"ஹலோ தலைவரே, இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பழங்குடி சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்மு பதவி ஏற்றிருக்கிறாரே.''”
"அவரோட வெற்றி பற்றியும் அது குறித்த ஒன்றிய ஆளுந்தரப்பின் கணிப்பையும் நம்ம நக்கீரன்தானே முதன்முதலில் சொன்னது.''”
"உண்மைதாங்க தலைவரே.. 60 சதவீதத்துக் கும் அதிகமான வாக்குகளைப் பெற்று திரௌபதி ஜெயிக்க வேண்டும் என்று, பா.ஜ.க. இந்த வெற்றிக் காக பல வழிகளில் களமிறங்கியதையும் முதன் முத லில் நம் நக்கீரன்தான் பதிவு செய்தது. அது போலவே, 64 சதவீத வாக்குகளைப் பெற்று குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்திருக்கிறார் முர்மு.''”
"புதிய ஜனாதி பதிக்கு பல சவால்கள் காத்திருக்குதே?''”
"தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களின் பிரச்சினைகள், புதிய ஜனாதிபதியின் பார்வைக்காக அவர் மேஜையில் காத்திருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, இத்தனை நாட்களாக நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவை கவர்னருக்கு மட்டுமே அனுப்பிவந்தது ஸ்டாலின் தலைமையி லான தமிழக அரசு. புதிய ஜனாதிபதி வந்ததும், அவரிடம் நீட் விலக்கு பற்றி வலியுறுத்தலாம் என்ற எண்ணத்தில்தான், கவர்னரை கடந்த இரண்டு மாதங்களாக, தமிழக அரசு நீட்டுக்காக அணுகலை. இப்போது முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்ட மாதிரியே, ராஜ்பவன் அந்த நீட் விலக்குக்கான மசோதாவை ராஷ்ட்ரபதி பவனுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதை கவர்னர் ரவியே முதல்வர் ஸ்டாலினிடம் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆக, புதிய ஜனாதிபதியிடம் நீட் தேர்வு விலக்கு குறித்துதான் தனது முதல் கோரிக்கையை தி.மு.க. அரசு வைத்திருப்பதோடு, அது குறித்து வலியுறுத்தவும் இருக்கிறது.''”
"அதுசரிப்பா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தின் பி
"ஹலோ தலைவரே, இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பழங்குடி சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்மு பதவி ஏற்றிருக்கிறாரே.''”
"அவரோட வெற்றி பற்றியும் அது குறித்த ஒன்றிய ஆளுந்தரப்பின் கணிப்பையும் நம்ம நக்கீரன்தானே முதன்முதலில் சொன்னது.''”
"உண்மைதாங்க தலைவரே.. 60 சதவீதத்துக் கும் அதிகமான வாக்குகளைப் பெற்று திரௌபதி ஜெயிக்க வேண்டும் என்று, பா.ஜ.க. இந்த வெற்றிக் காக பல வழிகளில் களமிறங்கியதையும் முதன் முத லில் நம் நக்கீரன்தான் பதிவு செய்தது. அது போலவே, 64 சதவீத வாக்குகளைப் பெற்று குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்திருக்கிறார் முர்மு.''”
"புதிய ஜனாதி பதிக்கு பல சவால்கள் காத்திருக்குதே?''”
"தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களின் பிரச்சினைகள், புதிய ஜனாதிபதியின் பார்வைக்காக அவர் மேஜையில் காத்திருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை, இத்தனை நாட்களாக நீட் தேர்வு விலக்கு தொடர்பான மசோதாவை கவர்னருக்கு மட்டுமே அனுப்பிவந்தது ஸ்டாலின் தலைமையி லான தமிழக அரசு. புதிய ஜனாதிபதி வந்ததும், அவரிடம் நீட் விலக்கு பற்றி வலியுறுத்தலாம் என்ற எண்ணத்தில்தான், கவர்னரை கடந்த இரண்டு மாதங்களாக, தமிழக அரசு நீட்டுக்காக அணுகலை. இப்போது முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்ட மாதிரியே, ராஜ்பவன் அந்த நீட் விலக்குக்கான மசோதாவை ராஷ்ட்ரபதி பவனுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதை கவர்னர் ரவியே முதல்வர் ஸ்டாலினிடம் உறுதிப்படுத்தி இருக்கிறார். ஆக, புதிய ஜனாதிபதியிடம் நீட் தேர்வு விலக்கு குறித்துதான் தனது முதல் கோரிக்கையை தி.மு.க. அரசு வைத்திருப்பதோடு, அது குறித்து வலியுறுத்தவும் இருக்கிறது.''”
