எடப்பாடி ஆட்சியின் மெகா ஊழல் அனாதீன நிலத்தில் கொள்ளையோ கொள்ளை!

ss

பாரத் கனரக மின் சாதனங்கள் உற்பத்தி நிறுவனம் பெல். அதன் ஊழியர்கள் சேர்ந்து பதிவு செய்யப்பட்ட சொசைட்டியின் முக்கியப் பொறுப்பு களில் தங்கராஜ், பாண்டியன், ஹேமச் சந்திரன், பொதுக்குழு, நிர்வாகக் குழு, செயற் குழு என மற்றும் பலர். ஐ.டி. கம்பெனிகளால் நிலத்தின் மதிப்பு அசுரத்தனமாக ஏறிக்கொண்டிருந்த சென்னை ஓ.எம்.ஆர். ரோட்டில் உள்ள தாழம்பூரில் சத்தியநாராயண ரெட்டி என்பவர் மூலம் பெல் சொசைட்டி வாங்கிய நிலம் ‘"பெல் சிட்டி'’ என்ற ‘லே-அவுட்டானது.

land

அப்போது எடப்பாடி ஆட்சியில் இருந்த அ.தி. மு.க.வின் சில மேல்மட்ட பிரமுகர்கள் எதிர்பார்த்த பேரங்கள் படியாததால் சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரால் 2020-ல் பெல் சிட்டி பட்டாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அன்றைய காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா, “"போலி பட்டாக்கள் மலிந்திருப்பதால் யாரும் அங்கே இடங்களை வாங்க வேண்டாம்'’ என்றார்.

கொடுத்தவனே பறித்துக் கொண் டான்டி’கதையாக அனாதீன வில்லங்கங்கள் அ.தி.மு.க. கரை வேட்டிகளால் உருவானதால் சுப்ரீம் கோர்ட் போனார் ரெட்டி.

2020 ஜூலை 29-31 நக்கீரனில் “"அனாதீன நிலத்தை ஆட்டையப் போடும் ஆளுங் கட்சியினர்+அதிகாரிகள்!'’என்ற செய்தி வெளியானது.

llll

அனாதீன நிலங்கள் என்று தடை செய்யப்பட்ட இடங் களை எவருக்கும் வழங்க இயலாது. ஆனால், அதையும் மீறி செயல்பட்டது யார்? யார்? மேலிருந்து கீழ்மட்டம் வரை அதிகாரிகள் நூல் பிடித்தாற்போல் நின்று இந்த சட்டமீறல் ஊழலைச் செய்ய உத்தரவு எங்கிருந்து வந்தது? இந்த அனாதீன நிலக்கொள்ளைக்கு தலைவன் யார்?

கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ். அரசு பங்களாவில்தான் ஒரு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலருக்கு நெருக்கமான சங்கீதா பவுண்டேஷன் சங்கீதா, பிரேம்குமார் வகையறாக்கள், தங்கராஜுவின் மகனான சம்புகனை வரவழைத்து நம்பிக்கை ஊட்டி, உங்கள் பெல் சிட்டி வேலைக்காகத் தான் இந்த சந்திப்பு”என்று சொல்லியிருக்கிறார்கள். அதன் பின்னரே சரசரவென அனைத்து வேலைகளும் கவுன்சிலர் தலைமையில் நடந்துள்ளது.

சங்கீதா பவுண்டேஷனுக்கு ஆ.ஏ.ந, வேலூர் ஈஙஈ, ஊட்டி போன்ற பல இடங் களில் பல கோடிக்கணக்கில் ரியல் எஸ்டேட் பிசினெஸ் உண்டு. மதுரவாயல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெஞ்சமினுக்கு நெருங்கிய நண்பரும், வலதுகையுமான கவுன்சிலர்,

பாரத் கனரக மின் சாதனங்கள் உற்பத்தி நிறுவனம் பெல். அதன் ஊழியர்கள் சேர்ந்து பதிவு செய்யப்பட்ட சொசைட்டியின் முக்கியப் பொறுப்பு களில் தங்கராஜ், பாண்டியன், ஹேமச் சந்திரன், பொதுக்குழு, நிர்வாகக் குழு, செயற் குழு என மற்றும் பலர். ஐ.டி. கம்பெனிகளால் நிலத்தின் மதிப்பு அசுரத்தனமாக ஏறிக்கொண்டிருந்த சென்னை ஓ.எம்.ஆர். ரோட்டில் உள்ள தாழம்பூரில் சத்தியநாராயண ரெட்டி என்பவர் மூலம் பெல் சொசைட்டி வாங்கிய நிலம் ‘"பெல் சிட்டி'’ என்ற ‘லே-அவுட்டானது.

