"ஹலோ தலைவரே, பிரியங்கா காந்தியின் எழுச்சி, ஒட்டுமொத்த காங்கிரஸையும் உற்சாகப்படுத்தி வருகிறது.''”
"ஆமாப்பா, பிரியங்காவை அவங்க இன்னொரு இந்திராகாந்தியாக பார்க்கறாங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, கேரள மாநிலம் வயநாடு தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் முதன்முதலில் களமிறங்கியுள்ள பிரியங்காவுக்கு, அங்கே மக்கள் ஆதரவு பெருமளவுக்கு வலுத்திருக்கிறது. 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தாலும் 23 ஆம் தேதிதான் அங்கே வாக்குகள் எண்ணப்படுது. கடந்த தேர்தலில் அங்கு ராகுல்காந்தி வாங்கியதை விடவும் அதிக வாக்குகளை பிரியங்கா காங்கிரஸுக் குப் பெற்றுத்தருவார் என்று பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் சொல் கின்றன. இது ஒட்டுமொத்த காங்கிரஸையும் வெகுவாக உற்சாகப்படுத்தி யிருக்கிறது. உடல்நலப் பிரச்சினைகளில் இருக்கும் சோனியா காந்தி, இனி நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வார் என்றும், காங்கிரஸை ராகுலும், பிரியங்காவுமே, பா.ஜ.க.வுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவிற்கு வழிநடத்து வார்கள் என்றும் காங்கிரஸில் இருக்கும் சீனியர்கள் சொல்லிவருகிறார்கள். இது பா.ஜ.க.வை சற்று யோசிக்க வைத்திருக்கிறதாம். உருவத்தில் மட்டுமல்லாது, அதிரடி நடவடிக்கைகளிலும் அவர், தன் பாட்டியான இந்திராவை அப்படியே எதிரொலிக்கிறார் என்று பலரும் சொல்ல ஆரம்பித்திருப்பது பா.ஜ.க.வுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.''”
"தி.மு.க. நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் கேள்விகளால் குடைந் திருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசின் நலத்திட்டங்களை மாவட்ட வாரியாக ஆய்வு செய்துவரும் முதல்வர் ஸ்டாலின், கடந்த 9, 10 தேதிகளில் விருது நகர் மாவட்டத்தைக் கலக்கியிருக்கிறார். அப்படியே கட்சி ரீதியாக மாவட்ட தி.மு.க.வினருடன் ஆலோசனைக் கூட்டங் களையும் அவர் நடத்திவருகிறார். அந்த வகையில் விருதுநகர் மாவட்ட தி.மு.க.வின ருடன் அவர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியபோது, அங்கே மாவட்ட தி.மு.க.வில் நடக்கும் விசயங்கள் குறித்து சேகரித்து வைத்திருந்த டேட்டாக்களின் அடிப்படையில், தி.மு.க. நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்வி களைக் கேட்டுக் குடைந்து திணறவைத்திருக் கிறார். மேலும் அந்தக் கூட்டத்தில் பேசிய அவர்,’"நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை அடைந்ததைப் போல, வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நாம் முழு மையான வெற்றியை அடைந்தாகவேண்டும். நமது கழக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்களால், ஒவ்வொரு குடும்பமும் ஏதேனும் ஒரு வகையில் பலனடைந்துள்ளது. அதை மக்களிடமும் விவரித்து, அவர்களை ஈர்க்கவேண்டும். சின்ன அலட்சியம் கூட நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்'’என்றெல் லாம் கட்சி நிர்வாகிகளை உஷார் படுத்தி யிருக்கிறார்.''”
"சரிப்பா, கனிமொழி தரப்பு கொஞ்சம் அதிருப்தியில் இருக்கிறதே?''”
"சட்டமன்றத் தேர்தலுக்கு இப்போதே தயாராகிவரும் தி.மு.க. தலைமை, இளைஞர் கள் மற்றும் மகளிர் வாக்காளர்களையும் முழுதாகக் கவர்வதற்கான முன்முயற்சிகளை எடுத்துவருகிறது. இந்த நிலையில், தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரான கனிமொழிக்கு, உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்றும், அவர் ஓரங் கட்டப்படுகிறார் என்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் குமுறல்கள் அதிகரித்து வருகிறது. கனிமொழி மட்டும் அல்ல; கட்சியில் அவரது ஆதரவாளர்கள், அவருக்கு நெருக்கமான மகளிர் அணியினர் அனைவரையும் தி.மு.க. மா.செ.க்கள் ஓரங்கட்டிவருவதாகவும் அவர்கள் தரப்பு குமுறுகிறது. இப்படிப்பட்ட ஆதங்கங்களை விரைவில் கட்சித் தலைவராக ஸ்டாலின் சரிசெய்ய வேண்டும் என்று கட்சியின் சீனியர்கள் தரப்பும் தெரிவித்துவருகிறது. அதேநேரம், கனிமொழி தூத்துக்குடியைத் தாண்டி சிந்திப்பதில்லை என்கிற நொண்டிச்சாக்கு ஒன்றை அவருக்கு எதிராகப் பயன்படுத்து கிறார்கள். அதுவும் உண்மையில்லை.''”
