அ.யாழினிபர்வதம், சென்னை.78.
வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் மத்திய அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிட்ட 120 சமூக வலைத்தள சேனல்களை முடக்கியுள் ளோம் என்கிறாரே எல். முருகன்...?
அவர்கள் காட்டும் வழிகாட்டும் நெறி முறைகளை முழுக்கப் பின்பற்றினால், "இந்தியா ஒளிர்கிறது, மோடி வாழ்க' என்று மட்டும்தான் சொல்லமுடியும் என்கின்றன வலைத்தள சேனல்கள். இதைச் செய்யாவிட்டால் சேனல் களை முடக்கிவிடுவோம் என்கிறார் முருகன்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
“டிஜிட்டல் பேமெண்ட் மூலம் இந்தியாவில் வறுமை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கூறுகிறாரே ரவிசங்கர் பிரசாத்?
டிஜிட்டல் பேமெண்ட் ஒரு புதிய வசதி. இந்த வசதியால், எங்கும் கையில் கரன்சியை எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. பணம் அனுப்பவும் பெறவும் வங்கிக்குச் சென்று காத்திருக்கவேண்டியதில்லை. முதலில் இந்த வசதியை இலவசமாகத் தந்துவிட்டு தற்போது வியாபாரிகளிடம், அவர்கள் மேற்கொள்ளும் வரவு-செலவுகளுக்கேற்ப அரை சதவிகிதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது 1 லட்சம் வரவு-செலவு பார்த்தால் 500 ரூபாய் பிடித்துக்கொள்கிறார்கள். இரண்டாவதாக, விலைவாசி உயர்வு, பொருளாதாரத் தேக்கத்தால் இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர் அடித்தட்டு மக்களாக மாறிவருகிறார்கள் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.
வாசுதேவன், பெங்களூரு
விஜய் மாநாடு மிகப்பெரிய வெற்றி என்று ரஜினிகாந்த் கூறியிருப்பது?
சிறிய பட்ஜெட் படங்கள், கொஞ்சம் சுமாரான படங்கள் வெளிவந்தால் எப்படியோ ஆட்களைப் பிடித்து ரஜினிக்குப் போட்டுக் காட்டுவார்கள். உடனே ரஜினியும் படம் பிரமாதம் என்பார். படத்துக்கு கொஞ்சம் விளம் பரம் கிடைக்கும். முதல்முறையாக சினிமாவைத் தாண்டி, விஜய் கட்சிக்கு விளம்பரம் செய்திருக்கிறார் ரஜினி!
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
தி.மு.க. கூட்டணியில் விவாதம் இருக்கும்... விரிசல் இல்லை என தி.மு.க.வினர் கூறியிருக் கின்றனரே?
விரிசல் இருக்கிறதா,…விவாதம் இருக்கிறதா என்பது தேர்தல் நெருக்கத்தில் தெளிவாக வெளிப்படத்தானே போகிறது.
எஸ். கதிரேசன், பேரணாம்பட்டு
திருப்பத்தூர் அருகே பசுவுக்கு சீர்வரிசை களுடன் வளைகாப்பு நடத்தியிருக்கிறார்களே?
நவீன தலைமுறையை விளம்பர மோகம் பிடித்தாட்டுகிறது. பசு சினையாக இருந்தால் அதற்கு நல்ல உணவிட்டுப் பார்த்துக்கொண் டாலே போதுமானது. சீர்வரிசை வைத்து, வளைகாப்பு நடத்தி படம்பிடித்துப் போடவேண்டும் என எந்தப் பசுவாவது, யாரிடமாவது கேட்டதா என்ன!
த.சத்தியநாராயணன், அயன்புரம்
அரசு பஸ், ஆம்னி பஸ் என்ன வித்தியாசம்?
முதல் வித்தியாசம் கட்டணம். அதுவும் இந்த தீபாவளி நேரத்தில் அரசு பஸ் கட்டணத் தைவிட ஒன்று, ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கும். இரண்டாவது வித்தியாசம் அரசு பஸ்ஸைவிட ஆம்னி பஸ் கொஞ்சம் சொகுசாக இருக்கும். மூன்றாவதாக, அரசு பஸ்ஸைவிட ஒன்று இரண்டு மணி நேரம் முன்னதாக போகுமிடத் தில் கொண்டுபோய் இறக்கி விட்டுவிடுவார்கள்.
ரா.கார்த்திக், ஜோலார்பேட்டை
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதி கரிப்பு என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டுகிறாரே?
சட்டம் ஒழுங்கு சரியில்லை, போதைப் பொருள் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, கட்டண உயர்வு இதெல்லாம் வழக்கமாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தான். பிரச்சனை, அதுவல்ல,… எதிர்க்கட்சித் தலைவர் அப்படி குற்றச்சாட்டு வைக்கும்போது மக்களும், "ஆமாம், இவர் சொல்வது நிஜம் தானே'’ என நினைக்குமளவுக்கு குற்றச்சாட்டு களும், பேச்சுத் தொனியும் நம்பகமாக இருக்கவேண்டும். அந்த இடத்தில்தான் எடப்பாடி கோட்டைவிடுகிறார்.
சி.ராகுல், திருச்சி
ரஷ்யாவுக்கு மின்னணு விற்பனை செய்ததாக சில இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசு தடைவிதித்துள்ளதே?
ரஷ்ய-உக்ரைன் போரால் ஏற்பட்ட இக்கட்டால், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியாவும், ரிலையன்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களும் கோடிக்கணக்கில் ஆதாயம் பார்த்திருக்கின்றன. பதிலுக்கு நம்மிட மிருந்து மின்னணு சாதனங்களை வாங்கியிருக் கிறது ரஷ்யா. அந்த நிறுவனங்கள் மீது தடை விதித்ததன் மூலம் மறைமுக நெருக்கடியை உண்டுபண்ணுகிறது அமெரிக்கா. நாம் கொடுக் காவிட்டாலும்கூட அந்த மின்னணு சாதனங் களை சீனாவோ, வடகொரியாவோ கொடுத் திருக்கத்தான் போகிறது. இத்தனைக்கும் இந்தியா நடுநிலை வகிக்கும்போதே இப்படி. முற்ற முழுக்க ரஷ்யா ஆதரவு நிலை எடுத்திருந் தால், மிகப் பெரிய பொருளாதாரத் தடைகளையே விதித்திருப்பார் பெரியண்ணன் அமெரிக்கா!