எச்.மோகன், மன்னார்குடி
"டிசம்பர் 2025-க்குள் அ.தி.மு.க.வில் நிச்சயம் ஒற்றுமை வரும்' என்கிறாரே வைத்திலிங்கம்?
எந்த ஜோசியர் சொன் னாரோ... இல்லை சசிகலாவின் ஆரூடத்தை வைத்திலிங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறாரோ என்னவோ.
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த பிற கும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லையே..?
அரசு விலையைக் குறைத்தால், அம்பானியும் குறைக்கவேண்டியதிருக்கும். மக்கள் நட்டமடைந்தால் தாங்கிக்கொள்வார்கள். அம்பானி நட்டமடைவதைப் பார்க்கும் மனோதிடம் இப்போதைய ஆட்சியாளர்களிடம் கிடையாதே!
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
திருமா மது ஒழிப்பு மாநாடு நடத்தி ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறாரே?
அதிர்வேட்டாய் இருக்கப்போகிறது என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். மாநாட்டில் தி.மு.க.வின் சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொள்வார்கள்
எச்.மோகன், மன்னார்குடி
"டிசம்பர் 2025-க்குள் அ.தி.மு.க.வில் நிச்சயம் ஒற்றுமை வரும்' என்கிறாரே வைத்திலிங்கம்?
எந்த ஜோசியர் சொன் னாரோ... இல்லை சசிகலாவின் ஆரூடத்தை வைத்திலிங்கம் சொல்லிக் கொண்டிருக்கிறாரோ என்னவோ.
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்த பிற கும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லையே..?
அரசு விலையைக் குறைத்தால், அம்பானியும் குறைக்கவேண்டியதிருக்கும். மக்கள் நட்டமடைந்தால் தாங்கிக்கொள்வார்கள். அம்பானி நட்டமடைவதைப் பார்க்கும் மனோதிடம் இப்போதைய ஆட்சியாளர்களிடம் கிடையாதே!
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
திருமா மது ஒழிப்பு மாநாடு நடத்தி ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறாரே?
அதிர்வேட்டாய் இருக்கப்போகிறது என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். மாநாட்டில் தி.மு.க.வின் சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொள்வார்கள் என அறிவித்ததன் மூலம், எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பை வேகமிழக்கச் செய்து புஸ்வாணமாக்கிவிட்டார் ஸ்டாலின்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
"மத்திய அரசு என்ற கூண்டுக்குள் கிளியாக சி.பி.ஐ. அடைக்கப்பட்டுள்ளது. அதைவிட்டு சி.பி.ஐ. வெளியே வரவேண்டும்' என்று உச்சநீதிமன்ற நீதிபதியொருவர் கூறியுள்ளாரே?
சி.பி.ஐ., அமலாக்கத்துறையினர் கூண்டுக்கிளி களாவது இருக்கட்டும். ஆளுங்கட்சியினரின் அன்புப்பிடியில் நீதிபதிகள் சிக்காமல் இருந்தால் சரிதான்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
தமிழக அரசு வருமானத்தைப் பெருக்க வெளிநாடுகளுக்குச் சென்று தொழிலதிபர்களைப் பார்ப்பதை விட்டுவிட்டு லாட்டரி விற்பனைக்கு அனுமதி வழங்கினால் பணம் கொட்டுமே?
இதென்ன புதுமையான சிந்தனையாக இருக்கிறது. லாட்டரி விற்பனை செய்வதால் மாநில அரசுக்கு எப்படி வருமானம் வந்து கொட்டும்? லாட்டரி வியாபாரிகளுக்கு வேண்டுமானால் வருமானம் கொட்டும். ஆனால் மாநிலம் முழுவதுமுள்ள அடித்தட்டு, நடுத்தர மக்களின் பையிலுள்ள காசு மாயமாகிவிடுமே!
வாசுதேவன், பெங்களூரு
சில்லறை விஷயம் என்றால்..?