"அதுசரிப்பா, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தின் பிரிவு உபச்சார விழாவுக்காக, பா.ஜ.க. அண்ணாமலையுடன் டெல்லி சென்ற எடப்பாடி, அப்செட் மூடில் திரும்பி வந்திருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அந்த நிகழ்ச்சிக்கு எடப்பாடிக்கு யாரும் அழைப்புவிடுக்கலையாம். அதே சமயம் அ.தி.மு.க. எம்.பி.யும் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்திரநாத்திற்கு, எம்.பி. என்கிற முறையில் ஒன்றிய அரசின் அழைப்பு போயிருக்கு. அந்த நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடியிடம் தனது மகன் ரவீந்திரநாத் மூலமாக, ஓ.பி.எஸ். தனக்கு எதிராக முறையிடப் போகிறார்னு எடப் பாடிக்கு தகவல் கிடைச்சிருக்கு. அதனால்தான் அவர் பா.ஜ.க. அண்ணாமலையைத் தொடர்பு கொண்டு, உங்களோடு நானும் டெல்லிக்கு வர்றேன். பிரதமர் மோடியை நான் அங்கே சந்தித்துப் பேச வாய்ப்பை ஏற்படுத்துங்கள்னு கேட்டுப் போயிருக்கிறார். ஆனால் அங்கே எடப்பாடி நினைச்சமாதிரி எதுவும் நடக்கலை.''”
"என்ன நடந்ததாம்?''”
"மோடிக்கு வணக்கம் சொல்லச் சென்ற அண்ணாமலையோடு, எடப்பாடியும் ஒட்டிக் கொண்டே மோடி அருகே சென்றிருக்கிறார். அண்ணாமலைக்கு மட்டும் பதில் வணக்கம் சொன்ன மோடி, எடப்பாடியைக் கண்டு கொள்ளவே இல்லையாம். உங்களிடம் தனிப்பட்ட முறையில் எடப்பாடி பேச விரும்புகிறார்னு அண்ணாமலை சொன்னபோது, அதற்கு பதில் சொல்லாத மோடி, தமிழகத்தில் சாதி பாலிடிக்ஸ் பண்றீங்களான்னு எடப்பாடியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அண்ணாமலையிடம் எரிச்சலைக் காட்டியிருக்கிறார். பிராமின்ஸுக்கும், நாடார் சமூகத்துக்கும் எதிராக நான் அரசியல் பண்றதா, டெல்லிக்கு சிலர் போட்டுக் கொடுத்திருக் காங்கன்னு எடப்பாடி அப்ப அண்ணாமலையிடம் ஆதங்கப்பட்டிருக்கார்.''”
"பா.ஜ.க. அண்ணாமலை புகார் ஆவணங்களோடு கவர்னர் ஆர்.என். ரவியையும் சந்திச் சிருக்காரே?''”
"ராஜ்பவனில் கடந்த வாரம் நடந்த அந்தச் சந்திப்பில், போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்த புகாரையும் சில முக்கிய செய்தி ஆவணங் களையும் அளித்தார் அண்ணாமலை. இதே புகாரை, தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டிக்கும், கட்சி நிர்வாகிகளான கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோர் மூலம் அண்ணாமலை கொடுத்தனுப்பினார். அந்தப் புகாரை வாங்கிக்கொண்ட பணீந்தர், எந்த பதிலும் சொல்லாமல் அவர்களை அனுப்பி வைத்துவிட்டார். இருந்தும் ஊடகத்தினரை சந்தித்த பா.ஜ.க. தரப்பு, நடவடிக்கை எடுக்கிறோம்னு உள்துறைச் செயலாளர் சொல்லியிருக்கிறார்னு பேட்டியளிக்க, இது உள்துறைச் செயலாளரை அதிரவைத்திருக் கிறதாம்.''”
"எதற்காக உள்துறைச் செயலாளரிடமும் இந்த மனுவை பா.ஜ.க. கொடுத்ததாம்?''”
"கவர்னரிடம் கொடுக்கப்படும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், அது குறித்து நீதிமன்றத்துக்குப் போக முடியாது. அதுவே, தமிழக அரசிடம் புகாரைக் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், நீதிமன் றத்தை அணுகமுடியும். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த நினைக்கும் அண்ணாமலைக்கு, உள்துறையிடம் புகார் கொடுக்கும் யோசனையைச் சொன்னதே ராஜ்பவன் தரப்பு தானாம். இந்த நிலையில், போலி பாஸ்போர்ட் விவகாரம் குறித்து அரசு தரப்பில் ஒரு விளக்கம் தரப்பட்டிருக்கு. அதில், அதிகாரிகள் மீதான நடவடிக்கை தொடர்பாக ஒன்றிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பதா சொல்லப்பட்டிருக்கு.''”
"ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள் தமிழ்நாட்டுப் பக்கம் கவனம் செலுத்துதே?''”
