நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் வெற்றிபெறாது என மதுரை ஆதீனம் சாபம் விட்டுள்ளாரே?
ஒரு அடிப்படை விஷயம் இருக்கிறது. மருத்துவரின் வேலையைப் பொறியாளர் பார்க்கக்கூடாது. பொறியாளரின் வேலையை மருத்துவர் பார்க்கக்கூடாது. பார்த்தால் வேண்டாத விளைவுகள் உண்டாகும். ஒரு இயந்திரப் பொறியாளரிடம் போய், எனக்கு நெஞ்சு வலிக்கிறது. என்ன செய்யலாம் என யாரும் கேட்பதில்லை. ஆதீனத்தின் வேலை ஆன்மிகத்தை வளர்ப்பது. உலகியல் விஷயங்களில் தடுமாறும் மக்களை ஆற்றுப்படுத்தி ஆன்மிகத்தில் முன்னேறச் செய்வது. அதை விட்டுவிட்டு யார் சிறந்த பிரதமர், எந்தக் கட்சி எத்தனை தொகுதிகள் வெற்றிபெறும் என கணித்துக்கொண்டிருந்தால் அவர் வேண்டாத ஆணியைப் பிடுங்கிக்கொண்டிருக்கிறார் என்று பொருள்.
ரா.ராஜ்மோகன், முட்டியூர்
"எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் தெருமு
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் வெற்றிபெறாது என மதுரை ஆதீனம் சாபம் விட்டுள்ளாரே?
ஒரு அடிப்படை விஷயம் இருக்கிறது. மருத்துவரின் வேலையைப் பொறியாளர் பார்க்கக்கூடாது. பொறியாளரின் வேலையை மருத்துவர் பார்க்கக்கூடாது. பார்த்தால் வேண்டாத விளைவுகள் உண்டாகும். ஒரு இயந்திரப் பொறியாளரிடம் போய், எனக்கு நெஞ்சு வலிக்கிறது. என்ன செய்யலாம் என யாரும் கேட்பதில்லை. ஆதீனத்தின் வேலை ஆன்மிகத்தை வளர்ப்பது. உலகியல் விஷயங்களில் தடுமாறும் மக்களை ஆற்றுப்படுத்தி ஆன்மிகத்தில் முன்னேறச் செய்வது. அதை விட்டுவிட்டு யார் சிறந்த பிரதமர், எந்தக் கட்சி எத்தனை தொகுதிகள் வெற்றிபெறும் என கணித்துக்கொண்டிருந்தால் அவர் வேண்டாத ஆணியைப் பிடுங்கிக்கொண்டிருக்கிறார் என்று பொருள்.
ரா.ராஜ்மோகன், முட்டியூர்
"எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளும் தெருமுனைப் பிரச்சாரங்களில் சேரும் இளைஞர் கூட்டம் கூட, தி.மு.க.வின் மாநில மாநாட்டில் காண முடியவில்லை' என்கிறாரே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
ஒரு கட்சியின் ஆட்சி எப்படி, ஒரு கட்சி நடத்திய மாநாட்டுக்கு எத்தனை கூட்டம் வந்தது போன்ற விஷயங்களை எதிர்க்கட்சி யினரிடம் கேட்கும்போது அவர்களிடம் இருந்து நியாயமான பதில் வருவது குறிஞ்சி பூப்பதைவிட அபூர்வமானது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கமான அர சியல் பேச்சைப் பேசி தி.மு.க.வின் இளைஞ ரணி மாநாட்டை மட்டம் தட்டுகிறார். அப்புறம் தெருமுனைப் பிரச்சாரங்களும், அதற்குக் கூட்டம் கூடுவதெல்லாம் தமிழகத் தில் காலாவதியாகிவிட்டது. தேர்தல் நேரம் தவிர மற்ற நேரங்களில் கூட்டப்படும் கூட்டங்களில் சில நூறு பேர் தேறினாலே அதிசயம். அபூர்வமாக சில கூட்டங்களில் ஆயிரங்களில் ஆட்கள் கூடுவர். பொய்கள் சைஸ் வாரியாக இருக்கிறது. ஜெயக்குமார் சொன்னது பூசணிக்காய் சைஸ் பொய்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட் டணம் வசூலித்த 1892 ஆம்னி பேருந்துகளுக்கு... 36.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதே?