"த.வெ.க. தலைவர் விஜய்யை பா.ஜ.க. இயக்குவதாக அவர்கள் கட்சி நிர்வாகிகளே சந்தேகிக்கிறார்களாமே?''”
"த.வெ.க. கட்சித் தலைவரான நடிகர் விஜய்க்கு, அரசியல் வியூக அமைப்பாளரான ஜான் ஆரோக்கியம் அரசியல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினாலும், அவர் அடிக்கடி ஆலோசனை பெறுவது புதுவை முதல்வர் ரெங்கசாமியிடம்தான் என்கிறார்கள். அவர் கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்த புஸ்ஸி ஆனந்த் மூலம் ஏற்பட்ட நட்புதான் அது என்றாலும், வாரத்திற்குச் சில முறையாவது ரெங்கசாமியுடன் பேசுகிறாராம் விஜய். பா.ஜ.க.வுடன் நட்பு வைத்துக்கொண்டு புதுவையில் ஆட்சியை நடத்திவரும் ரெங்கசாமி, விஜய்யுடன் இப்படி நெருங்கி இருப்பதால், ரெங்கசாமி வழியாக பா.ஜ.க. விஜய்யை இயக்கி வருகிறதோ என்கிற சந்தேகம், த.வெ.க. நிர் வாகிகள் மத்தியிலேயே எழுந்துள்ளதாம். இந்த நிலையில் புதுவையில் என்.ஆர். காங்கிர ஸுடன் விஜய் கூட் டணி அமைப்பதற் கான பேச்சு வார்த்தையை நடத்தி வருவதாக வும் சொல்கிறார்கள்.''”
"விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் புகைச்சல் கிளம்பி யிருக்கிறதே?''”
"விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான அர்ஜுன் ரெட்டியின் வாய்ஸ் ஆஃப் காமன் அமைப்பு நடத்தும் அம்பேத்கர் தொடர்பான நூல் வெளியீட்டு விழா, பெரும் பரபரப்பை ஏற் படுத்திவருகிறது. டிசம்பர் 6-ல் நடக்க இருக்கும் இந்த விழாவில் நூலை திருமா வளவன் வெளியிட, அதை த.வெ.க. கட்சித் தலைவ ரான நடிகர் விஜய் பெற்றுக்கொள்ள இருக்கிறார். இது தொடர்பாக அண்மை யில் நடந்த சிறுத்தைகள் கட்சி செயற்குழுவிலேயே வன்னியரசு, பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் திருமாவைப் பார்த்து, "நீங்கள் எதற்காக லாட்டரி அதிபர் மார்டின் மருமகனான ரெட்டிக்கு இவ்வளவு இடம் கொடுக்கிறீர்கள். நம் கட்சியின் போக்கை மாற்றும் அதிகாரத்தை அவர் எப்படிக் கையாளலாம்? கூட்டணி குறித்த கேள்வி உருவாகும் வகையில் அவர் எப்படி செயல்படலாம்?' என்றெல்லாம், அவரை வைத்துக் கொண்டே கேள்விகளை எழுப்பினார்களாம்.''”
"அதற்கு திருமா என்ன சொன்னா ராம்?''”
"அப்போதும் கூட அர்ஜுனுக்கு எதிராக எதையும் பேசாத அவர், நிர்வாகிகளுக்கு விளக்கம் கொடுத்த படியேயிருந்தாராம். கூட்டணி மந்திரி சபை குறித்து ரெட்டி எழுப்பும் கேள்விகள் குறித்தும் அங்கே விவாதங்கள் நடந்திருக் கின்றன. அ.தி.மு.க. கூட்டணி யை உருவாக்க முயலும் ரெட்டிக்கு திருமா தலை யசைப்பது போல் இருக்கிறது என்று சிறுத்தைகள் கட்சியிலேயே இருக்கும் சிலர் சொல்லிவரும் நிலையில், இல்லை.. இல்லை... தி.மு.க. வுடன்தான் கூட்டணி என்பதில் திருமா தெளிவாக இருக்கிறார். அதேசமயம், எந்தக் கருத்தையும் விவாதிப்பதில் தவறில்லை என்பது அவர் எண்ணம் என்று இன்னொரு தரப்பு சொல்கிறது. எனினும் ரெட்டி, தி.மு.க.வுக்கு எதிராக அங்கே வேப்பிலை யடிப்பதை நிறுத்துவதாகத் தெரியவில்லை.''”
"தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சீக்ரெட்டாக வெளிநாட்டுப்பயணம் சென்றிருக் கிறார்னு தகவல் அடிபடுதே?''”
"தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்காக மும்பை சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் அங்கு செல்லவில்லையாம். மாறாக, சீனாவுக்கு சீக்ரெட் பயணம் மேற்கொண்டிருக்கிறார் என்கிறார்கள். இதனை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நோட் போட்டிருக்கிறது மத்திய உளவுத்துறையான ஐ.பி. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனே ஷியா போன்ற வெளிநாடுகளில் நிறைய வழிகளில் முதலீடு செய்திருப்பதாக அவர் மீது ஏற்கனவே கண் வைத்திருக்கும் உளவுத்துறை யினர், தற்போது சீனாவுக்கு எதற்காகச் சென்றி ருக்கிறார் என்று விசாரிக்கிறதாம். இதற் கிடையே, தான் இல்லாத இந்த நேரத்தில் தென் காசியைச் சேர்ந்த ஒருவரிடம், கட்சியின் நிர்வா கத்தை அவர் கவனிக்கச் சொல்லியிருக்கிறாராம். அந்த நிர்வாகியும், தானே தமிழக காங்கிரஸ் தலைவர் ஆனதுபோல், ஏகப்பட்ட அலப்பறை பண்ணுகிறாராம். இது குறித்து கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கு ஏகத்துக்கும் புகார்கள் போய்க்கொண்டிருக்கிறதாம்.''”
"மகிளா காங்கிரஸ் பொறுப்பாளராக காமராஜர் பேத்தி நியமிக்கப்பட்டிருக் கிறாரே?''”
"தமிழக காங்கிரசில் உறுப்பினர் சேர்க்கை நடந்துவருகிறது. இந்த நிலையில், தமிழக மகிளா காங்கிரசின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரச்சாரப் பொறுப்பாளராக பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி கமலிகாவை கட்சியின் மேலிடம் நியமித்திருக்கிறது. இதற்கான உத்தரவை அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் ஆல்கா லம்பா பிறப்பித்திருக்கிறார். தற்போது, இந்தப் பொறுப்பில் ஹசினா இருந்துவருகிறார். உறுப்பினர் சேர்க்கையில் இந்த ஹசினாவை விட அதிக அளவில் உறுப் பினர்களைச் சேர்த்திருக் கிறாராம் கமலிகா. இதனால் உறுப்பினர் சேர்க்கைக்கான பொறுப் பாளர் பதவியும் அவ ருக்குக் கொடுக்கப்பட் டுள்ளது. விரைவில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராகவும் கமலிகா நியமிக்கப்படுவார் என் கிறார்கள். இதற் கிடையே, கமலிகா, காமராஜர் பேத்தி கிடை யாது என்கிற சர்ச்சையும் உருவானது. இது குறித்து விசாரித்தபோது, பெருந்தலைவர் காமராஜரின் சித்தப்பா மகனுக்கு மயூரி, கமலிகா என இரண்டு மகள்கள். மயூரி, தி.மு.க.வில் தற்போது இருக்கிறார். கமலிகா, காங்கிரசில் இருக்கிறார். மயூரியை காமராஜரின் பேத்தி என்று சொல்லும்போது, கமலிகாவையும் அப்படிக் குறிப்பிடுவதில் என்ன தவறு? என்று கேட்கிறது கமலிகா தரப்பு. காமராஜர் பேத்தி காட்டும் அதிரடிகளால் உற்சாகத்தில் இருக்கிறதாம் சத்தியமூர்த்தி பவன்.''”
"போலீசுக்கு பயந்து நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டாரே?''”
