ப.சரவணன், புளியங்குடி
"திருப்பதி பயணத்துக்குப் பின், 140 கோடி இந்தியர்களின் நலனுக் காகப் பிரார்த்தித்தேன்' என்றிருக் கிறாரே மோடி?
தன் காதலன், காதலி, பெஸ்டிக்களை அசத்த, நம்பவே இயலாத விஷயங்களை அசால்டாக அடித்துவிடுவதை இளைய தலைமுறையினர் உருட்டு என்கிறார்கள். உதாரணத்துக்கு, "ஏன்டா என் பெயரைச் சொல்ல மாட்டேங்கிற?'ன்னு காதலி கேட்டா, "அடிக்கடி சொன்னா என் உதடு அழுத்தி உன் பெயருக்கு வலிக்காதா?'ன்னு கேட்டு திக்குமுக்காட வைக்கிறது. ஒரே ஸ்டேட்மெண்டுல 140 கோடி பேரும் கண் பிதுங்கிற மாதிரி, தான் ஒரு உருட்டு லெஜண்டுனு நிரூபிச்சுட்டாரே!
தா.விநாயகம், ராணிப்பேட்டை
மன்சூர்அலிகான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறாரே?
இதுபோல் சர்ச்சைகளில் சிக்காவிட்டால் மற்றவர்கள் அவரை மறந்துவிடுவார்கள்! தவிரவும், மன்சூர் அலிகான், சீமான் போன்றவர்கள் அவர்களது வாய்வீச்சுக்காகவே கவனிக்கப்படுப வர்கள். தடாலடிப் பேச்சு கவன
ப.சரவணன், புளியங்குடி
"திருப்பதி பயணத்துக்குப் பின், 140 கோடி இந்தியர்களின் நலனுக் காகப் பிரார்த்தித்தேன்' என்றிருக் கிறாரே மோடி?
தன் காதலன், காதலி, பெஸ்டிக்களை அசத்த, நம்பவே இயலாத விஷயங்களை அசால்டாக அடித்துவிடுவதை இளைய தலைமுறையினர் உருட்டு என்கிறார்கள். உதாரணத்துக்கு, "ஏன்டா என் பெயரைச் சொல்ல மாட்டேங்கிற?'ன்னு காதலி கேட்டா, "அடிக்கடி சொன்னா என் உதடு அழுத்தி உன் பெயருக்கு வலிக்காதா?'ன்னு கேட்டு திக்குமுக்காட வைக்கிறது. ஒரே ஸ்டேட்மெண்டுல 140 கோடி பேரும் கண் பிதுங்கிற மாதிரி, தான் ஒரு உருட்டு லெஜண்டுனு நிரூபிச்சுட்டாரே!
தா.விநாயகம், ராணிப்பேட்டை
மன்சூர்அலிகான் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறாரே?
இதுபோல் சர்ச்சைகளில் சிக்காவிட்டால் மற்றவர்கள் அவரை மறந்துவிடுவார்கள்! தவிரவும், மன்சூர் அலிகான், சீமான் போன்றவர்கள் அவர்களது வாய்வீச்சுக்காகவே கவனிக்கப்படுப வர்கள். தடாலடிப் பேச்சு கவனிக்கவும் படும், கல்லடியும் வாங்கித் தரும்.
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
"நாற்பது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு வரத் தயாராக இருந்தனர்' என அப்பாவு கூறியிருப்பது பற்றி?
ஒரு கட்சி தலைமையை இழந்து இக்கட்டில் இருக்கும்போது, மற்ற கட்சிக்குத் தாவும் எம்.எல். ஏ.க்கள் நம்பகமானவர்களா? அத்தகைய நபர்களைக் கட்சியில் சேர்த்துத்தான் தி.மு.க. வளரவேண்டுமா? இதையெல்லாம் ஊக்குவித்தால் நாளைக்கு இன் னொரு கட்சிக்கு தி.மு.க.வினர் தாவினால் அக்கட்சித் தலைமை ஏற்றுக்கொள்ளுமா -இப்படி பல விஷ யங்கள் இருக்கிறது. அப்பாவு-வுக்குத் தெரியாத அரசியலா!
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
"காங்கிரஸ் நம்பிக்கை எங்கே முடிகிறதோ, அங்கிருந்துதான் மோடியின் உத்தரவாதம் தொடங்கு கிறது...' என்ற மோடியின் பேச்சு..?
