மாவலி கேள்விகள்

dd

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல.. என்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு?

உயர்ந்த பதவிக்குப் போகும்போதுதான் தன்னடக்கமும், நாகரிகமான பேச்சும் தேவை. அது டி.கே.சிவக்குமாரிடம் குறைவு போலிருக்கிறது. பெங்களூரில் குடிநீருக்கே பஞ்சம் என்பதை அனைவரும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் நீர் தரமுடியாது என மறுப்புத் தெரிவிக்க விரும்பினால், அதை நாகரிகமாகவும், அழுத்தமாகவும் தெரிவிக்க ஆயிரம் சொற்கள் உண்டு. கர்நாட கம் நீர் தரவேண்டுமா… இல்லையா என்பதை முடிவுசெய்ய நீதிமன்றங்கள் இருக்கின்றன. காவிரி ஒழுங்காற்றுக் குழு இருக்கிறது. தேர்தல் ஜூரத்தில் வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற "ஓப்பன் ஹெய்மர்' படத

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல.. என்ற கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் பேச்சு?

உயர்ந்த பதவிக்குப் போகும்போதுதான் தன்னடக்கமும், நாகரிகமான பேச்சும் தேவை. அது டி.கே.சிவக்குமாரிடம் குறைவு போலிருக்கிறது. பெங்களூரில் குடிநீருக்கே பஞ்சம் என்பதை அனைவரும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் நீர் தரமுடியாது என மறுப்புத் தெரிவிக்க விரும்பினால், அதை நாகரிகமாகவும், அழுத்தமாகவும் தெரிவிக்க ஆயிரம் சொற்கள் உண்டு. கர்நாட கம் நீர் தரவேண்டுமா… இல்லையா என்பதை முடிவுசெய்ய நீதிமன்றங்கள் இருக்கின்றன. காவிரி ஒழுங்காற்றுக் குழு இருக்கிறது. தேர்தல் ஜூரத்தில் வார்த்தைகளைக் கொட்டக்கூடாது.

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற "ஓப்பன் ஹெய்மர்' படத்தைப் பற்றி...?

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் படம் ஓப்பன்ஹெய்மர். ஓப்பன்ஹெய்மர், ஒரு இயற்பியலாளர். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அணுகுண்டு கண்டறிவதில் அமெரிக்கா முனைப்பாக இருந்தது. இதற்கான மன்ஹாட்டன் திட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்தான் ஓப்பன்ஹெய்மர். எப்படி இவரது குண்டால் ஜப்பான் சீரழிந்ததோ, அதேபோல் வாழ்வின் பிற்பகுதியில் இவரை ரஷ்ய உளவாளியோ என அமெரிக்கா சந்தேகப்பட, அவரது வாழ்வே சீரழிந்தது. கடைசியில் இவர் உளவாளியில்லை என நிரூபிக்கப்பட்டாலும் புற்றுநோயால் அவரது வாழ்வு அமைதியாக முடியவில்லை. சிறந்த படம், சிறந்த இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (சிலியன் மர்பி), சிறந்த துணை நடிகர் (ராபர்ட் டவுனி ஜூனியர்), சிறந்த ஒளிப்பதிவாளர் (ஹாய்ட் வான் ஹோய்டெமா), சிறந்த திரைப்பட எடிட்டிங் (ஜெனிஃபர் லெம்), சிறந்த இசை, சிறந்த படத்தொகுப்பு என 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. அணுகுண்டு தயாரிப்பு, சோதனை பற்றிய படமென்பதால், படத்தில் காட்சிகள் தத்ரூபமாக வருவதற்காக, நிறைய சிரத்தை எடுத்துக்கொண்டார். அது இப்போது பலனளித்திருக்கிறது.

என்.இளங்கோவன், மயிலாடுதுறை

கேஸ் விலையை திடீரென பிரதமர் மோடி குறைத்துள்ளது பற்றி?

சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது பழமொழி. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு மிக நெருக்கமான காலகட்டத்தில் இருக்கிறோம் போலிருக்கிறது.

dd

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

தேர்தல் கமிஷனர் அருண்கோயல் ராஜினாமா குறித்து?

தேர்தல் ஆணையம் மட்டுமா? இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் தற்போதைய அரசு தன் செல்வாக்கைச் செலுத்துகிறது. அரசு தன் வரம்பை மீறாமல் கட்டுப்படுத்துவதற்காக, நீதித்துறை, தேர்தல் ஆணையம் போன்ற துறைகள் சுயேட்சையாகவும், தனித்துவத்துடனும் அமைக்கப்பட்டன. இன்றைய நிலையில் மசோதாக்கள் மூலமும், பணி ஓய்வுக்குப் பின் பலன்களைத் தந்தும், மிரட்டியும் நெருக்கடி தந்தும், அரசைக் கண்காணித்து நெறிப்படுத்தவேண்டிய பல துறைகளைச் செயலிழக்க வைத்துவிட்டார்கள். சில சமயங்களில் மனசாட்சி இருப்பவர்கள் இப்படி தங்கள் பணியை ராஜினாமா செய்து, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். மனசாட்சியை விற்றவர்கள், பணி ஓய்வுபெற்ற மறுவாரத்திலேயே பா.ஜ.க.வில் உறுப்பினராகிவிடுகிறார்கள்.

ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு

சிரிக்கத் தெரியாத மனிதர்களைப் பார்த்தால் என்ன தோன்றும்?

பரிதாபம் தோன்றும், அவர்கள் எத்தகைய இக்கட்டான நிலையில் இருக்கிறார்களோ! அவர்கள்மேல் படிந்துள்ள துயரத்தின் அடுக்கு களைக் கடந்து நகைச்சுவை சென்று சேர வில்லையோ என்று தோன்றும். சிரிப்பது சிறியோர் செயல். பெரிய மனிதத்தனம் அல்ல… என நினைத்து சிலர் எப்போதும் இறுகிய முகத்துடன் இருக்க லாம். உண்மையில், புன்னகை மன அழுத்தத்தைக் குறைக்கிறது. எதிர்மறை உணர்வுகளை அகற்றுகிறது. உற்பத்தித் திறனைக் கூட்டுகிறது. ஆரோக்கியத்தை உறுதிசெய்கிறது. பிறகெதற்கு இறுகிய முகத்துடனே இருக்கவேண்டும்?

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

ஆந்திராவில் நடப்பது பா.ஜ.க. ஆட்சிதான் என ஒய்.எஸ்.ஆர். ஷர்மிளா குற்றம்சாட்டி யிருக்கிறாரே?

காங்கிரஸில் இணைந்திருக்கிறார் அல்லவா! வேறென்ன சொல்வார் என எதிர்பார்க்கிறீர்கள். மற்றவர்களைவிட தன் சகோதரன் மீது சகோதரியே குற்றம்சாட்டினால் அதன் தாக்கம் அதிகம் அல்லவா! ஜெகன்மோகன் ரெட்டியையும் விமர்சித்ததுபோல் ஆயிற்று... பா.ஜ.க.வையும் குற்றம்சொல்லியதுபோல் ஆயிற்று.… தேர்தல் களத்தில் சகோதர- சகோதரி உறவெல்லாம் இரண்டாம்பட்சம்.

nkn160324
இதையும் படியுங்கள்
Subscribe