வேட்பாளர் குளறுபடியால் மல்லுக்கட்டும் மயிலாடுதுறை!

ss

ddயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு, நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதிக்கு அறிமுகமில்லாத மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சுதா ராமகிருஷ்ணன் என்பவரை வேட்பாளராக அறிவித்து, தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின ருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் பட்டியல் சமூகத் தவர்களும், வன்னியர் சமூகத்தவர்களுமே அதிகம். அதற்கடுத்து இஸ்லாமியர் களும், முக்குலத்தோரும் தொகுதி முழுவதும் நிரம்ப இருக்கின்றனர். சீர்காழி, பூம்புகார் சட்டமன்றத் தொகுதிகளின் கடலோர மீனவர்கள் அதிகமிருந்தாலும் அவர்களுக்கு நிகராக கும்ப கோணம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிகளில் சௌராஷ்டிரா, பிராமணர் களும் கணிசமாக இருக்கின்றனர்.

மயிலாடுதுறை தொகுதியை காங் கிரஸ் இதுவரை 8 முறையும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க., த.மா.கா. தலா 2 முறையும், கம்யூனிஸ்ட் கட்சி ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன. சிட்டிங் தி.மு.க. எம்.பி.யான செ.ராம லிங்கம், இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வன்னியர் சமூகத்தவரான ர

ddயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்கு, நீண்ட இழுபறிக்குப் பிறகு தொகுதிக்கு அறிமுகமில்லாத மகிளா காங்கிரஸ் மாநில தலைவி சுதா ராமகிருஷ்ணன் என்பவரை வேட்பாளராக அறிவித்து, தி.மு.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின ருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியில் பட்டியல் சமூகத் தவர்களும், வன்னியர் சமூகத்தவர்களுமே அதிகம். அதற்கடுத்து இஸ்லாமியர் களும், முக்குலத்தோரும் தொகுதி முழுவதும் நிரம்ப இருக்கின்றனர். சீர்காழி, பூம்புகார் சட்டமன்றத் தொகுதிகளின் கடலோர மீனவர்கள் அதிகமிருந்தாலும் அவர்களுக்கு நிகராக கும்ப கோணம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிகளில் சௌராஷ்டிரா, பிராமணர் களும் கணிசமாக இருக்கின்றனர்.

மயிலாடுதுறை தொகுதியை காங் கிரஸ் இதுவரை 8 முறையும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க., த.மா.கா. தலா 2 முறையும், கம்யூனிஸ்ட் கட்சி ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன. சிட்டிங் தி.மு.க. எம்.பி.யான செ.ராம லிங்கம், இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வன்னியர் சமூகத்தவரான ராமலிங்கம், தொகுதிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்துகொண்டு சுழன்றடித்தவர் என்பதால் மீண்டும் அவரே போட்டியிடுவார் என்கிற பேச்சு தி.மு.க. வட்டாரத்தில் இருந்தது. ஆனால் மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதும் தி.மு.க.வினர் அப்செட் ஆனார்கள். அதேவேளை, சிட்டிங் எம்.பி. ராமலிங்கம், தொகுதி மக்களுக்கு நன்றி கூறி கடிதம் அனுப்பி, மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

my

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் நெருங்கிய நண்ப ரான பிரவீன் சக்கர வர்த்திக்குதான் சீட் என்று கூறப் பட்டது. சிட்டிங் திருச்சி எம்.பி.யான திருநாவுக்கரசுக்கு திருச்சி தொகுதி இல்லையென்றதும், மயிலாடுதுறை வழங்கப் படலாமென்றார்கள். மூன்று முறை மயிலாடுதுறை எம்.பி.யாக வும், மத்திய அமைச்சராகவுமிருந்த மணிசங்கர் ஐயரும் தனக்கு வாய்ப்புக் கேட்டிருந்தார். இவர்களில் ஒருவ ருக்குத்தான் சீட்டு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை காங்கிரஸ் பொறுப் பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மயிலாடு துறையை காங்கிரஸுக்கு ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தனர். அதோடு, தொகுதியைச் சேர்ந்தவருக்கே இம்முறை சீட்டு தரவேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இழுபறியான வேட்பாளர் தேர்வில் இறுதியாக, கடலூரில் சீட்டு கேட்டு வந்த சுதா ராமகிருஷ்ணனை மயிலாடுதுறை வேட்பாளராக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது காங்கிரஸ் தலைமை.

