தமிழக அமைச்சரவை மூன்றாவது முறையாக மாற்றியமைக்கப்பட்டதில் ஏகப்பட்ட திரைமறைவு வேலைகள் ஆட்சியிலும் கட்சியிலும் அதிகாரிகள் மத்தியிலும் நடந்துள்ளது என்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக் கிறார். அதற்குள் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என செய்திகள் வெளியாயின. அந்த மாற்றத்தை ஏழாம் தேதி தி.மு.க. அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடியும் விழாக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. யார் யார் மாற்றப்படப் போகிறார்கள் என ஒரு பெரிய லிஸ்ட்டே தயாரானது.
ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ராணிப்பேட்டை காந்தி இவர்களுடன் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாற்றப் படுவதுடன், புதிய அமைச்சர்களாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, கிருஷ்ணகிரி மதியழகன் ஆகியோரின் பெயர் விவாதிக்கப் பட்டது.
ஆவடி நாசர் கட்சிக்காரர் என்ற அடிப்படையில் நல்லமுறையில் பணி புரிந்துள்ளார் என பொதுவாகக் கட்சிக்காரர்கள் மத்தியிலும் ஸ்டாலின் குடும்பத்தின ரிடமும் நல்ல பெயரை பெற்றிருந்தார். ஒரு செயலை சிறப்பாக செய்து முடிப்பதில் நாசர் செயல் வீரர் என முதல்வரே பாராட்டும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன.
ஆனால், அவருக்கு எதிராக திருவள்ளூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தலைமையில் ஏகப்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டன. நாசர் மகன் ஆசீம்ராஜாவின் செயல்கள் மிக மோசமாக இருந்தது என புகார்கள் எழுந்தன. ‘செடாய்’ என்கிற பெரிய நிறுவனம் ஆசீம்ராஜாவுக்கு எதிராக ஒரு மிகப்பெர
தமிழக அமைச்சரவை மூன்றாவது முறையாக மாற்றியமைக்கப்பட்டதில் ஏகப்பட்ட திரைமறைவு வேலைகள் ஆட்சியிலும் கட்சியிலும் அதிகாரிகள் மத்தியிலும் நடந்துள்ளது என்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். முதல்வர் ஸ்டாலின் விரைவில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக் கிறார். அதற்குள் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என செய்திகள் வெளியாயின. அந்த மாற்றத்தை ஏழாம் தேதி தி.மு.க. அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடியும் விழாக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது. யார் யார் மாற்றப்படப் போகிறார்கள் என ஒரு பெரிய லிஸ்ட்டே தயாரானது.
ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ராணிப்பேட்டை காந்தி இவர்களுடன் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மாற்றப் படுவதுடன், புதிய அமைச்சர்களாக மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, கிருஷ்ணகிரி மதியழகன் ஆகியோரின் பெயர் விவாதிக்கப் பட்டது.
ஆவடி நாசர் கட்சிக்காரர் என்ற அடிப்படையில் நல்லமுறையில் பணி புரிந்துள்ளார் என பொதுவாகக் கட்சிக்காரர்கள் மத்தியிலும் ஸ்டாலின் குடும்பத்தின ரிடமும் நல்ல பெயரை பெற்றிருந்தார். ஒரு செயலை சிறப்பாக செய்து முடிப்பதில் நாசர் செயல் வீரர் என முதல்வரே பாராட்டும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன.
ஆனால், அவருக்கு எதிராக திருவள்ளூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் தலைமையில் ஏகப்பட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டன. நாசர் மகன் ஆசீம்ராஜாவின் செயல்கள் மிக மோசமாக இருந்தது என புகார்கள் எழுந்தன. ‘செடாய்’ என்கிற பெரிய நிறுவனம் ஆசீம்ராஜாவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய புகாரை சொல்லியது. இந்தப் புகார் பற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவும் புலனாய்வுத்துறை தலைவர் டேவிட்சன் ஆசீர்வாதமும் நாசரிடம் பேசினார்கள். அதற்கு நாசர் “"கட்சி விவகாரங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், அரசு வேலைகளை மட்டும் நீங்கள் செய்யுங்கள்'’என பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது.
