மிட்நைட் மசாலா! கஞ்சா முதல் எய்ட்ஸ் வரை...!

midnightmasala

மிழகத்தின் "ஹார்ட்' அண்ட் "ஹாட் ஸ்பாட்' திருச்சி. அந்நியன்-அம்பி, ரேஞ்சுக்கு வெயில்- மழை என மாற்றி மாற்றி மக்களை கன்ஃப்யூஸ் பண்ணிக்கொண்டிருக்கும் திருச்சியில் மின்வெட்டு வேறு ஒருபக்கம் மக்களின் தூக்கத்தை கெடுத்து துக்கத்தை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் உற்சாகமான "ரெமோ'க்களுக்கு குறைவில்லை. மிட்நைட் மசாலாவுக்காக இரவு 9:30 மணிக்கு நமது டூவீலர் டுர்ர்ர்ர்ர்ர்ர் வீலராக மாறியது.

மேலப்புதூர் குட்செட் ரயில் தண்டவாளம் அருகே நமது டூவீலர் பயணித்தபோது ஏதோ நாற்றம் நம் சுவாசத்துக்குள் புகுந்து நுரையீரலில் நுரைபொங்க வைத்தது. சைலன்ஸரிலிருந்து வரும் புகையாக இருக்குமோ என்று வண்டியை நிறுத்தி பரிசோதித்தபோது, "நான் அது இல்லை' என்பதுபோல் அப்பாவியாய் தெரிந்தது. ஹூம் என்னவாக இருக்கும்? என்று கைக்குட்டையை எடுத்து மூக்கை பொத்திக் கொண்டே மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு தப்பினோம். அருகிலுள்ள கடையில் டீயை வாங்கிப் பருகியபடியே பேச்சு கொடுத்த போதுதான் அது கஞ்சா நாற்றம் என்பதை உறுதிப

மிழகத்தின் "ஹார்ட்' அண்ட் "ஹாட் ஸ்பாட்' திருச்சி. அந்நியன்-அம்பி, ரேஞ்சுக்கு வெயில்- மழை என மாற்றி மாற்றி மக்களை கன்ஃப்யூஸ் பண்ணிக்கொண்டிருக்கும் திருச்சியில் மின்வெட்டு வேறு ஒருபக்கம் மக்களின் தூக்கத்தை கெடுத்து துக்கத்தை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் உற்சாகமான "ரெமோ'க்களுக்கு குறைவில்லை. மிட்நைட் மசாலாவுக்காக இரவு 9:30 மணிக்கு நமது டூவீலர் டுர்ர்ர்ர்ர்ர்ர் வீலராக மாறியது.

மேலப்புதூர் குட்செட் ரயில் தண்டவாளம் அருகே நமது டூவீலர் பயணித்தபோது ஏதோ நாற்றம் நம் சுவாசத்துக்குள் புகுந்து நுரையீரலில் நுரைபொங்க வைத்தது. சைலன்ஸரிலிருந்து வரும் புகையாக இருக்குமோ என்று வண்டியை நிறுத்தி பரிசோதித்தபோது, "நான் அது இல்லை' என்பதுபோல் அப்பாவியாய் தெரிந்தது. ஹூம் என்னவாக இருக்கும்? என்று கைக்குட்டையை எடுத்து மூக்கை பொத்திக் கொண்டே மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு தப்பினோம். அருகிலுள்ள கடையில் டீயை வாங்கிப் பருகியபடியே பேச்சு கொடுத்த போதுதான் அது கஞ்சா நாற்றம் என்பதை உறுதிப் படுத்தினார் அங்கிருந்த பெரியவர்.

midnightmasala

""நீங்க வேற...… ஒருநாள் இந்தப் பக்கம் வந்ததுக்கே மூக்க பொத்திக்கிட்டிருக்கீங்களே… யாரோ துப்பாக்கி சுரேஷாம். அவன்கூட அம்மாசி, லைத்தான், சுதாகர், தாராநல்லூர் சிவா, தென்னூர் செல்லப்பா, மேத்யூ, கோட்டை செல்வம், எடத்தெரு ராஜா, உறையூர் நாய் குமார்ன்னு தினமும் வந்துடுவானுங்க. நைட்டு 7 மணிக்கு வந்தா பதினொண்ணு… பன்னெண்டு மணிக்குத்தான் போவானுங்க. டோப்பு, டிராக்ஸ் இப்போ லேட்டஸ்டா கஞ்சா. இதுக்குமுன்னால, துறையூர்ல கஞ்சா வித்துக்கிட்டிருந்தானுங்க. இப்போ, புதுக்கோட்டை திருவோணம் கஞ்சாதான் ரொம்ப கெத்துன்னு விற்குறானுங்க'' என்றவர், கையில் வைத்திருந்த டீயை உறிந்துவிட்டு, ""சமீபகாலமா அவனுங்ககிட்ட பணம் அதிகமா பொழங்குது சார். போலீஸாரும் கண்டுக்காம விட்டுடுறாங்க. இவனுங்களால படிக்கிற பசங்க லைஃப் கெட்டுப் போகுது. அதான், மனசுக்கு கஷ்டமா இருக்கு''’ என்று அவர் சொல்லிமுடிக்க, ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்த நமது டீ ஆறிப் போயிருந்தது. வேறு வழியில்லாமல் வாயில் ஊற்றிக்கொண்டோம். நாம், சூடாக இருந்ததால் மேட்ச் ஆகிவிட்டது. அப்படியே, டூவீலரை கிளப்பிக்கொண்டு காந்தி மார்க்கெட் வந்தபோது இரவு 11 மணி.

