மாவலி பதில்கள்

ss

அன்னூரார், பொன்விழி

இந்தியாவுக்கு அடுத்த பெண் பிரதமர் எப்போது?

mm

நேருவின் மகளாய் இருந்ததால், இந்திரா இந்தியப் பிரதமராகிவிட்டார். அவரிடம் ஆளுமை இருந்ததால் அதைத் தக்கவைத்துக்கொண்டார். மற்றபடி இன்றும் அரசியலில் ஒரு பெண் உச்சப் பதவிக்கு வருவது சிரமமானதுதான். இன்னும் தெளிவாகச் சொன்னால் முதல்வர் பதவிக்கே, ஒரு பெண் வந்தடைவது ஆகச் சிரமமான ஒன்று. இந்தியா வில் இதுவரை 16 பெண்கள் முதல்வர் பதவியை அலங்கரித்துள்ளனர். வல்லரசு நாடான அமெரிக் காவில் இதுவரை அதிபர் பதவிக்கு ஒரேயொரு முறைகூட பெண்கள் வந்ததில்லை என்பதை யும் இணைத்து யோசித்தால், இந்திய அரசியல் களம் பெண்களுக்கு அத்தனை பாதகமாக இல்லை.

வாசுதேவன், பெங்களூரு

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2023 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதல்லவா?

எல்லா அணிகளுமே கோப்பையை வெல்லப்போகிறோ

அன்னூரார், பொன்விழி

இந்தியாவுக்கு அடுத்த பெண் பிரதமர் எப்போது?

mm

நேருவின் மகளாய் இருந்ததால், இந்திரா இந்தியப் பிரதமராகிவிட்டார். அவரிடம் ஆளுமை இருந்ததால் அதைத் தக்கவைத்துக்கொண்டார். மற்றபடி இன்றும் அரசியலில் ஒரு பெண் உச்சப் பதவிக்கு வருவது சிரமமானதுதான். இன்னும் தெளிவாகச் சொன்னால் முதல்வர் பதவிக்கே, ஒரு பெண் வந்தடைவது ஆகச் சிரமமான ஒன்று. இந்தியா வில் இதுவரை 16 பெண்கள் முதல்வர் பதவியை அலங்கரித்துள்ளனர். வல்லரசு நாடான அமெரிக் காவில் இதுவரை அதிபர் பதவிக்கு ஒரேயொரு முறைகூட பெண்கள் வந்ததில்லை என்பதை யும் இணைத்து யோசித்தால், இந்திய அரசியல் களம் பெண்களுக்கு அத்தனை பாதகமாக இல்லை.

வாசுதேவன், பெங்களூரு

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2023 உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளதல்லவா?

எல்லா அணிகளுமே கோப்பையை வெல்லப்போகிறோம் என்ற நம்பிக்கையுடன் வந்திருப்பார்கள். அதேபோலத்தான் இந்திய அணியும். தகுதிச்சுற்றில் இந்திய அணியின் மட்டையாட்டமும், பந்துவீச்சும் இரண்டுமே சமச்சீருடன் இருப்பதாகத் தெரிகிறது. இதே நிலை அரையிறுதி, இறுதி ஆட்டங்களிலும் தொடர்ந்தால், உலகக் கோப்பை நமக்குத்தான்!

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்தே நீக்கு வதுதான் மிகப்பெரிய தேசப்பற்று என்கி றாரே டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்?

தேசப்பற்றுக்கு எல்லா கட்சிகளுமே ஆளுக் கொரு வரையறை வைத்திருப்பார்கள். முக்கிய மாக, தேசப்பற்று விவகாரத்தை வாக்கு அரசியல் ஆதாயமாக மாற்றியதில் பா.ஜ.க.வுக்கு தனி இடம் உண்டு. அந்த பா.ஜ.க.வைக் காலிசெய்வ தற்கு தேசப்பற்று விவகாரத்தையே கெஜ்ரிவால் கையிலெடுக்கிறார் என்றால் கெட்டிக்காரர் தான். இந்த நேரத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவின், “"எனக்கே விபூதி அடிக்கப் பார்த் தல்ல...'’வசனம் நினைவில் வந்துபோகிறது.

