மீண்டும் ஒருமுறை பத்திரிகைகளின் குரல்வளை மீது பாய்ந்திருக்கிறது மோடி அரசு. நியூஸ் க்ளிக் பத்திரிகையின் முதலீட்டாளர்களில் ஒருவருக்கு சீனப் பின்னணி இருக்கிறது என்ற குற்றச்சாட்டுடன் நியூஸ் க்ளிக் பத்திரிகை அலுவலகத்திலும், அதில் பணிபுரியும் ஊழியர் களின் வீடுகள் உட்பட 50 இடங்களிலும் காவல்துறை சோதனை நடைபெற்று அந்நிறுவனம் சீல்வைக்கப் பட்டிருப்பது ஊடக நிறுவனங்களைக் கவலைகொள்ளச் செய்துள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பி.பி.சி. பத்திரிகை, 2002-ல் நடந்த குஜராத் கலவரத்தைக் குறித்து 2023-ன் தொடக்கத்தில் இரண்டு பாகங்களாக ஆவணப்படத்தை வெளியிட்டது. உடனடியாக அந்த ஆவணப்படம் இந்தியாவில் கிடைக்காதவாறு மோடி அரசு துரிதமாகச் செயல்பட்டது. பின் ஒருமாத இடைவெளியில் இந்தியாவிலுள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரிச் சோதனைகள் நடைபெற்றதோடு, அதன் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சோதனையின்போது வெளியேற முடியாமல் கெடுபிடியுடன் நடத்தப்பட்டனர்.
அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் "நியூஸ
மீண்டும் ஒருமுறை பத்திரிகைகளின் குரல்வளை மீது பாய்ந்திருக்கிறது மோடி அரசு. நியூஸ் க்ளிக் பத்திரிகையின் முதலீட்டாளர்களில் ஒருவருக்கு சீனப் பின்னணி இருக்கிறது என்ற குற்றச்சாட்டுடன் நியூஸ் க்ளிக் பத்திரிகை அலுவலகத்திலும், அதில் பணிபுரியும் ஊழியர் களின் வீடுகள் உட்பட 50 இடங்களிலும் காவல்துறை சோதனை நடைபெற்று அந்நிறுவனம் சீல்வைக்கப் பட்டிருப்பது ஊடக நிறுவனங்களைக் கவலைகொள்ளச் செய்துள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பி.பி.சி. பத்திரிகை, 2002-ல் நடந்த குஜராத் கலவரத்தைக் குறித்து 2023-ன் தொடக்கத்தில் இரண்டு பாகங்களாக ஆவணப்படத்தை வெளியிட்டது. உடனடியாக அந்த ஆவணப்படம் இந்தியாவில் கிடைக்காதவாறு மோடி அரசு துரிதமாகச் செயல்பட்டது. பின் ஒருமாத இடைவெளியில் இந்தியாவிலுள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமானவரிச் சோதனைகள் நடைபெற்றதோடு, அதன் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் சோதனையின்போது வெளியேற முடியாமல் கெடுபிடியுடன் நடத்தப்பட்டனர்.
அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் "நியூஸ் க்ளிக்' மீது நீண்ட காலமாகவே ஒன்றிய அரசு குறி வைத்து வந்தது. அதன் ஆசிரியரான புர்காயஸ்தா, 1975-ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே அவசரநிலைப் பிரகடனத்தை எதிர்த்து சிறைசென்றவர். அவர் பத்திரிகையாளரான போதும் எந்த சார்புமின்றி, அரசின் எதேச்சதிகாரப் போக்குகளை கடுமையாக விமர்சித்துவந்தார்.
இதனால் நியூஸ் க்ளிக் வலைத்தளத்தை அனுராக் தாக்கூர் உட்பட பா.ஜ.க. பிரபலங்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த நெவில்ராய்சிங்கம் இந்த வலைத்தளத்துக்கு நிதியுதவி செய்ததாக பகிரங்கமாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மூன்றாண்டுகளில் வெளிநாட்டிலிருந்து 38 கோடிக்கும் அதிகமாகப் பணம் பெற்றதாகக் குற்றச்சாட்டை வைத்து அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்றன.
