மிட்நைட் மசாலா! இருட்டு சாலையில் திருட்டு வேலை!

midnightmasala

ரவு 11 மணி.… சென்னை டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்ட எல்லையிலுள்ள பாடாலூரில் தொடங்கியது நமது மிட்நைட் ட்ராவல்.

பரபரப்பான மைண்டோடு பறந்த நமது டூவீலர் டால்மியாபுரம் சாலை சந்திப்பில் நிற்க...… ஏரியாவோ பரபரப்பே இல்லாமல் சைலண்ட் மோடில் காணப்பட்டது. ஒரேயொரு பேக்கரியும்,… ஒரேயொரு டீக்கடையும்தான் ஓப்பனில் இருந்தது. மற்ற கடைகள் ஷட்டவுனில் இருப்பதால் நோ வெளிச்சம். ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் வருவதுபோல… ஒரு சைனா விளக்கின் (பெட்ரோமாக்ஸ் லைட்டை வெச்சிருந்தா இது கனவா, நினைவான்னு கன்ப்யூஸ் ஆகியிருக்கும்) வெளிச்சத்தில் பூ கட்டிக்கொண்டிருந்த பெரியவரை நோக்கிச் சென்றோம். திடீரென்று, கால் தடுக்கி கீழே விழப் பார்த்தோம்.

அப்போதுதான் தெரிந்தது... அந்த இருட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நடு ரோட்டில் படுத்துக்கிடந்தார். இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் தடுக்கிவிழுந்து நமக்கும் அவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தபடி அவரை தூக்கி ஓரமாக அமர வைத்துவிட்டு பூ கட்டுபவரிடம் நெருங்கினோம். ""பல கிராமங

ரவு 11 மணி.… சென்னை டூ திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்ட எல்லையிலுள்ள பாடாலூரில் தொடங்கியது நமது மிட்நைட் ட்ராவல்.

பரபரப்பான மைண்டோடு பறந்த நமது டூவீலர் டால்மியாபுரம் சாலை சந்திப்பில் நிற்க...… ஏரியாவோ பரபரப்பே இல்லாமல் சைலண்ட் மோடில் காணப்பட்டது. ஒரேயொரு பேக்கரியும்,… ஒரேயொரு டீக்கடையும்தான் ஓப்பனில் இருந்தது. மற்ற கடைகள் ஷட்டவுனில் இருப்பதால் நோ வெளிச்சம். ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமாவில் வருவதுபோல… ஒரு சைனா விளக்கின் (பெட்ரோமாக்ஸ் லைட்டை வெச்சிருந்தா இது கனவா, நினைவான்னு கன்ப்யூஸ் ஆகியிருக்கும்) வெளிச்சத்தில் பூ கட்டிக்கொண்டிருந்த பெரியவரை நோக்கிச் சென்றோம். திடீரென்று, கால் தடுக்கி கீழே விழப் பார்த்தோம்.

அப்போதுதான் தெரிந்தது... அந்த இருட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நடு ரோட்டில் படுத்துக்கிடந்தார். இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் தடுக்கிவிழுந்து நமக்கும் அவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைத்தபடி அவரை தூக்கி ஓரமாக அமர வைத்துவிட்டு பூ கட்டுபவரிடம் நெருங்கினோம். ""பல கிராமங்கள்ல திருவிழாக்கள் நடக்குது. பகலில் திருச்சி மார்க்கெட்டுக்குப் போயி பூ வாங்கிட்டுவந்து இப்போ கட்டினாத்தான் பொழப்பு''’என்றவர், ""அந்தப் பக்கம் போகாதீங்க. உங்க உயிருக்கே ஆபத்து''’என்று ஹாலிவுட் பட டப்பிங் குரல்போல் எச்சரிக்க...…""என்ன ஆபத்து?''’என்றோம்… அதே டோனில்.

""கொஞ்ச நாளைக்கு முன்னால இந்த தெருவுல இருக்கிற சோமு வீட்டு பூட்டை உடைச்சிருக்காங்க. டூவீலரை திருடியிருக்காங்க. முகமூடி போட்ட திருடன் கையில இரும்பு ராடோடு உலாவுறானாம். சி.சி.டி.வி. கேமராவுலக்கூட பதிவாகியிருக்கு''’என்று பீதி கிளப்பினார். ""ஏற்கனவே, இங்க ஒரு டாஸ்மாக் இருந்துக்கிட்டு ஏகப்பட்ட பிரச்சனை நடந்தது. மக்கள் போராடி பூட்னாங்க. ஆனா, திரும்ப வரப்போவுதாம்''’என்று புலம்பிக்கொண்டிருக்க, நாம்… அப்படியே பெரம்பலூர் நோக்கி புறப்பட்டோம்.…

""முன்பைவிட ரவுடியிஸம் தலை தூக்கியிருக்கு. புது பஸ் ஸ்டாண்டுல இருக்கிற கடைகளை திறக்கக்கூடாதுன்னு போலீஸ் கெடுபிடி பண்றதால, இந்த இடமே இருட்டாகிப்போயி கிடக்கு. சென்னை -திருச்சி -துறையூர் -ஆத்தூர் -அரியலூர் என ஐந்து பெரிய நகரங்களுக்கான பேருந்துநிலையம் இது. இங்க இருக்குற கடைகளை திறந்தா வியாபாரம் நல்லா நடக்கும். பயணிகளின் கூட்டமும் இருக்கும். பிரச்சனைகள் இருக்காது. ஆனா, மக்கள் நடமாட்டம் இல்லாததால ரவுடிகளின் நடமாட்டம் அதிகமாகிடுச்சு. கொலைகள் நடந்தாலும் தண்டனை பெறாம தப்பிச்சிடுறாங்க''’என்கிறார்கள் அப்பகுதி ப்ளாட்ஃபார்ம் வாசிகள். பழைய பஸ் ஸ்டாண்டை நோக்கி பயணித்தது நமது டூ வீலர்.