land

அப்போது எடப்பாடி ஆட்சியில் இருந்த அ.தி. மு.க.வின் சில மேல்மட்ட பிரமுகர்கள் எதிர்பார்த்த பேரங்கள் படியாததால் சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரால் 2020-ல் பெல் சிட்டி பட்டாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அன்றைய காஞ்சி மாவட்ட ஆட்சியர் பொன்னையா, “"போலி பட்டாக்கள் மலிந்திருப்பதால் யாரும் அங்கே இடங்களை வாங்க வேண்டாம்'’ என்றார்.

கொடுத்தவனே பறித்துக் கொண் டான்டி’கதையாக அனாதீன வில்லங்கங்கள் அ.தி.மு.க. கரை வேட்டிகளால் உருவானதால் சுப்ரீம் கோர்ட் போனார் ரெட்டி.

2020 ஜூலை 29-31 நக்கீரனில் “"அனாதீன நிலத்தை ஆட்டையப் போடும் ஆளுங் கட்சியினர்+அதிகாரிகள்!'’என்ற செய்தி வெளியானது.

llll

அனாதீன நிலங்கள் என்று தடை செய்யப்பட்ட இடங் களை எவருக்கும் வழங்க இயலாது. ஆனால், அதையும் மீறி செயல்பட்டது யார்? யார்? மேலிருந்து கீழ்மட்டம் வரை அதிகாரிகள் நூல் பிடித்தாற்போல் நின்று இந்த சட்டமீறல் ஊழலைச் செய்ய உத்தரவு எங்கிருந்து வந்தது? இந்த அனாதீன நிலக்கொள்ளைக்கு தலைவன் யார்?

கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ். அரசு பங்களாவில்தான் ஒரு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலருக்கு நெருக்கமான சங்கீதா பவுண்டேஷன் சங்கீதா, பிரேம்குமார் வகையறாக்கள், தங்கராஜுவின் மகனான சம்புகனை வரவழைத்து நம்பிக்கை ஊட்டி, உங்கள் பெல் சிட்டி வேலைக்காகத் தான் இந்த சந்திப்பு”என்று சொல்லியிருக்கிறார்கள். அதன் பின்னரே சரசரவென அனைத்து வேலைகளும் கவுன்சிலர் தலைமையில் நடந்துள்ளது.

சங்கீதா பவுண்டேஷனுக்கு ஆ.ஏ.ந, வேலூர் ஈஙஈ, ஊட்டி போன்ற பல இடங் களில் பல கோடிக்கணக்கில் ரியல் எஸ்டேட் பிசினெஸ் உண்டு. மதுரவாயல் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெஞ்சமினுக்கு நெருங்கிய நண்பரும், வலதுகையுமான கவுன்சிலர், கீழ்க் கண்டவாறு விளக்கம் கொடுத்திருந்தார். "என் னிடம் கேட்டார்கள். நான்தான், தலையிட்டு ரோடு போட்டேன்; பொசிஷன் எடுத்துக் கொடுத்து 9 ஏக்கரை 120 பேருக்கு மேல் பட்டா பதிவு பண்ணிக் கொடுத்திருக்கேன்.''”

இதற்கு அன்றைய காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையாவின் பதிலை எதிர்பார்த்த நக்கீரனுக்கு, "அவருக்கு, உடல் நிலை சரியில்லை. த்ரோட் இன்பெக்சன், பேசமுடியாது'' என்றார் கலெக்டர் பி.ஏ. கேள்விகளை வாட்ஸ்-அப்பில் அனுப்பி விளக்கம் கேட்ட நக்கீரனுக்கு இன்றுவரை பதில் வந்த பாடில்லை.

