மாவலி பதில்கள்!

ss

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

பெல்ஜியத்தில் பாலியல் தொழிலாளர் களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை யென்று அந்த நாட்டின் அரசு அறிவித் திருக்கிறதே?

புரட்சிகரமான சட்டம்தான். மற்ற எந்த வேலையையும்போல செக்ஸையும் அந்த நாட்டு அரசு ஒரு தொழிலாக அங்கீகரித்திருக்கிறது. இதனால் அவர்களுக்கு சுகாதாரக் காப்பீடு, வாராந்திர விடுமுறை, கர்ப்பகால விடுமுறை, ஓய்வூதியம் என அனைத்தும் கிடைக்குமெனத் தெரிகிறது. தவிரவும் முன்பெல்லாம் ஒரு வாடிக்கையாளர், பாலியல் தொழிலாளியிடம், அப்பெண் விரும்பாத செக்ஸ் விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டால் காவல்துறையில் புகாரளிக்க முடியாது. இப்போது புகாரளிக்க முடியும். சட்டப் பாதுகாப்பு, அவர்களின் வாழ்க்கையை எவ்வளவோ தூரம் முன்னேற் றும். மற்ற நாடுகளும் பரிசீலிக்கவேண்டிய சட்டம்தான்.

mm

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

ஜெயலலிதாவின் பணத்தை வைத்து சசிகலா,

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

பெல்ஜியத்தில் பாலியல் தொழிலாளர் களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை யென்று அந்த நாட்டின் அரசு அறிவித் திருக்கிறதே?

புரட்சிகரமான சட்டம்தான். மற்ற எந்த வேலையையும்போல செக்ஸையும் அந்த நாட்டு அரசு ஒரு தொழிலாக அங்கீகரித்திருக்கிறது. இதனால் அவர்களுக்கு சுகாதாரக் காப்பீடு, வாராந்திர விடுமுறை, கர்ப்பகால விடுமுறை, ஓய்வூதியம் என அனைத்தும் கிடைக்குமெனத் தெரிகிறது. தவிரவும் முன்பெல்லாம் ஒரு வாடிக்கையாளர், பாலியல் தொழிலாளியிடம், அப்பெண் விரும்பாத செக்ஸ் விருப்பங்களை நிறைவேற்றிக்கொண்டால் காவல்துறையில் புகாரளிக்க முடியாது. இப்போது புகாரளிக்க முடியும். சட்டப் பாதுகாப்பு, அவர்களின் வாழ்க்கையை எவ்வளவோ தூரம் முன்னேற் றும். மற்ற நாடுகளும் பரிசீலிக்கவேண்டிய சட்டம்தான்.

mm

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

ஜெயலலிதாவின் பணத்தை வைத்து சசிகலா, தினகரன் குடும்பத்தில் மட்டும் 1000 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளதாக திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது குறித்து...?…

2015 இடைத்தேர்தலில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்தபடி அவரது சொத்து மதிப்பு 117.13 கோடி. அதில் அசையும் சொத்துக்கள் 45.04 கோடி. அசையா சொத்துக்கள் 72.09 கோடி. திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதாவின் பணத்தை வைத்து சசிகலா, தினகரன் குடும்பத் தைச் சேர்ந்த 1000 பேர்களாவது கோடீஸ்வரர் களாக உள்ளனர் என்கிறார். அப்படியானால் அவர்கள் குறைந்தபட்சம் 1 கோடியாவது வைத்திருக்கவேண்டும். தேர்தலில் கணக்குக் காட்டியதுபோக, 883 கோடி கணக்கில் காட்டாத பணத்தை ஜெ. வைத்திருந்ததாக திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறாரா?

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் காப்பரை ஏற்றுமதி செய்துவந்த இந்தியா தற்போது இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்று குரல்கள் எழுந்துள்ளதே...?

