என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
குஜராத்தில் தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஏமாற்றி பத்து கோடி ரூபாயை ஒரு விவசாயிடமிருந்து பா.ஜ.க. பறித்துக்கொண்ட தாமே?
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் விவசாயி மன்வர். இவரது 43,000 சதுர மீட்டர் நிலத்தை வெல்ஸ்பன் எனும் அதானியின் நிறுவனங்களில் ஒன்று வாங்கியது. அதற்காக முன்பணம் தரப்பட்ட நிலையில் மிச்சமுள்ள தொகையைத் தருவதற்குப் பதில் அந் நிறுவனத்தின் ஜி.எம். மகேந்திர சிங் சோதா, உள்ளூர் பா.ஜ.க. தலைவர் டேனி ரஜினிகாந்த் ஷா உள்ளிட்டோர் "பெருந் தொகையை கையில் வைத்திருந்தால் பிரச் சினை வரும்' என்று சொல்லி, "எஸ்.பி.ஐ. வங்கியில் டெபாஸிட் செய்யலாம். சில வருடங்களில் இரட்டிப்பாகிவிடும்' என்று கூறியிருக்கின்றனர். படிப்பறிவில்லாத அந்தக் குடும்பமும
என்.இளங்கோவன், மயிலாடுதுறை.
குஜராத்தில் தேர்தல் பத்திரங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஏமாற்றி பத்து கோடி ரூபாயை ஒரு விவசாயிடமிருந்து பா.ஜ.க. பறித்துக்கொண்ட தாமே?
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த தலித் விவசாயி மன்வர். இவரது 43,000 சதுர மீட்டர் நிலத்தை வெல்ஸ்பன் எனும் அதானியின் நிறுவனங்களில் ஒன்று வாங்கியது. அதற்காக முன்பணம் தரப்பட்ட நிலையில் மிச்சமுள்ள தொகையைத் தருவதற்குப் பதில் அந் நிறுவனத்தின் ஜி.எம். மகேந்திர சிங் சோதா, உள்ளூர் பா.ஜ.க. தலைவர் டேனி ரஜினிகாந்த் ஷா உள்ளிட்டோர் "பெருந் தொகையை கையில் வைத்திருந்தால் பிரச் சினை வரும்' என்று சொல்லி, "எஸ்.பி.ஐ. வங்கியில் டெபாஸிட் செய்யலாம். சில வருடங்களில் இரட்டிப்பாகிவிடும்' என்று கூறியிருக்கின்றனர். படிப்பறிவில்லாத அந்தக் குடும்பமும் தலையாட்டியிருக்கிறது. கடைசியில் ரூ 11.4 கோடி மதிப்புள்ள எஸ்.பி.ஐ. தேர்தல் பத்திரத்தை வாங்கவைத்து அந்த விவசாயியை ஏமாற்றியிருக் கின்றனர். இதில் 10 கோடி பா.ஜ.க.வுக்கு. 1.14 கோடி சிவசேனாவுக்கு. இப்போது விவரம் தெரிந்து விவ சாயி புகார் செய்யப்போனால், குஜராத் காவல் துறை வழக்கைப் பதிவு செய்யக்கூட யோசிக்கிறதாம்
சின்னஞ்சிறுகோபு, சிகாகோ, வட அமெரிக்கா.
அருகே காடுகளே இல்லாத மயிலாடுதுறைக்கு, சிறுத்தை ஒன்று வந்து, இவ்வளவு ஆட்டம் காட்டியது எதை உணர்த்துகிறது?
