காரைக்கால் ராத்திரி ரவுசு! -மிட்நைட் மசாலா

midnightmasala

மாலை 6:30 மணி.… சூரியன் இஞ்ச் பை இஞ்சாக மறையத் தொடங்கியது. தலை நிறைய மல்லிகைப் பூவோடும்… லோ-ஹிப்பில் புடவையோடும் "விண்ணைத்தாண்டி வருவாயா' த்ரிஷா ரேஞ்சுக்கு இரண்டு பெண்கள் சாலையில் திரியும் சிம்புகளை சுண்டி இழுத்தபடி நடந்து சென்றார்கள். அவர்களிடமிருந்து வந்த செண்ட் வாசம்… காரைக்கால் கடை வீதியை கமகமக்கவைத்தது.

"யார்ரா இது… இம்புட்டு ஆட்டம் ஆடிக்கிட்டுப் போறது'’ என்று ஒரு வயசுப்பையன் கமெண்ட் அடிக்க...…அந்த செண்ட் வாசனைப் பெண்களை கடந்துசென்று, காரைக்கால் அம்மையார் கோயில் அருகேயுள்ள பெட்டிக்கடையில் நமது டூவீலரை நிறுத்திவிட்டு மாலைநேர செய்தித்தாள்களை வாங்கி படிக்க ஆரம்பித்தோம். மீண்டும் அதே செண்ட் வாசனை நம் சுவாசத்துக்குள் புகுந்து நுரையீரலை பிறாண்டியது. புருவம் உயர்த்தி நம் கண்களை கூர்மையாக்கிக்கொண்டு பார்த்தபோது, அப்பெண்கள் நம்மை பார்த்து ஒரு சிரிப்பை வீசினர். பதறிப்போய் தலையை வேறு பக்கம் திருப்பி கண்களால் கொஞ்சம் ஸூம் செய்தோம். அவர்கள் பெண்கள்

மாலை 6:30 மணி.… சூரியன் இஞ்ச் பை இஞ்சாக மறையத் தொடங்கியது. தலை நிறைய மல்லிகைப் பூவோடும்… லோ-ஹிப்பில் புடவையோடும் "விண்ணைத்தாண்டி வருவாயா' த்ரிஷா ரேஞ்சுக்கு இரண்டு பெண்கள் சாலையில் திரியும் சிம்புகளை சுண்டி இழுத்தபடி நடந்து சென்றார்கள். அவர்களிடமிருந்து வந்த செண்ட் வாசம்… காரைக்கால் கடை வீதியை கமகமக்கவைத்தது.

"யார்ரா இது… இம்புட்டு ஆட்டம் ஆடிக்கிட்டுப் போறது'’ என்று ஒரு வயசுப்பையன் கமெண்ட் அடிக்க...…அந்த செண்ட் வாசனைப் பெண்களை கடந்துசென்று, காரைக்கால் அம்மையார் கோயில் அருகேயுள்ள பெட்டிக்கடையில் நமது டூவீலரை நிறுத்திவிட்டு மாலைநேர செய்தித்தாள்களை வாங்கி படிக்க ஆரம்பித்தோம். மீண்டும் அதே செண்ட் வாசனை நம் சுவாசத்துக்குள் புகுந்து நுரையீரலை பிறாண்டியது. புருவம் உயர்த்தி நம் கண்களை கூர்மையாக்கிக்கொண்டு பார்த்தபோது, அப்பெண்கள் நம்மை பார்த்து ஒரு சிரிப்பை வீசினர். பதறிப்போய் தலையை வேறு பக்கம் திருப்பி கண்களால் கொஞ்சம் ஸூம் செய்தோம். அவர்கள் பெண்கள் அல்ல திருநங்கைகள் என்பதை உணர்ந்தோம். சீரியல் நடிகைகளைப்போல ஓவர் மேக்-அப்பில் காட்சியளித்தார்கள்.

midnightmasala

""என்ன தம்பி பார்க்குறீங்க?''’என்று கணீர் குரல் கடைக்காரரிடமிருந்து வர...…""அய்யோ… பேப்பர் படிக்கிறேண்ணா''’என்று நாம் சமாளிக்க...…""நீங்க பேப்பர் படிச்சுக்கிட்டிருந்த அழகை நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன். ஏரியாவுக்கு புதுசா? காரைக்காலில் ரெண்டாவது ஷோ அவங்க ஆட்டம்தான். பை-பாஸ் ரோட்டுக்கு போறாங்க. ஏகப்பட்ட திருநங்கைகள் இங்க இருக்காங்க. கடற்கரை சாலை, நெடுங்காடு, பேரளம் சாலை, நாகை சாலை, வாஞ்சூர் உள்ளிட்ட 6 இடங்களில் பிரிஞ்சி நின்னு விசில் அடிச்சி கூப்பிடுவாங்க. இளவட்டப் பசங்களில் ஆரம்பிச்சு 60 வயசு பெரிசுங்க வரைக்கும்…"ஹும்...'’என்று பெருமூச்சுவிட்ட கடைக்காரரின் பேச்சிலுல் ஒரு ஏக்கம் வெளிப்பட்டதை அப்பட்டமாக பார்க்க முடிந்தது.