ராஜ்மோகன், முட்டியூர்

கடந்த காலங்களில்கூட சூழ்நிலை காரணமாகவே பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்தோமே தவிர கொள்கைக்காக ஒருபோதும் அல்ல என்று அடித்துச் சொல்கிறாரே... எடப்பாடியார்?

இருக்கட்டும். அந்தச் சூழ்நிலை என்ன, அதன் இக்கட்டு என்ன என்பதையும் தொண்டர்களுக்கும் தமிழர்களுக்கும் எடப்பாடி விளக்கினால் தேவலை!

பி.மாறன், மணலி

நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. கையெழுத்து இயக்கம் நடத்தி நாடகம் ஆடுகிறது என்கிறாரே எடப்பாடி?

நீட் தேர்வு விலக்கை அமல்படுத்துவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்திருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி இத்தகைய குற்றச் சாட்டுகளைச் சுமத்தத்தான் செய்வார். சட்டரீதியாக நீட் தேர்வு விலக்கைச் சாத்தியப் படுத்துவதற்கான வழிவகைகளை தி.மு.க.வும் அதன் வழக்கறிஞர் அணியும் தீவிரமாக ஆராய்வது நல்லது.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

ராகுல் ஒரு காகிதப் புலி என சந்திர சேகரராவ் மகள் கவிதா கூறியிருக்கிறாரே?

காகிதப் புலிகள், காரியப் புலிகள் யாரா யிருந்தாலும் ஜெயித்து வந்ததும் மக்களைத் தானே வேட்டையாடுகிறார்கள். இந்தியா போன்ற தேசத்தின் தென் முனையிலிருந்து வட முனை வரை மக்களை ஒன்றிணைக்க நடந்தவரை... "காகிதப்புலி' என்பது பொருத்தமாயில்லையே!

மல்லிகா அன்பழகன், சென்னை-78

கழிவு நீர் அகற்றும்போது உயிரிழப்பவர் களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது பற்றி?

பல ஆண்டுகளாகவே கழிவு நீர் அகற்றும் போது பணியாளர்கள் உயிரிழக்கும் செய்தியைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். நமது அறிவியலும் தொழில்நுட்பமும் சந்திரனில் இறங்க வழிவகை செய்யும்போது, சாக்கடை, மலக்குழிகளில் யாரும் இறங்காமல் அடைப்பை அகற்றவும் வழிவகைகளைத் தராமல் போய்விடாது. ஆக, அதற்குத் தேவையான கருவிகளைப் போது மான அளவு வாங்கிப் பயன்படுத்தவும், ஆட்களை கழிவுநீர்க் குழிகளில் இறங்கவிடாமல் கண் காணிக்கவும்தான் மத்திய- மாநில அரசு களுக்கு ஆர்வமில்லைபோல தெரிகிறது. இப்படி உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு வெறும் 2 லட்சமோ, 5 லட்சமோ எப்படிப் போதுமானதாக இருக்கும். எனவே 30 லட்சம் என்பது சரியானதுதான்.

தே.மாதவராஜ், கோயம்புத்தூர்.

யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாது?

நமக்கு நம்மைவிட மிக அறிமுகமானவர், நம்பகமானவர் வேறு யார்? எனவே முதலும் முக்கியமுமாக நம்மை நம்பவேண்டும். நமக்கு அப்பாலுள்ள அனைவரைப் பற்றியுமே நமக்கு ஓரளவுதான் தெரியும். நமக்குச் சரிவரத் தெரியாத நபர்களைப் பற்றி சந்தேகப்பட நமக்கென்ன உரிமையிருக்கிறது. எனவே பிறரின் மீது அவநம்பிக்கை கொள்ளக்கூடாது.

nkn011123
இதையும் படியுங்கள்
Subscribe