மாவலி பதில்கள்

dd

பா. சங்கர், தென்காசி

ரஷ்ய அதிபர் புதின், "கனடா சபாநாயகர் ஒரு முட்டாள்' என காட்டமாக விமர்சித்துள்ளாரே...

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பதை உலகமே அறியும். அப்படிப்பட்ட உக்ரைன் முன்னாள் வீரர் ஒருவரை சமீபத்தில் கனடா நாடாளுமன்றத்தில் வைத்து கௌரவித்தார்கள். அந்த உக்ரைன் வீரர், இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுடன் சேர்ந்து நேச நாடுகளுக்கு எதிராகப் போராடியவர். நேச நாடுகள் என்ற வகைப்பாட்டில் ரஷ்யா மட்டுமல்ல... அமெரிக்காவும்கூட வரும். விவகாரம் இப்படியிருக்க... உக்ரைன் வீரரை, கனடா நாடாளுமன்றத்தில் வைத்து அந்நாட்டு சபாநாயகர் அந்தோணி ரோட்டா பாராட்டினால், ரஷ்ய அதிபர் கனடா சபாநாயகருக்கு பாராட்டுப் பத்திரமா வாசிப்பார்? விஷயம் விவகாரமான பின், அந்தோணி ரோட்டா தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

mm

எஸ். அர்ஷத் ஃபயா

பா. சங்கர், தென்காசி

ரஷ்ய அதிபர் புதின், "கனடா சபாநாயகர் ஒரு முட்டாள்' என காட்டமாக விமர்சித்துள்ளாரே...

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் இன்றும் தொடர்ந்துகொண்டிருப்பதை உலகமே அறியும். அப்படிப்பட்ட உக்ரைன் முன்னாள் வீரர் ஒருவரை சமீபத்தில் கனடா நாடாளுமன்றத்தில் வைத்து கௌரவித்தார்கள். அந்த உக்ரைன் வீரர், இரண்டாம் உலகப் போரில் நாஜிக்களுடன் சேர்ந்து நேச நாடுகளுக்கு எதிராகப் போராடியவர். நேச நாடுகள் என்ற வகைப்பாட்டில் ரஷ்யா மட்டுமல்ல... அமெரிக்காவும்கூட வரும். விவகாரம் இப்படியிருக்க... உக்ரைன் வீரரை, கனடா நாடாளுமன்றத்தில் வைத்து அந்நாட்டு சபாநாயகர் அந்தோணி ரோட்டா பாராட்டினால், ரஷ்ய அதிபர் கனடா சபாநாயகருக்கு பாராட்டுப் பத்திரமா வாசிப்பார்? விஷயம் விவகாரமான பின், அந்தோணி ரோட்டா தன் பதவியையே ராஜினாமா செய்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

mm

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

"நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி, பா.ஜ.க.வுக்கு சவாலாகவே இருக்கும்' என்று உண்மையை ஒப்புக்கொண்டுள்ளாரே... ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

சவால்தான்,… ஆனாலும் அத்தனை பெரிய சவாலல்ல என்பது, நீங்களெல்லாம் எங்களுக்கு ஒரு போட்டியா என அலட்சியப்படுத்துவது, பா.ஜ.க. தலைவர்கள் ஒப்புக்கொள்வதும், மறுப்பதும் எல் லாமே தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதி தான். மக்கள் முன்பு "பா.ஜ.க.வுக்கு சரி யான மாற்று நாங்கள்தான். வலு வான போட்டி இந்தியா கூட் டணிதான்' என்பதை நிரூ பிக்கவேண்டும். அப்படி நிரூபித்துவிட்டால் மோடியே அலட்சி யப் படுத்தினாலும், இந்தியா கூட்டணி வெற்றி வாகை சூட முடியும்.

ரா.ராஜ்மோகன், முட்டியூர்

"பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர் களை கோயில் பூசாரிகளாக ஆக்குவாரா ஆளுநர் ஆர்.என்.ரவி?' என்ற கேள்வியை முன்வைத்திருக் கிறாரே... வி.சி.க. தலைவர் தொல். திருமா?

அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக ஆக்குவது திராவிடக் கட்சிகளின் வேலையல்லவா! அதை ஏன் ஆளுநர் மேற்கொள்ளப்போகிறார். ஆதிதிராவிடர்களுக்கு பூணூல் போடும் பாரதியாரின் யோசனையைக் கையிலெடுத்த ஆளுநர், "சாதிகள் இல்லையடி பாப்பா, …குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'’போன்ற கவிதைகளையும் படித்து மனப்பூர்வமாக உணர்ந்துகொண்டால், இதுபோன்ற நாடகங்களை நடத்தவேண்டிய அவசியமில்லை.

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

"மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுநர்கள் செயல்படுவதாக' பாலிநாரிமன் கூறியிருக்கிறாரே?

முந்தைய ஆட்சிகளிலும் ஆளுநர்கள் மத்திய அரசின் கைப்பாவையாகத்தான் இருந்தார்கள். ஆனால் தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் ஆளுநர்களை ஓர் ஆயுதம்போல் மாற்றி ஆட்சியிலிருப்பவர்களை துன்புறுத்துவது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. அதைத்தான் பாலிநாரிமன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

வாசுதேவன், பெங்களூரு

"இந்தியா ஒலிம்பிக்கை நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது' என்று பி.டி.உஷா கூறியுள் ளாரே..?

தற்போதைய ஆசியக் கோப்பையில் நூற்றுக்கும் அதிகமான பதக்கங்களைக் குவித்திருப்பதால், பி.டி. உஷா இப்படிப் பேசியிருக்கலாம். ஆசியக் கோப்பை வேறு. ஒலிம் பிக் வேறு. ஆசியக் கோப்பையில் நாம் பத்து, பன்னிரண்டு நாட்டிலிருந்து வரும் போட்டி யாளர்களுக்கு எதிராகத்தான் பதக்கங்களைக் குவிக்கவேண்டியிருக்கும். ஒலிம்பிக்கின் கதை வேறு. அங்கே நூற்றுக்கணக்கான நாட்டின் போட்டியாளர்களுக்கு எதிராக நாம் பதக்க அறுவடை செய்யவேண்டியிருக்கும். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 4 வெண் கலம், 2 வெள்ளி, 1 தங்கம் என 7 பதக்கங்களை மட்டுமே வென்றது. மற்றபடி இந்தியா ஒலிம்பிக்கை நடத்துவதில் மாவலிக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஒலிம்பிக்கை நடத்தினால், குறைந்தது 25, 50 பதக்கங்களையாவது அள்ளிவரவேண்டும்.

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

சிறிய ரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் சுங்கச்சாவடிகளை தீயிட்டுக் கொளுத்து வோம் என்கிறாரே ராஜ்தாக்கரே?

தமிழகத்தின் பரனூர் சுங்கச்சாவடி யில் கட்டண வசூலில் நடந்த ஊழலை சமீபத் தில் சி.ஏ.ஜி. சுட்டிக்காட்டியிருந்தது. கட்டண வசூலுக்கான காலம் முடிந்தபின்பும் பல சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப் படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் மும்பையில் சுங்கச்சாவடிகளில் ஆட்டோ, கார் போன்ற சிறிய ரக வாகனங்களுக்கு கட்டணம் வசூலித்தால் சுங்கச்சாவடிகளைத் தீயிட்டுக் கொளுத்துவோம் என்றிருக்கிறார் மராட்டிய நவநிர்மாண்சேனா தலைவர் ராஜ்தாக்கரே. பால் தாக்கரே காலம் முதலே மராட்டியம் அதிரடி அரசியலுக்குப் பெயர்போனது. ராஜ்தாக்கரே, உத்தவ் தாக்கரே வகையறாவினர் அதைத் தொடர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

nkn141023
இதையும் படியுங்கள்
Subscribe