மாவலி பதில்கள்!

dd

ஆர். பிரபு, உளுந்தூர்பேட்டை

2022 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கான வீரர்கள் ஜோதிடரால் தேர்வு செய்யப் பட்டதாக செய்தி வெளியாகி யிருக்கிறதே?

தில்லியைச் சேர்ந்த பூபேஷ்சர்மா என்ற ஜோதிடரை இந்திய கால்பந்து அமைப்பின் மூத்த நிர்வாகி, பயிற்சியாளருக்கு அறிமுகம் செய்து வைக்க, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 11 வீரர்கள், காயமடைந்தால் பயன்படுத்த வேண்டிய மாற்றுவீரர்களை, அவர்களது ஜாதகத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொடுத்திருக்கிறார் ஷர்மா. அப்படியே கிரிக்கெட், மல்யுத்தம், ஹாக்கி என ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெற்றி பெறக்கூடிய வீரர்களை, அணியைத் தேர்வு செய்ய அணிக்கு ஒரு ஜோதிடரை நியமிக்க அரசு உத்தரவு வந்தாலும் ஆச்சரியமில்லை. அணி தோல்வி யடைந்தால், நம் அணியிலுள்ள வீரர்களின் ஜாதகத்தை விடவும், எதிரணி வீரர்களின் கோள்நிலைகள் இன்னும் சிறப்பாக இருந்ததாகக் கூறி சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஜ

ஆர். பிரபு, உளுந்தூர்பேட்டை

2022 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கான வீரர்கள் ஜோதிடரால் தேர்வு செய்யப் பட்டதாக செய்தி வெளியாகி யிருக்கிறதே?

தில்லியைச் சேர்ந்த பூபேஷ்சர்மா என்ற ஜோதிடரை இந்திய கால்பந்து அமைப்பின் மூத்த நிர்வாகி, பயிற்சியாளருக்கு அறிமுகம் செய்து வைக்க, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 11 வீரர்கள், காயமடைந்தால் பயன்படுத்த வேண்டிய மாற்றுவீரர்களை, அவர்களது ஜாதகத்தின் அடிப்படையில் தேர்வு செய்து கொடுத்திருக்கிறார் ஷர்மா. அப்படியே கிரிக்கெட், மல்யுத்தம், ஹாக்கி என ஒவ்வொரு விளையாட்டுக்கும் வெற்றி பெறக்கூடிய வீரர்களை, அணியைத் தேர்வு செய்ய அணிக்கு ஒரு ஜோதிடரை நியமிக்க அரசு உத்தரவு வந்தாலும் ஆச்சரியமில்லை. அணி தோல்வி யடைந்தால், நம் அணியிலுள்ள வீரர்களின் ஜாதகத்தை விடவும், எதிரணி வீரர்களின் கோள்நிலைகள் இன்னும் சிறப்பாக இருந்ததாகக் கூறி சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஜோதிடர் போய்க்கொண்டே இருப்பார்.

dd

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

பா.ஜ.க. -அ.தி.மு.க. உறவு கணவன்-மனைவி உறவு போன்றது என்று ஹெச்.ராஜா பேசி யிருக்கிறாரே?

நல்லது. இந்த உறவு எத்தனை நாள் நீடிக்கிறது. எப்போது விவாகரத்து ஆகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். யார் கணவன், யார் மனைவி என்பதில் எடப்பாடிக்கும், அண்ணாமலைக்கும் அடிக்கடி தகராறு வருவதை யும் நாம் பார்த்துக்கொண்டேதானே இருக்கிறோம்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

உடன்கட்டை ஏறுவது குறித்த அண்ணாமலையின் பேச்சு பற்றி?…

தனது கற்பை எப்படிக் காக்கவேண்டும் என்ற பொறுப்பு பெண்களிடம் விடப்படவேண்டுமே தவிர, சமூகத்திடமும் சாமியார்களிடமும் அல்ல. கிட்டத்தட்ட 2000 வருடமாக புழக்கத்திலிருந் திருக்கிறது இப்பழக்கம். மொகலாயப் படையெடுப் பை காரணம் காட்டி பழியை அவர்களது தலையில் கட்டப் பார்ப்பதுதான் இந்துத்துவர்களின் வழக்கம். உடன்கட்டை ஏறுதல், கணவன் மறைவுக்குப் பின் வெள்ளுடுப்பு உடுத்தல், தலையை மொட்டை யடித்தல், மறுமணத்தை மறுத்தல் (பெண்களுக்கு மட்டும்) இவையெல்லாம் சனாதனச் சீரழிவுகள். இதையெல்லாம் பகுத்தறிவு கொண்டு கடந்து வந்திருக்கிறோம். அதை நியாயப்படுத்தி பின்னால் திரும்ப முயற்சிக்கக்கூடாது. ஒருவர் எத்தனைதான் முயற்சித்தாலும் பிறந்த சிசு கரு புகாது!

நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி

மொபைலில் ஒருவர் ஆபாசப் படம் பார்ப்பது குற்றம் ஆகாது என கேரள உயர்நீதிமன்றம் கூறியிருப்பது குறித்து?

இந்த நுட்பம் தெரிந்ததால்தான் சட்டமன்றம், நாடாளுமன்றம் என்ற பேத மில்லாமல் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மொபை லில் ஆபாசப் படம் பார்த்து செய்தியிலும் இடம் பெற்றிருக்கிறார்கள்போல. அரசாங்கம் நினைத்தால் ஒரு மசோதா நிறைவேற்றி, எதனையும் குற்றமாக்கிவிட முடியும். ஒருவேளை இதனை குற்றமாக அறிவித்தால், எத்தனை கோடி பேரை கொண்டுபோய் சிறையிலடைப்பது?

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

டீசல் கார்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கு மாசு உற்பத்தி வரியாக 10% கூடுதல் ஜி.எஸ்.டி. என்ற அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளாரே நிதின் கட்கரி?

தற்போது ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அரசின் சாதனையாக எதையாவது சொல்ல முடியுமானால், அது கன்னாபின்னாவென்று விதித்த வரிகளைத் தான் சொல்லமுடியும். இன்னும் மூச்சுவிடுவதற்கு மட்டும்தான் வரி விதிக்கவில்லை. டீசல் காருக்கான ஜி.எஸ்.டி.யை மட்டுமல்ல, பயணிகள் பயணம் செய்யக் கூடிய கார்களில் 6 காற்றுப் பைகள் கட்டாயம் எனும் ஒரு அறிவிப்பையும் வெளி யிட்டு பின்வாங்கியிருக் கிறார். தேர்தல் விரைவில் வரவிருக்கும் சூழ்நிலையில் இவையெல்லாம் தள்ளி வைக்கப்படுகிறதே தவிர,… தேர்தல் முடிவு வெளியானதும் மீண்டும் நடைமுறைக்கு வரும்.

dd

ம.சரத், தஞ்சாவூர்

லிபியா நாடு புயல், வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதே?

பட்ட காலிலே படும் என்பது பழமொழி. ஏற்கெனவே லிபியா அத்தனை செல்வ வளமுள்ள நாடல்ல. போதாக்குறைக்கு நிர்வாகத்தில் இரண்டு போட்டி அரசாங்கங்கள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் டேனியல் புயல் வந்தது. கடும் மழைப்பொழிவால் செப்டம்பர் 10-ஆம் தேதி இரு அணைகள் உடைந்து நாட்டுக்குள் நுழைந்தது. முதலில் 2000, 4000 எனச் சொல்லப்பட்டு வந்த உயிரிழப்பு, இப்போது 20,000 பேர்வரை இருக்கலாம் என யூகிக்கப்படுகிறது. அணை உடைந்து ஊருக்குள் நுழைந்த வெள்ளம் பலபேரை கடலுக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது. இதனால் இறந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை தெரியவில்லை. இறந்தவர்களின் எண்ணிக்கையை யும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் ஒருங்கிணைத்தால் மரண எண்ணிக்கை தெரியவரும். ஆனால் பெரும் எண்ணிக்கையில் மரணம் நிகழும்போது, எந்த அரசும் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டுவதில்தான் மும்முரமாயிருக்கும் என்பது உலக யதார்த்தம்.

nkn200923
இதையும் படியுங்கள்
Subscribe