ராகுல் காந்தி.

இந்திய தேசமே இப் போது இந்த பெயரைத்தான் தீவிரமாக உச்சரிக்கிறது... உணர்ச்சிவசப்படுகிறது... எதிர்காலத்தின் மீட்பராக நம்பத் தொடங்கியிருக்கிறது. கடந்த 2019 தேர்தலிலேயே தமிழ்நாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளரென்று முழுமன தாகச் சொல்லப்பட்ட ராகுல் காந்தியை, இந்தியாவிலுள்ள மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் பெரிதும் வரவேற்கவில்லை. வட இந்தியாவிலும் மோடி அலை யே வீசிக்கொண்டிருந்ததால், பப்பு என்று கிண்டலடிக்கப் பட்ட ராகுல்காந்தியால் காங் கிரஸை மீண்டும் கரையேற்ற முடியவில்லை. தற்போது, அடுத்த பாராளுமன்றத் தேர்தல் இன்னும் ஓராண்டில் வரவுள்ள நிலையில், சட்டென அரசியல் வானிலையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாக்கிரக தண்டி யாத்திரை, இந்திய மக்களிடையே சுதந்திரத் தீயைப் பரவச் செய்வதில் முக் கிய பங்கு வகித்தது. அதேபோல், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, சுமார் 4000 கி.மீ. தூரத் திற்கு ராகுல்காந்தி மேற் கொண்ட "பாரத ஒற் றுமை நடைபயணம்' ராகுல் காந்திக்கும் மக்களுக்குமான இடை வெளியை வெகுவாகக் குறைத்து, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியது. அவரது எளிய தோற்றமும், உத்வேகமும், தேசமெங்கும் நடந்தே பயணித்த தியாக உணர்வும், ராகுல்காந்தியை மக்களின் தலைவராக உயர்த்தியது.

raghulgandhi

இந்நிலையில் தான் உலகின் நம்பர் 2 பணக் காரரான கவுதம் அதானியின் பிரமாண்டத்தில் ஓட்டை போட்டது ஹிண்டன்பர்க் நிறுவனம். சீட்டுக்கட்டுபோல அதானியின் பிம்பம் உடைய உடைய... அவரைப் பின்னின்று தாங்கிப்பிடித்த மோடி அம்பலமானார். ஏற்கெனவே மோடியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடுமை யான ஜி.எஸ்.டி., கட்டண உயர்வுகள், விலைவாசி உயர்வெனப் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் மக்கள் மத்தியில், அதானி குறித்த ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு மோடியின் கள்ள மவுனம் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. பாராளுமன்றக் கூட்டுக்குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் அணிதிரண்டு போராட்டங்களில் இறங்க, ராகுலைக் குறிவைத்தது அதானி-மோடி கூட்டணி.

நான்காண்டுகளுக்கு முன்பே சூரத் நீதிமன்றத் தில் ஆறிப்போன வழக்கொன்றை உயிர்ப்பித்து, ராகுல்காந்திக்கு இரண்டாண்டுகள் சிறைத்தண்ட னை பெற்றுத் தந்ததோடு, மறுநாளே ராகுல்காந்தி யின் எம்.பி. பதவியைக் காலி செய்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதானிக்கும் மோடிக்கும் எதிராகப் பாராளுமன்றத்தில் குரலெழுப்பிய ராகுலுக்கெதிராக மோடி அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளை, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து எதிர்த்த ஆச்சர்யம் நிகழ்ந்தது.

ஏனென்றால், தற்போது மோடி தனி மனிதரல்ல... அவர் நினைத்தால் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை, நீதிமன்றம், தேர்தல் ஆணையம் வரை தங்கள் செல்வாக்கால் தேவைக்கேற்ப காரியங்களைச் சாதிக்க முடிகிறது என்பதைத் தொடர்ச்சியாகப் பார்க்க முடிகிறது. ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் மிரட்டி அடக்கி, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி யை இந்தியாவில் திணித்து, சர்வாதிகாரத்தோடு செயல்படுவதைக் காண முடிகிறது. வட இந்தியாவில் ஆம் ஆத்மி வலுவாகி வருகிறதா? டெல்லி துணை முதல்வரான மணீஷ் சிசோடியா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, சி.பி.ஐ. கைது செய்கிறது. இதேபோல், மேற்கு வங்கம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, புதுச்சேரி என பல மாநிலங்களிலும் பா.ஜ.க. தனது அதிகார பலத்தால் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்துவருகிறது. எதிர்க்கட்சிகள் ஓரணியாகத் திரள்வதில் தயக்கமிருந்ததால் பா.ஜ.க.வுக்கு சாதகமானது.

இச்சூழலில்தான் ராகுல்காந்தியின் குரலை பாராளுமன்றத்தில் முடக்குவதற்காக எம்.பி. பதவியை அதிரடியாகப் பறித்திருப்பது, சர்வாதிகாரத்துக்கு எதிராக ஓரணியில் திரளவேண்டிய அவசியத்தை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல்வேறு தலைவர்கள், ராகுலின் எம்.பி. பதவிப் பறிப்புக்கு எதிராகக் கடுமையாகக் கண்டனத்தைத் தெரிவித்ததோடு, "பயப்படுறிங்களா மோடி?' என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் போராட்டத்தை நடத்த... காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது ராகுல்காந்தி மீது ஏற்பட்டுள்ள அனுதாபம், இந்தியா முழுமைக்கும் மக்களின் எழுச்சியாக உருவெடுத்து வருகிறது.

"இந்த எழுச்சியை காங்கிரஸ் கட்சிக்கான வாக்குகளாக மாற்றுவது, ராகுல் காந்தி என்ற ஒற்றை மனிதரிடம் தான் இருக்கிறது. எனவே, நாடாளுமன்றத்தில் நுழைவதற்கான சட்டப் போராட்டத்தை ஒருபுறம் நடத்தியபடியே, மீண்டும் மக்களைச் சந்திக்க நடைபயணத்தை ராகுல் காந்தி தொடங்க வேண்டும். மக்களோடு மக்களாக இயங்கி சுதந்திரப் போராட்டத்தை நடத்திய காங் கிரஸ், மீண்டும் அதேபோன்ற போராட்ட முறைக்கு மாறவேண்டும். சுதந்திரப் போராட்டத்தில், 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைக் கம்பிகளுக் கிடையே கழித்தவரான ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன் ராகுல்காந்திக்கு, காலம் மிகப்பெரியதொரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது. மோடிக்கு மாற்று யார் இருக்கிறார்? என்ற கேள்விக்கு விடையாக ராகுல்காந்தி உருவெடுத் துள்ளார். இந்த நாட்டுக்காக உயிர்த் தியாகங்களைச் செய்துள்ள பரம்பரையிலிருந்து வந்தவரான ராகுல் காந்தி, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து செயல்பட்டால், பிரதமராக அரியணை ஏறுவதை மோடியே நினைத்தாலும் தடுக்க முடியாது' என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்!