எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
சர்ச்சைக்குரிய படம் என்று நடுநிலை விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட "தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்திற்கு தேசிய ஒற்றுமைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளதே..?
சேர்ந்தே இருப்பவை விருதுகளும் சர்ச்சையும். அது இலக்கிய விருதா யிருந்தாலும், சினிமா விருதாக இருந்தாலும் இதுதான் கதி. நேரடியாக அரசே பின்னணியில் இல்லாவிட்டாலும், “"தி காஷ்மீர் பைல்ஸ்' படம்” ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களின் பிரச்சார நோக்கத்துக்காக எடுக்கப்பட்ட படம். பிறகென்ன, நர்கீஸ்தத் தேசிய ஒற்றுமைக்கான விருதை ஆளுங்கட்சியின் கண்ணசைவுப்படி தேர்வுக்குழு தூக்கிக் கொடுத்துவிட்டது.
செந்தில்குமார்.எம், சென்னை-78
அரசியல் கட்சிகள் மாநாடு என்ற பெயரில் பணத்தை வீணடிக்கிறார்களே?
அரசியல்வாதிகள் ஊழல் செய்து கொள்ளையடித்தபிறகு, அதை தேர்தலின்போதும், கட்சியை வளர்ப்பதற்காக மாநாடு, பொதுக்கூட் டம் நடக்கும்போதும் தான் வெளியில் எடுக் கிறார்கள். அந்தப் பணம் இப்படி வெளி யில் வந்து பந்த லமைப்பு, மேடை, உணவு, தொண்டர்களைத் திரட்டுவதற்கான செலவு என்று சுற்றினால்தான் பொரு ளாதாரம் வளரும். அப்படி மாநாடு போடும்போதே சிக்கனம் என்று புளியோதரையை தொண்டர்களின் தலையில் கட்டப்பார்த்து, அதை அண்டா அண்டாவாகக் கொட்டிக் கவிழ்ப்பதை வேண்டுமானால் வீணடிப்பு என்று சொல்லலாம்.
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்-45
கர்நாடகா காவிரி நீர் பற்றி பேசி வந்த எதிர்க்கட்சிகள் திறந்துவிட்ட பிறகு, வாய் திறக்காதது ஏன்?
ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கவும், மக்கள் பணி சீராக நடைபெறவும் எதிர்க்கட்சிகள் வாய்திறப்பது அவசியம்தான். அதனால், எதிர்க்கட்சிகளின் குரலை விரோதமானதாகப் பார்க்கவேண் டியதில்லை. ஆனால், உச்சநீதி மன்றத் தீர்ப்பு, காவிரி ஆணையம் வந்தபிறகும் தமிழகத்துக்கு வரவேண் டிய நீரினை ஒழுங்காகத் தராமல் போக்குக் காட்டுவதை வேடிக்கை பார்ப்பதற்கு எதற்கு ஒரு ஆணையம்? தற்சமயம், தமிழகம் தொடர்ந்த வழக்கில் காவிரி ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அரசியல்வாதி களைப் பொருட்படுத் தாத, முழு அதிகார முள்ள, சுயேட்சை யான, பாரபட்சம் காட் டாத ஒரு ஆணையம் எப்போது வாய்க் கப்போகிறது?
நடேஷ் கன்னா, கல்லிடைக் குறிச்சி
"மோடியை தோற் கடிக்க எதையும் செய் வோம்' என மம்தா கூறியிருக்கிறாரே?
சரிதான், பா.ஜ.க. ஆட்சியிலில்லாத மாநிலங் கள் என்னவிதமான கஷ்டங்களை அனுபவிக்கிற தென அவர்களுக்குத் தான் தெரியும். அதனால் அவர் கள் ஒருங்குதிரண்டு மோடிக்கு எதிராக வெற்றியை உறுதிசெய்தாக வேண்டும். அதற்கு இப்போதைய கூட்டணியிலுள்ள கட்சிகள் எதையும் செய்வோம் என வெறும் வீறாப்பு பேசினால் மட்டும்போதாது. செயலிலும் அதைக் காட்டவேண்டும். காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும்போது சி.ஏ.ஜி. அறிக்கை வெளி வந்தபோது, பா.ஜ.க. எத்தனை பெரிய ரகளை செய்தது? இப்போதும் ஒரு சி.ஏ.ஜி. அறிக்கை வெளி யாகியிருக்கிறது. ஊழல் செய்யப்பட்டதாகக் கூறப் படும் தொகையும் அதைவிட மிகப்பெரிது. இந்தியா கூட்டணியோ, சமூக ஊடகங்களில் சில மீம்களைப் போட்டுவிட்டு மிக்ஸர் சாப்பிட்டு கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பது போன்ற உணர்வுதான் எழுகிறது.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
ஜன்தன் வங்கிக் கணக்குகள் 50 கோடியைக் கடந்தது சாதனை என்று மோடி பெருமிதப்படுகிறாரே?
பிரதமரின் மக்கள் நிதித் திட்டம் என்பது அதன் பெயர். கைவசம் பெரிய தொகையில்லாத, வங்கிப் பக்கம் ஒதுங்கவே தயங்கும் ஏழைகளும் வங்கிக் கணக்கு தொடங்க இத்திட்டம் வழிவகை செய்தது. இதில் 50 கோடிப் பேருக்கும் அதிகமாக கணக்குத் தொடங்கியிருப்பது நிச்சயமாக ஒரு சாதனைதான். ஆனால், 50 கோடி கணக்குகளில் எத்தனை செயல் பாட்டில் இருக்கின்றன எத்தனை கணக்குகள் தொடங் கியதோடு செயல்பாட்டில் இல்லை என்ற விவரத்தை யும் தெரிவித்திருக்கவேண்டும். தவிரவும் குறைந்த பட்ச இருப்பு இல்லாததற்காக அபராதம், குறுஞ் செய்தி அனுப்ப கட்டணம், மாதாந்திர தவணை கட்ட வேண்டியவர்கள் கணக்கில் பணம் இல்லாமல் போனால் அபராதம் என வங்கிகள் பணம்பிடுங்கும் வேகத்தைப் பார்த்தால், எதிர்காலத்தில் அம்பானி, அதானி, வேதாந்தா உள்ளிட்ட மல்டிமில்லியனர்கள் மட்டும் தான் வங்கிக் கணக்கு வைத்திருக்கமுடியும் என்ற நிலை உருவாகிவருவதையும் பிரதமர் கவனிக்கவேண்டும்.
மு.பவித்ரா, ராஜபாளையம்
ஓணத்தை முன்னிட்டு விமானக் கட்டணங் கள் பல மடங்கு உயர்ந்துள்ளதே?
திரைப்படத்துக்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்பது போல், பண்டிகை, விசேஷ தினங்களில் விமான நிறு வனங்களே கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை அரசு கட்டுப்படுத்தவேண்டும்.