நமக்கோ இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்களே என்ற எண்ணம் மேலோங்க…"என்னதான் பண்றாங்க பார்க்கலாம்?' என்று யோசித்தபடி… பின்தொடர்ந்தோம். காரைக்காலில் இளைஞர்கள் அதிகமாகக் கூடும் முக்கிய வீதிகளையும் சுழன்றடித்து சிக்னல் கொடுத்துக்கொண்டே போனார்கள். போக்குவரத்தை சீர்செய்யும் சாலைகளில் உள்ள சிக்னல்களைவிட இவர்களது சிக்னல்கள் போக்குவரத்தை சீர்குலைத்தன. பீச் சாலை சென்றபோது நாம் பின்தொடர்வதை பார்த்துவிட்ட திருநங்கைகள், ""ஆச இருந்தா நேரா வரவேண்டியதுதானே? எதுக்கு தயங்கி தயங்கி வந்துக்கிட்டிருக்க. எவ்ளோ பணம் வெச்சிருக்க? நைட்டு முழுக்க பீச் மணல்லேயும் கடல் காத்துலேயும் ஜாலியா இருக்கலாம். ரூம்லன்னா அதுக்கு வாடகையை தனியா கொடுக்கணும். இல்ல… கொஞ்ச நேரம்னா 200 ரூபாய் போதும். எது வசதி? முன்னாடி போயி பாலிடெக்னிக் காலேஜுக்கு பின்னால இருக்கிற முந்திரிக்காட்டுல நில்லு''’என்றதுதான் தாமதம்... ""அம்மா... தாயே நான் அதுக்கு வரல. உங்க வேலையை நீங்க பாருங்க. என் வேலையை நான் பார்க்கிறேன்''’என்று அந்த இடத்திலிருந்து அப்பீட் ஆனோம்.

காரைக்கால் மேடு மீனவர் குப்பத்திற்கு போகும் வழி நெடுகிலும் வெளிமாநில கல்லூரி இளசுகள் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து காத்து வாங்கியபடியே கடலை போட்டுக் கொண்டிருந்தன. ஜோடியே இல்லாதவர்கள் "எனக்கொரு கேர்ள் ஃப்ரண்ட் வேணுமடா'’ என்று பாடுவதுபோல் பொறாமை பொங்க உட்கார்ந்திருக்கிறார்கள். காரைக்காலையும் நாகையையும் இணைக்கும் வாஞ்சூர் செக்போஸ்ட்டுக்கு பக்கத்தில் ஏராளமான ஒயின் ஷாப்புகளும் பார்களும் இரவு-பகல் வித்தியாசமில்லாமல் அனுமதியின்றி இயங்கிக்கொண்டிருந்தன.

திருநள்ளாரையும் பொறையாரையும் இணைக்கும் வெளிவட்டச்சாலை நெடுகிலும் டாஸ்மாக். ""ஏற்கனவே பாக்கி 1200 ரூபா இருக்கு. இப்போ காசு இல்லைன்னு ஃப்ரியா கூப்பிடுறியே இது நியாயமா?'' என்று லாரி டிரைவரிடம் ஒரு திருநங்கை வேதனையுடன் கேட்டுக்கொண்டிருக்க...… திடீரென்று "சிங்கம்' படத்தில் வரும் போலீஸ் வாகனம் போல ஒன்று சீறிப் பாய்ந்துவர...… திருநங்கைகளும் ஆண்களும் ஓட்டம்பிடித்தனர். பதட்டமான நாம் தூரத்தில் நின்று நோட்டமிட்டபோதுதான் ஒரு சிலரை அதிரடியாக கைது செய்து வேனில் ஏற்றியது சிங்கம் போலீஸ். இதில், சிங்கம் போலீஸிடம் ஒரு திருநங்கைகூட சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் வாகனம் போனதும் திரும்ப அதே இடத்தில் அசம்பிள் ஆன திருநங்கைகளைப் பார்த்து பேரதிர்ச்சியடைந்தோம். காரணம், 7 திருநங்கைகளில் 2 பேர் ஆண்கள். ஆனால், அவர்களும் திருநங்கைகள் வேடமிட்டுக்கொண்டு திருட்டுவேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்தது.

கடற்கரைப் பக்கம் வண்டியைத் திருப்பினோம்.…சோர்வாக உட்கார்ந்திருந்த திருநங்கைகளிடம் பேச்சுக் கொடுத்தபோது, ""எங்க குடும்பத்தார் எங்களை பிள்ளையா மதிச்சு ஏத்துக்கிட்டாலே இந்தமாதிரி தொழிலுக்கு வரமாட்டோம். சோத்துக்கு வழியில்லாமதான் பிச்சை எடுக்கிறோம். இப்படி தப்பான தொழில் பண்றதுல கிடைக்குற வருமானத்துல போலீஸுக்கு லஞ்சம், வீட்டு வாடகை, மேக்-அப், சாப்பாட்டுக்கே பத்தாது''’ என்கிற திருநங்கைகளின் தீராத பிரச்சனை... நம் இதயத்தில் வலியை உண்டாக்க,… வீடு வந்து சேர்ந்தோம்.

(பயணிப்போம்)

-ரவுண்ட் அப்: செல்வகுமார்

தொகுப்பு: -மனோ

nkn03-08-2018
இதையும் படியுங்கள்
Subscribe