சி. கார்த்திகேயன், சாத்தூர்

நீட் தேர்வுக்கு விலக்களிக்க கையெழுத்திட மாட்டேன் என்கிறாரே ஆர்.என். ரவி?

ஆளுநர் கையெழுத்திடமாட்டேன் என்கிறார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சரோ, "மசோதா குடியரசுத் தலைவர் வசம் போய்விட்டது. அதில் ஆளுநர் செய்ய ஒன்றுமே இல்லை' என்கிறார். தமிழக முதல்வர் உணர்ச்சி கரமாக பதில் தருகிறார். நீட் பலிகள் பட்டியலில் மேலும் இரு உயிர்கள் சேர்ந்துள்ளது மட்டுமே எதார்த்தம். மற்றொரு எதார்த்தம் மருத்துவப் படிப்புக்கு மட்டுமல்லாமல் அனைத்துப் படிப்புகளையுமே கடின மான தேர்வுகளுக்குக்கீழ் கொண்டுவந்து, காசிருப்பவர் களுக்கு மட்டுமே உயர் படிப்பு. மற்றவர்களுக்கு குமாஸ்தா, டிப்ளமோ போன்ற அடிமட்ட, உடலுழைப்பு படிப்புகள் என்ற படிநிலையைக் கொண்டுவர விரும்புகிறது இப்போதிருக்கும் பா.ஜ.க. வெறும் ஜாதியப் படிநிலை கள் மட்டும் போதுமானதாக இருந்தது நேற்று. கல்வி யிலும் அந்தப் படிநிலையைக் கொண்டுவர விரும்பு கிறது ஆர்.எஸ்.எஸ். அதற்கான ஆயத்தங்களை தகுதித் தேர்வு, புதிய கல்விக் கொள்கை என்ற பெய ரில் செயற்படுத்துகிறார்கள் ஆட்சியிலிருப்பவர்கள்.

சி.கனகராஜ், கூடுவாஞ்சேரி

Advertisment

திரைப்படங்கள்தான் வன்முறைச் சம்ப வங்களுக்கு வழிகாட்டியாக அமைகின்றன என்று குற்றம்சாட்டுகிறாரே சசிகலா?

பிரச்சனைகளுக்கு திரைப்படங் களை நோக்கி கையை நீட்டுவது, பழைய பழக்கம். தாத்தாவின் காலத்தில் கூத்தாடுபவர்களையும், நாடகம் போடுபவர்களையும் நோக்கி கைநீட்டியிருப்பார் கள். இன்று திரைப்பட நடி கர்களையும், இயக்குநர் களையும் நோக்கி கைநீட்டு கிறார்கள். அந்த திரைப் படங்களில்தான் சசிகலாவின் ஆருயிர்த் தோழியும் முன் னாள் முதல்வரு மாகிய ஜெயலலிதா உருவாகி வந்தார். ஜெயலலிதா அரசியலுக்கு வரக் காரண மான எம்.ஜி.ஆரும், எம்.ஜி.ஆரின் ஆதர்சமாகிய அண்ணாவும், கலைஞரும் அங்கிருந்துதான் உருவாகிவந்தார்கள். திரைப்படங்களை நோக்கி கை நீட்டும்போது அவர்களையும் சேர்த்தே கைகாட்டு கிறார் என்று சசிகலா ஒப்புக்கொள்வாரெனில் அடுத்து யோசிக்கலாம்.

தே.மாதவராஜ், கோயம்புத்தூர்

Advertisment

1.12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள வர்கள் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளனர் என் கிற அமித்ஷா ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

யார் சொன்னது நடவடிக்கை எடுக்கவில்லை என்று. ஆங்காங்கே நடக்கும் அமலாக்கத் துறை, சி.பி.ஐ. வருமானவரித் துறை சோதனையெல்லாம் எப்படி நடக்கிறதென்று நினைக்கிறீர்கள். என்றைக்கு, எங்கே, எவ்வளவுதூரம் சோதனை நடத்தவேண்டும் என்று முடிவுசெய்வது யாரென்று நினைக்கிறீர்கள்? இந்த ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடந்துள்ளது என்று கணக்குப் பார்க்க பா.ஜ.க. ஆட்சியிழந்து, ஒரு இரண்டு மூன்று வருடங்கள் ஆகவேண்டும். அப்புறம் தெரியும் அவர்களது யோக்கியத்தின் மதிப்பு எத்தனை லட்சம் கோடிகளென்று.

எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்

தண்ணீர் தராத கட்சியை தலைமீது தூக்கிவைத்து தி.மு.க. கொண்டாடுகிறது.. என்று கண்டனம் தெரிவித்துள்ளாரே குஷ்பூ?

காங்கிரஸோ, பா.ஜ.க.வோ ஆட்சியிலிருக்கும் போது தண்ணி காட்டுமே தவிர, காவிரியில் தமிழகத் துக்கு முறைப்படி. தண்ணீர்விட்டதில்லை. சந்தேக மிருந்தால் கடந்த பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்துக்கு காவிரியில் மிச்சம்வைக்கா மல் நீர் வந்ததா என்பதை குஷ்புவே சோதித்துக்கொள் ளட்டும். காங்கிரஸாவது காவிரியில் தண்ணீரை முறைப்படி அளிக்காததோடு விட்டது. பா.ஜ.க.வோ மசோதா, எதேச்சதிகாரம் என மாநிலங்களுக்கு வர வேண்டிய உரிமைகளையே படிப்படியாக அணைகட்டி அல்லவா தடுத்துக் கொண்டிருக்கிறது.

mm

பி.லலிதா, விருகம்பாக்கம்

சுதந்திர தின உரையின்போது பிரதமர் கண்கலங்கி அழுதிருக்கிறாரே?

பாகிஸ்தான் எல்லை மீதான துல்லிய தாக்குதலை அடுத்து நெஞ்சு நிமிர்த்திய வீரப் பேச்சு, எதிர்க்கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தும் ஆணவப் பேச்சு, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போதான ஆச்சர்யம், மகிழ்ச்சி, தற்போது சுதந்திர தின உரையில் பிரதமர் வெளிப்படுத்திய துயரத்தை யெல்லாம் பார்க்கும்போது, நவரசங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் வெளிப்படுத்தும் ஒரு அரிய நடிகர் திலகத்தை பாலிவுட் சினிமா இழந்துவிட்டது என்பது உறுதியாகியிருக்கிறது. பாலிவுட் மட்டும் உரிய நேரத்தில் மோடியை அடையாளம் கண்டு உரிய வாய்ப்புத் தந்திருந்தால் சர்வதேச விருதுகளை அள்ளிக் குவித்திருக்கும். பண மதிப்பிழப்பு உள்ளிட்ட எத்தனையோ அவஸ்தையிலிருந்து இந்திய மக்களும் தப்பித்திருப்பார்கள்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமையவிருப்பது குறித்து?

வந்தால் நன்றாக இருக்கும். பணிகள் தொடங்கி நிறைவுக்கு வருவதுவரை நாம் அதிக எதிர்பார்ப்புடன் இருக்கத் தேவையில்லை. மோடியின் முதல் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்போவதாகச் சொன்னார் கள். அதன் நிலை என்ன என்பது நமக்குத் தெரியும். அதிக எதிர்பார்ப்பு பெரிய ஏமாற்றம்!