மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
தினமும் ஒரு ராக்கெட் விண்ணுக்கு அனுப்பும் சூழல் இந்தியாவில் உருவாகும் என்கிறாரே மயில்சாமி அண்ணாதுரை?
இந்திய விஞ்ஞானிகள் மீதும் அவர்கள் அறிவுத்திறன், உழைப்பு மீதும் மயில்சாமி அண்ணாதுரையைப் போலவே மாவலிக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஏற்கெனவே நிலம், நீர் பெரிதும் மாசுபட்டிருக் கிறது. மிச்சமிருப்பது ஆகாயம் மட்டும்தான். ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு விண்வெளி யில் ஏவும் செயற்கைக்கோள்களால் அதுவும் மாசடைந்து வருகிறது என்கிறார்கள் விஞ்ஞானி கள். அதை எண்ணியாவது கன்னாபின்னா வென்று செயற்கைக் கோள்களை ஏவாமல், அத்தியாவசியமானதை மட்டும் ஏவவேண்டும். பூமியின் சுற்றுப்பாதையில் சேர்ந்திருக்கும் 1 மி.மீ. அளவுள்ள விண்குப்பைகளின் அளவு மட்டும் 170 மில்லியன் என மதிப்பிட்டுள்ளார்கள்.
என். இளங்கோவன், மயிலாடுதுறை.
மிகச்சிறப்பாக நடைபெற்ற "பழனி முருகன் மாநாடு' பற்றி?
மாநாடு எல்லாம் மிகச்சிறப்பாகத்தான் நடைபெற்றது. ஆனால், பாரம்பரியமான, பழைய கட்சி ஆட்கள் பா.ஜ.க.வை பேலன்ஸ் பண்ணுவதற்காக, கட்சி பகுத்தறிவுப் பாதையிலிருந்து தடம்மாறிச் செல்கிறதோ என ஃபீல் பண்ணுகிறார்கள். அதையும் கட்சித் தலைவர் கருத்தில் கொள்ளவேண்டும்.
எஸ். கதிரசேன், பேர்ணாம்பட்டு
ஜப்பானிலுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அஸ்தியை இந்தியாவுக்குக் கொண்டுவரவேண்டும் என்கிறாரே போஸின் பேரனான சந்திரகுமார் போஸ்?
நேதாஜி சுபாஷின் மரணமே இன்றுவரை சர்ச்சையிலிருக்கிறது. நேதாஜி உயிருடன் இருக்கிறார் என நம்புபவர்கள் வெகுகாலம் இருந்தனர். மாறாக, ஜப்பான் நாடு பாதுகாத்து வைத்திருப்பது நேதாஜியின் அஸ்திதான் என அவரது குடும்பம் உறுதியாக நம்புமெனில், ஆட்சியிலிருக்கும் அரசிடம் கோரிக்கை வைத்து அஸ்தியை இந்தியா கொண்டுவர முயற்சியெடுக்க லாம். இதில் சம்பந்தப்பட்ட அரசுக்கும் விளம்பரம் கிடைக்கும் என்பதால், அவர்களும் ஆர்வம் காட்டவே செய்வார்கள்.
த.சத்தியநாராயணன், அயன்புரம்
கலைஞரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டது பற்றி?
கலைஞரின் நூல்களால் வரும் வருமானத்தை எதிர்பார்த்து முதல்வரின் குடும்பம் இல்லை. தவிரவும் நாட்டுடமையாக்கப்படும்போது நிறைய பதிப்பகங்கள் கலைஞரின் நூல்களை வெளியிட முன்வரும். தமிழகம் முழுவதுமுள்ள நூலகங்களில் வந்தமரும் இளைய தலைமுறையினரிடம், கலைஞர் புன்னகை புரிவார். கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின்போது, கலைஞரின் நூல்கள் நாட்டுடமையாகியிருப்பது பொருத்தமானதுதான்.
க.பழனிச்சாமி, விருதுநகர்
பதவியிலிருந்து நீக்கினாலும் பரவா யில்லை... படத்தில் நடிப்பது முக்கியம் என்றிருக்கிறாரே சுரேஷ்கோபி?
கேரளத்தில் பா.ஜ.க. ஜெயித்ததே ஒரேயொரு எம்.பி. அவரும் சினிமாதான் முக்கியம் என்கிறாரே என அமித்ஷா கடுப்பிலிருக்கிறார். ஏதோ சினிமா வாய்ப்புகளுக்கு நடுவில், அரசியலில் தலைகாட்டலா மெனப் பார்த்தால், பிழைப்பிலேயே கைவைக்கிறார் கள் என்ற எரிச்சலில் சுரேஷ்கோபி. என்னதான் நடக்கிறதென்று நாம் வேடிக்கை பார்க்கலாம்.
ப. விஷ்ணுகுமார், தாராபுரம்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராகப் போகிறார் ஜெய்ஷா. தற்போது அருண் ஜேட்லி மகன் ரோஹன் ஜெட்லி பி.சி.சி.ஐ. செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகிறதே?
பா.ஜ. கட்சி, அரசியலைத் தாண்டி கிரிக்கெட் வாரியத்துக்கே வாரிசு அடிப்படையில் ஆட்களை நியமிக்கும். அதேசமயம் மற்ற கட்சிகளை வாரிசு அரசியல் செய்வதாக விமர்சிக்கும். இந்திய மல்யுத்த அமைப்பின் தலைவரான பிரிஜ்பூஷன் சிங் பாலியல் விவகாரத்தில் சிக்கியதும், இந்த அமைப்புக்கான தேர்தல் நடைபெற்றது. தனது மகனையோ உறவினர்களையோ பிரிஜ் பூஷன் கொண்டுவர அனுமதிக்கக்கூடாதென பலரும் போராடிய நிலையில், பிரிஜ்பூஷன் சிங் தனக்கு நெருக்கமான வரும் தனது உதவியாளருமான சஞ்சய்சிங்கை, இந்த அமைப்புக்குத் தலைவராகக் கொண்டுவந்தார். சம்மேளனத்தின் செல்வாக்குமிக்க 15 பதவிகளில் 13 பதவிகளுக்கு, பிரிஜ்பூஷனுக்கு வேண்டியவர்களே பதவிக்கு வந்தனர் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
குடந்தை பரிபூரணன், கும்பகோணம்
சத்ரபதி சிவாஜியின் வெங்கலச் சிலை உடைந்து நொறுங்கி விழுந்திருக்கிறதே?
கூடவே அதைக் கட்டிய அரசின் மீதும், திறந்துவைத்த பெரிய மனிதர் மீதுமான நம்பிக்கையும் உடைந்து நொறுங்கியிருக்கிறது.