"தெலுங்கு பேசும் மக்களை இழிவாக விமர்சித்ததாக, முன்னாள் நடிகை கஸ்தூரி மீது, சென்னை, திருச்சி, மதுரை, தேனி ஆகிய இடங் களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக் கின்றன. விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மன் கொடுப்பதற்காக, போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவர் இல்லத்துக்கு போலீஸ் சென்றபோது, வீடு பூட்டியிருந்தது. அதேநேரம் அந்த வீட்டின் பின்பக்க வாசல் திறந்து போடப் பட்டிருந்தது. எனவே, போலீஸைப் பார்த்த தும் அவர் பின்வாசல் வழியாக நழுவியிருக் கிறார் என்று சொல் கிறார்கள். அதனால் சம்மனை போலீஸ் அவர் வீட்டுக் கதவில் ஒட்டிவிட்டுச் சென்றது. போலீஸ் வருவதை அவருக்குச் சொல்லி, உஷார் படுத்தியது யார் என்றும் காவல்துறை விசாரித்துவருகிறது. அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கவிருக்கிறார்களாம்.''”
"பண்ருட்டி ராமச்சந்திரன் பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறாரே?''”
"மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரனின் 80ஆவது பிறந்த நாள் விழாவை அவரது ஆதர வாளர்கள் கடந்த 10ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடி னார்கள். இதில் அரசியல் பிரபலங்கள் பலரும் நேரில் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர். ஓ.பி.எஸ்., சசிகலா இருவருக்கும் அரசியல் ஆலோசகராக இருந்துவருகிறார் பண்ருட்டியார். இதனால் ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் அன்று காலையிலேயே பண்ருட்டி ராமச்சந்திரனைத் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர். கிருஷ்ணகிரியில் நடந்த ஒரு நிகழ்ச்சிகாக சென்ற ஓ.பி.எஸ்., அங்கிருந்து நேரே பெங்களூர் செல்வதால், அவரால் நேரில் ராமச்சந்திரன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலவில்லையாம். சசிகலா தரப்பில் ஆவின் வைத்தியநாதன் நேரில் சென்று வாழ்த்தியிருக் கிறார். பா.ஜ.க. தரப்பிலிருந்தும் பண்ருட்டியை வாழ்த்தியதாகவும் சொல்கிறார்கள்.''”
"நானும் ஒரு தகவல் சொல்றேன். கடந்த அக். 23-25 நக்கீரன் இதழ்ல "திருச்செந்தூர் கோயில்ல எடப்பாடிக்கு எதிராக வேலுமணி யாகம் நடத்தியதாகவும், அதில் மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டார்' எனவும் செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் சமீபத்தில் கடம்பூர் ராஜுவின் தந்தை இறந்த காரணத்தால் அ.தி.மு.க. கட்சி நிகழ்ச்சிகளைத் தவிர தெய்வ வழிபாடு நிகழ்ச்சிகள் எதிலும் அவர் கலந்து கொள்ளவில்லையென்றும், இது அவருடைய அரசியல் எதிரிகளால் வேண்டுமென்றே பரப்பப்பட்ட வதந்தி என்றும் அவர்கள் தரப்பில் சொல் கிறார்கள். மேலும் கடந்த இதழ் ராங்லிகால் பகுதியில் முதல்வரின் அலுவலக இணை இயக்குநர் மாறன் பற்றி செய்தி வெளி யிட்டிருந்தோம். அது முற்றிலும் தவறானது என்றும், அவருக்கு வேண்டாத சிலபேர் அவரைப் பற்றி தவறான வதந்திகளைப் பரப்புவதாகவும் கோட்டையில் பேசிக்கொள்கிறார்கள்.''
___________
இறுதிச் சுற்று!
சென்னையில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் திங்கள்கிழமை (11-11-24) காலையில் அமலாக்கத்துறையினர் நடத் திய அதிரடி சோதனை, பரபரப்பை ஏற்படுத்தியது. சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனங்களில் வரி ஏய்ப்பு நடப்பதாக அமலாக்கத்துறையினருக்கு தொடர்ச்சியான புகார்கள் பறந்துள்ளன. இதனைத் தொடர்ந்து சோலர் பேனல் தயாரிப்பு நிறுவனங் களை கண்காணிக்கத் தொடங்கியது அமலாக்கத் துறை. இந்த நிலையில், சோலார் பேனல் தயாரிக்கும் பிரபல நிறுவனமான ஓ.பி.ஜி. பவர் அண்ட் இன்ஃப்ரா மின் உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய சென்னை ஆர்.ஏ.புரம், கீழ்பாக்கம், ஆழ்வார்பேட்டையில் உள்ள இடங்களில் அதிரடி ரெய்டு நடத்தியிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைந்துள்ள செங்கல்பட்டு மற்றும் ஆந்திர எல்லையான தடா உள்ளிட்ட இடங்களிலும் அமலாக் கத்துறை நடத்திய சோதனையில்... பல்வேறு ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
-இளையர்