"அண்மையில் பிடிபட்ட ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் விவகாரம் தொடர்பாக, திருச்சி இலங்கைத் தமிழர் முகாமில் நடத்தப்பட்ட ரெய்டு மற்றும் விசாரணையின் போது, மதுரையில் விநியோகிக்கப் பட்ட போலி பாஸ்போர்ட் டை வைத்தே கடத்தல் புள்ளிகள் செயல்பட்டது தெரிய வந்திருக்கிறது. இதற்கிடையே போலி பாஸ்போர்ட் விவகாரத்தை விசாரித்துவரும் தேசியப் புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ., மதுரையில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரியின் மனைவி டிராவல் ஏஜன்ஸி நடத்தியதாகவும், அதற்காகத்தான் போலி பாஸ்போர்டுகள், அந்த அதிகாரியின் ஆர்வத்தால் முறைகேடாக விநியோகிக்கப்பட்டன என்றும் கண்டுபிடித்திருக்கிறதாம். இதையெல்லாம் கவர்னர் ரவிக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தெரிவித்திருக்கும் பா.ஜ.க. அண்ணாமலை, அதிகாரிக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறாராம்.''”
"சரிப்பா, பா.ஜ.க. ஆதரவாளரான ஒருவர் ஓ.பி.எஸ்.ஸை ரிமோட் மூலம் இயக்குகிறாரே?''”
"நீதிமன்றமும் வங்கிகள் தரப்பும் அடுத்தடுத்துக் கொடுத்த தொடர் அடிகளால் அப்செட்டாகி இருந்த ஓ.பி.எஸ்.ஸை இப்ப இயக்குகிறவர் ஆடிட்டர் குருமூர்த்திதானாம். கட்சியின் வங்கிக்கணக்கை எடப்பாடித் தரப்பு கையாளக்கூடாதுன்னு ரிசர்வ் வங்கியிடம் நீங்கள் முறையிடலாம்னு ஆலோசனை கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கான வங்கிக் கணக்குகளை நிர்வகிக்கும் உரிமையைத் தங்கள் தரப்புக்கே தரணும்னு ரிசர்வ் வங்கிக்கு முறையீட்டுக் கடிதம் எழுதி இருக்கிறார் ஓ.பி.எஸ். அதோடு, தனக்கு சாதகமாக ரிசர்வ் வங்கியிடமிருந்து உத்தரவை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கும் அவர், இதற்காக ஆடிட்டர் மூலமாகவே டெல்லியின் கதவைத் தட்டுகிறாராம். அதேபோல் தேர்தல் ஆணையத்திலும் நாம நூல்விட்டுப் பார்ப்போம்னு அவ ருக்கு ஆடிட்டர் தெம்பூட்டி இருக் கிறாராம்.''”
"எப்படி?''”
"அ.தி.மு.க. யாருக்கு சொந்தம்னு தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய ணும். ஆணையத்தின் இறுதி முடிவு அறி விக்கப்படும் வரை, நீங்கள்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அதனால் அந்த அதிகாரத் தில் நீங்கள் செயல்படலாம்னு ஆடிட்டர் சொல்லியிருக்கிறாராம். இதில் தெம்பான ஓ.பி.எஸ்., ஏற்கனவே கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அந்தந்த பொறுப்பு களில் தொடர்வார்கள்னு அறிவித்ததோடு, 14 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட செயலாளர்களையும் நியமித்து அதிரடி காட்டியிருக்கிறார். பா.ஜ.க. அண்ணாமலைக்கும் எடப்பாடிக்கும் எதிராகக் காய் நகர்த்தும் விதத்தில்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆடிட்டர் ஆதரவுக்கரம் நீட்டுவதாக கமலாலயத் தரப்பிலேயே பேச்சு அடிபடுகிறது.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். டெல்லி தனக்கு நெருக்கமான வர்களைக் குறிவைத்து, வருமான வரித்துறை மூலம் ரெய்டை நடத்திவருவதால், ரொம்பவே நொந்து போயிருக்கிறார் எடப்பாடி. அதே போல் டெல்லியின் ஆதரவோடுதான் ஓ.பி.எஸ். துள்ளிக்குதிக்கிறார் என்றும் அவர் நினைக்கிறார். அதனால் அண்ணாமலையுடன் டெல்லிக்குச் செல்லும் போதே, மாஜி மந்திரி வேலுமணி மூலம் பியூஷ் கோயலையும், ஈஷா மைய ஜக்கிவாசுதேவ் மூலம் அமித்ஷாவையும் சந்தித்து, முறையிடும் முயற்சியிலும் எடப்பாடி இருந்தார். அண்ணாமலை மூலம் மோடியைச் சந்திக்கும் முயற்சி தோற்றது போலவே அமித்ஷா, பியூஷ் கோயல் சந்திப்பு முயற்சியும் தோற்றுவிட்டன. அதனால்தான் தனது நான்கு நாள் டெல்லி விசிட்டை 2 நாளிலேயே முடித்துக்கொண்டு சோகத்தோடு திரும்பி விட்டாராம் எடப்பாடி.''”