2021-ல் நடைபெற்ற இந்த சோதனையில் இன்றுவரை சார்ஜ் சீட் பைல் செய்யப் படவில்லை. டெல்லி உயர்நீதிமன்றம், அந்த வழக்கில் எடிட்டரான புர்கயஸ்தாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியதுடன், அந்த நிறுவனத்துக்கு எதிராக நெருக்குதல் நட வடிக்கைகள் எதனையும் எடுக்கக்கூடாதெனவும் உத்தரவிட்டுள்ளது. இன்னுமொரு சமயத்தில் வருமான வரித்துறை, நியூஸ் க்ளிக் நிறுவனத் துக்கு எதிராகத் தொடர்ந்த ஒரு வழக்கையும் கீழமை நீதிமன்றம் ரத்துசெய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில்தான் அக்டோபர் 3-ஆம் தேதி டெல்லி காவல்துறையினர் நியூஸ் க்ளிக் அலுவலகத்தில் தீவிர சோதனைகளை மேற் கொண்டனர். வெறுமனே பத்திரிகை அலுவல கம் மட்டுமல்லாது, அதன் பத்திரிகையாளர்கள் 8 பேரின் வீடுகள் என சோதனை கடுமையாக இருந்தது. நியூஸ் க்ளிக் நிறுவனத்தில் பணிபுரி யும் சி.பி.எம். கட்சி ஊழியரின் மகன் ஒருவர், சீதாராம் யெச்சூரி வீட்டில் தங்கிப் பணி புரிந்துவருகிறார். இதனால் சீதாராம் யெச்சூரி வீடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.
இந்த தேடுதல் வேட்டையில் நியூஸ் க்ளிக்கின் தலைமை ஆசிரியர் பிரபிர் புர்காயஸ் தாவும் அமித் சக்கரவர்த்தியும் உபாவின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால் அந்த இருவர் எதற்காக கைதுசெய்யப்பட்டி ருக்கின்றனர் என்பதை இதுவரை காவல்துறை வெளிப்படுத்தவில்லை.
பொதுவாக, இந்த வலைத்தளம் சீனத் தொடர்புடன் கூடிய தீவிரவாத ஆதரவு நிலைப் பாட்டிலிருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அத்தகைய கட்டுரைகளையோ, சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்தை காட்டும் லிங்க்குகளையோ குற்றம்சாட்டியவர்கள் இதுவரை காட்டவில்லை. தலைமை ஆசிரியர் வரை கைதுநடந்துள்ள நிலையில், முதல் தகவல் அறிக்கையோ, என்ன குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டார்கள் என்ப தையோ அந்த நிறுவனத்துக்கு இதுவரை வெளிப் படுத்தவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் அங்கு பணிபுரிபவர்களின் செல்போன், டேப்லட்டுகள், கணினிகள் என பலவும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில் ஒன்றிய அரசின் இந்த நட வடிக்கைகளை விமர்சித்திருக்கும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, "பா.ஜ.க. அரசின் கொள்கை களை விமர்சிக்கும் ஊடகங்கள் தொடர்ந்து ஒன்றிய அரசால் பழிவாங்கப்படுகிறார்கள். அந்த வரிசையில் நியூஸ் க்ளிக் செய்தி நிறுவனத்தின் மீது ஒன்றிய அரசு தாக்குதல் தொடுத்துள்ளது. நான்காவது தூண் என்று கருதப்படும் பத்திரிகை ஊடகங்கள் செயல்பாட்டை முடக்கும் பாசிச நடவடிக்கைகள் கடும் கண்டனத்துக்குரியவை''’என்று தெரிவித்துள் ளார்.
தற்போது வெளிவரும் தகவல்களில், நியூஸ் க்ளிக் வலைத்தளம் குறித்து போலீசார் 45 நாள் ரகசிய விசாரணை நடத்தியதாகவும், தற்போதைய சோதனையில் 450 போலீசார் ஈடுபட்டதாகவும், நியூஸ் க்ளிக் தொடர்புடைய ஊழியர்கள் ஏ, பி, சி என மூன்று பிரிவாக பிரித்து விசாரிக்கப்பட்டதாகவும் நியூஸ் க்ளிக் செய்தித் தளத்தின் செய்திகள் மற்றும் வீடியோக்களை ஆராய தனி குழு அமைக்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது.
இத்தனை இருந்தும், என்ன குற்றச்சாட்டின் கீழ் பிரபிர் புர்கயஸ்தாவும், அமித் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டனர், சீனாவுக்கு ஆதரவாக நியூஸ் க்ளிக் தளத்தில் வெளியான செய்திகள் என்ன என்பதை காவல்துறையாலோ, அரசாலோ தெளிவாக வெளிப் படுத்த முடியாதது சந்தேகங்களை எழுப்புகிறது.
இந்தச் சோதனையே, அரசுக்கு எதிரான ஊடகத்துறைக் குரல்களை நசுக்கும் முயற்சி என்ற சந்தேகம் வலுப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.