தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகு கிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது. தற்போது மதுரையில் வீட்டுமனைப் பட்டா விவகாரத்தால் இப்பிளவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ss

செப்டம்பர் 9ஆம் தேதி அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மதுரை ஒத்தக்கடை பகுதியில் கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலுள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இவ்விழாவில் எம்.பி. சு.வெங்கடேசனும் கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதியன்று, மதுரை மாநகராட்சி பகுதி களுக்குள் பல ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டுமெனக்கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் நோக்கி மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களைத் திரட்டி, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி, எம்.பி. சு.வெங்கடேசன் தலைமையில் நடந்தது. அப்போது அவர், "பத்தாயிரம் பேருக்கு பட்டா கொடுத்தாங்க, ஆனால் இன்னும் மாநகராட்சிப் பகுதியிலுள்ள ஏழை களுக்கு பட்டா கொடுக் காம அரசாணை வெளி யிடாம இருக்காங்க'' என தி.மு.க. அரசைக் குறை கூறிப் பேசியது, தங்களை வேண்டுமென்றே சீண்டுவ தாக தி.மு.க.வினர் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தியது. இதோடு விடாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்ற கிளை மாநாட்டுக் கோரிக் கைகளாக, "மோசமாக உள்ள வண்டியூர் சாலை யை உடனடியாக செப்பனிட வேண்டும், ரேஷன் கடைகளில் தரமில்லாத பொருட்களும், எடை குறைவாகவும் வழங்குவதைத் தடுக்க வேண்டும்' என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் பேனர் வைக்கப்பட்டது.

இது தி.மு.க.வினரை எரிச்சல்படுத்த, அதற்கு பதிலடியாக, "மதுரை எம்.பி. தொகுதியில் இருமுறை வென்றும் நன்றி தெரிவிக்க வரவில்லையென்றும், வண்டியூர் மக்களுக்காக இதுவரை செய்ததென்ன என்று கேள்வியெழுப்பியும், வண்டியூர் பொதுமக்கள் பெயரில் எம்.பி. வெங்கடேசனை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம், மார்க்சிஸ்ட் கட்சியினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. அமைச்சர் மூர்த்தியின் ஏற்பாட்டில்தான் இது நடக்கிறதென்று கோபப்பட்ட எம்.பி. வெங்கடேசன், பத்திரிகை யாளர்களிடம் பேசுகையில் அமைச்சர் மூர்த்தியை ஒருமை யில், "ரோடு போடுங்க, ரேசன் கடையில் நல்ல பொருளப் போடுங்கன்னு சொல்லி ப்ளக்ஸ் வச்சா கோபம் வருதா? ரேஷன் கடையில் தரமான பொருள் வை எனும்போது ஒருத்தனுக்கு கோபம் வருகிறதென்றால், தரமில்லாத பொருளை, எடை குறைவானதைப் போடுவதற்கு காரணமான நபராகத் தான் இருக்கும். நாங்க இங்க வண்டியூரில்தான் இருக்கோம். உன் ரேஷன் தட்டோடு ரேஷன் கடைக்கு வந்து சேரு. பின்னாலிருந்துகொண்டு, எங்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, பொதுமக்கள் என்று பெயர்போட்டு, நீங்கள் அசிங்கப்பட்டுக்கொள்ளாதீர்கள்'' என்று பேச...

Advertisment

ss

அதற்கு அமைச்சர் மூர்த்தியோ, தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசியபோது, "மதுரையில் விரைவில் மீண்டும் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு முதல்வரும். துணை முதல் வரும் விரைவில் பட்டா வழங்கவிருக்கிறார்கள். இதில் எவனும் உரிமை கொண்டாட முடியாது. தகுதியில்லாதவர்களை அழைத்து பட்டா கொடுக்கிறேன் எனச்சொல்லி திசை திருப்புகிற வேலையை விட்டுவிடுங்கள். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். நீர்நிலை, புறம்போக்கு பகுதியிலிருப்பவர்களுக்கு பட்டா வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றி வருபவர்களை நம்பி ஏமாந்துவிட வேண்டாம். முதல்வர் சொன்னதைப் போல, யாரை நம்பியும் நாம் இல்லை. நம்மை நம்பி இருப்பவர்களுக்கு உற்றதுணையாக இருப்பது தான் தி.மு.க.'' என்று காட்டமாகப் பேசினார்.

அடுத்தடுத்து தி.மு.க.வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகளைப் பார்க்கையில் கூட்டணி குறித்து கேள்விகள் எழுகின்றன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மதுரையில் தி.மு.க.வின் மூன்று மாவட்டச் செயலாளர்களும் ஒருமித்த குரலில் தி.மு.க.வே போட்டியிட வேண்டுமென்று கோரியபோதும், ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்ததால் சு.வெங்கடேசன் அந்த வாய்ப்பைத் தட்டிச்சென் றார். இருந்தபோதும் வேறுபாடு மறந்து அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தனர். தொடர்ந்து தனது ஆதரவாளரான நாகராஜனை மதுரை மாநகர துணைமேயராகக் கொண்டுவந்தார் வெங்கடேசன். கடந்த ஒரு வருடமாக, தனது தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தை ஏற்பாடு செய்த எம்.பி. வெங்கடேசன், அமைச்சர் மூர்த்தியின் கிழக்கு தொகுதியில் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தை, அமைச்சரின் கவனத்திற்கே வராமல் நடத்தி முடித்தது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யது. இதனைத் தொடர்ந்து, துணை முதல் வர் உதயநிதி மதுரை வந்து போனபின்பு தொடர்ச்சியாக தி.மு.க.வைக் குறிவைத்து அரசின் நலத் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியதோடு, கேலிசெய்து பிளக்ஸ் பேனர் வைத்தனர். அடுத்ததாக, மதுரையில் செல்வாக்குமிக்க அமைச்சரை எம்.பி. சு.வெங்கடேசன் ஒருமையில் பேசியது, தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவதற்கான ஒரு எச்சரிக்கையைக் கொடுக்க மார்க்சிஸ்ட் நினைக்கிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

Advertisment