மயங்க வைக்கும் தூங்கா நகரம்!

லகின் பழமையான சிட்டிகளில் டாப்-10 பட்டியலில் முதன்மையானது மதுரை. 24 x 7 செய்தி சேனல்களைப்போல இரவு-பகல் பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருக்கும் ‘"தூங்கா’ நகர'த்துக்குள் நாமும் தூங்காமல் மிட்நைட்டில் ரவுண்ட் அடிக்க ஆரம்பித்தோம்.…

midnightmalasala

பெரியார் பேருந்துநிலையத்தில் நாம் நின்று கண்களை சுழலவிட்டுக்கொண்டிருந்தபோது… திடீரென்று, காவல்துறை வாகனம் வந்து நிற்கிறது. அதிலிருந்து, இறங்கிய காக்கிகள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். நைஸாக ஒட்டுக் கேட்க ஆரம்பித்தோம். ‘"ஒட்டுக் கேட்கிறது தப்பில்லையா?'’என்று மனசாட்சி நம்மைப் பார்த்து கேள்வி எழுப்ப... "காவல்துறை நமது தொலைபேசி உரையாடல்களை எல்லாம் ஒட்டுக்கேட்கிறது; நாம், தொலைவில் நின்று அவர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்பதில் தப்பில்லை'’என்று மனசாட்சிக்கு பதில் சொல்லி சமாளித்தபடி நமது காதை காக்கிகளின் பக்கம் திருப்பிவிட்டு ஆழ்ந்த சிந்தனையில் இருப்பதுபோல் ஆக்டிங் கொடுத்தோம்.

Advertisment

"பப்ளிக்கிட்டேயிருந்து கம்ப்ளைண்ட்ஸ் போச்சுன்னு பெருசா ஆர்வம் காட்டமாட்டேங்குறாராம் கமிஷனர். எந்த கம்ப்ளைண்டுன்னாலும் டி.சி.கிட்ட டைவர்ட் பண்ணி விட்டுடுறாராம்'’’என்று ஓப்பனிங்கிலேயே மதுரை கமிஷனர் குறித்து பேசிக்கொண்டிருந்த காக்கிகள், நாம் அவர்களின் அருகே நிற்பதைக் கவனித்துவிட்டு...

midnightmalasala""அப்புறம் தூத்துக்குடிக்கு ரஜினி போயிட்டு வந்ததிலிருந்து ஒரே பரபரப்பா இருக்கு போலிருக்கே''’என்று டாப்பிக்கை மாற்ற ஆரம்பிக்க,… நமது டூவீலர் புகை கக்க ஆரம்பித்தது. அங்கிருந்து நமது ஸ்பாட்டை கொஞ்சம் மாற்றினோம்.

இரவு 11 மணி.… திடீரென்று நம்மைப் பார்த்து புன்னகைத்தார் ஒருவர். நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவராக இருப்பார்போல இருக்கே, யாராக இருக்கும்? என்று யோசித்தபடி பதிலுக்கு ப்ளாஸ்டிக் சிரிப்பை உதிர்த்துவிட்டு சைலண்டாக நின்றுகொண்டிருந்தோம். மீண்டும் அவர் நம்மைப் பார்த்து சிரித்தபடியே அருகே வந்தார்.

Advertisment

"சார், மீனாட்சி லாட்ஜ் பக்கத்துலதான் இருக்கு'’என்று ஏதோ சொல்ல அவர் எத்தனிக்க...…

""ஆமாங்க,… மீனாட்சி லாட்ஜ் பக்கத்துலதான் இருக்கு...… நான் என்ன அம்பது கிலோ மீட்டருக்கு அந்தாண்ட இருக்குன்னா சொன்னேன்?''’என்றோம். உடனே, வாய்விட்டுச் சிரித்தார். அவ்ளோ, பெரிய காமெடில்லாம் இல்லையே… சீரியஸா பேசினதுக்கு எதுக்கு இப்படி சிணுங்குன மாதிரி சிரிக்கிறார்? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே...

""மீனாட்சி லாட்ஜ் சேஃப்டி சார். இல்லைன்னா சொல்லுங்க ரயில்வே ஸ்டேஷன் எதிர்ல இருக்கிற மாநகராட்சிக்கு சொந்தமான மங்கம்மாசத்திரம் கூட்டிக்கிட்டுப் போறேன். எல்லா வெரைட்டியும் இருக்கு''’என்றபோதுதான் அவர் எதற்காக வலை விரிக்கிறார் என்பது புரிந்தது.

