புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவரது பேச்சு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்தில் மீண்டும் வெடிக்கும் சூழலை உருவாக்கி யிருக்கிறது.

இந்தி மொழியை தமிழகத்தில் நிலை நிறுத்த பள்ளிக் கல்வியை பகடைக்காயாக பயன்படுத்தும் ஒன்றிய அரசு, இதற்காக மும்மொழிக் கொள்கையை திணித்து வருகிறது. ஆனால், இந்த கொள்கையின் பின்னணியி லுள்ள சூழ்ச்சிகளை அறிந்து, அதனை தொடர்ந்து எதிர்த்து நிற்கிறது தி.மு.க. அரசு.

sta

இப்படிப்பட்ட சூழலில், உத்தரப் பிரதேசத்திலுள்ள காசி தமிழ்ச் சங்கத்தின் 3.0 நிகழ்ச்சியை கடந்த 15-ந்தேதி துவங்கி வைத்தார் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதானிடம், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய கல்வி நிதியை வழங்க மறுப்பது ஏன்? என்கிற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், "புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதால் 2,152 கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை. அதனால், வழங்க முடியாது. அரசமைப்புக்கு உட்பட்டு தமிழக அரசு செயல்பட வேண்டும். ஆரம்பத்தில் மும்மொழிக் கொள்கையை ஏற்பதாக ஒப்புக் கொண்டனர். பிறகு, அரசியல் காரணங்களுக்காக தேசிய கல்விக் கொள்கையை அவர்கள் (தி.மு.க. அரசு) ஏற்க மறுத்து வருகின்றனர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஏற்பதில் எந்த சிரமமும் இல்லை. தாய் மொழியான தமிழ் மொழி பிரதான மொழியாக இருப்பதற்கு தேசிய கல்விக் கொள்கையில் எந்த தடங்கலும் கிடையாது. தேசிய கல்விக் கொள்கையை ஒட்டுமொத்த நாடும் ஏற்றுக்கொள்ளும் போது, தமிழ்நாடு அரசு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்று நடைமுறைப் படுத்த தமிழக அரசு என்றைக்கு ஒப்புக்கொள்கிறதோ அன்றைக்குத்தான் கல்விக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும்''’என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

Advertisment

ஒன்றிய அமைச்சரின் இந்த பதில், தமிழக அரசியல் கட்சிகளைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. உடனடியாக இதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ’"மும்மொழிக் கொள்கையை சட்டத்தின் விதிகள் என்கிறார் ஒன்றிய அமைச்சர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கு கிறது என்பதை அமைச்சரால் கூற முடியுமா? மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம். ஒத்திசைவுப் பட்டியலில்தான் கல்வி உள்ளது. அதற்கு ஒன்றிய அரசு எஜமானர்கள் அல்ல!

மும்மொழிக் கொள்கையை ஏற்கும்வரை தமிழ் நாட்டுக்கு நிதி கிடையாது என்று ப்ளாக் மெயில் செய்யும் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் நாங்கள் கேட்கிறோம். உங்களின் தனிச் சொத்தினை கேட்பது போல திமிராகப் பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்கவேண்டிய திருக்கும்''” என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

st

Advertisment

முதல்வரின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, "கல்வி என்பது மாநில பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு ஒத்திசைவுப் பட்டியலுக்குச் சென்றிருக்கிறதே தவிர, ஒன்றிய அரசின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால், ஒன்றிய அரசின் பட்டியலில் கல்வி இருப்பது போல ஒன்றிய அமைச்சர் ஏகதிகாரமாகப் பேசுகிறார். இருமொழிக் கொள்கைக்கு எதிராக ஒன்றிய அரசு செயல்பட்டால், அதனை ஏற்க முடியாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு. இதற்கு மாறாக, ஒன்றிய அரசு தங்களின் கருத்தைத் திணிக்க முயல்வதும், நிதி அளிப்பதை முன்னிறுத்திப் பேரம் பேசுவதும் ஏற்கக்கூடியதல்ல.

