"கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் சாவு' என்பது பழமொழி. அதுபோல தனது எதிரிகளையும் தொழில்முறையாக கொலைசெய்தவர்களையும் திட்டமிட்டு அமாவாசையன்று தீர்த்துக் கட்டிவந்த பிரபல ரவுடி கோபால், அதே அமாவாசையன்று கொலை செய்யப் பட்டுள்ளது திருச்சி சுற்றுவட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர்.

திருச்சி பெட்டவாய்த்தலை கருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கோபால் (52). அக்டோபர் 6-ஆம் தேதி அதிகாலை தனது வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த கோபாலிடம் பேசவேண்டும் எனக்கூறி வந்த ஒரு கும்பல், அவரை அருகிலுள்ள தோட்டத்திற்கு அழைத்துச்சென்று வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

hh

இந்த சம்பவம் தொடர்பாக லாலாபேட்டை போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமார் கொலைவழக்கில் இவருக்குத் தொடர்பு இருப்பதால், காவல்துறையினர் முந்தைய வழக்குகளுடன் இணைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து விசாரித்ததில்... திருச்சி, கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் கருப்பத்தூர் கோபால். கொலை செய்வதில் இவருக்கு ஒரு சென்டிமெண்ட் உண்டு. பிரபல ரவுடியான கோபால் எப்போதும் யாரை கொலை செய்ய திட்டமிட்டாலும், அமாவாசையைத் தேர்வுசெய்து அன்றைய தினமே கொலை செய்துவந்திருக்கிறார். இவர்மேல் சந்தேகமுள்ள பல கொலை வழக்குகளில் காவல்துறையினர் தெளிவான தகவல்கள், உறுதியான ஆதாரங்கள் கிடைக்காமல், கொலையாளி யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

கோபால் செய்த எல்லா கொலைகளும் அமாவாசையன்று நடைபெற்றவை என்பதை காவல்துறையினர், பல வருடங்களுக்குப் பிறகே கண்டுபிடித்துள்ளனர். தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த 15 நாட்களாக தமிழகத்திலுள்ள ரவுடிகள் அனைவரும் பாதுகாப்பு கருதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், அமாவாசை யன்று மட்டும் கொலை செய்து வந்த கோபாலை திட்டமிட்டு மஹாளய அமாவாசையன்று ஒரு கும்பல் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளது. தற்போது தப்பி சென்ற மர்ம நபர்கள் யார் என்று வழக்குப்பதிவு செய்து, நான்கு பேரை முசிறி போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment