சி. கார்த்திகேயன், சாத்தூர்

நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக காவல்துறை சார்ந்த கதைக் களங்களையே தேர்வு செய்வது பற்றி?

யாருக்குத் தெரியும், ரஜினிகாந்த் காவல்துறை சார்ந்த கதைகளைத் தேர்வு செய்கிறாரா, இல்லை இயக்குநர்கள் காவல்துறை கதைகளாகச் சொல்கிறார்களா? மொத்தத்தில் விருந்து காரசாரமாக இருந்தால் ரசித்துச் சாப்பிட்டுப் போகவேண்டியதுதான். "கூலி'யில் லோகேஷ் கனகராஜ் என்ன கேரக்டர் கொடுக்கிறார் என பார்க்கலாம்!

வண்ணை கணேசன், கொளத்தூர்

Advertisment

"மழை ஓயும்வரை மதுக்கடைகளை மூடவேண்டும்' என்று அன்புமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறாரே?

முற்றிலுமாக மதுக்கடைகளை மூடவேண்டு மென்று சொல்வதில் பொருளிருக்கிறது. அதென்ன மழை ஓயும்வரை மதுக்கடைகளை மூடுவது? மழை வெள்ளத் தொந்தரவோடு, குடிகாரக் கணவனை சமாளிக்கும் தொந்தரவையும் மனைவிகள் சந்திக்கூடாதென்ற நல்லெண்ணமாயிருக்கலாம்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

Advertisment

"கனவு நம்மைத் துரத்தவேண்டும்' என்கிறாரே சமுத்திரக்கனி?

"தூங்கும்போது வருவதல்ல கனவு, தூங்க விடாமல் செய்வதே கனவு' என்றார் அப்துல்கலாம். "லட்சியத்தை அடையும்வரை, கனவு உங்களை ஓரிடத்தில் இருக்கவிடாமல் துரத்திக்கொண்டே இருக்கவேண்டும்' என்கிறார் சமுத்திரக்கனி. ஹிட்லர்களும், முசோலினிகளும் காணும் கனவு அவர்களைவிட, மற்றவர்களையே நாடுவிட்டு நாடு துரத்திக்கொண்டிருக்கிறது.

mm

மதிராஜாதிலகர், சின்னபுங்கனேரி

நமக்கு ஏன் வம்பு என்று பலரும் இருந்துவிடு கிறார்களே...?

எந்தப் பிரச்சனை யென்றாலும் எதிர்கொள்ள லாம் என்று எழுந்து நிற்ப தற்கு முதுகெலும்பும் நெஞ்சுர மும் வேண்டும். அது எல்லோ ருக்கும் வாய்த்துவிடுவதில்லையே!

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.

மோடியால் அறிமுகம் செய் யப்பட்ட "மேக் இன் இந்தியா' திட்டம் என்ன ஆனது?

பா.ஜ.க. ஆட்சியில் துரும்பள வுக்குச் செய்வார்கள். தூணள வுக்கு விளம்பரம் நடக்கும். அதற்கு மேக் இன் இந்தியா திட்டமும் விதி விலக்கில்லை. மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், பா.ஜ.க.வினரே புகழும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையையே சீனாவில்தான் செய்துகொண்டுவந்து நிறுத்தினார்கள். இதற்குமேல் வேறென்ன சொல்ல?

அ.யாழினிபர்வதம், சென்னை

தேர்தலுக்கு முன்பு மகாராஷ்டிராவின் ஆளும் கூட்டணிக் கட்சி முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி?

நீண்டநாள் காங்கிரஸ் உறுப்பினர் பாபா சித்திக். சமீபத்தில் தேசியவாத காங்கிரஸுக்குத் தாவியவர். மானை வேட்டையாடிய சல்மான்கானுக்கு ஆதரவாக பாபா சித்திக் இருந்ததால் சுட்டுக்கொன்றோம் என் கிறார்கள் கொலையாளிகள். ஏற்கெனவே 25 முறை சித்திக்கை கொல்ல முயன்று கடைசி முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். கொலைக்கான வியூகம், ஏற்பாடுகள் எல்லாம் லாரன்ஸ் பிஷ்னோய் என்கிறார் கள். இவர் நெடுங்காலமாக சிறையில் இருப்பவர். இவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மகாராஷ்டிர போலீஸ் விரும்புகிறது. ஆனால் உள்துறை அமைச்சகம் அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறது என தகவல். ஒய் ப்ளஸ் பாதுகாப்பில் இருந்தவர் என்பதால், தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்களின் பாதுகாப்பில் இருந்தவர். அதையும் தாண்டி கொல்லப்பட்டிருக்கிறார் என்பதுதான் கொலைக்குப் பின்னால் அரசியல் பின்புலம் இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறது.

தே.மாதவராஜ், கோயமுத்தூர் 45

சாம்சங் நிறுவனத்தின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதால் மற்ற தொழில் நிறுவனங் கள் தமிழகத்தில் நுழையத் தயக்கம் காட்டாதா?

தயக்கம் காட்டினால் காட்டிவிட்டுப் போகட்டும். வெளிநாட்டு நிறுவனங்களை மாநிலத்துக்கு ஈர்க்க நிலம் கொடுக்கலாம், நீர் தரலாம். மானிய விலையில் மின்சாரம் தரலாம், வரிச்சலுகை தரலாம். வேண்டிய அனுமதிகளைப் பெறுவதை எளிதாக்கித் தரலாம். அதற்காக தொழிலாளர்களின் அடிப்படை உரிமை களை ஒரு தாம்பூலத் தட்டில் வைத்துக்கொள்ளுங் கள் நாங்கள் எதுவும் சொல்லமாட்டோம் என தூக்கிக் கொடுக்கவேண்டியதில்லை. குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற தொழிற்சூழல், நீண்டநேர வேலை, குழந்தைத் தொழிலாளர்கள் பயன்பாடு இவற்றையெல்லாம் கொண்டிருக்கும் தொழிற் சாலைகளை ஸ்வெட்ஷாப் (நஜ்ங்ஹற் ள்ட்ர்ல்) என்பார் கள். இந்தியத் தொழிற்சாலைகள் ஸ்வெட்ஷாப்பாக மாற அனுமதிக்கக்கூடாது.