250 கோடி ரூபாய் மதிப்புள்ள முப்பது ஏக்கர் நிலங்களை தனியாருக்கு தாரை வார்த்தது யார்? ரோடு போடும் வேலைகள் எப்படி? தனியார் செக்யூரிட்டி பாதுகாப்பு, ரவுடிகள் பாதுகாப்பு ஏன்? அரசு ஆவணங்கள் ஏன் மறைக்கப்பட்டது? யார் மறைக்கச் சொன்னது? யாருக்கு இதனால் ஆதாயம்?

ll

இந்தியா முழுக்க பல்வேறு தொழிற் சங்க அரங்குகளில் உத்வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தங்கராஜ் மட்டும் நக்கீரன் 2020 ஆகஸ்ட் 01-04 இதழில் மறுப்புச் செய்தி கொடுத்திருந்தார்.

இது ஒரு பக்கமென்றால், இந்த நிலத்தை வாங்கிய பெல் சொசைட்டிக்குள்ளேயே பிளவுகளும், பண மோசடிப் புகார்களும் எழுந்து ஆட்டிப் படைக்கிறது.

சொசைட்டியில் இருதரப்பும் வழக்கு, மேல் முறையீடு என்று தொடர, சொசைட்டி யின் மேலாளர் கே.ஜெயக்குமார் காவல்துறை ஆணையாளருக்கு அளித்த புகாரில், 24.09.2019-ம் தேதியன்று, அவரது வீட்டிற்கு சிலர் வந்து வலுக்கட்டாயமாகக் கண்ணைக் கட்டி அவரை இழுத்துச்சென்று கொன்றுவிடுவ தாக மிரட்டி வெற்றுக் காசோலைகளிலும், பச்சைத்தாள்களிலும் கையொப்பம் பெற்றனர் என்றும் அதன் பின்னணியில் இருந்த தலைவர் பாண்டியன், பொருளாளர் ஹேமச் சந்திரன், சங்கீதா, பிரேம்குமார் ஆகியோர் மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி ஆகிய சட்டப் பிரிவின் கீழ் அளித்த புகாரின் மீது, உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க ஆணை யிட்டுள்ளது.

கடத்தலின்போது ஜெயக்குமார் மகன் ஜெ.பூர்வீகன், தங்கராஜ் மகன் சம்புகன் இருவரும் எடுத்த துரித முயற்சியால் அவசர உதவிப் போலீசார் வந்துதான் ஜெயக்குமாரை காப்பாற்றினர்.

தற்போதைய பிரச்சனைகள் குறித்து தங்கராஜ், "காலமெல்லாம் உழைத்த காசில் மொத்தமாக நிலம் வாங்கி டி.டி.சி.பி அங்கீகார லே-அவுட்டாக வீட்டு மனைகள் பிரித்து சொசைட்டி மெம்பர்களுக்கு அவரவர் பெயரில் பத்திரப் பதிவு செய்து கொடுப்பதற்காக பெல் ஊழியர்கள் வெல்பர் சொசைட்டி 2012-ல் துவக்கி னோம். சொசைட்டி நன்றாகத் தான் இயங்கிக் கொண்டிருந் தது.

நான் 13-04-2019 அன்று மாரடைப் பால் பாதிக்கப்பட்டு, 16-04-2019 அன்று வடபழனி யில் உள்ள விஜயா மருத்துவ மனையில் ஆஞ்சியோ சிகிச்சை பெற்றேன். என்னு டைய இதயத்தில் மூன்று இடத்தில் ரத்தக் குழாயில் அடைப்பு இருந்ததால் பைபாஸ் இதயஅறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற மருத்துவரின் ஆலோ சனையை சொசைட்டிக்கு தெரிவித்தேன். சென்னை அப்பல்லோவில் சர்ஜரிக்காக அனுமதிக்கப்பட உள்ளேன் என்பதை தெரிந்த தலைவர் பாண்டி யன், பொருளாளர் ஹேமச்சந்திரன் ஆகிய இரு வரும் எனது இல்லத்திற்கு இரண்டுமுறை வந்து சிகிச்சை தேதியைத் தெரிந்துகொண்டார்கள்.