இதைப் பேசி என்னவாகப் போகிறது. ஒன்று, ஆம்னி பேருந்துகளை சட்டபூர்வமாக அனுமதித்து, லைசன்ஸ் வழங்கி, அவர்கள் கட்டணங்கள் இந்த விகிதத்தில் இருக்கலாம் என வரையறை செய்யவேண்டும். அல்லது ஆம்னி பேருந்துகளை ஒழித்துவிட்டு அரசே முழுக்க பேருந்துகளை இயக்கவேண்டும். இரு கழக ஆட்சியிலும் அது நடக்கவே மாட்டேன் என்கிறது. இந்த அபராதம் எல்லாம் "நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுவது போல் அழு' வகையறாதான்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்
"காலை உணவுத் திட்டத்தை மோடிதான் கொண்டுவந்தார், ஸ்டாலின் கொண்டு வர வில்லை, போஸ்தான் கொடுத்தார்' என்கிறாரே ஒருவர்?
ஒரு எளிய விஷயம் இருக்கிறது. இந்தத் திட்டத்தை மோடி கொண்டுவந்திருந்தால் அது இந்தியா முழுக்க நடைமுறையிலிருக்க வேண்டும். மாறாக, தமிழகத்தைப் பார்த்து இன்னும் சில மாநிலங்கள் காலை உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டிவருகின்றன. எல்லாப் புகழையும் மோடி பாக்கெட்டில் போடவேண் டும்,… மாநிலங்களின் தனித்தன்மையை அங்கீகரிக்கக் கூடாது. முதல்வர்களை பிரதமரின் எடுபிடிபோல மாற்ற வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் திட்டம். பிறகு அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வேறென்ன பேசுவார்கள்?
த.சத்தியநாராயணன், அயன்புரம்
பா.ஜ.க.வோடு எடப்பாடி கூட்டு வைத்துவிட்டால் என்ன செய்வார் காயத்ரி ரகுராம்?
எதுவும் பேசாமல் கமுக்கமாக தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்புடன் திருப்தியடைந்து கொள்வார். இல்லை, சுயமரியாதை இடைஞ் சல் செய்ததென்றால் அங்கிருந்தும் விலகி வேறெங்காவது தஞ்சமடைவார்.
எஸ்.கதிரசேன், பேரணாம்பட்டு
உத்தரபிரதேசத்தில் இஸ்லாமிய எம்.எல்.ஏ. கோயிலுக்கு வந்துசென்ற பின் கங்கை நீரால் கோவிலை கழுவியிருக்கின்றனரே கிராம மக்கள்?
இது பழைய செய்தி. கடந்த நவம்பரில் பத்ஹானி சாபா நகர் பஞ்சாயத்தில் சாமே மாதாகோயில் விழாவுக்கு அழைக்கப்பட்டார் அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வான சயீதா காதூன். அவர் வந்துசென்றதும் அவரது வருகையை விரும்பாத சிலர், கோவிலை கங்கை நீரால் சுத்தம்செய்திருக்கின்றனர். இஸ்லாமியரான அவர் மாட்டிறைச்சி சாப்பிடுபவர் என்பது காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. யோகி, 2017-ல் முதல்வரானதும் முதல்வர் இல்லத்தை கங்கை நீரால் சுத்தம் செய்து, யாகங்கள் எல்லாம் நடத்திதான் அங்கே குடிபோனார். அதற்குமுன்பு மாயாவதி, அகிலேஷ் குடியிருந்ததால் இந்த சுத்திகரிப்புகள் நடந்ததாக செய்திகள் வந்தன. அரசன் எவ்வழி... மக்கள் அவ்வழி!