டேவிட்சன் ஆசீர்வாதம் நாச ரைப் பற்றி முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயச்சந்திர னிடம் புகாரைக் கொண்டு செல்ல, அவர் முதல்வ ரிடமே நாசர் பற்றி யும் அவரது மகன் பற்றியும் வரும் புகார் களை எடுத்துச் சொன்னார். நாசரின் கட்சி எதிரிகள் அவருக்கு எதிரான செய்திகளை தொடர்ந்து ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர். டேவிட்சன் ஆசீர்வாதம் மட்டும் இதுவரை ஆறு ரிப்போர்ட்டுகளை நாசருக்கு எதிராக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் ஆவின் நிறுவன செயல்பாடு கள் மிகவும் மோசமடைந்தது என வந்த புகாரைத் தொடர்ந்து அங்கு வேலை பார்த்த கந்தசாமி என்கிற அதிகாரியை மாற்றிவிட்டு சுப்பையா என்கிற அதிகாரியை ஆவினில் நிர்வாக அதிகாரியாக நியமித்தார் உதயச்சந்திரன்.
“சுப்பையா அமைச்சர் நாசரை மதிக்கவில்லை. அவர் நேர்மையான அதிகாரி என்றாலும் முடிவெடுப்பதில் மிகவும் தாமதம் செய்கிறார்” என நாசர் அவர் மீது புகார் கூறினார். நாசரின் புகாருக்குப் பதில் அளித்த சுப்பையா, "நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன், என்னை சாதியின் பெயரால் திட்டுகிறார் நாசர்'’என தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசாவிடம் புகார் தெரிவித்தார். சுப்பையாவின் இந்தப் புகார் பற்றி உதயச்சந்திரனும் டேவிட்சன் ஆசீர்வாதமும் முதல்வரிடம் சொல்ல, நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தெரிந்து கொண்ட நாசர் அவருக்கு நெருக்கமான முதல்வரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் முறையிட்டார்.
திருவள்ளூர் மாவட் டத்தில் நாசரைப் போல கட்சிப் பணியாற்ற யாரும் இல்லை என நாசருக்கு நெருக்கமானவர்கள் தி.மு.க. தலைமையிடம் பேசினார்கள். ஆனால், அதிகாரிகள் சொல்வது தான் இறுதியில் ஜெயித்தது. ‘நாசர் மாற்றப்படு கிறார்’ என கவர்னர் மாளிகைக்கு செய்தி சென்று சேர்ந்தது என்கிறார்கள் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நீலகிரியில் வனத்தை அழித்து சாலை போட்டு தனது உறவினர்களின் நிலத்தை வணிக ரீதியாக மேம்படுத்த உதவுகிறார் என முதல்வரின் செய லாளர் உதயச்சந்திரனுக்கு நெருக்கமான சுப்ரியா சாகு என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி புகார் எழுப் பினார். தி.மு.க.வில் உள்ள ராமச்சந்திரனின் எதிரிகள் அதை மீடியாக்களில் செய்தியாக்கினர்.
ராணிப்பேட்டை காந்திக்கு உடல்நிலை சரியில்லை. வேலூர் மண்டலத்தில் துரைமுருகன் அமைச்சராக இருக்கிறார். காந்திக்கு சட்ட மன்றத்தில் பேசத் தெரியவில்லை. அவரது செயல்பாடுகளும் சரியில்லை. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்சி மிகவும் பலவீனமாக இருக் கிறது. ஏதாவது ஒரு பெரிய அலை வந்தால்தான் பா.ம.க வலுவாக உள்ள அந்த மாவட்டத்தில் தி.மு.க.வைக் காப்பாற்ற இயலும். அத்துடன் அவர் கட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் தி.மு.க. பலவீனமாக இருக்கிறது. எனவே அந்த மாவட்டத் தைச் சேர்ந்த கவுண்டர் சமூகத்தின் பிரதிநிதியாக மதியழகனை அமைச்சர் ஆக்கலாம் என்கிற யோசனை முன்வைக்கப் படடது.