சிறுத்தையை விடுங்கள்…. மனிதன் தன் எல் லையை மீறி காட்டுக்குள் சென்றதே இல்லையா! இன்றைக்கு மனிதன் குடியேறியிருக்கும் இடமெல் லாம் ஒரு காலத்தில் காடுகளாக இருந்தவைதான். உணவுக்கு வழியேயின்றி சுற்றுவட்டாரத்திலிருந்து எப்படியோ நகருக்குள் வந்துவிட்டது சிறுத்தை. வனத்துறை யினர் அதைப் பாதுகாப்பாக பிடித்து காட்டுக்குள் கொண்டுசென்று விடவேண்டியதுதான்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, முஸ்லீம் லீக் கொள்கையைப்போல் இருப்பதாக ஜே.பி. நட்டா கூறியிருப்பது..?
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முஸ்லீம் லீக்கின் எந்தக் கொள்கையை நினைவுறுத்தும் அம்சம் இடம்பெற்றிருக்கிறது என்பதை ஜே.பி. நட்டாவும் பிற பா.ஜ.க.வினரும் கூறியிருந்தால் நன்றாயிருக்கும். கல்விக் கடன், உதவித் தொகை உயர்வு, சாதிவாரிக் கணக்கெடுப்பு, சிறுபான்மை யினர் பாதுகாப்பு, நீட் தேர்வு குறித்துத்தான் இடம் பெற்றிருக்கிறது. மாறாக, மோடிதான் எதிர்க்கட்சி யினர் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வரவில்லை அனுமன் ஜெயந்தி கொண்டாடவில்லை எனச் சிணுங்குகிறார். பா.ஜ.க.வினருக்கு தங்கள் மேல் நம்பிக் கையில்லை… அதனால்தான் எதிர்க்கட்சியினர் மேல் சேறு வாரிப் பூசுவதிலே மும்முரமாயிருக்கிறார்கள்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
ஆளாளுக்கு மதுரை, கோவை, திருச்சி, சென்னை இவற்றை சிங்கப்பூராக மாற்றுவேன் எனக் கூறுவது எந்த வகையில் உள்ளது?
சிங்கப்பூரும் அதன் முன்னேற்றமும் இந்தியர்களை பெரிதாக ஈர்த்திருக்கிறது. அதனால் தான் அனைவரும் தங்கள் நகரங்களை சிங்கப்பூராக மாற்றுவேன் என்கிறார்கள். இன்னொரு விஷயம், சிங்கப்பூர் தண்ணீர் பற்றாக்குறையுள்ள நாடு. ஆனால் நீர் சேமிப்பு, மறுசுழற்சி, நீரை வீணடிக்காமை, அண்டை நாடுகளுடனான ஒப்பந்தம் மூலம் அதை புத்திசாலித்தனமாகக் கையாள்கிறது. ஆனால் ஒரு புள்ளிவிவரப்படி, உலகிலேயே காடழிப்பில் முன்னணியில் உள்ள நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது. சிங்கப்பூராக மாற்றுவேன் என்பவர்கள் அந்த அர்த்தத்தில் நகரங்களை மாற்றிவிடக்கூடாது..
சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி
பிரதமர் நரேந்திர மோடிக்கு இணையான வேட்பாளர் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்கிறாரே தினகரன்?
புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதிலா? நாடுகள்தோறும் சுற்றுவதிலா?… அடுக்கடுக்காக பொய்களைக் கூறுவதிலா?… மத துவேஷப் பேச்சுக்களைப் பேசுவதிலா?… எதில் என்பதை தினகரன் குறிப்பாகக் கூறவேண்டும்.
ரா.ராஜ்மோகன், முட்டியூர்
"அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக இருப்பதைவிட அடிமட்டத் தொண்டனாகவே கழகப் பணியாற்ற விரும்புகிறேன்' என்கிறாரே எடப்பாடி கே. பழனிச்சாமி?
அதெல்லாம் கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் மேடைப்பேச்சில் எல்லா தலைவர்களும் கொடுக்கும் அல்வா. தேர்தல் வரும்போது மக்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரின் கால், கைகளை கட்சித் தலைவர்கள் பிடிப்பார்கள். எல்லாம் முடிந்து மேலே வந்ததும் சவுக்கை எடுத்துச் சுழற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.