கே.ஸ்ரீநிவாசன், திருத்துறைப்பூண்டி
துபாய் அரசு இந்தியர் களுக்கு சலுகையாக 5 ஆண்டு விசாவை அறிமுகம் செய்துள்ளதே?
அடிக்கடி வந்துசெல்லும் போது விமான போக்குவரத் துத்துறைக்கு ஆதாயம். வந்தவர் கள் தங்கவும், ஊர்சுற்றவும் செய்தால் சுற்றுலா வகையில் உள்ளூர் வணிகம் பெருகும். ஒருவேளை பணிநிமித்தமாக வந்துசெல்பவர்களுக்காக இந்தச் சலுகையை அறிவித்தாலும், துபாய்க்கு திறமைமிக்க ஊழியர்களை வேண்டிய அளவு எளிதில் பணி யமர்த்த முடியும். இரு நாடுகளுக்கும் நட்பு பலப் படும். இருவருக்கும் ஆதாயம். பிறகென்ன சலுகையை அறிவிக்கவேண்டியதுதான். தாராளமயத்துக்குப் பிறகு உலகத்தின் சிந்தனை முறையே தலைகீழாக மாறிவிட்டது.
பூ.மாறன், மணலி
"தமிழர் உரிமை மீட் போம்...' , "தமிழ்நாடு காப் போம்..' என எடப்பாடி பழனிச்சாமி புதிய முழக்கம் எழுப்பு கிறாரே?
பிரபல முன்னணி வணிக நிறுவனங்கள் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு வழங்க
கே.ஸ்ரீநிவாசன், திருத்துறைப்பூண்டி
துபாய் அரசு இந்தியர் களுக்கு சலுகையாக 5 ஆண்டு விசாவை அறிமுகம் செய்துள்ளதே?
அடிக்கடி வந்துசெல்லும் போது விமான போக்குவரத் துத்துறைக்கு ஆதாயம். வந்தவர் கள் தங்கவும், ஊர்சுற்றவும் செய்தால் சுற்றுலா வகையில் உள்ளூர் வணிகம் பெருகும். ஒருவேளை பணிநிமித்தமாக வந்துசெல்பவர்களுக்காக இந்தச் சலுகையை அறிவித்தாலும், துபாய்க்கு திறமைமிக்க ஊழியர்களை வேண்டிய அளவு எளிதில் பணி யமர்த்த முடியும். இரு நாடுகளுக்கும் நட்பு பலப் படும். இருவருக்கும் ஆதாயம். பிறகென்ன சலுகையை அறிவிக்கவேண்டியதுதான். தாராளமயத்துக்குப் பிறகு உலகத்தின் சிந்தனை முறையே தலைகீழாக மாறிவிட்டது.
பூ.மாறன், மணலி
"தமிழர் உரிமை மீட் போம்...' , "தமிழ்நாடு காப் போம்..' என எடப்பாடி பழனிச்சாமி புதிய முழக்கம் எழுப்பு கிறாரே?
பிரபல முன்னணி வணிக நிறுவனங்கள் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு வழங்கும் விளம்பரங்களை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றிக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு முறையும் புதிதாக ஏதாவது வாசகத்தைச் சேர்த்து தங்கள் பிராண்டின் பெயர் மக்களின் ஞாபகத்திலிருந்து விலகாமல் பார்த்துக்கொள்ளும். தங்களது பிராண்டின் முன்பு தவறாமல் ஒவ்வொரு முறையும் நியூ… என்ற வார்த்தை இடம்பெறச் செய்யும். சில ஆயிரம் கோடி சம்பாதிக்கும் வணிக நிறுவனங் களுக்கே இப்படி என்றால், கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைச் சம்பா திக்கும் கட்சிகள் புதிய கோஷங் கள், புதிய இலக்குகளை அமைப்பது எத்தனை அவசியம்! எடப்பாடி யின் புதிய முழக்கம் எதற்கு என்று புரிந்திருக்கும்தானே!
என். இளங்கோவன், மயிலாடுதுறை
பொன். ராதாகிருஷ்ணனை காலி செய்ய, பா.ஜ.க. மாநிலத் தலைவரின் ஏற்பாட்டால் தான் விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைந்துள்ளாராமே..?
ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கும், ஆயிரம் காரணங்கள் சொல்லப்படும். அதில் உங்களுக்கும் நம்பிக்கையிருந்தால் நம்பவேண்டியதுதான். பொன்னாருக்கு ஏற் கெனவே வயது அதிகம். எதிர்காலத்தில் அவருக்கு கட்சியில் கௌரவப் பொறுப்புகள்தான் அளிக்கப்படும். அவரை ஓரம்கட்ட, எதிர்க்கட்சியிலிருந்து வரும் புதிய நபரோடு சேர்ந்து, ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் வியூகம் வகுக்கவேண்டுமா!
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
ரெய்டுகள் மூலம் பெரும் நிறுவனங்களை மிரட்டி பா.ஜ.க. தேர்தல் நன்கொடை பெறுவதாகச் சொல்லப்படுகிறதே?
சமீபத்தில் ஒரு பரபரப்புச் செய்தி ஊடகங் களில் வெளிவந்தது. அதன்படி கடந்த நான்கு நிதியாண்டுகளில் அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ரெய்டு அடித்த பட்டியலை பரிசீலித்தால், அதில் இடம்பெற்ற 30 நிறுவனங்கள் மட்டும் பா.ஜ.க.வுக்கு 335 கோடி தேர்தல் நன்கொடை அளித்துள்ளன. அதில் 23 நிறுவனங் கள் இதுவரை பா.ஜ.க.வுக்கு தேர்தல் நன்கொடை அளித்ததே இல்லை. குறிப்பாக 4 நிறுவனங்கள் ரெய்டு நடத்திய 4 மாதத்துக்குள் பா.ஜ.க.வுக்கு நிதியளித்துள்ளன. பா.ஜ.க.வுக்கு குறைவாக நிதியளித்த நிறுவனங்கள் மீதும் ரெய்டுகள் நடத்தப் பட்டுள்ளது. இது உங்களுக்கு மிரட்டலாகப் பட்டால் மிரட்டல். பா.ஜ.க.வின் நிர்வாகத் திறமையைப் பார்த்து அந்த நிறுவனங்கள் கொடுத்த ஊக்கத் தொகையாகப் பார்த்தால் ஊக்கத் தொகை!
எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
நாடாளுமன்றத் தேர்தலில் மடிப்பிச்சை எடுத்தாவது போட்டியிடுவேன் என்கிறாரே மன்சூர் அலிகான்?
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட செலுத்தவேண்டிய டெபாஸிட் தொகை ரூ. 25,000. இதற்கு மன்சூர் அலிகான் மடிப்பி ச்சையோ, துண்டேந்திப் பிச்சையோ எடுக்கத் தேவையில்லை. கையில் இருக்குமென்றே நம்பு கிறேன். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக செலவு செய்து போட்டியிடவேண்டுமென்றால் பல கோடிகள் தேவைப்படும். மன்சூர் மடியில் பிச்சையெடுத்தாலும், கண்டெய்னர்களைக் கொண்டுவந்து பிச்சையெடுத்தாலும் அத்தனை கோடிகள் தேறப்போவதில்லை.
அ.யாழினிபர்வதம், சென்னை-78
"உலகளாவிய தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம்' என்று அடிக்கடி செய்தி வருகிறதே... இது எங்கே, எப்படி தீர்மானிக்கப் படுகிறது?
நான் வேறொரு செய்தி சொல்கிறேன். அதிலிருந்து நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். உலக அதிசயங்களில் எது தலைசிறந்தது என ஒரு போட்டி. சிறந்த உலக அதிசயத்தை முடிவுசெய்ய ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கப்படுகிறது என வைத்துக்கொள்ளுங்களேன். உலக மக்கள் ஒவ்வொருவரும் வாக்களிக்கலாம். ஒவ்வொரு வாக்குக்கும் புள்ளி உண்டு. ஏழு அதிசயங்களில் இந்தியாவின் தாஜ்மகால் அல்லது சீனாவின் பெருஞ்சுவர் இரண்டிலொன்றுக்கு முதலிடம் வர வாய்ப்பு அதிகம். காரணம் இரு நாடுகளின் மக்கள் தொகை. நாம் மக்கள் தொகையிலும் சீனாவை முந்திவிட்டோம் என்பதையும் இப்போது கருத்திலெடுத்துக்கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு விடை கிடைத்திருக்கும்.