""போலீஸ்லாம் வராதா?''’என்று நாம் கேஷுவலாக கேட்க…

""காவல்துறை நமது நண்பன்,… வாங்க பார்த்துக்கலாம்''’என்று கேஷுவலாக அழைக்கிறார். மறுபடியும், நமது டூவீலர் புகை கக்க... …

""ஹலோ சார் நில்லுங்க… சார்,… கஞ்சா வேணுமா? பாலத்துக்கு கீழ போங்க''’என்று நம்மை விரட்ட... இதையெல்லாம் வாட்ச்பண்ணி நடவடிக்கை எடுக்கவேண்டிய போலீஸ் தூங்கிக்கொண்டிருக்க... எழுப்ப மனமில்லாமல் அந்த இடத்திலிருந்து எஸ்கேப் ஆனோம்.

அடுத்த ஸ்பாட் மதுரை மருத்துவக்கல்லூரி அருகிலுள்ள பி.ஜி. ஹாஸ்டல். தலை நிறைய்ய்ய்ய பூ. சென்ட் வாசம் நம் மூக்கை மட்டுமல்ல ஒட்டுமொத்த உடம்பையும் துளைக்க திருநங்கைகள் நின்றுகொண்டிருந்தார்கள். நம்மைப் பார்த்து, ‘""இங்க பார்றா பார்ட்டி...… பர்ஸுல பணம் எவ்ளோ வெச்சிருக்க?''’என்று நம்மை நெருங்க ஆரம்பித்தார்கள். ""நான் அதுக்கெல்லாம் வர்ல''’என்று சொல்ல,…""யோக்கியனுக்கு இருட்டுல என்ன வேல?''’என்று "வின்னர்' பட வடிவேலு காமெடியை சொல்லிக்கொண்டே நம்மை நெருங்க ஆரம்பித்தார்கள்.

""அக்கா… நான் பத்திரிகை நிருபர். ஒரு நியூஸுக்காக வந்தேன்''’என்றதுதான் தாமதம்...… “"ஏம்பா,… எங்கள போட்டோ எடுக்க வந்திருக்கியா?' என்றார்’’ கொஞ்சம் கோபமாக. ""இல்ல...… இல்ல... வேற செய்திக்காக வந்திருக்கேன்''’என்று சமாளித்தோம். ""சரி… போட்டோ எடுக்கக்கூடாதுப்பா... என் பேரு திரிஷா''’என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்த திருநங்கை, “""வயித்துப்பொழப்புக்கு வேற வழி தெரியல. நானும் உன்னமாதிரி ஆம்பளையாத்தான் இருந்தேன். இங்க இருக்கிற மார்வாடிக்காரனுங்கதான் என்னை இப்படி சுயநலத்துக்காக மாத்திட்டானுங்க. அவனுங்கதான், என் நிலைமைக்குக் காரணம்''’என்று ஷாக் கொடுத்தவரை,…""ஆம்பளைய பொம்பளையா மாற்றமுடியாது.…உங்களுக்கு ஆல்ரெடி பெண்மைக்கான ஃபீலிங் இருந்திருக்கும்... அதனால, மாறியிருப்பீங்க. சரி… வருங்கால டாக்டர்களை நோயாளிகளாக்கிடாதீங்க''’என்று மென்மையாக நாம் சொல்ல, ""நாங்க ஏம்ப்பா நோயாளியாக்கறோம்? இந்த போலீசுக்காரங்கதான் ஓசி கிராக்கியா வர்றாங்க. அதைக் கொஞ்சம் எழுது'' என்றார் உரிமையுடன்.

சிம்மக்கல் பகுதியில் பகல்போல் இரவில் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் மூட்டை தூக்கும் உழைப்பாளிகள். சூடான இஞ்சி டீயை பருகிவிட்டு…காமராசர் கணேஷ் தியேட்டர் பக்கம் போனால்… விடியல் இரவு 2:30 மணிக்கு கூட்டம் அலைமோதுகிறது. டாஸ்மாக் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்த செக்யூரிட்டியோ, ""தம்பி நான் குடிச்சிருக்கேன்; பொய் சொல்லமாட்டேன். முன்னாடியெல்லாம் 50 கிராம், 100 கிராம்தான் இந்த ஏரியாவுல கஞ்சா விற்கும். இப்போ, கிலோ கணக்குல விற்குது தம்பி''’என்று உளறிக்கொண்டிருக்க...… எல்லாவற்றையும் நோட்’ செய்துகொண்டு ஒரு ரவுண்டு வந்தபோது தூங்கா நகரம் விடிந்துகொண்டிருந்தது.

(பயணிப்போம்)

-ரவுண்ட்ஸ்: அண்ணல்

தொகுப்பு: மனோ