ss

மக்களின் வரிப்பணத்தைத் தான் ஒன்றிய அரசு தருகிறதே தவிர, அவர்களின் சொந்த பணத் தைத் தரவில்லை. கூட்டாட்சியில் இருக்கும் ஒரு நாட்டை, ஒன்றிய அரசின் ஏகபோக ஆட்சிக்கு ஏற்றவகையில் மாற்ற முயற் சித்தால் தமிழ்நாடு கொந்தளிக் கும். உங்கள் அதிகாரத்தின் மூலம் இந்தியைத் திணிக்க முயற்சித்தால் அதன் விளைவு களை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது என மும் மொழிக் கொள்கைக்கு எதிராக மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா கூறியதை இப்போது நினைவு படுத்துகிறேன்''’என்கிறார் மிக அழுத்தமாக.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "இந்தியை ஏற்குமாறு மிரட்டுவதா? தலைக்கனம் வேண்டாம்'' என்று கண்டித்துள் ளார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "தமிழகத்தின் 40 லட்சம் மாணவர்களின் கல்வி சம்மந்தப்பட்ட விசயம் இது. இதில் அரசியல் செய்யக்கூடாது. புதிய கல்விக்கொள்கையை ஏற்க ஒன்றிய அரசு தொடர்ந்து வலியுறுத்தினால் மற்றொரு மொழிப்போர் உருவாகும். அதை சந்திக்க ஒன்றிய அரசு தயாராக இருக்கட்டும்''‘என்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் அ.தி.மு.க. எடப்பாடி பழனிச்சாமி, "தேசிய கல்விக் கொள்கையை கடைப்பிடித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்பதும், மும்மொழிக் கொள்கையை ஏற்க நிர்பந்திப்பதும் சரியல்ல. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும். இதில் எந்த மாற்றமும் கிடையாது''” என்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,‘"அனைத்து மாநிலங்களை யும் சமமாகக் கருதவேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மை யோடு நடத்துவது மிகப்பெரிய அநீதி. இது அரசமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட மிகப் பெரிய சவால். ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு இதனை முறியடிக்க வேண்டும்'' ’என்கிறார். இப்படி, தேசிய கல்விக் கொள்கை மூலம் ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பை தமிழக அரசியல் கட்சிகள் கண்டித்தும் எச்சரித் தும் வருகிற சூழலில், தமிழக கல்வியாளர் களிடமும் கொந்தளிப்பு உருவாகி வருகிறது.

st

கல்வியாளர்கள் சிலரிடம் பேசியபோது, ”"இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் கூட் டாட்சி தத்துவத்திற்கும், சமத் துவக் கோட்பாட்டிற்கும் எதிராக தேசிய கல்விக் கொள்கை இருக்கிறது. அதனால், மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என ஒன்றிய அரசு வலியுறுத்துவதை நிறுத்திவிட்டு, அரசிய லமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும் தேசிய கல்விக் கொள்கைத் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும். தேசிய கல்விக் கொள்கை திட்டம் என்கிற பேரில், மும்மொழிக் கொள்கை யின் வழியாக இந்தி மொழியை மாநிலங் களுக்குள் திணிக்கின்றனர்.

ssஇதை அனுமதித்தால், எதிர்காலத்தில், அரசியலமைப்பு சட்டத்துக்குப் புறம்பாக வேறு ஒரு கொள்கைத் திட்டத்தைக் கொண்டு வந்து மாநிலத்தின் அதிகாரத்தையும் உரிமைகளையும் ஒன்றிய அரசு பறிக்க முயலும். சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் கடமையிலிருந்து ஒன்றிய அரசு விலகிச்செல்கிறது. தேசிய கல்விக் கொள்கை என்பது கல்வித்தளத்தில் ஒரு வழிகாட்டுதலாக அமைய வேண்டுமே தவிர, ஒரே நேரத்தில் ஒரே மாதிரியை அனைத்து மாநிலங்களும் பின்பற்றியாக வேண்டும் என கட்டாயப்படுத்துவது மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி!

மாநிலங்களில் வரி வசூலிக்கும் உரிமை ஒன்றிய அரசுக்கு சென்ற பிறகு, கல்விக்கான நிதியை ஒன்றிய அரசே வழங்குகிறது. ஒன்றிய அரசு நிதியை ஒதுக்கீடு செய்ய மட்டுமே கடமை பெற்றது. ஆனால், அதனை பெறுகிற மாநில அரசுகளுக்குத்தான், அந்த நிதியை எப்படிச் செலவிட வேண்டும்? கல்வித் திட்டங்களை எப்படி செயல்படுத்த வேண்டும்? என்கிற அதிகாரம் இருக்கிறது. ஒன்றிய அரசுக்கு அதிகாரம் கிடையாது. இல்லாத அதிகாரத்தை வைத்துக்கொண்டு மிரட்டுவது ஒன்றிய அரசுக்கு அழகல்ல! நிதி ஒதுக்கீட்டை வைத்து மாநிலங்களை மிரட்டுவது ஆரோக்கியமானதும் இல்லை''’ என்கிறார்கள்.

மோடி அரசின் இந்தித் திமிர் பற்ற வைத்துள்ள தீ, தமிழகத்தில் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெறத் தூண்டியிருக்கிறது.