மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது' என்கிறாரே அரவிந்த் கெஜ்ரிவால்?
ரெண்டு மூன்று தேர்தலாகத்தானே ஆம் ஆத்மி டெல்லியில் வென்று வருகிறது. காங்கிரஸ் எத்தனை தேர்தல்களை வென்றிருக்கும், எத்தனை பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கும், அந்தக் கட்சியே தேய்ந்து பல மாநிலங்களில் மாநிலக் கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் நிற்க நேர்கிறது எனில், ஆம் ஆத்மி ஸுஸுபி.… தன்னம்பிக்கை என்பது வேறு,… தற்பெருமை என்பது வேறு. கெஜ்ரிவாலுக்கு காலம் கற்றுத் தரும் பாடம் தேவையிருக்கிறதுபோல!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித் துப் பேசியது அமித்ஷாவின் பெருந்தன்மை என்று ஓ.பி.எஸ். பேசியிருக்கிறாரே?
நிறக்குருடர்கள் என்று சிலர் உண்டு. அவர்களுக்கு சில நிறங்கள் மட்டும் தெரியாது. அந்த வண்ணங்களை அவர் க
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது' என்கிறாரே அரவிந்த் கெஜ்ரிவால்?
ரெண்டு மூன்று தேர்தலாகத்தானே ஆம் ஆத்மி டெல்லியில் வென்று வருகிறது. காங்கிரஸ் எத்தனை தேர்தல்களை வென்றிருக்கும், எத்தனை பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்கும், அந்தக் கட்சியே தேய்ந்து பல மாநிலங்களில் மாநிலக் கட்சியின் ஆதரவுடன் தேர்தலில் நிற்க நேர்கிறது எனில், ஆம் ஆத்மி ஸுஸுபி.… தன்னம்பிக்கை என்பது வேறு,… தற்பெருமை என்பது வேறு. கெஜ்ரிவாலுக்கு காலம் கற்றுத் தரும் பாடம் தேவையிருக்கிறதுபோல!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித் துப் பேசியது அமித்ஷாவின் பெருந்தன்மை என்று ஓ.பி.எஸ். பேசியிருக்கிறாரே?
நிறக்குருடர்கள் என்று சிலர் உண்டு. அவர்களுக்கு சில நிறங்கள் மட்டும் தெரியாது. அந்த வண்ணங்களை அவர் களால் பிரித்தறியமுடி யாது. கருத்துக் குருடர்கள் உண்டு. பெரும்பாலும் ஒரு தத்து வத்தையோ, நிலைப்பாட்டை யோ ஆதரிப்பவர்களால், பிற நிலைப்பாடு, தத்துவங்களின் நியாயத்தை அறியமுடியாது. ஆதாயக் குருடர்கள் என்றும் ஒருவகை உண்டு. தனக்கு ஆதாயம் உண் டென்றால், எது உண்மையோ அதை பிடிவாதமாகக் காணமறுப்பவர்கள். ஓ.பி.எஸ். இதில் மூன்றாவது வகையறா. தமிழகத்தின் இரு பெரிய கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்துப் பேசியது அமித்ஷாவின் பெருந்தன்மை என்று ஓ.பி.எஸ். சொல்வது, அதனை உதிரிக்கட்சி என்ற அளவில் நிறுத்திப் பேசுவதுபோல் இருக்கிறது.
ஆல்இன்ஆல் அழகுராஜா, இராமேஸ்வரம்
தி.மு.க. ஆட்சியின் பலம் -பலவீனம் என்ன?
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றியவை தி.மு.க. ஆட்சியின் பலம். நிறை வேற்றாத வாக்குறுதிகள் அதன் பலவீனம். தவிரவும், தன் போக்குக்கு ஆட்சியை வளைக்கப் பார்க்கும் ஆளுநருக்கு வளைந்துகொடுக்காததும், இந்தியா முழுவதும் வீசும் இந்துத்துவ அலைக்கு மத்தியிலும் மதச்சார்பற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதும் தி.மு.க.வின் பலம்.
ஜெ.மணிகண்டன், பேரணாம்பட்டு
வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் கில்லாடியாக விளங்கும் அரசியல் தலைவர் யார்?
நிறைய பேர் இருக்கிறார்கள். யாரைச் சொல்லச் சொல்கிறீர்கள்? தாத்தாவுக்கு பாரத ரத்னா கொடுத்ததற்காக கூட்டணியை மாற்றிக் கொண்ட ஜெயந்த் சௌத்ரி, தேர்தலுக்கு நெருக்கமாக காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.வுக்குத் தாவிய அசோக் சவான், கடந்த ஆட்சியில் முக்கிய மான புதிய மசோதாக்களின் மீது வாக்கெடுப்பு நடக்கும்போதெல்லாம் காசுக்கு விலை போய் பா.ஜ.க.வுக்கு வாக்களித்த எத்த னையோ எம்.பி.க்கள். இவர்கள் எல்லா ருமே கில்லாடிகள்தான். தென்னமெ ரிக்காவிலும், இங்கிலாந்திலும் தனக் கென ஒரு வசதியான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு காந்திக்கு இருந்தது. ஆனால் அதனைச் சிந்திக்காது இந்தியாவுக்கு வந்து கோடிக்கணக்கான மக்களை ஒருங்கிணைத்துப் போராடுவதற்கு வாழ்க்கை தந்த வாய்ப்பை கை நழுவவிடாத காந்தி, தன் வாழ்வில் கிட்டத்தட்ட 9 ஆண்டுக் காலத்தை சிறையிலேயே செலவிட்டு, வாய்ப்பு வந்தபோது இந்தியாவின் எதிர் காலத்தையே செதுக்கித் தந்த நேரு போன்ற வர்களைத்தான் வாய்ப்புகளைத் தவறவிடாத கில்லாடி அரசியல்வாதிகள் என்பேன்.
ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்
திராவிடம் என்ற சொல்வராமல் கட்சிக்குப் பெயர் வைத்துள்ளாரே விஜய்?
ஒருவர் புதிதாக கட்சி தொடங்கியுள்ளார். அவர் வகுத்துள்ள கொள்கைகள் என்னவென பார்ப்போம்... செயல்படட்டும், அவரது செயல்பாடுகள் என்னவென கவனிப்போம். களத்துக்கு வருமுன்னே விமர்சனச் சிலம்பத்தைச் சுழற்ற வேண்டாம். மக்கள் இருக்கிறார்கள்... அவர்களுக்கு விதையும் பதரும் தெளிவாகத் தெரியும். கட்சி பெயரில் திராவிடம் இருந்து, செயல்பாடுகள் திராவிடத்துக்கு எதிராக இருந்தால் நமக்குச் சம்மதம்தானா!
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் என்று ராகுல் காந்தி கூறுவது பற்றி...
அரசியல்வாதிகளின் சரியான வாக்குறுதிகளை எப்போதும் வரவேற்கவேண்டியதுதான். ஆனால் சொன்ன சொல்லை ராகுலும் அவர்கள் கட்சிக்காரர்களும் பாதுகாக்கிறார்களா என்பதை நாளை அவர்கள் ஆட்சிக்கு வரும்போது கவனமாகக் கண்காணிக்கவேண்டும். திட்டங்கள் என்று வரும்போது பழங்குடியினரோ, அட்டவணை ஜாதியினரோ, பிற பிரிவினரோ... எவரா யிருந்தாலும் உரிய இழப்பீடு கொடுக்காமல் ஏய்த்த வரலாறு காங்கிரஸுக்கும் உண்டு. பா.ஜ.க.வுக்கும் உண்டு. மாநில கட்சிகளுக்கும் உண்டு.