சிகிச்சை முடிந்து நான்கு மாதங்கள் கட்டாய ஓய்வில் இருந்தேன். அந்தசமயத்தில் சட்டவிரோதமாக சொசைட்டியில் இருந்து என்னை நீக்கி விட்டு தனியாகக் கூட்டங்கள் நடத்தி சொத்துக்களைக் கைப்பற்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் நோக்கில் கூட்டுச்சேர்ந்து செயல்பட்டார்கள்''’என்கிறார்.

புகார்கள், மனு ஏற்புகள், ஆள்கடத்தல், முதல் தகவல் அறிக்கைகள், ஆன்லைன் புகார் கள், ஹேமச்சந்திரன், பாண்டியன் ஆகியோர் 2019 ஏப்ரலில் இருந்து நவம்பர் 3, 2019 வரை தனது சொந்த லாபத்திற்காக சுமார் 9,03,72,218 ரூபாயை கையாடல் செய்த பண மோச டிப் புகார்கள், கையாடலுக்கு ஒத்துப்போகாத தங்கராஜ் மீது 35 கோடி கையாடல் என்று பொய்ப் புகார்கள், தள்ளுபடி, மறுப்புகள் என பல ஆவணங்களை தங்கராஜ் வைத்திருக்கிறார்.

ll

9,03,72,218 ரூபாயை பொருளாளர் ஹேமச்சந்திரன், தலைவர் பாண்டியன் ஆகியோர் திட்டமிட்டு கையாடல் செய்ததற் காக, அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கு மாறும், பணத்தை மீட்டு பெல் சொசைட்டிக்கு கொடுக்குமாறும் உயர்நீதிமன்றத்திலும் கிரிமினல் வழக்கும், ஜூன் 21 அன்று முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு ஒன்பது கோடி ஏமாற்று நடந்ததாக புகாரும் அளித்தார். சி.எம். செல் எடுத்த துரித நடவடிக்கையின் விளைவாக, சொசைட்டி ஆடிட்டர் காளிராஜ், “பாண்டியன், ஹேமச்சந்திரன், பிரேம்குமார், சங்கீதா குரூப் உங்களைச் சந்திக்க நூறு பேருடன் உங்கள் வீட்டுக்கு வரும் நோக்கில் இருக்கிறார்கள் கவனம்’என்று தங்கராஜை எச்சரித்திருக்கிறார்.

"சொசைட்டியின் வளர்ச்சிக்காக என்றால் தாராளமாக வரட்டும். ஜெயக்குமார் கடத்தல் போல ரவுடியிசம் என்றால் காவல்துறை துணையுடன் அதைச் சந்திக்கத் தயார்'' என்றிருக்கிறார் தங்கராஜ். தலைவர் பாண்டியன் வசம் கேட்டபோது சொசைட்டி விசயமாக அனைவரையும் கலந்துதான் பேச வேண்டும் என்றும், ஜெயக்குமார் கடத்தலின் போது நான் அங்கில்லை என்றும் கூறினார். ஹேமச்சந்திரன், சங்கீதா, பிரேம்குமார் போன்றவர்கள் நமது டெலிபோன் அழைப்பை எடுத்துப் பதில் சொல்லவில்லை.

குற்றச்சாட்டுகள் குறித்து கருத்தறிய பெஞ்சமின், வகையறாக்களை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனால் போனை எடுக்கவில்லை. அவர்கள் கருத்தைக் கூறினால் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து பல சிக்கல்களுக்கு உள்ளான தோழர் பெல் ராஜன் நம்மிடம், "2012-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பெல் சொசைட்டி தோழர் தங்கராஜ் பொறுப்பில் துவக்கப்பட்டு, பல்வேறு பிரச்னைகளுக்குப் பின்னர் நிலம் வாங்கப்பட்டது. அப்போதைய அ.தி.மு.க. அரசின் சட்டத்தால் பல பிரச்சினைகளை சொசைட்டி சந்தித்தது. தோழர் தங்கராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாலும், அதற்குப் பின்னர் பலமுறை அவரை இதர நிர்வாகிகள் தொடர்புகொள்ள முயற்சித்தபோதும், அவர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்ததினால் அவரிடம் எந்த விளக்கத் தையும் பெற முடியவில்லை. பின்னர் பொது உறுப்பினர் கள் கூடி புதிய நிர்வாகி களைத் தேர்ந்தெடுத்தனர். கமிட்டி பொறுப்பேற்று 82 பேருக்கு மனைப் பதிவு செய்யப்பட்டது. 45 பேருக்கு மனையைப் பதிவுசெய்யத் தயார் நிலையில் இருந்த போது, அப்போதைய வருவாய்த் துறை அதிகாரி ஜெயக்கொடி இ.ஆ.ப. அவர்கள் போட்ட உத்தரவால் மனைப் பதிவும், பட்டாவும் ரத்து செய்யப்பட்டு கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டது. அந்த உத்தரவு இந்த சொசைட்டியில் பணம் கட்டி யவர்கள் தலையில் பேரிடியாய் இறங்கியது.