காங்கிரஸ் ஆட்சியிலிருந்து இறங்கி 10 ஆண்டுகளை நெருங்கப்போகிறது. இந்நேரத்துக்கு மோடியின் உத்தரவாதம் தொடங்கியிருக்க வேண்டாமா? பதுக்கல் மற்றும் கறுப்புச் சந்தையை நிறுத்த சிறப்பு நீதிமன்றங்கள், தேசிய வேளாண் சந்தையை உருவாக்குதல், வரி விதிப்பை எளிமை யாக்குதல், இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குவ துடன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேலை வாய்ப்பு மையங்களை எல்லாம் தொழில் மையங் களாக மாற்றுவோம் என 2014-ல் நூற்றுக்கணக்கில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால் நமக்கு கிடைத்ததோ விதவிதமாய் ஜி.எஸ்.டி. வரி, நான்கு வழிச் சாலைகள், எட்டுவழிச் சாலைகளில் கட்டண உயர்வு, குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக விவசாயிகள் கிட்டத்தட்ட 1 வருட காலம் போராடிய பின்னும் ஏமாற்றம் இது போன்றவைதான். வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார் மோடி. அவர் கணக்குப்படி இந்நேரம் 20 கோடி இளைஞர் களுக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், பெண்களை தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களாகக் குறிப்பிட்டு, பாலியல் வன்புணர்வு தொடர்பாக சட்டம் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்றார்கள். காஷ்மீரில் எட்டுவயது குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டது முதல், உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ. குல்தீப்செங்கர் விவகாரம், ஹாத்ராஸ் விவகாரம் வரை பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவைக்க பா.ஜ.க.வினர் முதல் அரசே துணை நின்றதுதான் நடந்தது. கியாரண்டி சொல்லி மோடி சுட்ட வடைகளில் நூல் பிரியத்தொடங்கி வெகுநாளாகிவிட்டது.
அன்னூரார் பொன்விழி, அன்னூர்
பெரிய தொழிலதிபர்கள் மட்டும்தான் தீவுகளை விலைக்கு வாங்கமுடியுமா, ஒரு தீவு வாங்க ஆசை. யாரை அணுகவேண்டும்?
உலகின் பல்வேறு கடற்பகுதிகளிலும், வெவ்வேறு அளவுகளில் பல்வேறு குட்டித் தீவுகள் விற்பனைக்குக் கிடைக்கும். தீவின் பரப்பு, அங்கி ருக்கும் செழுமையைப் பொறுத்து விலை மாறு படும். தீவில் ஒரு பங்களாவைக் கட்டிக்கொண்டு நீங்கள் ஜாலியாக வசிக்கலாம். ஆனால் இதற் கெல்லாம் கோடிகளை தூக்கியெறியவேண்டும். தீவைப் பராமரிக்க, போய்வர குட்டிக் கப்பல், படகு என பலவும் வேண்டும். கூகுளில், "பிரைவேட் ஐலேண்ட் ஃபார் சேல்' என தட்டிப் பார்த்தாலே விவரம் கிடைக்கும். ஏன், நித்தியானாந்தாவின் கைலாசாவுக்குப் போட்டியாக நீங்கள் வைகுந்தத் தைத் தொடங்கப்போகிறீர்களா?
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
"அம்பானியும் அதானியும் என் தம்பி ராகுலை விலைக்கு வாங்கிட முடியாது...' என பிரியங்காகாந்தி கூறியிருக்கிறாரே?
ஒருவேளை அவர்களைத் தவிர்த்த வேறு கார்ப்பரேட்களால் வாங்கமுடியும் என சூசகமாகச் சொல்கிறாரோ… என்னவோ. வணிகத்துறையை ஊக்குவிப்பதும், அரசுக்கும் தொழிலதிபர்களுக்கும் நல்லிணக்கமாய் இருப்பது நல்லதுதான். ஆனால், குறிப்பிட்ட தொழிலதிபர்கள் அரசின் மீது தங்கள் பிடியை இறுக்க முடியுமென்றாலோ அல்லது குறிப்பிட்ட தொழிலதிபர்களுக்கு மட்டும் அரசின் கனிவு கிடைக்குமென்றாலோ அது தவறான விஷயம். அத்தகைய அரசாங்கமாக காங்கிரஸ் இல்லாதிருக்குமென்றால் அது சிறப்புதான்.