சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி
தமிழ் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...?
இந்தியாவின் பசுமைப் புரட்சியின் பிதாமகர். சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர். சுவாமிநாதனின் பெற்றோர் மருத்துவப் படிப்பு படிக்கவேண்டுமென்று விரும்பினர். ஆனால் இந்தியாவில் நிகழ்ந்த வங்கப் பஞ்சம், விவசாயத்தின் பக்கம் அவர் கவனம் திரும்பக் காரணமாயிற்று. மரபணு மாற்றப் பயிர்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருந்ததால், சுவாமிநாதன் இந்தத் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் விஞ்ஞானிகளால் விமர்சிக்கப்பட்டார். சர்வதேச விருதுகள், பட்டங்கள், பெல்லோஷிப்புகள் என உலக அளவில் சுவாமிநாதனுக்கு அங்கீகாரத்துக்குக் குறைவில்லை. அந்த வகையில் பாரத ரத்னா அவருக்கு முன்பே தரப்பட்டிருக்கவேண்டும்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
10 ஆண்டு ஆட்சியிலிருந்தும் சாதனைகளை சொல்லி ஓட்டுக் கேட்கா மல் மறைந்துபோன நேரு, இந்திரா காந்தி பற்றி பேசிவருகிறாரே மோடி?
சட்டியில் இருந்தால் அகப்பையில் வராதா?…அதனால்தான் பத்தாண்டுகளுக்கு முந்தைய காங்கிரஸின் பட்ஜெட்டை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் நோண்டிக்கொண்டி ருக்கிறது மோடி அரசு. மன்மோகனின் அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 9 சதவிகிதத்தைத் தொட்டது. இந்தப் பத்தாண் டுகளிலோ 5-க்கும் 6-க்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது பொருளாதார வளர்ச்சி. அதேபோல சுதந்திர இந்தியாவில் திட்டக் கமிஷன் அமைத்து ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒவ்வொரு துறையாக இந்தியாவை வளர்த்தெடுத்த நேருவை நோக்கி குற்றம்சாட்டி விரலை நீட்டுகிறார். இன்னும் இருபதாண்டுகள் ஆட்சி செய்தாலும் மோடியின் ராகம் மாறப்போவதில்லை. மோடி மட்டும் சினிமாவுக்கு வந்தால் ப்ளாக் ஹ்யூமரில் கோலோச்சுபவர்களெல்லாம் வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டியதுதான்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
காந்தியின் ராமராஜ்ஜியத்திற்கும், ஆர்.எஸ். எஸ்.சின் ராமராஜ்ஜியத்திற்கும் என்ன வித்தியாசம்?
காந்தியின் ராமராஜ்ஜியம் ஒற்றுமையினை அடிப்படை அலகாகக் கொண்டது. ஆர்.எஸ்.எஸ். ஸின் ராமராஜ்ஜியம் பிளவினை அடிப்படையாகக் கொண்டது. காந்தியின் ராமர், குகனையும் வாரியணைப்பார், குத்புதீனையும் சேர்த்துக் கொள்வார். ஆர்.எஸ்.எஸ்.ஸின் வானரப் படை, மசூதி, தர்ஹாக்களின் மீது கல்லெறியவும், இடித்துத் தள்ளவும் துடித்துக் கொண்டிருக்கும்.
பூ.மாறன், மணலி.
பொதுமக்களிடம் தி.மு.க. தேர்தல் அறிக்கைக்காக கருத்து கேட்கின்றதே...?
நல்ல விஷயம்தானே. நிறைவேற்றுகிறார் களோ, இல்லையோ...… மக்களின் தேவையென்ன என்பதாவது தலைமையின் கவனத்துக்குப் போகுமல்லவா! இதுதான் இவர்களுக்கு வேண்டு மென கட்சித் தலைமை வைத்திருக்கும் அபிப்ரா யத்துக்கும், மக்களின் தேவையென்ன என்ற யதார்த் தத்துக்குமான வித்தியாசமாவது தெரிந்துகொள் ளட்டும்.
சி.கனகு
கும்பகோணத்தை புனித நகரமாக தமிழக அரசு அறிவித்து புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும் என்று என்று வேண்டுகோள் விடுத்துள்ளாரே நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன்?
புண்ணியம் என்பதென்ன மோட்சப் பயணத் தில் பயன்படுத்தக்கூடிய அந்நியச் செலாவணியா? யார் கணக்கில் எவ்வளவு புண்ணியம் இருக்கிறது என்பதை அளப்பதற்கு ஏதாவது கருவி இருக் கிறதா? எத்தனை சதம் புண்ணியம் இருந்தால் மோட்சம் உறுதி என்பது நிச்சயமாய்த் தெரிந்த வர்கள் இருக்கிறார்களா? ஒரு நகரத்தை புனித நகரமாக அறிவிப்பதால் மட்டும்தான் புண்ணியம் வருமா? ஏழைகளின் பசி துடைத்தாலோ, கல்வி பயிற்றுவித்தாலோ, மதத்துவேஷம் பரவாமல் பார்த்துக்கொண்டாலும் வரும்தானே? அப்படி யென்றால் தமிழகம் இரண்டாவது வழியிலேயே புண்ணியம் சேர்த்துக்கொள்ளட்டும்!
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
தமிழ்நாட்டில் 2026இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக பா.ஜ.க. தலைவர் கூறியிருக்கிறாரே?
பா.ஜ.க. ஆட்சியிலுள்ள மாநிலங்களில் சில குஜராத், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான். இதில் குஜராத்தில் மட்டும் பா.ஜ.க. 20 வருடங்களுக்கும் அதிகமாக ஆட்சியில் இருக்கிறது. அங்கேயே வீட்டில் ஒருவருக்கு பா.ஜ.க. வால் அரசு வேலை வாங்கித் தரமுடியவில்லை. தவிர, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபின் ஏர் இந்தியா தனியாருக்குப் போய்விட்டது. துறைமுகங்கள், ஏர்போர்ட்டுகளை மெல்ல அதானி பக்கம் தள்ளிவருகிறார்கள். பல்வேறு பொதுத்துறை நிறு வனங்களின் பங்குகளை 5 சதவிகிதம், 10 சதவிகித மாய் தனியாருக்குத் தாரைவார்த்து வருகிறது. இப்படி அனைத்தும் தனியாருக்குப் போனால் எங்கிருந்து அரசு வேலை தருவார்களாம்? மீன் களாவது பரவாயில்லை புழுவை நம்பி ஏமாறும். மனிதன் அற்பன்,… 5 பைசா பிரயோஜனமில்லாத பொய்களுக்கே ஏமாந்துவிடுகிறான்.