என்.இளங்கோவன், மயிலாடுதுறை.

விஜய்யின் அரசியல் பிரவேசம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு திராவிடக் கட்சிகளின் வெற்றியை பாதிக்குமா?

பெரிய எண்ணிக்கையில் ரசிகர் படை வைத்திருக்கும் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால், இந்த பெரிய ரசிகர் படையில் எத்தனை சதவிகிதம் டிக்கெட் வாங்கி சினிமா பார்த்துவிட்டு மறந்துவிடும், எத்தனை சதவிகிதம் வாக்குச்சாவடி வரை வந்து வாக்களிக்கும் என்பது விஜய்க்கே இப்போது தெரியாது. அதனால் ஒரு தேர்தல் முடிவுவரை காத்திருந்து பார்ப்போம்!

எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

Advertisment

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தமிழர்கள் மட்டுமே விளையாடுவார் கள் என்கிறாரே சீமான்?

எல்லாம் வாக் குறுதிதானே!… இப் போதைக்குள் சீமான் ஆட்சி யமைக்கப் போவ தில்லை. இன்னும் 10 வருடத்துக்குப் பின் என்ன நடக் கும் என யாருக் கும் தெரியாது. ஒருவர் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என அறிவித்து பிரதமராக வந்தார். கணக்குப்படி இந்தியாவில் 20 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்கவேண்டும். சொன்னதைச் செய்யவில்லை என்று வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடக்கூடாதென மக்கள் தடுத்துவிட்டார்களா என்ன?

செந்தில்குமார். எம், சென்னை - 78

Advertisment

அரசியல் மூலமாகத்தான் ஒரு நாட்டையே ஆளமுடியும், அப்படியிருக்க அதை சாக்கடை என்று சொல்வது ஏன்?

தேங்காத அரசியல் பாய்ந்து பிரவகிக்கும் நதிக்குச் சமமானது. சுயநலம், ஊழல், மக்களை பிளவுபடுத்துதல், எதேச்சதிகாரம், போட்டி மனப்பான்மை என அந்த நதி பிளவுபட்டு, சிறு சிறு பள்ளத்துக்குள் தேங்கும்போது அதன் புத்துணர்ச்சி கெட்டு நாறி சாக்கடையாகிவிடுகிறது.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்.

எடப்பாடி பழனிச்சாமி நடத்தியது மம்மி ஆட்சி... ஸ்டாலின் நடத்திக் கொண்டிருப்பது டம்மி ஆட்சி என்கிறாரே... நடிகை விந்தியா?

மேடையில் ஆயிரமும் பேசுவார்கள். இதை யெல்லாம்விட பயங்கரமான பேச்சுகள் தமிழக மேடைகளில் பேசப்பட்டுள்ளன. தற்போது மேடைப் பேச்சுகளின் மீதான தமிழர்களின் ஆர்வம் மட்டுப்பட்டு யூடியூப் வீடியோக்கள், ஊடக விவாத நிகழ்வுகளின் பக்கம் திரும்பிவிட் டது. மேடைப் பேச்சாளர்களின் பேச்சை வைத்து ஆட்சிகளை எடைபோடுவதை விட்டுவிட்டு, உங்கள் சொந்த மூளையை வைத்து எடைபோட்டு ஒரு முடிவுக்கு வந்துகொள்ளுங்கள்.

ஜெ. மணிகண்டன், பேரணாம்பட்டு

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்ட வில்லை என்கிறார்களே… அது எப்படி சாத்தியம்?

குப்புற விழும் தினத்தன்று சம்பந்தப்பட்ட நபர் முழுக்க முகச்சவரம் செய்திருந்தால் சாத்தியம்தானே… அல்லது குப்புற விழுந்த நபர் மொசைக் பதித்த அறையில் விழுந்தாலும் சாத்தியம்தான்.

mm

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

பழங்காலத்தில் மனிதன் 900 ஆண்டுகள் வாழ்ந்தான். முன்னோர்களின் பாவம் காரண மாகவே மனிதர்களின் ஆயுள் குறைந்தது என கூறிய ரஷ்ய அறிவியலாளர் பதவிநீக்கம் செய் யப்பட்டிருப்பது குறித்து?

ஆமாம், அவர் பெயர் அலெக்சாண்டர் குத்ரியவத்சேவ். ரஷ்ய மரபியல் ஆய்வு நிறுவனத் தின் தலைவர். பைபிளை உதாரணம் காட்டி அவர் பேசிய பேச்சு சர்ச்சையாகி பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். நமது நாட்டில்தான், பசுவின் மூத்திரம் புற்றுநோயைத் தீர்க்கும், புராண காலத்திலே புஷ்பக விமானம் இருந்தது எனச் சொல்பவர்கள் அமைச்சர்களாகவும், சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பதோடு அப்படி தொடர்ந்து பேசவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் கைதுசெய்து சிறையில் தள்ளுகிறது என்று குற்றம்சாட்டுகிறாரே மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி?

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவது மட்டுமே பா.ஜ.க.வின் இலக்காகத் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளே இல்லாத, பா.ஜ.க. என்ற, ஒற்றைக் கட்சி மட்டுமே கோலோச்சும் இந்தியாவை அமைப்பதுதான் அவர்களது நோக்கமாகத் தெரிகிறது. அதற்கு அமலாக்கத் துறையையும், சி.பி.ஐ.யையும் சமயங்களில் ஆளுநர்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பூ.மாறன், மணலி

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டியதற்கு தமிழக அரசை சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டியிருக்கிறதே...?

நல்ல விஷயம்தான். 40 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் பேருந்தைப் பிடித்து போகவேண்டியிருக்கிறதே என மக்கள் முணு முணுக்கின்றனர். அனைத்தும் பழகிப்போக கொஞ்ச நாளாகும். அதற்குள் மெட்ரோ பணிகளைத் துரிதப்படுத்தி நிறைவேற்றி முடித்தால் சரிதான்.