அது ஆளாளுக்கு மாறுபடும். உங்களுக்கு சில்லறை விஷயமாய் இருப்பது மற்றவர்களுக்கு முக்கிய விஷயமாகப்படும். மற்றவர்களுக்கு சில்லறை விஷய மாகப்படுவது உங்களுக்கு முக்கிய விஷயமாகப்படும். ஞானம் தேடுபவர்களுக்கு, லௌகீக விஷயங்கள் சில்லறை விஷயம். பணம் தேடுபவர்களுக்கு சில்லறை, நோட்டு போன்றவைதான் முக்கியமான விஷயம்.
ஆர்.ராஜ்மோகன், முட்டியூர்
"மக்களுக்கான ஆட்சியென்றால் அது அ.தி.மு.க. ஆட்சியை மட்டும்தான் சொல்லமுடியும்' என்கிறாரே வி.கே.சசிகலா?
எந்த அ.தி.மு.க. ஆட்சி, ஜெ. வரும்போது மணிக் கணக்கில் மக்களின் வாகனங்களை யெல்லாம் நிறுத்தி வைத்த அ.தி.மு.க. ஆட்சியா? கும்பகோணத்தில் மகாமகத் தில் இரு உடன்பிறவா சகோதரிகள் குளிப்பதற்காக 50-க் கும் மேற்பட்டோரை உயிர்ப்பலி கொடுத்த அ.தி.மு.க. ஆட்சியா? இல்லை, மழை வெள்ளத்தில் சென்னையே தவித்துக்கொண்டிருக்கும் போது, ஏரி நீரைத் திறந்துவிட அம்மாவின் உத்தரவைப் பெற அதிகாரிகள் தத்தளித்துக் கொண்டிருந்தார்களே அந்த அ.தி.மு.க. ஆட்சியா?, வேதாந்தாவின் ஆலையை மூடக்கோரி போராடியவர் களின் வாயிலும், நெஞ்சிலும் வேனில் இருந்தபடி போலீஸ் குறிபார்த்துச் சுட்டதே அந்த அ.தி.மு.க. ஆட்சியா? எந்த காலகட்டம் மக்களுக்கான ஆட்சியென சசிகலா குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.
க.சந்திரகலா, அம்பாசமுத்திரம்
கூட்டணி ஆட்சியில் மோடி அரசு தடுமாறுகிறதா?
முதலில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தென்னவோ உண்மைதான். ஆனால் பயிற்சி மருத்துவக் கல்லூரி விவ காரத்தில், திட்டமிட்ட காய்நகர்த்தல் மூலம் மம்தாவையும், சி.பி.ஐ. தொடுத்த வழக்கில் விடுதலையாகிவந்தாலும் அதிஷியை முதல்வராக்க செக்மேட் வைத்ததன் மூலம் கெஜ்ரிவாலையும், மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் மனைவி பார்வதிக்கு இடம் ஒதுக்கியது தொடர்பாக வழக்குப் பதிய கர்நாடக ஆளுநர் அனுமதியளித்ததன் மூலம் சித்தராமையாவையும் என எதிர்க்கட்சிகளைத்தான் தடுமாற வைத்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் கூட்டணியென்ற அணுகுமுறையைக் கைவிட்டு, உண்மையான கூட்டணியாக எதிர்க்கட்சிகள் செயல்பட்டால் ஒழிய இதற்கு முடிவில்லை.
ப. கணேசன், கும்மிடிப்பூண்டி
"எய்ம்ஸ் தாமதம் டெக்னிக்கல் எரர்' என்கிறாரே நட்டா?
அதைத்தான் கேள்வி கேட்டிருக்கிறார் சு.வெங்கடேசன். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கட்டப்படவேண்டிய மருத்துவமனைக்கு கோரப்படும் ஒப்பந்தப் புள்ளிகளில் மட்டும் எங்கிருந்து தொழில்நுட்ப தவறுகள் முளைக்கின்றன. ஏற்கெனவே பத்தாண்டு தாமதம் ஆகிவிட்டது. விரைவில் நிதி ஒதுக்கீடு என்கிறார் நட்டா. விரைவில் என்பதற்கு எத்தனை ஆண்டுகள் இடைவெளி என்பதை பா.ஜ.க. வின் அகராதியில்தான் தேடவேண்டும்.