அதிகாலையில் வியாபாரத்தை துவங்குவதற் காக வெளியூரிலிருந்து வந்திருக்கும் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்-பெண் சிறு வியாபாரிகள் அப்படியே தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

அன்றாட பிழைப்பிற்காக வரும் பெண்கள் இப்படி கஷ்டப்படுறாங்களே?’’ என்று நாம் "உச்' கொட்டியபோது, ""இதுக்கே இப்படி "உச்' கொட்டு றீங்களே இந்த பெண்கள் சிலரோட வாழ்க்கை வியாபாரிகளின் கைகளில் சிக்கி அழுகின காய்கறி மாதிரி ஆகிடுது'' என்று நமது சோர்ஸ் நம்மிடம் "உச்' கொட்ட அவரை திரும்பிப் பார்த்தோம்.

""இங்க வேலை செய்யுற பெரும்பாலானவங்க குடும்பப் பெண்கள்தான். விசேஷ நாட்களில் மட்டும்தான் ஊருக்குப்போயிட்டு வருவாங்க. அதுல ஒரு சில பெண்களை நோட்டம் விடும் டீம் இருக்கு. புரோக்கர்களின் தவறான வழிகாட்டுதலால் சிக்கிக்குறாங்க. வியாபாரத்துக்கு வரும் ஆண்களிடம் செல்போன் ரீசார்ஜ் பண்ண சொல்றமாதிரி பழக்கத்தை ஏற்படுத்திக்கிட்டு அப்படியே தங்களுடைய வங்கிக்கணக்கையும் ரீசார்ஜ் பண்ணிக்கிறாங்க. இதன்மூலமா, சில பெண்களும் வியாபாரிகளும் எய்ட்ஸ் போன்ற நோய்களையும் தங்கள் உடம்புல சார்ஜ் பண்ணிக்கிட்டுப் போயிடறதால் வியாபாரி களோட அப்பாவி மனைவிகளுக்கும் தொற்ற வெச்சிடுறாங்க'' என்று சொல்லிக்கொண்டிருக்க... திடீரென்று நம்மை நோக்கி வந்த பெண் ""உங்ககிட்ட செல்போன் சார்ஜர் இருக்கா? என் செல்லை சார்ஜ் பண்ணணும்'' என்று சிணுங்கியபடியே கேட்க, ""அம்மா தாயே எங்ககிட்ட செல்போனே கிடையாது. அப்புறம் எப்படி சார்ஜர் இருக்கும்?'' என்றபடி மான் கராத்தேவை யூஸ் பண்ணினோம். ஹி ஹி ஓட்டம் பிடித்தோம்.

அப்படியே, பெரிய கடைவீதியை நோக்கி நமது டூவீலர் சீறிப்பாய்ந்தது. இரவு 12:30 மணி. பகலில் மக்கள் வெள்ளத்தில் அலைமோதும் இந்த வீதிகளில் ஈ காக்காய் கூட ம்ஹும்... இரவில் எப்படி ஈ காக்காய் பறக்கும். அதனால் ஆந்தைகள் கூட இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. காவல்துறை ரோந்து வாகனங்களையும் காணவில்லை. அப்படியே, சத்திரம் பேருந்து நிலையம் கடந்து பைபாஸ் சாலையில் ஸ்ரீரங்கம் காவிரிக்கரை வழியே சென்றுகொண்டிருந்த போது, ஆளே இல்லாத இரவில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தல் சைலண்டாக நடந்துகொண்டிருந்தது.

1:15 மணிக்கு கரூர் பைபாஸ் சாலை வழியே தில்லை நகர் பகுதியில் நாம் இறங்கியபோது நைட் ஷோ சினிமா முடிந்து பணக்கார இளைஞர்கள் ட்ரிபிள்ஸ் அடித்துக்கொண்டே அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ் சாலையில் ஓரிடம் நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள். எங்கு செல்கிறார்கள் என்று நாம் விசாரிக்க ஆரம்பித்த போது, திடீரென்று காரில் எதிர்ப்பட்ட நமது சோர்ஸ், ""என்ன சார்… இந்த வாரம் மிட்நைட் மசாலா திருச்சியா? அங்கபோங்க… ஒரே மசாலாவா கிடைக்கும்'' என்று அந்த பணக்கார இளைஞர்கள் சென்று மறைந்த இடத்தை கைகாட்டிவிட்டு பறந்தார். இளைஞர்கள் சென்ற இடங்களை விசாரித்தபோதுதான் மிட்நைட் மசாலா வாசனை’ மூக்கை அல்ல; மூளையை துளைக்க ஆரம்பித்தது. திருச்சியின் இன்னொரு திகில் பகுதி நோக்கி நம் டூவீலர் சென்றது.…

(பயணிப்போம்)

ரவுண்ட்-அப்: ஜெ.டி.ஆர்.

தொகுப்பு: மனோ

Midnight masala nkn19.06.18
இதையும் படியுங்கள்
Subscribe