மயிலாடுதுறையில் அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜின் மகன் பாபு போட்டி யிடுகிறார். பாரதிய ஜனதா கூட்டணியில் பா.ம.க.வை சேர்ந்த ம.க. ஸ்டாலின் போட்டியிடு கிறார். நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முதல் ஆளாக களத்திற்கு வந்து சின்னமேயில்லாமல் பாதி பிரச்சாரத்தை முடித்து விட்டார்.

மயிலாடுதுறை பாராளுமன்றத் தொகுதி தி.மு.க. கோட்டையாக இருந்துவந்தாலும், தொகுதிக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு நபரை அறிவித்திருப்பது தி.மு.க.வினரை சோர்வடையச் செய்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளரான சுதாவும் வன்னியர் சமூகம் என்பதால் தி.மு.க.விலுள்ள வன்னியர்களின் வாக்குகளை சிதறாமல் பெற்றுவிடலாம் என்பது காங்கிரஸ் தலைமையின் கணக்கு. அதே நேரம், அ.தி.மு.க. வேட்பாளரும், பா.ம.க. வேட்பாளரும் உள்ளூர் வன்னியர்கள் என்பது சுதாவிற்கு பாதகமே. அ.தி.மு.க. கூட்டணி யில் பா.ம.க. வரும் என்கிற கணக்கில் சீட்டு கேட்டு முண்டியடித்த mmதிருவிடைமருதூர் அசோக்குமார், சீர்காழி மார்கோனி, முன்னாள் எம்.பி. பாரதிமோகன் எனப் பலரும், பா.ம.க. கூட்டணியில் இல்லை என்றதும் கழன்றுகொண்டனர். அதையடுத்து, பவுன்ராஜ் தனது மகன் பாபுவை துணிச்சலாகக் களத்தில் இறக்கினார். பாபு ஒப்பந்தக்காரர் என்பதால் தொகுதிக்கு அறிமுக மானவர் என்பதும், எல்லா கட்சிக்காரர்களையும் விலை கொடுத்து வாங்குமளவிற்கு பணம் படைத்தவர் என் பதும் அவருக்கு பிளஸ். நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் பிறந்த தொகுதி என்பதால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடலோர மக்களின் வாக்குகளை அதிகம் பெற்றவர், இந்த முறையும் அந்த வாக்குகளையும், இளைஞர்களின் வாக்குகளையும் குறிவைத்து பிரச்சாரம் செய்துவருகிறார்.

பா.ம.க. வேட்பாளரான ம.க.ஸ்டாலின் அதிரடி அரசியலுக்கு பெயர் போனவர். வன்னியர் சமூக இளைஞர்களின் ஆதரவு அதிகம். திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆதரவையும், கோவிந்தபுரம் விட்டல் சமஸ்தான ஆதரவையும், பணபலத்தையும் பெற்றவர் என்பது அவருக்கான பிளஸ். அதேநேரம், மூத்த நிர்வாகிகளுக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தம். சமீபத்தில் மயிலாடுதுறையில் நடந்த பட்டியலின இளைஞர் கொலையின்போது நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பெயர் அடிபட்டது இவருக்கான மைனஸ். ஆக, வன்னியர்களின் மொத்த வாக்குகளில் பா.ம.க.வும், அ.தி.மு.க.வும் பிரித்தது போகத்தான் காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைக்கும். இஸ்லாமியர்களின் கணிசமான வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. சௌராஷ்டிரா மக்கள் கோ.சி.மணி இருக்கும்வரை தி.மு.க.விற்கு வாக்களித்தனர். தற்போது பா.ஜ.க. விற்கு ஆதரவளிப்பது பா.ம.க. வேட்பாளருக்கு சாதகம். பட்டியல் சமூகத்தினரின் குறிப்பிட்ட சதவீத வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு சென்றதுபோக, மீதமுள்ள வாக்குகளும், இஸ்லாமியர்களின் வாக்குகளும், காங்கிரஸ் வேட் பாளர் சுதாவிற்கு சாதகமாக இருக்கிறது. காங்கிரஸ் குளறுபடியால், கடந்த முறை போலன்றி இம்முறை தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி கடினமாகவே இருக்கு மெனத் தெரிகிறது.

nkn030424
இதையும் படியுங்கள்
Subscribe