ஆத்தூர் சாலையிலுள்ள காவல்நிலையம் வழியாக சென்றபோது நமது கண்கள் ஸூம் ஆனது. காவல்நிலைய வாகனங்கள் வாசலை மறைத்துக்கொண்டிருக்க...…வாசலுக்கு வெளியே சேர் போட்டு இரண்டு போலீஸார் அமர்ந்திருக்க பத்துக்குமேற்பட்ட ஆண்களுக்கு நடுவே இரண்டு பெண்கள் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். தூரத்திலிருந்து பார்த்தபோது ஆலமரமும் சொம்பும்தான் இல்லை. ஏதோ…புகார் தொடர்பான பஞ்சாயத்து நடப்பதை காணமுடிந்தது. அப்போது, இரவு 1 மணி. மாலை 6 மணிக்குமேல் பெண்களை காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கக்கூடாது என்று சட்டம் இருக்க,…1 மணிக்கு ஏன் விசாரிக்கிறார்கள்? என்று விசாரித்தபோது "இந்தக் காவல்நிலையத்தில் எப்போதுமே இப்படித்தான்' என்கிறார்கள்.

அங்கிருந்து… துறைமங்கலம் நான்குமுனை சந்திப்பு பாலத்தின் கீழே செல்ல முயற்சித்தபோது, "பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் "கையெழுத்து போடாதே'’என்ற அபயக்குரல் எக்கோ அடிப்பதுபோல் ‘"அந்தப் பக்கம் போவாதீங்க'’ என்ற குரல் நம்மை தடுத்து நிறுத்தியது. பிறகுதான்,…நாம் உற்றுநோக்கியபோது விஷயம் புலப்பட்டது... திருநங்கைகள் நின்றுகொண்டு லாரி டிரைவர்களுக்கு "ரெட்' சிக்னல் தருவது தெரியவந்தது. மேலும், ஜொள்ளிளித்துக்கொண்டு செல்லும் ஆண்களின் பர்ஸை பிடுங்கிக்கொண்டு ஓடவிட்ட சம்பவங்களும் நடந்திருக்கின்றன. அரசாங்கம் இவர்களது நலனில் கூடுதல் அக்கறை செலுத்தாதவரை இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது ஆம்புலன்ஸ் சப்தம் கேட்டது. காவல்துறை வாகனம் என்று நினைத்து திருநங்கைகள் ஒரு பக்கம் ஓடிப்போய் மறைய...… பிறகுதான் தெரிந்தது இரண்டுபேர் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றத்தான் 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்துள்ளது என்ற தகவல்.

இப்படி, இரவு நேரங்களில் நிறைய விபத்துகள் நடந்துகொண்டிருக்கின்றன. அதுவும் குறிப்பாக வேப்பூர் முதல் பாடாலூர் வரை அதிக விபத்துகள். காரணம்... சென்னையிலிருந்து இரவு 10 மணிக்குமேல் புறப்படும் வாகனங்கள் இந்தப் பகுதியை கடக்கும்போது விடியற்காலை 4 மணி. அப்போதுதான் விபத்துகள் நடக்கின்றன. தொழுதூர் மேம்பாலம் அருகே வரும்போது நமக்கும் கண்கள் சுழல...… டீக்கடையை தேடினோம். "ஒரேயொரு டீக்கடைதான் இருக்கும் அதையும் மூடிட்டாங்க' என்றார் ஒருவர், நம் இதயத்தில் வெந்நீரை ஊற்றுவதுபோல். வேறு வழியில்லாமல்…பச்சைத் தண்ணீரில் முகத்தை கழுவிக்கொண்டு புறப்பட்டோம்.…

அங்கே ஒரு டீக்கடை. நாம் நிற்காவிட்டாலும் வண்டி தானாக நின்றது. ’""டூவீலரை சைடு லாக் பண்ணுங்க சார். டெய்லி ஒரு வண்டி காணாமப்போகுது. கவரிங் செயினைக்கூட விடமாட்றானுங்க''’ என்று தூக்கக் கலக்கத்தை கலைத்தார், டீக்கடையிலிருந்த ஒருவர். டீயை குடித்து முடித்தபோது,…பொழுது பொலபொலவென விடிய ஆரம்பிக்க...… உற்சாகத்தோடு வீடு வந்து சேர்ந்தோம்,… எந்த சேதாரமும் செய்கூலியும் இல்லாமல்.

-ரவுண்ட்-அப்: எஸ்.பி. சேகர்

தொகுப்பு: மனோ

Midnight masala nkn29.06.18
இதையும் படியுங்கள்
Subscribe