அதேபோல் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தேவேந்திர குல வேளாளர் சமூகத் தைச் சேர்ந்தவர். அதே சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தமிழரசியை அமைச்சர் ஆக்கலாம் அல்லது சங்கரன்கோவில் தொகுதி யைச் சேர்ந்த ராஜாவை அமைச்சர் ஆக்கலாம் என்கிற யோசனைகள் தி.மு.க. மேலிடத்தால் பரிசீலிக்கப்பட்டது. தமிழரசி மதுரை மாவட்டம் சோழ வந்தான் தொகுதியில் போட்டியிட விரும்பினார். “அவர் சீனியர். அவர் இங்கு போட்டியிட வேண்டாம்” என மதுரையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் அவரை சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிட வைத்தார். அதே அமைச்சர் தமிழரசி அமைச்சர் ஆவதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். “சங்கரன்கோவில் ராஜா அமைச்சரானால் தனது செல்வாக்கு குறைந்துவிடும்” என கடும் எதிர்ப்பை மற்றொரு சீனியர் அமைச்சர் பதிவு செய்தார். இந்த எதிர்ப்புகள் காரணமாக தமிழரசி, சங்கரன்கோவில் ராஜா ஆகியோர் அமைச்சர் ஆகும் வாய்ப்பு பறிபோனது.
திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணனை அமைச்சர் ஆக்காமல் டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சர் ஆக்குவதற்கு எதிராக திருவாரூர் மாவட்டத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரிய அளவில் பிரச்சாரம் தி.மு.க. உடன்பிறப்புக்களால் நடத்தப்பட்டது. பூண்டி கலைவாணனை தொடர்புகொண்ட தி.மு.க. தலைமை, “டி.ஆர்.பி. ராஜாவின் தந்தை டி.ஆர்.பாலு தி.மு.க.வின் மூத்த தலைவர். அவர் வயது மூப்பின் காரணமாக நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. எனவே, அவரது மகனை அமைச்சர் ஆக்குகிறோம்’என விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனாலும் டி.ஆர்.பி. ராஜாவுக்கு முக்கியமான துறை எதுவும் தரக்கூடாது என டெல்டா மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர் ஆக பார்த்துக் கொள்ளும் அமைச்சர் ஒருவர் கடும் அழுத்தம் கொடுத்தார். இந்நிலையில் அமைச்சர் நாசர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்கிற நிலையில் டி.ஆர்.பி. அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க. தலைமையிடமும் அதிகாரிகளிடமும் தி.மு.க. அமைச்சர்களிடமும் கெட்டபெயரை தனது அணுகுமுறை மூலம் பெற்ற நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன், தகவல் தொழில்நுட் பத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார். நாசரை விட அனைத்து மட்டங்களிலும் தனது அணுகு முறையால் அவப்பெயர் பெற்றுள்ள பி.டி.ஆரை அமைச்சரவையிலிருந்து நீக்கினால் அது அண்ணா மலை, அவர் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு தீனி போட்டதுபோல் ஆகிவிடும் என முதல்வர் ஸ்டா லின் பி.டி.ஆரின் இலாகாவை மட்டும் மாற்றினார். அதேபோல் ராமச்சந்திரனை மாற்றினால் நீலகிரி மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாது போய்விடும் என்பதால் அவரது மாற்றம் தவிர்க்கப்பட்டது. மனோதங்கராஜ் தி.மு.க. தலைமையிடம் நல்ல பெயர் எடுத்துள்ளதால், நாசரின் துறை அவருக்கு வழங்கப்பட்டது.
தங்கம் தென்னரசின் சமீபகால செயல்பாடு கள் அவர் கவர்னருக்கு எதிராக நடத்திய அறிக் கைப் போர் மற்றும் தொழில் வளர்ச்சியில் அவர் காட்டும் முன்னெடுப்பு போன்றவை அவருக்கு நிதித்துறையைப் பெற்றுத் தந்தது. இப்படி ஏகப் பட்ட புயல் மற்றும் சுழல் காற்றுகளுக்கு நடுவே அமைச்சரவை மாற்றம் நடந்து முடிந்துள்ளது. இதில் முக்கிய பங்கு வகித்தவர் முதல்வரின் முதன்மைச்செயலாளரான உதயச்சந்திரன். அடுத்து, "ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மாற்ற முதல்வர் திட்டமிட்டுள்ளார். அதற்கான வேலைகள் முதல்வர் அலுவலகத்தில் நடந்துவருகிறது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். பெயரும் பெரிதாக அடிபடுகிறது' என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்