கப்பட்டு விட்டன.
கால்நடைத்துறையில் காலியாக உள்ள 8,500 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதேபோல சத்துணவு துறை யில் 65,000 அங்கன்வாடி பணியாளர் இடங்கள் காலியாக உள் ளன. இதனை நிரப்பினால், ஒவ்வொரு அங்கன்வாடி பணியாள ருக்கும் மத்திய அரசிடமிருந்து 5,000 ரூபாய் ஸ்டைஃபண்ட் கிடைக்கும். இப்படி ஒவ்வொரு துறையிலும் காலிப் பணியிடங் களை நிரப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் முயற்சித்தாலே போதும், நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களை ஜெயிக்கலாம். நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி காலிப் பணியிடங்களை நிரப்பாமல் தவிர்ப்பது சரியாக இருக்காது. தற்காலிக ஒப்பந்த முறையில் பணியிடங்களை நிரப்பி, தொகுப்பூதியம் வழங்கினாலே போதும். இதைச் செய்தாலே இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திட முடியும்.
ஒப்பந்த முறையில் காலிப்பணியிடங்களை நிரப்பக்கூட முன்வராமல் தி.மு.க. அரசு தவறுவதால்தான் அந்த இடத்தை மத்திய மோடி அரசு கையிலெடுக்கிறது. மோடியின் ரகசிய திட்டத்தை அறிந்ததால்தான், பீகார் அரசும் ராஜஸ்தான் அரசும் காலிப் பணியிடங்களை நிரப்பிட முன்வந்ததுடன் 1 லட்சத்துக்கும் அதிகமான தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப்படுத்த ஆணை பிறப்பித்துள்ளன. ஒடிசா மாநில முதல்வரும் இதனை அறிவித்துள்ளார்.
அதேபோல, பஞ்சாப் மாநிலத் தில் பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தாததால் அரசு ஊழியர் களும் ஆசிரியர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதையறிந்த ஆம் ஆத்மி அரசின் முதல்வர் பகவந்த்மான்சிங், தனது கேபி னெட்டை கூட்டி விவாதித்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கொள்கை ரீதியாக முடிவு செய்து அறிவித்துள்ளது. தமிழகத்திலும் இதே பிரச்சனை இருப்பதால் முதல்வர் ஸ்டாலின் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்களும், சட்ட மன்றத் தேர்தலுக்கு 33 மாதங்களும் தான் இருக்கின்றன. இது குறுகிய காலம்தான். அதனால் தேர்தலை மையப்படுத்தி தி.மு.க. அரசு யோசிக்கவேண்டும். அரசு ஊழியர் களிடமும் வேலையில்லா இளைஞர் களிடமும் அதிருப்திகள் அதிக மானால் அது தி.மு.க. அரசுக்கு எதிர்மறை முடிவுகளையே தரும்'' என்று விரிவாக சுட்டிக்காட்டு கிறார்கள் அரசு அதிகாரிகள்.
என்ன செய்யப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்?
-இரா.இளையசெல்வன்