செந்தில்குமார் எம்., சென்னை-78

அரசியல் என்பது ஒரு திருவிளையாடல் என துரைமுருகன் கலாய்ப்பது பற்றி?

நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியிலிருந்து விலகியது பற்றிப் பேசும்போது துரைமுருகன் குறிப்பிட்டது இது. ஆனால் அரசியல் திருவிளையாடலில் எப்போதும் பொதுஜனங்களுக்கு மட்டும்தான் சோதனைகள். சாபங்கள் அனைத்தும் வாக்காளர்களுக்குத்தான். வரங்களும், காமதேனுவும், அட்சயபாத்திரங்களும் எப்போதும் அரசியல்வாதிகளுக்கு. வரங்களை பொது மக்களிடம் வாங்கிவிட்டு, வரம்தந்த பொது மக்களின் தலையிலேயே கைவைத்துப் பொசுக்கும் பஸ்சுமாசுரன்களே அரசியலில் அதிகம்.

தே.மாதவராஜ், இராமநாதபுரம்

Advertisment

சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ.க. நடந்துகொண்ட விதம் பற்றி?

சண்டிகர் மேயர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது 8 வாக்குச் சீட்டுகளில் தேர்தல் அதிகாரி பேனாவால் எழுதி செல்லாத வாக்குகளாக்கி, மோசடி யாக பா.ஜ.க. வெற்றி பெற்றதாக அறி வித்தார். இதை யடுத்து விவகாரம் உச்சநீதிமன்றம் போனநிலையில் "வாக்குச் சீட்டுகளைச் சிதைத்த தேர்தல் அதி காரியை விசாரிக்கவேண்டும். இதை ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் செய லாகவே நான் பார்க்கிறேன். உச்சநீதிமன்றம் அவரை பார்த்துக்கொண்டிருக்கிறது என்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் போய்ச் சொல் லுங்கள்''’என்று காட்டமாகக் கண்டித்திருக்கிறார் நீதிபதி. இந்நிலையில் வாக்கு எந்திரங்களைத் தயாரிக்கும் பெல் நிறுவனத்தில் நான்கு பா.ஜ.க. நிறுவனர்கள் இயக் குநர்களாக இடம் பெற்றிருப்பது வர விருக்கும் பாராளு மன்றத் தேர்தலையே சந்தேகத்துக்குரியதாக ஆக்குகிறது.

mm

Advertisment

வாசுதேவன், பெங்களூரு

எல்.கே.அத்வானிக்கு "பாரத ரத்னா' விருது?

மத அரசியலை விசிறி விட ரத யாத்திரை நடத்தியவருக்கு இந்தமுறை பாரத ரத்னா கொடுத்திருக்கிறார்கள். இனி அடுத்த ஆண்டுகளில் கரசேவகர்களுக்கோ, குஜராத் கலவரத்தில் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து வீசியவர்களுக்கோ, அல்லது சி.ஏ.ஏ. போராட்டத்தில் அதிக நபர்களை அடித்து நொறுக்கிய போலீஸ்காரருக்கோ, பாதிரியார், மௌலவிகளை எரித்துக் கொல்பவர்களுக்கோ கூட கொடுக்கலாம். நல்ல முன்னேற்றம்.

மல்லிகா அன்பழகன், சென்னை-78.

2026-ல் மதுரை எய்ம்ஸ் வந்துவிடும் என மத்திய இணையமைச்சர் பாரதி பிரவீன்பவார் கூறுகிறாரே?

இந்த இடைக்கால பட்ஜெட்டிலும் தமிழக எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கவில்லை. பிறகு எப்போது நிதி ஒதுக்கி, கட்ட ஆரம்பித்து, ‘சூ மந்திரகாளி’ என்றதும் தொப்பிக்குள் இருந்து வரும் புறாவோ, முயலோ இல்லை எய்ம்ஸ் மருத்துவமனை. அதற்கான திட்டமிடுதல், கட்டுமானப் பணிகள் இருக்கின்றன. துணிந்து பொய்சொல்வது என தீர்மானித்தபின் ட்ரில்லியன் பொருளாதாரம் என்றால் என்ன!… எய்ம்ஸ் மருத்துவமனை என்றால் என்ன! எல்லாம் ஒன்றுதான்.

nn

அ.அமுலு, வண்டலூர்

உ.பி.யில் முதல்வர் திருமணத் திட்டத்தில் முறைகேடு நடந்திருக்கிறதே?

ஒரே நேரத்தில் 537 ஜோடிகளுக்குத் திருமணம். ஒவ்வொரு ஜோடிக்கும் ரூ.35,000 நிதியுதவி. 10,000-க்கு சீர்வரிசை, திருமணச் செலவுக்கு ரூ.5000. ஜனவரி 25-ஆம் தேதி இந்த பிரமாண்டமான திருமண நிகழ்வு நடை பெற்றது. இதில் தற்போது 240 ஜோடிகள் போலியானவை எனத் தெரியவந்திருக்கிறது. நிறைய பெண்களுக்கு மாப்பிள்ளையே கிடைக்காமல் பெண்கள் தங்களுக்குத் தாங்களே மாலை மாற்றிய வீடியோ வைரலாகியிருக்கிறது. கல்யாண நிகழ்வில் மாப்பிள்ளையாக நடித்தால் கமிஷன் எனச் சொல்லி அழைத்துவரப்பட்ட சிலருக்கு கமிஷன் தரப்படவில்லை என புகார் எழுந்திருக்கிறது. பெயர் கெட்டுப் போனதும் யோகி அரசு அவசர அவசரமாக விசா ரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது.

இரா.முனியராஜ், புல்லங்குடி

சின்னச் சின்ன காரணங்களுக்காகக்கூட எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மக்கள் சாலை மறியலில் ஈடுபடுவது ஏன்?

தண்ணீர் பற்றாக்குறையோ, ஆலைக் கழிவால் மாசோ காரணம். எதுவாக வேண்டுமானால் இருந்துவிட்டுப் போகட்டும். மக்கள் போராடுவதற்கு உரிமை இருந்தால்தான் அது சுதந்திர நாடு. ஆனால் போராடுபவர்கள் தங்களின் நியாயமான உரிமைகளுக்காகப் போராடுகிறோமா… இல்லை எந்தக் கட்சியோ, அமைப்போ தூண்டிவிட்டு எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கிறோமா என்ற தெளிவுடன் போராடுவது நல்லது.