மாண்புமிகு தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களுக்கு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். திருச்சி, சென்னை, இராணிப் பேட்டையைச் சார்ந்தவர்கள் 257 பேர் இதில் பணம் செலுத்தியுள்ளார்கள். அதில் 240 பேர் ஓய்வு பெற்று விட்டார்கள். 11 பேர் மரணமடைந்து விட்டார்கள். 17 பேர் பணியில் உள்ளார்கள். பணி ஓய்வின்போது எங்களுக்கு நிர்வாகம் வழங்கிய தொகையில் பெரும் பகுதியை இந்த மனைக்காக வழங்கி விட்டோம். பெல் நிறுவனத்தில் பணியாற்றிய பணியாளர்களுக்கு பென்ஷன் கிடையாது.

பணி ஓய்வின்போது வழங்கப்படும் பணம்தான் வாழும் காலம் வரை உதவும். பணத்தை இழந்து என்ன செய்வது என திசை தெரியாமல் நிற்கும் இந்த 257 பேரின் குடும்பங்களை நம் முதல்வர் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளோம். அரசு சுற்றறிக்கை யில் இருந்து விலக்களித்து, அனைவரையும் தமிழக முதல்வர்தான் காப்பாற்ற வேண்டும்'' என அனைவர் சார்பாகவும் வேண்டுகிறேன் என்கிறார்.

-சுந்தர் சிவலிங்கம்

_________________

ம.தி.மு.க. அவைத்தலைவர் விளக்கம்!

llநக்கீரன், ஜூலை 06-08 இதழில், "270 கோடி சொத்து! வைகோவை, துரை சாமி எதிர்ப்பதன் மர்மம்?! என்று வெளியான கட்டுரைக்கு ம.தி.மு.க. அவைத் தலைவர் சு.துரைசாமி தனது மறுப்பினைத் தெரிவித்துள்ளார். அதில், கோவை பெரியார் மாவட்ட திராவிட பஞ்சாலைத் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் 1958ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1959ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு, 1960ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதி பல்லடத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர் கூட்டத்தில் சங்கத்தின் தலைவ ராக கோவை செழியன் அவர்களும், பொதுச்செயலாளராக சு.துரைசாமி ஆகிய நானும், பொருளாளராக காட்டூர் கோபால் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது வரை 64 வருடங்கள் தொழிற்சங்கம் திறம்பட செயல்பட்டுவருகிறது. சங்க நடவடிக்கைகளுக்காக வாங்கப்பட்ட கட்டிடங்களும், இடங்களும் சங்கத்தின் பொதுச்செயலாளர் சு.துரைசாமி பெயரிலும், அப்போது சங்கத்தின் பொருளாளராக பொறுப்பில் இருந்தவர்களின் பெயரிலு மாகத்தான் வாங்கப்பட்டுள்ளன. ஒரு இடம்கூட தனிப்பட்ட யாருடைய பெயரிலும் வாங்கப்படவில்லை. தொழிற்சங்கத்திற்காக வாங்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் சங்கத்திற்கு கட்டுப்பட்டதே தவிர அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பட்டது அல்ல. சு.துரைசாமி அறக்கட்டளை என்பதால் அது சு.துரைசாமி குடும்பத்திற்கு சொந்தமானதல்ல என்ற அடிப்படை விபரம் தெரியாதவர்கள், இதுபற்றி அவதூறாகக் கருத்து தெரிவிக்கிறார்கள். கட்டுரையின் கடைசி மூன்று பத்திகளில் சொல்லப்பட்ட சம்பவங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்துள்ளார்.

nkn160722
இதையும் படியுங்கள்
Subscribe