அ.யாழினிபர்வதம், சென்னை-78

உச்சநீதிமன்றத்தில் புதிதாகத் திறக்கப் பட்டுள்ள நீதிதேவதை சிலையில் கண்கள் கருப்புத் துணியால் கட்டப்படாமல் உள்ளதே?

mm

தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆலோசனைப்படி, கண் கட்டப்படாத, கைகளில் வாளில்லாத நீதிதேவதை சிலை வைக்கப் பட்டுள்ளது. ஆட்களைப் பொறுத்து நீதி மாறுபடாது. தேவையெனில் தீமையைத் தண்டிக்க கையில் வாள் எனும் தத்துவத்தில் பாரம்பரியமான நீதிதேவதை சிலை இருக்கும். இந்தியாவின் சட்டம் பார்வையற்ற தல்ல எனும் பொருளில் நீதிதேவதையின் கண்கட்டை அவிழ்த்துவிட்டு, வாளுக்குப் பதில் இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை கையில் கொடுத்திருக்கிறார்கள்.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

இந்தியாவில் ஏ.சி.க்குப் பயன்படுத்தப்படும் மின் சாரம் 2035-ஆம் ஆண் டில் மெக்சிகோவின் மொத்த மின்சார பயன் பாட்டைவிட அதிக மாக இருக்கும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் (ஒஊஆ) தெரிவித்துள்ளதே..?

2022-23-ல் இந்தியாவின் மின் நுகர்வு 1504.26 பில்லியன் யூனிட்டுகள். அடிக்கிற வெயிலைப் பார்த்தால், அடித்தட்டுக்கும் அடித்தட்டிலிருக்கும் ஏழையைத் தவிர எல்லோருமே ஏ.சி. வாங்கிவிடுவார்கள் போலிருக்கிறது. மின் உபயோகத்தில் அமெரிக்காவையும் பின்தள்ளி சீனா தற்போது முதலிடத்தில் இருக்கிறது. சீனா அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளுகிறதென்றால், சீனாவையே மக்கள் தொகையில் பின்தள்ளிய இந்தியாவால் வட அமெரிக்க நாடான மெக்ஸி கோவை மின்நுகர்வில் முந்த முடியாமல் போய்விடும் என்றா நினைக்கிறீர்கள்!

Advertisment

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தை நீக்குவோம் என்று சீமான் சொல்கிறாரே?

வந்தால்தானே. ஆட்டுக்கு வாலை அளந்துதான் வைக்கிறான் இறைவன் என்றொரு பழமொழி உண்டு.

Advertisment

திலகர் ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட்ட அனைவரும் தங்களின் செயலுக்கு வருந்துவ தாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

ஒன்றும் பிரச்சனையில்லை. உண்மை யிலே அவர்கள் வருத்தப்பட்டிருந்தால் 2026 தேர்தலில் தங்கள் வருத்தத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். மாறாக, வருத்தப்படுவதாக ராமதாஸ் கனவு கண்டிருந்தால், அதற்குத் தீர்வும் இன்னொரு கனவில்தான் கிடைக்கும்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

தமிழ்நாட்டின் அனுமதியில்லாமல் மேகதாதுவில் ஒரு செங்கலைக்கூட எடுத்துவைக்க முடியாதென்று செல்வப் பெருந்தகை கூறியிருக்கிறாரே?

யாராவது கர்நாடக காங்கிரஸ் தலைவரின் பேச்சைக் கேளுங்கள். “உயிரே போனாலும் மேகதாது அணையைக் கட்டாமல் விடமாட்டோம்” என்பார்கள். காங்கிரஸ்தான் என்றில்லை. இரு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கம்யூனிஸ்ட், பா.ஜ.க.வினரும் இதே உத்தியைத்தான் கையாள்வார்கள். பிரச்சனைக்குத் தீர்வுகாண வழி யிருந்தாலும் தீர்வு காணமாட்டார்கள். பிரச்சனையென்பது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை வாக்குகளைப் பெற்றுத்தரும் அமுதசுரபி.

ஜெ.மணிகண்டன், திரு.வி.க. நகர்

சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கும் அரசு பங்களாவில் வசிப்பதற்கும் நான் அரசியலுக்கு வரவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அதிஷி கூறியுள்ளாரே?

அதிஷி குடியேற விரும்பியது, அரவிந்த் கெஜ்ரிவால் இருந்த பங்களா. அதில் அதிஷி குடியேறுவதில் கெஜ்ரிவா லுக்கே அதிருப்தியில்லாதபோது, அரசு அதிகாரிகள் ஏன் வாரக்கணக்கில் அரசியல் செய்கிறார்கள்? முதல்வருக்கே பங்களாவைத் தர மறுத்து உத்தரவுகள் எங்கிருந்து வருகின்றன? நீதிமன்றம் தலையிடும் கட்டம் நெருங்கியதும் பிரச்சனைகள் எப்படி புஸ்வாணமாகிவிடுகின்றன? என்பதை யோசித்தால் பிரச்சனையின் வேர் பிடிபடும்.

வண்ணை கணேசன், கொளத்தூர்

தொழுவத்தை சுத்தம் செய்தால் புற்றுநோய் குணமாகுமென உ.பி. அமைச்சர் கருத்துத் தெரிவித் துள்ளாரே?

அப்படியே காய்ச்சலுக்கு என்ன செய்யவேண்டும், ஜலதோஷத்துக்கு என்ன செய்யவேண்டும் என நோய்வாரி யாகப் பட்டியல் தந்துவிட்டால் உபயோகமாக இருக்கும். இந்த அரிய அறிவியல் கண்டுபிடிப்பை உத்தரப்பிரதேசத்தின் முதல்வருக்கும் தெரிவித்துவிட்டு, உத்தரப்பிரதேசத்தில் இயங்கும் மருத்துவமனைகளையெல்லாம் மூடிவிட்டு சுகாதார நிதியை மிச்சம் பிடிக்கலாம்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

அயோத்தி பிரச்சனையில் நான் கடவுள் முன் அமர்ந்து பிரச்சனைக்கு தீர்வு கேட்டேன் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியிருக்கிறாரே?

எந்தக் கடவுளிடம், ராமரிடமா அல்லாவிடமா?