தூத்துக்குடியிலும் சுற்றுப்புறத்திலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, அங்கு வசித்துவந்த மக்கள் பாதிக்கப்பட்டார்களே,… அவர்களின் ஆரோக்கியம் முக்கியமில்லையா? அறவழியில் போராடியும், நெற்றியிலும் வாயிலும் துப்பாக் கிக் குண்டுகளை ஏந்திக்கொண்டு வேதாந்தாவிட மிருந்து விடுதலை பெற்றிருக்கிறார்கள் தூத்துக் குடி மக்கள். வேதாந்தா குழுமத்தின் எலும்புத் துண்டுகள் பாயுமிடங்களிலிருந்து புதிதாக, ஸ்டெர்லைட்டை உயிர்ப்பிக்க குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. அந்தக் குரல்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டியதுதான்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

"புதிய கட்சிகளைப் பார்த்து பா.ஜ.க. பயப்படாது' என்று லண்டன் ரிட்டர்ன் தலைவர் கூறுகிறாரே…?

அது மற்றவர்களுக்குச் சொன்ன தில்லை,…தனக்குத்தானே சொல்லிக்கொண்டது. இருட்டு வழியில் நடைபோடும் தனியாள் பயத்தை மறைக்க பாட்டுப் பாடுவதில்லையா? அதுபோலத்தான் இந்த கமெண்டும்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

"பார்லிமெண்ட் முடங்குவதால் மக்கள் வரிப் பணம் வீணாகிறது' என அருண் கோவில் எம்.பி. தெரிவித்திருப்பது குறித்து…?

பார்லிமெண்ட் என்னவோ இப்போது தான் புதிதாக முடங்குவதுபோல் பேசுகிறாரே அருண்கோவில். பா.ஜ.க.வோ, கம்யூனிஸ்டு களோ, இதர கட்சிகளோ பார்லிமெண்ட்டை அமளி செய்து முடக்கியதே இல்லையா? ஜனநாயகம் முடங்காமல் இருக்கவேண்டு மானால், அவ்வப்போது பார்லிமெண்ட் முடங்குவது இயல்பானதுதான். அதற்கு எதிர்க்கட்சிகள் பேச இடமளிக்கவேண்டும். அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்கவேண்டும்.

பி. சரத்குமார், திருத்துறைப்பூண்டி

ஐயப்ப பக்தர்கள் ரயிலில் கற்பூரம் ஏற்றினால் தண்டனை என்று ரயில்வேயில் கெடுபிடி அதிகரித்திருக்கிறதே?

கடவுளை வழிபட சில விதிமுறைகள் உண்டுதான். அதேசமயம் கடவுள் ரொம்பவும் கெடுபிடியான ஆள் அல்ல. கற்பூரம் ஏற்றி விபத்து ஏற்பட்டு ரயிலில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவதை ஐயப்பனேகூட விரும்ப மாட்டார். அதனால் கற்பூரம் ஏற்றாமல் வழிபட்டு ரயில்வேக்கு ஒத்துழைப்பதே நல்லது.

பி.தேவி, மேட்டுப்பாளையம்

வரும் ஆனா வராது என்பதற்கு விளக்கமென்ன?

தற்போதைய பார்லிமெண்ட் கூட்டத்தில் எம்.பி.யான சாகேத் கோகலே, மோடியை நோக்கி “"மோசமான கடன்களாலும் மோசடி யாலும் எத்தனை கூட்டுறவு வங்கிகள் மூடப் பட்டுள்ளன? அதில் முதலீடு செய்தவர்களின் பணத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'’என கேள்வியெழுப்பினார். அதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுந்து, “"எங்களது அரசில் எந்தவொரு மோசடியும் நடைபெற்றதில்லை. இத்தகைய மோசடியில் தொடர்புடைய 77 வங்கிகள் கண்டறியப் பட்டுள்ளன'’என்றிருக்கிறார். இதைவிட பொருத்தமான உதாரணம் வேண்டுமா!

nkn111224
இதையும் படியுங்கள்
Subscribe