அயன்புரம் த.சத்தியநாராயணன்

பாகிஸ்தானை வளையல் போடவைப்போம் என்று மோடி கூறுகிறாரே?

சரி போடட்டும். அப்படியே அதற்குப் பக்கத்தில் இருக்கும் சீனாவுக்கு கொலுசோ, சேலையோ அணிவித்தால் இன்னும் சிறப்பு. பாகிஸ்தான் பற்றி வீர பராக்கிரம உரைகள், சவால்கள் கிளம்புமளவுக்கு சீனா பற்றி நம் ஆளும் கட்சி தலைவர்களுக்கு பேச்செழ மாட்டேனென்கிறது. அதுவும் சமீப காலமாக பாகிஸ்தானை விடவும், இந்தியாவுக்கு இடைஞ்சல் தரும் நாடென்றால் சீனாதான். ஆக, வலுத்தவனிடம் வாயைப் பொத்திக்கொண்டு, இளைத்தவனிடம் சீறுகிறார்கள்.

mm

Advertisment

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

பசுவதை செய்வோரை தலைகீழாகத் தொங்கவிடுவோம்.. இது மோடி கியாரண்டி என்கிறாரே அமித்ஷா..?

Advertisment

பசுவின் பெயரைச் சொல்லி முகம்மது அக்லக் உள்பட பல கொலை களே நடந்தாகிவிட்டது. இப்போது என்ன பின்னுக்கு வாங்கி தலைகீழாகத் தொங்கவிடுவோம் என சாஃப்ட் கார்னர் காட்டுகிறார் உள்துறை அமைச்சர். தேர்தல் கமிஷனுக்கு புகார் போய்விடும் என்ற பயமா? உண் மையில் பசு வதைக்காக யாரை யாவது தண்டிக்கவேண்டு மென்றால் உ.பி. உள்ளிட்ட வடமாநிலங்களில் கோசாலை என்ற பெயரில் அரசிடமும் பக்தர்களிடம் பண உதவி பெற்றுக்கொண்டு, பசுக்க ளுக்கு உணவிடாமல் அவற்றை எலும்பும் தோலுமாக வைத்து வயிறு வளர்க்கும் கும்பல்களைத்தான் தண்டிக்க வேண்டும். மாட்டிறைச்சி ஏற்றுமதி யில் இந்தியா உலகிலேயே இரண்டா மிடம் வகிக்கிறது. இந்த மாட்டிறைச்சி ஏற்றுமதித் தொழிலில் முன்னிலை வகிப் பவர்களில் பலர், இறைச்சி என்றாலே முகம்சுளிக்கும் மேல்ஜாதிக்காரர்கள்.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ஐந்தறிவு மிருகத்துக்கும் ஆறறிவு மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

ஐந்தறிவு மிருகங்கள் பெரும் பாலும் பாலியல் வன்புணர்ச்சி செய்வ தில்லை. இன்னொரு மிருகத்துடன் இணைசேர்வதை மொபைலில் படம் பிடிப்பதில்லை. அதை மற்றொரு மிருகத் துடன் பகிர்வதில்லை. பகிர்ந்துவிடு வேன் என மிரட்டி காசு பார்ப்பதில்லை. அப்படி யாராவது பகிர்ந்திருந்தால், பகிர்ந்தவரை வெளிப்பார்வைக் குத் திட்டிக்கொண்டு, உள்ளுக்குள் அந்த வீடியோ துணுக்கு கிடைக்குமா என ஏங்குவதில்லை. ஆனால் ஆறறிவு மிருகங்களோ இவை அத்தனையையும் செய்யும்.

தே.மாதவராஜ், கோயமுத்தூர்

எங்கும் எதிலும் நடிகை ராஷ்மிகா இருக்கிறாரே, தமிழ் நடிகைகள் யாரும் இல்லையா?

சில சமயங்களில் சிலருக்கு ஒப்பந்தமாகும் படமெல்லாம் ஹிட் ஆகும். கூடவே அழகும் துணையிருக்க, கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியா முழுவதும் லைம்லைட்டில் இருப்பார். தற்போது ராஷ்மிகாவுக்கு அத்தகைய அதிர்ஷ்ட காலம்போல, எங்கும் தட்டுப்படுகிறார். தமிழில் ஸ்ரீதேவி பாலிவுட் வரை போய் கோலோச்சவில்லையா! அழகில்கூட தமிழ் அழகிகளைத்தான் ரசிப்பேன் என்று கண்டிஷன் போட்டுக்கொண்டா இருக்கமுடியும்!

க.விஜய், புதுச்சேரி

மாவலியார், மை லெவன் சர்க்கிள் விளையாண்டு ஜெயித்திருக்கிறாரா?

அதிர்ஷ்டம் கொண்டுவரும் கோடிகளோ, லட்சங்களோ மாவலிக் குத் தேவையில்லை. பார்க்கிற வேலைக்கு கிடைக்கும் ஊதியத்தில் சேமிக்கும் காசே போதுமானது. திறமை, யூகம் என சொல்லப்பட்டாலும் இவையெல்லாம் சூதாட்டங்கள். போதாக்குறைக்கு, ஐ.பி.எல்.லில் பல ஆட்டங்கள் மேட்ச் பிக்ஸிங் செய்யப்படுவதாகவும் பேச்சுக்கள் எழுகிறது சூதாட்டத்தில் தர்மனே நாடிழந்து காட்டுக்குப் போனான். தர்மனுக்கு உடன்வர நான்கு தம்பிகள் இருந்தார்கள். மாவலிக்கு யார் இருக்கிறார்?

எஸ்.கதிரேசன், பேர்ணாம்பட்டு

ராகுல்காந்தி இளவரசர் என்றால், அரண்மனையில் வசிக்கும் பிரதமர் மோடி பேரரசர் என பிரியங்கா காந்தி பேசியுள்ளாரே?

கட்சிக்காரர்களும், தலைவர்களும்... தளபதிகளாக வும், சேனாதிபதிகளாகவும் பேரரசர்களாகவும், சக்கரவர்த்திகளாகவும், இளவரசர்களாகவும் ஜொலிக் கிறார்கள். அதைத் தாண்டி பொதுமக்கள் என்றைக்கும் பொதுமக்கள்தான். மன்னராட்சியிலும் மக்களாட்சியிலும் அவர்களுக்கு என்றைக்கும் விசேஷ அந்தஸ்து இருந்ததில்லை. அவர்கள் கையில் இருக்கும் ஓட்டுக்கு அதீத சக்தி இருந்தாலும், எல்லா கட்சித் தரப்பும் அவர்களைக் கோமாளியைப் போலவே கையாளும். அதில் மாற்றம் வந்தால் பரவாயில்லை.

வாசுதேவன் பெங்களூரு

விராட் கோலி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றதும், அதன் பக்கமே வரமாட்டேன் என்ற தொனியில் பேசியுள்ளாரே?

கொஞ்ச காலத்துக்குத்தான், நிரந்தரமாக வரமாட்டேன் எனப் பேசவில்லை.