எஸ்.மந்திரமூர்த்தி, புவனகிரி

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீது 3.25 லட்சம் கடன் வாங்கியிருக்கிறது என பா.ம.க. புள்ளிவிவரம் தருகிறதே?

தமிழகம் மட்டுமா?…இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் கடன் வாங்கியிருக் கிறது. கடன் தொகைதான் வேறுபடும். இதுபோக மத்திய அரசும் ஒவ்வொரு குடிமகன் தலைமீதும் ஒரு தொகை கடன் வாங்கியிருக்கிறது. கடந்த 9 வரு டங்களில் இந்தத் தொகை இரட்டிப் பாகியிருக்கிறது. தற்போது ஒவ் வொரு குடிமகன் தலைமீதும் 1,10,000 கடன் இருப்பதாக காங்கிரஸ் தெரிவிக்கிறது. கடன் வாங்குவது பிரச்சனையில்லை. அந்தத் தொகை நியாயமாக செலவிடப்படுகிறதா?… எதிர்காலத்தில் கடன் வாங்காத நிலையை எட்ட என்ன செய் யப்படுகிறது என் பதுதான் கேள்வி. அதற்கான பதில் ஒன்றியம்- மாநி லம் இரண்டு பக்க மும் பாஸிட்டிவாக இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டி யிட முடியும் என்ற சந்திரபாபு நாயுடுவின் அறிவிப்பு குறித்து...?

ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள்தொகை பெருக்கம் அபாயகரமாக இருந்த தால் குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட் டது. தற்போது, குழந்தை பிறப் பை அதிகரிக்கத் தேவையிருந்தால் அதையும் பிரச்சாரம் மூலமே ஊக்குவிக்கலாம். அதைவிடுத்து இதைப் பண்ணினால்தான் போட்டியிட வாய்ப்பு என்பது ஜனநாயக மறுப்பு. எதேச்சதிகாரம். அடுத்தவர் சொந்த விஷயத்தில் தலையிடுவது. யாராவது நீதிமன்றம் சென்றால், சந்திரபாபு நாயுடுவுக்கு தலையில் வலுவான குட்டு விழும்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

அதிநவீன வளர்ச்சி கண்ட அமெரிக்காவால் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியவில்லையே, ஏன்?

ss

அமெரிக்காவால் மட்டுமா...? உலக நாடு களால் ஒரே நாளில் 30 செ.மீ., 40 செ.மீ. எனப் பெய்யும் மழையை, வெள்ளத்தைக் கட்டுப் படுத்த முடிகிறதா? மனிதக் கண்டுபிடிப்பு களுக்கு அதற்குரிய வரையறை உண்டு. இயற் கைக்கு அதற்கேயுரிய வலு உண்டு. கிட்டத்தட்ட லாஸ் ஏஞ்சல்ஸ் நகரே எரிந்து கருகிக்கொண்டி ருக்க, அமெரிக்கா கைகட்டி வேடிக்கைதான் பார்க்கமுடிகிறது. அதிகபட்சம் காட்டுத் தீயின் முன் மனிதன் என்ன செய்துவிட முடியும்? தீயை அணைக்கும் வேதிப்பொருட்களை, நீரை விமா னத்தில் கொண்டுவந்து கொட்ட முடியும். அப்ப டிக் கொண்டுபோகும் விமானங்களே, காட்டுத் தீயின் வேகத்தால் பல சமயங்களில் விபத்துக் குள்ளாகி விடும். அதுவாய் எரிந்து அணைய வோ... அல்லது ஒரு மழைப்பொழிவு வந்து தீயை அணைக்கவோ காத்திருக்கவேண்டியதுதான்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

Advertisment

புஷ்பா-2 பட நெரிசல், திருப்பதி தரிசன டோக்கன் நெரிசல்?

இரண்டில் ஏற்பட்ட உயிரிழப்பும் தவிர்த்திருக்கக்கூடியவை. அல்லு அர்ஜுன் தனது தியேட்டர் வருகை குறித்து மாநில காவல் துறைக்கு அறிவித்துவிட்டோ அல்லது வருகை யைத் தவிர்த்தோ இருந்தால் சம்பந்தப்பட்ட உயிரிழப்பைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதே போல, கோவில் நிர்வாகமும், மாநில அரசும் கூடும் கூட்டத்தை எதிர்பார்த்து முறையான பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்திருந்தால் 6 பேர் உயிரிழப்பைத் தடுத்திருக்கலாம்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

Advertisment

இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு சற்றே பலவீனமாக இருக்குமாமே?

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் முறையான திட்டமிடல் இன்றி, பணவீக் கத்தைக் கட்டுப்படுத்தத் தெரியாமல், நாட்டின் குடிமக்களுக்கு வருவாய் வழிவகைகளை ஏற்படுத்தாமல், வேலைவாய்ப்பின்மை சதவிகிதத்தை அதிகரிக்காமல், வெறுமனே இந்த வருடம் 1.5 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி வருவாய் அதிகரித்தது என வரி வருவாய்தான் ஒரு நாட்டின் சாதனை என்பதுபோல் நடந்து கொண்டால், இந்த வருடம் மட்டுமல்லாமல், வரும் வருடங்களிலும் இந்தியப் பொருளாதாரம் மந்தமாகத்தான் இருக்கும்.

வண்ணை கணேசன், கொளத்தூர்

பேனா தினம் கொண்டாடிய ஜார்கண்ட் பள்ளி மாணவிகள் 80 பேரின் சட்டைகளை பள்ளி முதல்வர் களையச் சொல்லியிருக்கிறாரே?

ஜார்கண்டின் தன்பாத் நகரில் கார்மெல் என்றொரு தனியார் பள்ளி. அங்கே சக மாணவிகள் விடுமுறை வருவதால் ஒருவருக்கொருவர் மற்றவர் சட்டையில் வாழ்த்துகளை எழுதிக் கையெழுத்திட் டுள்ளனர். விவகாரம் முதல்வர் காதுக்குப் போக, அவர்களின் பள்ளியின் நற்பெயர் கெட்டுவிட்டதாகக் கூறி சட்டையைக் கழற்றிவிட்டு அவர்களை வீட்டுக்குப் போகச் சொல்லியிருக்கிறார் முதல்வர். மாணவி களைவிட முதல்வர் செய்ததுதான் பள்ளியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்திருக்கிறது. அந்த முதல்வர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், தப்பிக்க ஏதுவாக விசாரணைக் குழு அமைத்திருக் கிறார்கள்.